April 2, 2012

Shocking TNEB Tariff 2012

ப்ரல் 1 ( முட்டாள்கள் தினம் ) முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. வழக்கம் போல் இதை மற்றுமொரு விலையேற்றமாகத் தான் அனைவைரும் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விளக்கமாக பார்த்தால் தான் புரியும் இதில் உள்ள பயங்கரம்.

கடந்த ஒரு வருஷத்துல நான் அதிகபட்சமா 270 யூனிட் ( 2 மாதங்களுக்கு) மின்சாரம் பயன்படுத்தி இருக்கேன் அதற்காக 294 ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கேன். இனி ஒரு வேளை நான் 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 1 முதல் 200 யூனிட்டுகளுக்கு 600 ரூபாய், 201 முதல் 300 யூனிட்டுகளுக்கு 350 ரூபாய் என மொத்தம் 950 ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஃபிக்ஸ்ட் சார்ஜ் என்று கூடுதலாக 30 ரூபாய்.

இத்தனை நாட்களாக 300 ரூபாய் செலுத்திய மின்சாரத்திற்கு இனி 1000 ரூபாய் கட்ட வேண்டும். என்ன கொடுமையான கட்டணம் இது..இதை விட பெருங்கொடுமை இருக்கு.. ஒருவேளை ஒருவர் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 360 ரூபாய் கட்டணும். ஒரே ஒரு யூனிட் அதிகம் பயன்படுத்தி இருந்தால் 500 யூனிட் வரையிலான கட்டணத்தில் வந்துவிடுவார். அந்த ஒரே ஒரு யூனிட்டால் அவர் 600 ரூபாய் கட்ட வேண்டும். அதாவது 200 யூனிட்டுகளுக்கு 360 ரூபாய். அடுத்த ஒரு யூனிட்டுக்கு 240 ரூபாய் கட்ட வேண்டும்.. 501 யூனிட்டுகள் பயன்படுத்துபவர் நிலையை நினைத்துப் பாருங்க..

இன்னும் கொஞ்சம் தெளிவா பார்ப்போம்.. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணம் :

புதிய மின்கட்டணம்

பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1.1

பிரிவு :2 : up to 100 - 0 to 200 Rs.1.8

பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3.5

பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and avobe Rs.5.75

  • இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகள் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பிரிவு 1ன் படி 110 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • 2 மாதங்களுக்கு 101 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தினால் பிரிவு இரண்டின் வந்துவிடுவீர்கள். எனவே நீங்கள் 182 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே ஒரு யூனிட் அதிகரிப்பதால் உங்கள் கட்டணம் 72 ரூபாய் கூடிவிடுகிறது.
  • நீங்கள் 200 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.80 வீதம் 360 ரூபாய் கட்ட வேண்டும். ஒரு வேளை 201 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் பிரிவு 3ல் வந்துவிடுவீர்கள். அதன்படி முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயும் ( 1.80க்கு பதிலாக) 201வது யூனிட்டுக்கு 3.5ரூபாயுமாக மொத்தம் 603 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 
  • 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 360 ரூபாய். ஒரு யூனிட் கூடுதலாக 201 யூனிட்டுகள் பயன்படுத்தினால் நீங்கள் 603.50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் 1650 ரூபாய் கட்டணம். அதுவே ஒரு யூனிட் கூடுதலாகி 501 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் நீங்கள் பிரிவு 4ல் வந்துவிடுவீர்கள். அதன் படி உங்கள் கட்டணம் 1805.75 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு யூனிட் கூடுதலாவதால் உங்களுக்கு 150 ரூபாய் கூடுதல் செலவு.
  • நீங்கள் 1000 யூனிட்டுகள் மின்சாரம் உபயோகித்தால் 4675 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கு முந்தைய கட்டண முறையில் 100 யூனிட் பயன்படுத்தினாலும் 500 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரே மாதிரி கட்டணம் தான். அதாவது முதல் 50 யூனிட்டுகளுக்கு ஒரே விலை தான். அடுத்தடுத்த ஸ்லாப்களுக்கும் அதே தான். ஒழுங்கா மின்சாரம் குடுக்க முடியலை. கட்டணம் மட்டும் கண்டபடி ஏற்றிவிட்டார்கள்.

இன்னொரு குழப்பம் .. இந்த மாதம் 4ஆம் தேதி நான் கரண்ட் பில் கட்டணும். (இன்னைக்கு அதைக் கட்டும் போது தான் இந்த ஆராய்ச்சி) . அப்படின்னா 20 நாள் முன்னாடி ரீடிங் எடுத்திருப்பாங்க. கட்டண உயர்வு அறிவிச்சிருப்பது ஏப்ரல் 1 முதல். அப்படி என்றால் ரீடிங் எடுத்த பிறகான கடந்த மாதத்தின் 15 நாட்களுக்கான மின்சாரத்திற்கும் புதிய கட்டணம் தான் பொருந்தும். என்னக் கொடுமை இது? :(

இனி மிக்சிக்கு பதில் அம்மிக்கல், கிரண்டருக்கு பதில் ஆட்டுரல், வாஷிங்மெஷினுக்கு பதில் கையால் துவைப்போம், ஃபேனுக்கு பதில் கைவிசிறி பயன்படுத்துவோம். மொத்தத்தில் கற்காலத்துக்கு மீண்டும் செல்வோம்..

ஜெயலலிதா முதல்வர் ஆகனும்னு நினைச்சவங்க எல்லாம் போயஸ் கார்டன் பக்கம் நின்னுட்டு கன்னத்துல போட்டுக்கோங்க. இந்த கட்டுரையை படிச்சதுக்கு சாமி குத்தம் ஆகிடப் போகுது. ஓட்டை உடைசல் பஸ்களில் எல்லாம் எக்ஸ்ப்ரஸ் என்று லேபிள் ஒட்டிக் கொள்ளை அடிக்கிறதை எல்லாம் தாங்கிக்கிறோம். இதை தாங்கிக்க மாட்டோமா.. தமிழேண்டா..

January 10, 2012

நேசம் + ப்ரணவ பீடம் வழங்கும் இலவச யோகா பயிற்சி பட்டறை



 நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் சுவாமி ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
 இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில்  உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி.  இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும். 

நிகழ்ச்சி நடக்கும் இடம் : 





ப்ரணவ பீடம், 
பொன்னுரங்கம் ரோடு, 
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம் 

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை


இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.
 


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com

January 1, 2012

என் திருமணம் பற்றிய ஜாக்கி சேகரின் பதிவு


என் திருமணம் பற்றி அண்ணன் ஜாக்கி சேகர் எழுதிய பதிவு. நேற்று தான் இவர்களை எல்லாம் மண்டபத்தில் சந்தித்து போல் இன்னும் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. ஜாக்கியின் அனுமதி இல்லாமலேயே இந்தப் பதிவை சுட்டுக் கொள்கிறேன். ஒரு ஆண்டு முடியப் போகும் தருணத்தில் நினைவுக் கூற மிகச் சிறப்பான நினைவலைகளைக் கொண்ட பதிவு. நன்றி ஜாக்கி. ஓவர் டூ ஜாக்கி போஸ்ட்.. ( உண்மையில் நான் இந்தப் பதிவை இன்று தான் பார்த்தேன். ஓராண்டுகளுக்கும் மேலாகவே பதிவுலகை விட்டு விலகி இருந்ததால் பல பதிவுகளை தவற விட்டிருக்கிறேன்.)

சஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்திப்பு..



சஞ்சய்காந்தி யார்-?எனக்கு தெரிந்து தமிழ் பிளாக்கர் போரம் ஆரம்பித்த போது அதில் வந்து கும்மி அடிக்கும் போது அந்த பெயரை நான் கவனித்து இருக்கின்றேன்.

அதன்பிறகு  சஞ்சய் திருமண இன்விடேஷன் வந்த போது வாழ்த்து சொன்னேன்...கேபிள் பஸ்சில் நான்  பேசும் போது,அண்ணே அவசியம் வந்துடுங்க என்று சஞ்சய்   அழைத்த போது திருமணத்துக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தேன்...


பட்டர்பிளை சூர்யா  ஞாயிறு காலை ரயிலில் மொரப்பூரில் நடக்கும் சஞ்சய் கல்யாணத்துக்கு போக டிக்கெட் புக் செய்கின்றேன் என்று சொன்ன போது அண்ணன் உதா ஜகா வாங்கினார்..

வெள்ளிக்கிழமை காலையில் மணிஜி.. ஜாக்கி கார்ல இடம் இருக்கு வரியா? என்று கேட்க.. நான் அன்று நண்பர் ஒருவருக்கு சில போட்டோக்கள் எடுத்து தரேன் என்று வாக்கு கொடுத்து இருந்தேன் அதனால் என்னால் வர இயலவில்லை என்று சொன்னேன்.


சனிக்கிழமை மதியம் பேருந்தில் போகலாம் என்று முடிவு செய்தோம்  நான் உதா, எறும்புராஜகோபால்,குட்டி தினேஷ் என  கிளம்ப முடிவு செய்தோம்...சூர்யா அவர்களின் உறவுக்கு உடல்நிலைசரியல்லாத காரணத்தால் அவரால் வரஇயலவில்லை

மதியம்2மணிக்குமேல் சென்னை  கோயம்பேட்டில் அசம்பல் ஆனோம்...ஒரு ஓசூர் பேருந்து எங்களை கடக்கையில் அதனை ஓடிப்பிடித்து நிறுத்தினோம்.. மூன்று பேருக்கு மட்டும் இடம் இருக்கின்றது.. ஆம்பூர் போனதும் இரண்டு சீட் காலியாகும் என்று சொன்னார்கள்... அதனால் எறிக்கொண்டோம் நிறைய பேசினோம்....

இந்த இரண்டு வருட காலத்தில் பதிவுல நண்பர் ஒருவருக்கு வெளியூரில் நடக்கும் திருமணத்துக்கு நான் செல்வது இதுவே முதல் முறை..சஞ்சய் எனக்கு பெரிய பழக்கம் எல்லாம் இல்லை... என்னவோ போக வேண்டும் என்று தோன்றியது...

கிருஷ்ணகிரி பைபாசில் பேருந்து நின்றது.. இங்கே தருமபுரிக்கு பேருந்து கிடைக்கும் என்று சொன்னதை நம்பி இறங்கிவிட்டோம் மறுநாள் முகூர்த்தநாள் என்ற காரணத்தால் கூட்டம்  பல ஊர் பேருந்துக்கு பைபாசில் தவம் கிடந்தார்கள்.

அதனால் திரும்ப  ஷேர் ஆட்டோ பிடித்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் போய் அங்கே இருந்து ஒரு அரசு பேருந்து பிடித்து நால்வரும்   ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பயணித்தோம்.

வழியில் மயிலுக்கு போன் செய்ய அனைவரும் மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பில் பிசியாக இருந்தனர்.. தம்பி பரிசல் நான் வருவதை போன் செய்து உறுதி செய்து கொண்டார்...

தருமபுரியில் போய்  இரவு 9 மணிக்கு இறங்கினோம்... அதியமான் அரண்மணை என்ற வித்யாசமான நியான் போர்டு என் கண்ணில் பட்டது... அது லாட்ஜ்.. அதுக்கு பக்கத்தில் இருக்கும் சரவணா இன்னில் ரூம் போட்டு இருப்பதாக தம்பி சஞ்சய் சொல்ல அங்கு சென்றோம்...

பசி அதிகம் எடுத்த காரணத்தால் எல்லோரும் சாப்பிட முடிவு எடுத்தோம்... பட் என்னை தவிர  எல்லோரும்  சைவ பிராணிகளாக இருந்தார்கள்.. எனக்கு  வந்த களைப்புக்கு ஒரு குவாட்டர் விட்டால் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு மேன்ஷன் அவுஸ் வாங்கினேன்.. இரண்டு கட்டிங் போய் மூன்றாவது கட்டிங் தீர்த்வாரி நடக்கும் போது மணஜி போன் செய்து ஜாக்கி ஒரு மூனு குவாட்டர் வாங்கி வச்சிடு என்று அன்பு கட்டளை போட.. நான்   மூன்று வாங்கி திரும்புகையில் அதிக போதையில் ஒரு அண்ணன் என்மேல் மோதவர சட்டென எதிர்பார்க்காமல் நான் நகர  மூன்றில் ஒரு குவாட்டர் பிடி நழுவி பூமியில் ஈரம் ஆனது... தலையெழுத்தை நினைத்துக்கொண்டு.. அடுத்த   ஒன்றை வாங்கி மூனறாக சேர்ப்பித்தேன்.
(புதுகாதலியுடன் பப்ளிக்கா அதன்  மேல் சாய்ந்து கொண்டு  வெட்கம் இல்லாமல்...)

ரூமுக்கு திரும்ப போனேன்... மணிஜி ரூமில் அனைவரும் ஒன்று கூடினோம்.. நான்,மணிஜி,அகநாழிகை வாசு,மயில்ராவணன்,எறும்பு.குட்டிதினேஷ், உண்மைதமிழன் என்று எல்லோரும் ஒன்று கூட சோமபானம் சுராபானம் ஆறாக ஓடத்துவங்க...வடகரைவேலன் அண்ணாச்சி தரிசனம் கொடுத்தார்..

.இதில் ஒப்புக்கு சப்பானியாக அண்ணன் உதா,குட்டிதினேஷ்.எறும்பு போன்றவர்கள் பாவையாளர் மாடத்துக்கு சென்று விட  நண்பர் நந்து வந்து நாலு ஆப் பாட்டில்களை டெலிவரி செய்ய, இன்னும் உற்சாகமாக அந்த அறைகளைகட்டியது..

நான் முதன் முறையாக வடகரைவேலன் அவர்களை சந்தித்தேன்.. தெளிவாக தீர்க்கமாக பேசுகின்றார்..அவர் பேச்சினை நான் ரசித்தேன்.. 

பத்தரை மணிக்கு ஆரம்பித்தது நான் படுக்கையில் லைட்டாக சாய நண்பர் வாசு தனது கேமரா மூலம் படம்பிடிக்க ஆரம்பித்தார்...முதலில் மயில் தனது தோகையை லைட்டாக விரித்தது  ஜெமோ சிறந்த எழுத்தாளர் என்று ஆரம்பிக்க மணி,வடகரை,வாசு போன்றவர்கள்  திரவ டம்ளர்களுடன் இலக்கியம் வளர்க்க,படிச்சாலும் படிக்காவிட்டாலும் ஓத்தா நாமளும் போய் ஜோதியில ஐக்கியம் ஆகலைன்னா நம்மளை யாரும் இலக்கியவாதி கூட்டத்துல ஒத்துக்கமாட்டாங்க  என்ற காரணத்தால் நானும் ஜோதியில் கலந்தேன்..

அடுத்து உதாவும் பொறுக்கமுடியாமல் வெறும் கையுடன் ஜோதியில் கலக்க, குட்டி தினேஷ், எறும்பு ரெண்டு பெரும் பார்வையாளர் மாடத்தை விட்டு இறங்கவேயில்லை.

முதலில் மயில் லைட்டாக தொகை விரித்து, தண்டோரா லைட்டாக முதலில் தமுக்கு அடித்தது,பிறகு வேகமாக முரசு அறிவித்தது..மயில் தொகைவிரித்து காட்டேரியாக ஆடத்துவங்க வேலன் அண்ணாச்சி ஈக்குவலைசர் போல ஏற்ற இறக்கத்தோடு பேசினார்... இலக்கியம் கண்விழித்தது,3 மணிவரை போராடி சோர்ந்து போனது...

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து எல்லோரும் ரெடியானார்கள்.. உதா, அண்ணாச்சி,எறும்பு.தினேஷ் எல்லோரும் முன்னே செல்ல, நான்,மயில்தண்டோரா வாசு நால்வரும் மணிஜி காரில் பயணத்தோம் சும்மா சொல்லக்கூடாது.. புது கார் நன்றாகவே இருந்தது..

மொரப்பூருக்கு  காரில்  பயணித்தோம்.. சும்மா சொல்லக்கூடாது ஒரு ஸ்பீட் பிரேக்கர் இல்லை..மண்டபத்துக்கு போய் இறங்கினோம்...ராம்ராஜ் வேட்டி சட்டைகள் மொத்தமாக குத்துகைக்கு எடுத்து வந்தது போல எல்லோரும் வெள்ளைவேட்டி வெள்ளைசட்டையுமாக தோளில் கம்பல்சரி  துண்டோடு இருந்தார்கள்..

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சொம்பும் புளியமரமும் இருந்தால் எவரை வேண்டுமானலும் தமிழ்சினிமா பஞ்சாயத்து தலைவராக நடிக்க வைத்து இருக்கும்... அத்தனை பேரும் மீசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள்.

எனக்கும் வேட்டி சட்டையில் இருக்க ஆசைதான்... எந்த நேரத்தில் நான் போட்டு இருக்கும்  ஜட்டியின் பிராண்டை நானே விளம்பரபடுத்திவிடும் அபாயம் இருப்பதாலும் ரம்பாவுக்கு பிறகு அதிகமாக தொடை காட்டியவன் என்ற பெருமைக்கு  சொந்தக்காரனாக மாறிவிடுவேன் என்பதால் அந்த எண்ணத்தை தவிர்த்தேன்.

ஆனால் பரிசல் வேட்டி சட்டையில் வந்து இறங்கினார்..என்னை பார்த்தும் வாஞ்சையோடு வந்தது கைகுலுக்கி கொண்டார்..தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டையும் அறிமுகபடுத்தினார்....சின்னவளிடம் எத்தனாவது படிக்கின்றாய் ? என்று கேட்டேன்.5ஆம் வகுப்பு என்றாள்.. எனக்கு மயக்கமே வந்தது... எதுவுமே தெரியாமல் அப்பாவியாய் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு  பரிசல்  இருக்கின்றார்....பெரிய பெண்ணிடம் எத்தனையாவது படிக்கின்றாய் என்று கேட்டால் எனக்கு பொறாமை அதிகமாகிவிடும் என்பதால் கேட்கவில்லை..

தமிழ்திரைஉலகில் சிவக்குமாரை மார்கன்டேயன் என்று சொல்வது போல பதிவுலகின் மார்கண்டேயன்  என்று பரிசலை சொல்லலாம்... மண்டபத்தின்  உள்ளே போனேன்...தம்பி அப்துல்லாவை பார்த்தேன்.. மல்லுவேட்டி மைனர் பார்டூ எடுத்தால் சத்யராஜ் கேரக்டருக்கு பொருந்துவது போல ரொம்ப நீட்டாக  வேட்டி சட்டை அணிந்திருந்தார்...கையில் மல்லிகைப்பூ  சுற்றி வருது வருது இளம்காற்று பாட்டு பாடி மல்லிகை பூ முகர்ந்தால் செமையாக இருக்கும்...தனது மனைவி பிள்ளையை அறிமுகபடுத்தினார்...

பதிவுலகில் முதல் முறையாக ஒரு திருமணத்துக்கு போனது மங்களுர் சிவா திருமணத்துக்குதான்..நான்தான் அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்தேன்.. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.. சிவா தம்பதிகளை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.


.மேடைக்கு போனோம். சஞசய் தனது மனைவியிடம் என்னை அறிமுகபடுத்தினார்.. பதிவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்.ஜீவ்சை இப்போதுதான் நான் நேரில் சந்திக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அடுத்ததாக வலையுலகின் எனத முதல் பாலோயர் வெண்பூ அவர் பங்குக்கு என்னை கொஞ்சம் கும்மி அடித்தார்.

நிறைய நண்பர்கள் என்னோடு புகைபடம் எடுத்துக்கொண்டார்கள். அந்த புகைபடங்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன்.. ஒரு பய போடலை..


அதன் பிறகு சாப்பிட போனோம்.. கேபிள், கார்க்கி, சந்தோஷ்,ஜோசப்,என அங்கு ஒரு பெரிய பதிவர் பட்டாளம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது..

எனக்கு தெரிந்து நிறையபதிவர்கள் கலந்துகொண்ட திருமணவிழா இதுவாகத்தான் இருக்கும்..

பெண்களில் பதிவர்களில் தோழி ரம்யா, சக்தி, விஜி,பிரியா போன்றவர்களை சந்தித்தேன்... இன்மும் பிரியாவுக்கும்,விஜி என்பவரையும் போட்டுக்குழப்பிக்கொள்கின்றேன்.முதன் முறையாக பெண் பதிவர்களிடம் பேசினேன்.

திரும்பவும் நான், மணிஜி, வாசு போன்றவர்கள் மதுரை வீரன் எங்கசாமி துணையை நாடினோம்.. வெளியே காரில் பயணிக்க லக்கி ,அதிஷா, புருனோ, வானம்பாடிகள், போன்றவர்கள் திருமணத்துக்கு வந்தனர்.
வெளியே வெயிலான், கதிர்,நிகழ்காலத்தில் சிவா, கேபிள்.புருனோ, லக்கி, அப்துல்லா, ஆருரன்,ஜாபர் ,ஆதி.நந்து,பரிசல்,சுவாமி. மயில்,உதா,எறும்பு,குட்டிதினேஷ், வாசு,மணிஜி, போன்றவர்களோடு அரட்டை கச்சேரி நடந்தது...

நந்துவும் நானும் ஒரே கேரக்ட்ர் என்பது சிலபலவிஷயங்களில் தெரிந்துக்கொண்டேன்..பேசிக்கொண்டு இருக்கும் போதே தம்பி குசும்பன் லைனில் வர எல்லோருடனும் பேசிக்கொண்டு இருந்தார்

நான் இந்த முறை புகைபடங்கள் நிறைய எடுக்கவில்லை.. எப்பபார்த்தாலும் போட்டோ எனக்கே கொஞ்சம் போர்தான்..அதனால் இந்த முறை கேமராவை தூர வைத்தேன்.. பரிசல் மற்றும் அப்துல்லா பசங்களை போட்டோ எடுக்கலாம் என்று நினைத்தேன்.. அது மிஸ் ஆகிவிட்டது வருத்தம்தான்.

தமிழ்மணம் காசி அவர்களை  சந்தித்தேன்.. எனது பதிவுகள் நேரில் பேசுவது போல இருப்பதாக சொன்னார்... அவருக்கு எனது நன்றிகள். 

மணிஜி,நான், வாசு, மயிலோடு காரில் புறப்பட்டு திரும்பவும் லாட்ஜிக்கு வந்தோம்.. லாட்ஜில்திருமணத்துக்கு வந்த பெண்மணி அங்கே ரிசப்ஷனில் நின்றுக்கொண்டு இருந்தார்..சஞ்சய் உறவினர் என்று நினைத்தேன்.. அவரும் ஒரு பதிவராம் அரபு தேசத்தில் பல் டாக்டரம்மாவாக இருக்கின்றாராம்... இவர் ஜாக்கி எனக்கு நல்லா தெரியும்.. நீங்க என்ற போது மணிஜி, வாசு , மயில் போன்றவர்கள் அறிமுகபடுத்திக்கொண்டார்கள்..நைட் கண்முழிச்சி டைப் அடிக்கறது வேஸ்ட் இல்லை.. ஒருத்தவங்க அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு  நான் இருப்பதே போதும்..

திரும்பவும் அதே அறை சிகரேட், பிராந்தி,புகைகளுக்கிடையே
கதிர்,குமுக்கி,ஆருரன்,வானம்பாடிகள்,,ஜாபரோடு,திரும்பவும் அரட்டை களை கட்டியது..
மீன்கொழம்பு அற்புதம் நானும் மணிஜியும் ஒரே இலையில் சாப்பிட்டோம்.. இந்த வரியை அந்தாளு தப்பு தப்பா அடிச்சார், ஈரோடு கோஷ்ட்டி விடைபெற்றது.. பிறகு சின்ன கொரட்டை... மாலை ஆறுமணிக்கு எழுந்தேன்.

மயிலின் நண்பர் ஒருவர் இருந்தார் பெயர் கார்த்தி...தருமபுரியில் நெட் சென்டர் வைத்து இருக்கின்றார். தனது. நெட் சென்டருக்கு வர வேண்டும் என்றார்..நெட் சென்டரில் என்னை வைத்து போட்டோஎடுத்துக்கொண்டார்.நண்பர்களுக்கு அறிமுகபடுத்திவைத்தார்...திரும்பவும் தருமபுரி பேருந்து நிலையம் வந்து ஓசூர் பஸ் பிடித்து இரவு பத்து மணிக்கு  ஓசூரில் பெங்களுர் பேருந்துக்கு மாறி பெண்களுர் குளிரில் கலந்து வீடு போய் சேர்ந்தேன்..

ஒருத்தன் கல்யாணத்துக்கு இத்தனை பேர் வரமுடியமா? அதுவும் பதிவர்கள். நிறைய பேர் குடுமபத்துடன் வந்து இருந்தார்கள்.. சென்னையில் பிரபலமான இடத்தில் கல்யாணம் நடக்கவில்லை, தருமபுரி பக்கத்தில் மொரப்பூர், ஊரின் ஒதுக்குபுறமாய் ஒரு மண்டபத்தில் திருமணம்... ஞாயிறு விடுமுறையை யாரும்அ விட்டுக்கொடுக்கமாட்டார்கள் அப்படி  இருந்தும் நிறைய பேர் வந்து இருக்கின்றார்கள் என்றால் அது சஞ்சய்க்காகத்தான்...அந்தஅளவுக்கு நண்பர்களிடத்தில் அன்பை சம்பாதித்து இருந்ததால் யாருக்குமே தூரம் ஒரு பொருட்டாக இல்லை...


மணமக்களுக்கு..


பரஸ்பரம் அன்பு புரிந்து விட்டுக்கொடுத்து,குறைவான ஊடல்களுடன், நிறைவான மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்கின்றேன்..இரவு படுக்கைக்கு முன் எந்தவிஷயமாக இருந்தாலும் மனம் விட்டு பேசுங்கள்...அது ஸ்பெக்டரம் விஷயமோ,அல்லது சிம்பு திரிஷா கெமிஸ்ட்ரியோ எதுவாகிலும் மனம் விட்டு பேசுங்கள்.ரசித்த எதையும் இருவரும் தடையின்றி பகிர்ந்துகொள்ளுங்கள் மகிழ்வுடன் வாழ்வாங்குவாழுங்கள்...

நிறைய நண்பர்களை பெற்று அதை சாதித்து காட்டிய சஞ்சய் யூ ஆர் கிரேட் ...சஞ்சய் மற்றும் இந்துமதி நீடூடி வாழ எல்லாம் வல்லபரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget