ஏப்ரல் 1 ( முட்டாள்கள் தினம் ) முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. வழக்கம் போல் இதை மற்றுமொரு விலையேற்றமாகத் தான் அனைவைரும் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விளக்கமாக பார்த்தால் தான் புரியும் இதில் உள்ள பயங்கரம்.
கடந்த ஒரு வருஷத்துல நான் அதிகபட்சமா 270 யூனிட் ( 2 மாதங்களுக்கு) மின்சாரம் பயன்படுத்தி இருக்கேன் அதற்காக 294 ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கேன். இனி ஒரு வேளை நான் 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 1 முதல் 200 யூனிட்டுகளுக்கு 600 ரூபாய், 201 முதல் 300 யூனிட்டுகளுக்கு 350 ரூபாய் என மொத்தம் 950 ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஃபிக்ஸ்ட் சார்ஜ் என்று கூடுதலாக 30 ரூபாய்.
இத்தனை நாட்களாக 300 ரூபாய் செலுத்திய மின்சாரத்திற்கு இனி 1000 ரூபாய் கட்ட வேண்டும். என்ன கொடுமையான கட்டணம் இது..இதை விட பெருங்கொடுமை இருக்கு.. ஒருவேளை ஒருவர் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 360 ரூபாய் கட்டணும். ஒரே ஒரு யூனிட் அதிகம் பயன்படுத்தி இருந்தால் 500 யூனிட் வரையிலான கட்டணத்தில் வந்துவிடுவார். அந்த ஒரே ஒரு யூனிட்டால் அவர் 600 ரூபாய் கட்ட வேண்டும். அதாவது 200 யூனிட்டுகளுக்கு 360 ரூபாய். அடுத்த ஒரு யூனிட்டுக்கு 240 ரூபாய் கட்ட வேண்டும்.. 501 யூனிட்டுகள் பயன்படுத்துபவர் நிலையை நினைத்துப் பாருங்க..
இன்னும் கொஞ்சம் தெளிவா பார்ப்போம்.. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணம் :
கடந்த ஒரு வருஷத்துல நான் அதிகபட்சமா 270 யூனிட் ( 2 மாதங்களுக்கு) மின்சாரம் பயன்படுத்தி இருக்கேன் அதற்காக 294 ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கேன். இனி ஒரு வேளை நான் 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 1 முதல் 200 யூனிட்டுகளுக்கு 600 ரூபாய், 201 முதல் 300 யூனிட்டுகளுக்கு 350 ரூபாய் என மொத்தம் 950 ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஃபிக்ஸ்ட் சார்ஜ் என்று கூடுதலாக 30 ரூபாய்.
இத்தனை நாட்களாக 300 ரூபாய் செலுத்திய மின்சாரத்திற்கு இனி 1000 ரூபாய் கட்ட வேண்டும். என்ன கொடுமையான கட்டணம் இது..இதை விட பெருங்கொடுமை இருக்கு.. ஒருவேளை ஒருவர் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 360 ரூபாய் கட்டணும். ஒரே ஒரு யூனிட் அதிகம் பயன்படுத்தி இருந்தால் 500 யூனிட் வரையிலான கட்டணத்தில் வந்துவிடுவார். அந்த ஒரே ஒரு யூனிட்டால் அவர் 600 ரூபாய் கட்ட வேண்டும். அதாவது 200 யூனிட்டுகளுக்கு 360 ரூபாய். அடுத்த ஒரு யூனிட்டுக்கு 240 ரூபாய் கட்ட வேண்டும்.. 501 யூனிட்டுகள் பயன்படுத்துபவர் நிலையை நினைத்துப் பாருங்க..
இன்னும் கொஞ்சம் தெளிவா பார்ப்போம்.. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணம் :
புதிய மின்கட்டணம்
பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1.1
பிரிவு :2 : up to 100 - 0 to 200 Rs.1.8
பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3.5
பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and avobe Rs.5.75
- இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகள் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பிரிவு 1ன் படி 110 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- 2 மாதங்களுக்கு 101 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தினால் பிரிவு இரண்டின் வந்துவிடுவீர்கள். எனவே நீங்கள் 182 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே ஒரு யூனிட் அதிகரிப்பதால் உங்கள் கட்டணம் 72 ரூபாய் கூடிவிடுகிறது.
- நீங்கள் 200 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.80 வீதம் 360 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு வேளை 201 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் பிரிவு 3ல் வந்துவிடுவீர்கள். அதன்படி முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயும் ( 1.80க்கு பதிலாக) 201வது யூனிட்டுக்கு 3.5ரூபாயுமாக மொத்தம் 603 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 360 ரூபாய். ஒரு யூனிட் கூடுதலாக 201 யூனிட்டுகள் பயன்படுத்தினால் நீங்கள் 603.50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 1650 ரூபாய் கட்டணம். அதுவே ஒரு யூனிட் கூடுதலாகி 501 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் நீங்கள் பிரிவு 4ல் வந்துவிடுவீர்கள். அதன் படி உங்கள் கட்டணம் 1805.75 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு யூனிட் கூடுதலாவதால் உங்களுக்கு 150 ரூபாய் கூடுதல் செலவு.
- நீங்கள் 1000 யூனிட்டுகள் மின்சாரம் உபயோகித்தால் 4675 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு முந்தைய கட்டண முறையில் 100 யூனிட் பயன்படுத்தினாலும் 500 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரே மாதிரி கட்டணம் தான். அதாவது முதல் 50 யூனிட்டுகளுக்கு ஒரே விலை தான். அடுத்தடுத்த ஸ்லாப்களுக்கும் அதே தான். ஒழுங்கா மின்சாரம் குடுக்க முடியலை. கட்டணம் மட்டும் கண்டபடி ஏற்றிவிட்டார்கள்.
இன்னொரு குழப்பம் .. இந்த மாதம் 4ஆம் தேதி நான் கரண்ட் பில் கட்டணும். (இன்னைக்கு அதைக் கட்டும் போது தான் இந்த ஆராய்ச்சி) . அப்படின்னா 20 நாள் முன்னாடி ரீடிங் எடுத்திருப்பாங்க. கட்டண உயர்வு அறிவிச்சிருப்பது ஏப்ரல் 1 முதல். அப்படி என்றால் ரீடிங் எடுத்த பிறகான கடந்த மாதத்தின் 15 நாட்களுக்கான மின்சாரத்திற்கும் புதிய கட்டணம் தான் பொருந்தும். என்னக் கொடுமை இது? :(
இன்னொரு குழப்பம் .. இந்த மாதம் 4ஆம் தேதி நான் கரண்ட் பில் கட்டணும். (இன்னைக்கு அதைக் கட்டும் போது தான் இந்த ஆராய்ச்சி) . அப்படின்னா 20 நாள் முன்னாடி ரீடிங் எடுத்திருப்பாங்க. கட்டண உயர்வு அறிவிச்சிருப்பது ஏப்ரல் 1 முதல். அப்படி என்றால் ரீடிங் எடுத்த பிறகான கடந்த மாதத்தின் 15 நாட்களுக்கான மின்சாரத்திற்கும் புதிய கட்டணம் தான் பொருந்தும். என்னக் கொடுமை இது? :(
இனி மிக்சிக்கு பதில் அம்மிக்கல், கிரண்டருக்கு பதில் ஆட்டுரல், வாஷிங்மெஷினுக்கு பதில் கையால் துவைப்போம், ஃபேனுக்கு பதில் கைவிசிறி பயன்படுத்துவோம். மொத்தத்தில் கற்காலத்துக்கு மீண்டும் செல்வோம்..
ஜெயலலிதா முதல்வர் ஆகனும்னு நினைச்சவங்க எல்லாம் போயஸ் கார்டன் பக்கம் நின்னுட்டு கன்னத்துல போட்டுக்கோங்க. இந்த கட்டுரையை படிச்சதுக்கு சாமி குத்தம் ஆகிடப் போகுது. ஓட்டை உடைசல் பஸ்களில் எல்லாம் எக்ஸ்ப்ரஸ் என்று லேபிள் ஒட்டிக் கொள்ளை அடிக்கிறதை எல்லாம் தாங்கிக்கிறோம். இதை தாங்கிக்க மாட்டோமா.. தமிழேண்டா..

