அமெரிக்க ஆதரவு ஊடகங்களின் தில்லுமுல்லுகள்
-| SanjaiGandhi™ |-
சமீபத்தில் நடந்த ஈரான் அதிபர் தேர்தலில் முகமது அகமதினிஜாத் மற்றும் ஹுசெய்ன் மவ்சாவி ஆகியோர் போட்டியிட்டனர். அகமதினிஜாத் அமெரிக்காவின் பரம எதிரி. மவ்சாவி அமெரிக்க ஆதரவாளர். வாக்கு எண்ணிக்கை அன்று ஃபேஸ்புக், ட்விட்ட்ர் மற்றும் யூட்யூப் ஆகியவை தங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்து, பின் அதிகாரப் பூர்வ முடிவுகள் வெளியாக தாமதானவுடன் , முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்திருக்கின்றன. அவைகளை அப்படியே காப்பி அடித்து உலகம் முழுதும் உள்ள அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன்.
பிபிசி
தேர்தல் முடியும் வரை மவ்சாவியின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பிய பிபிசி அஹமதினிஜாத் செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கிறது. இதன் உச்சகட்டமாக, ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற அஹமதினிஜாதின் பேரணி படத்தை மவ்சாவியின் பேரணி என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதில் அஹமதியின் படத்தை வெட்டிவிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். பின்னர் இதன் முழுமையான படத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுவிட, பிபிசி மன்னிப்புக் கேட்டு “ இரண்டு தரப்பும் பேரணி நடத்தினார்கள்” என தலைப்பை மாற்றி இருக்கிறது.
[மவ்சாவி பேரணி என பிபிசி வெளியிட்ட படம்]Update 19 June 2009: an earlier version of our caption was incorrect. We wrongly stated that this was a pro-Mousavi rally when in fact it was a pro-Ahmadinejad rally.
[எல் ஏ டைம்சின் முழுமையான படம்]சிஎன்என்
ஜூன் 24ஆம் தேதி பாஹரெஸ்தான் சதுக்கத்தில் நடந்த பேரணியின் போது பாதுகாவல் படையினரால் தாக்கப் பட்டு படுகொலைகள் நடந்ததாக சி என் என் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அதே பேரணியின் விடியோ காட்சிகளை மற்றொரு சேனல் ஒளிபரப்பியதில் ஒரு சிறு தடியடி சம்பவம் கூட நடைபெறவில்லை என்று தெரிந்திருக்கிறது. பின் சி என் என் , அந்த செய்திக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. சி என் என் அந்த செய்தி வெளியிட காரணம் யார் தெரியுமா? ட்விட்டெரில் வெளியான செய்தி. :))
ஈரானைப் பற்றிய செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தது குறிப்பிட்ட 3 ஐடிகளில் இருந்து தான். அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும். அந்த 3 ஐடிகளை பற்றி ஆராய்ந்ததில் அதில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ மற்றும் இஸ்ரேல் உளவு நிறுவங்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. stopahmadi@twitter.com , iranriggedelect@twitter.com, change_for_iran@twitter.com ஆகிய 3 ஐடிக்களில் இருந்து தான் செய்திகள் பரப்பப் பட்டுக் கொண்டிருந்திருக்கின்றன். இந்த மூன்றும் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஜெருசலேம் போஸ்ட் இதழுக்கு சொந்தமானவை. முதலில் இந்த 3 ஐடிகளையும் தங்கள் ப்ளாகில் வெளியிட்டுவிட்டு பின் அம்பலமானதும் அதை அழித்திருக்கிறார்கள். இந்த 3 அடிகளும் ஒரே நாளில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
ட்விட்டர் முகவரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதை அதன் தலைவர் இவான் வில்லியம்சும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.எப்படி எல்லாம் சித்து வேலை பண்றாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்...
இந்த சதி வேலைகள் அனைத்தையும் மீறி அஹமதினிஜாத் வெற்றிபெற்றுவிட்டார். தனக்கு அடங்கிப் போகாத ஒருத்தருக்கு எதிரா அமெரிக்கா சகல தில்லுமுல்லுகளையும் கூச்சமே இல்லாம அறங்கேற்றி இருக்கு. பிபிசி சி என் என் போன்ற செய்தி நிறுவங்களின் மீது உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பிரத்யேக செய்தி என்ற பெயரில் தகவல்களை திரித்து சொல்வதென்பது உலகம் முழுதும் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்யும் வேலை தான். தமிழில் “ நமது சிறப்பு நிருபர்” என்ற பெயரில் எழுதுவது போல். ஆனால் அனைவரும் கவனிக்கும் அனைவரும் கவர் செய்யும் ஒரு பொதுவான நிகழ்வுகளில் தில்லுமுல்லு செய்வதென்பது அறவே கூச்சமற்ற செயல். பிபிசி வெளியிட்ட புகப் படம் அலல்து அந்த பேரணியின் செய்தி அனைவரிடமும் இருக்கும். அதிலும் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்றால் அவர்கள் தரும் பிற செய்தியில் என்ன நம்பகத் தன்மை இருக்கும்?.
நன்றி : திசண்டேஇண்டியன் & கூகுள்.
ஒன்னும் புரியல...