தமிழகம் மொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டி

காமராஜர் இலவச மதிய உணவு திட்டம் தொடங்கியதற்கு அற்புதமான காரணம் இருந்தது. ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும் என்பது தான் அது. அதைத் தாண்டி ஓட்டு வாங்குவதற்காக என்று எந்த இலவசத்தையும் கொடுத்து மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றவில்லை. அவருக்குப் பின் வந்த திராவிட கட்சிகள் ஓட்டு பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கொடுக்கும் இலவசங்களுக்கு அளவே இல்லை. சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி வரை. பல நூறு கோடிகள் புளங்கும் ஒரு துறையில் கைவைத்து பல ஆயிரம் பேரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியது எந்த வகை சாதனை என்று புரியவில்லை.

முதலில், டிவி இல்லாத வீட்டுக்கு மட்டுமே இலவச டிவி வழங்கப் படும் என அறிவித்து பின், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் என மாற்றினார்கள். எதில் குறை நிலவியதோ?. எனக்கு ஒரே சந்தேகம் தான். மின்சாரம் இன்று டிவி இயங்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் தமிழகத்தில் எல்லா வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப் பட்டுவிட்டதா?. தமிழகம் மின்சார வசதியில் தன்னிறைவு அடைந்துவிட்டதா?. இருக்கும் இணைப்பிற்கே மின்சாரம் வழங்க முடியாமல் 3 மணி நேர மின் தடை அறிவிக்கப் பட்டிருக்கிறது தனிக் கதை. அல்லது மின்சார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்ட் வழங்கப் பட்டுள்ளதா?. எதன் அடிப்படையில் அனைவருக்கும் இலவச டிவி வழங்கப் படுகிறது.

இலவசங்களை வாரி வழங்கும் வள்ளலே கொஞ்சம் மின்சாரத்தையும் வாங்கி வழங்கலாமே.

சரி இதெல்லாம் இன்றும் தொடரும் பழையகதை. காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களும் இந்த இலவச போதையில் இருப்பது மகாக் கேவலம். ஓட்டு அரசியல் ஒழிக.

சரி இப்போ மேட்டர் அதில்லை. தமிழகம் ஆரம்பித்து வைத்த இலவசம் எங்கு வந்து நிற்கிறது என்று பாருங்கள்.

  • ஏழைகளுக்கு மாதம் 25கிலோ உணவு தானியம்.
  • மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை. ( அப்புறம் என்னத்துக்கு வேலைக்கு போவான்? )
  • அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு, இலவச கேஸ் சிலிண்டர், இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச குடிநீர் இணைப்பு.
  • விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோரின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி.
  • மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் ( ஜெயலலிதா, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் குடுக்கறதா சொல்லி இருந்தாங்க )
  • பெண் ஊழியர்களுக்கு 13 மாத சம்பளம்.
  • பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பட்ட படிப்புகளும் இலவசம்.
  • முதியோர் உதவித் தொகை ரூ.700.
இதெல்லாம் எந்த கொடை வள்ளல் அளிக்கப் போறார்னு கேட்கறிங்களா? ஹிஹி.. ஹரியானா மாநில தேர்தலுக்கு இந்திய தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தேர்தல் வாக்குறுதிகள் தான்.

சம்பாதிச்சி வாங்க வழி பண்ணுங்கய்யான்னா பிச்சை எடுக்க வைக்கிறாங்க.

நல்லா இருங்கய்யா..

கிரி  – (October 10, 2009 10:27 AM)  

ஹா ஹா ஹா கலக்கல்

இலவசம் இலவசம் என்று கூறி அனைவரயும் சோம்பேறி ஆக்காமல் விட மாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க போல இருக்கே.

ஹரியான அறிக்கை பட்டைய கிளப்பும் அறிக்கை ;-)

மின்னுது மின்னல்  – (October 10, 2009 11:10 AM)  

எந்த அரசியல் வாதியாவது உண்மையா நேர்மையா மக்களுக்கு நல்லது செய்து இருக்கானா..?


அவனவன் சின்ன லெவலில் இருந்து பெருசா கொள்ளை அடிக்க தான் அரசியலுக்கே வர்ராங்க

ஆண்டாண்டு காலமா இதுதான் நடக்குது

கொள்ளையடிக்குரதுல கொஞ்சம் பங்கு இலவசம்னு கொடுத்தால் பொறுக்காதே..:)

SanjaiGandhi  – (October 10, 2009 11:22 AM)  

//கொள்ளையடிக்குரதுல கொஞ்சம் பங்கு இலவசம்னு கொடுத்தால் பொறுக்காதே..:) //

ஹிஹி.. கொள்ளையில் இலவசம் கொடுத்தால் யார் வேண்டாம் என சொல்றாங்க. கஜானாவில் இருந்தல்லவா எடுத்து இலவசம் தந்து அதிலும் கொள்ளை அடிக்கிறார்கள். :(

அத்திவெட்டி ஜோதிபாரதி  – (October 10, 2009 11:35 AM)  

:))))))

நன்னா இருக்கு!

இதில் எதும் பிரச்சாரம் இல்லை என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்!

bala  – (October 10, 2009 11:56 AM)  

//காமராஜர் இலவச மதிய உணவு திட்டம் தொடங்கியதற்கு அற்புதமான காரணம் இருந்தது. ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும் என்பது தான் அது. அதைத் தாண்டி ஓட்டு//

சஞ்சய் காந்தி அய்யா,

காமராசர் மாதிரி நேர்மையும்,உழைப்பும்,நிர்வாகத்திறனும்,கொண்ட தலைவர்களைக் காண்பது அரிது.இந்திராகாந்தி அவருக்கு ஆப்பு வைக்கிறேன் என் தமிழ் நாட்டில் காங்கிரசுக்கே ஆப்பு வைத்துவிட்டார்.என்ன செய்வது.நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்,இன்று இந்திய இறையாண்மைக்கு எதிரான கொள்கைக்ளையுடைய மஞ்ச துண்டு போன்ற கீழ்த்தரமானவர்களுக்கு ஜல்லி அடிக்கும் கேவலம் மனதை பிசைகிறது.என்ன செய்ய.

பாலா

கும்க்கி  – (October 10, 2009 12:54 PM)  

அப்ப அடுத்து ஹரியாணாவுல டெண்ட் போட்டுருவமா சஞ்சூ..?

அறிவிலி  – (October 10, 2009 5:15 PM)  

நிச்சயம் தமிழகம்தான் இதற்கெல்லாம் முன்னோடி.சென்ற வருடத்தில் நான் எழுதிய இடுகை.கிறுக்கித் தள்ளு: அரசியல் இலவசங்கள்

ரவிசங்கர்  – (October 10, 2009 7:43 PM)  

//பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பட்ட படிப்புகளும் இலவசம்.//

முடிந்தால் இந்தியா முழுவதும் எல்லா படிப்பும் இலவசம் என்ற நிலை வர வேண்டும்.

//முதியோர் உதவித் தொகை ரூ. 700//

இன்னும் கூடுதலாகத் தர வேண்டும்.

வேலை வாய்ப்பற்றவர்களுக்கு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதியுதவி தருவது உலக வழக்கம் தான்.

**

வாக்கு வங்கி அரசியலை விமர்சிக்கிறேன் என்று ஒட்டு மொத்தமாக விமர்சிக்க வேண்டாமே?

ஏழைகளுக்குத் தரப்படும் இலவசங்கள், மாநியங்களை விட பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்குக்கு ஏராளமான சலுகைகள் தரப்படுகின்றன. அவற்றை யாரும் பெரிதாக கேள்வி கேட்பதில்லை.

அத்திரி  – (October 10, 2009 8:52 PM)  

ஹரியானாவுல ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டியதுதான்

Sammy  – (October 11, 2009 5:12 PM)  

//இதெல்லாம் எந்த கொடை வள்ளல் அளிக்கப் போறார்னு கேட்கறிங்களா? ஹிஹி.. ஹரியானா மாநில தேர்தலுக்கு இந்திய தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தேர்தல் வாக்குறுதிகள் தான்///

பாஸ்... அவர் நிலைமை அப்படி, ஆளும் கட்சியை விட ரொம்ப பின்தங்கிய நிலைமையில் உள்ளார்.
சந்திர பாபு நாய்டு, கலைஞர் பாணியில் முயற்சித்து தோல்வி அடைந்தார். எல்லா எடத்துலயும் workout ஆகாதோ ?

செல்வேந்திரன்  – (October 11, 2009 10:47 PM)  

அப்படியே நெட் கனெக்ஷன் வித் லேப்டாப் கொடுத்துட்டாய்ங்கண்ணா... பொழுதன்னிக்கும் பிலாக் எழுதிட்டு காலத்த ஓட்டிடலாம்...:)

Mini  – (October 12, 2009 10:41 AM)  

Nice post sanjay. Very thought provoking. Keep rocking

No  – (October 14, 2009 10:26 AM)  

(Warning: அன்பு அண்ணன் திரு சஞ்சய் காந்தி கேட்டமையால், என் அபிமான திரை அரங்கான காலம் திரை அரங்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் இந்த அரங்கில் வெளியிடுகிறேன்)


நோ productions வழங்கும்
அன்பான எங்கள் அண்ணன்
பதிவுலக பாவலர், கட்டுக்கடங்கா எழுத்தாவலர்

இணையில்லா, பெமிசால், ஒன் and ஒன்லி

கோவி கண்ணன்

IN and AS

"கோவியன்"
-----------------
(மாறுபட்ட மூன்று அவதாரங்களில் - தும்பி, டெமோ & கோவியன்)

சக நடிகர்கள்-

கோபக்கார அண்ணன் திரு மாதவராஜ் - DCP பிரபாகர்
அண்ணன் திரு அதிஷா - சாரி
அண்ணன் திரு வால்பையன் - மனோதத்துவ நிபுணர்
சதாவாக நடிப்பதற்கு பதிவர்கள் யாரும் பொருந்தாததால், சதாவே நடிக்கிறார் நந்தினியாக!!

பகுதி -1
-------------

அண்ணன் தும்பி அவர்கள் இண்டர்நெட்டில் புகுந்து பல பதிவுகளை ஆராய்ந்து, எது சரி, எது தவறு என்று கும்மிகள் அடித்துகொண்டிருக்கிறார்!!!
பதிவர் ஒருவர், Escape velocity retardation in solid propulsion systems பற்றி அரைப்பக்கம் அரைத்ததை தனக்கு தெரிந்த விஞானம் கொண்டு, எழுதியதை தவறென்று சொல்லி திருத்தி கொண்டிருந்தார்!

அடுத்த பதிவரின் தமிழ் நாட்டில் சாலைகளின் இன்றைய நிலைமை என்ற பதிவில், தும்பி அண்ணன் இப்படி ஒரு திருத்தம் கொடுக்கிறார்!

"நண்பரே நீங்கள் எழுதியதை படித்தேன், சாலைகள் நமக்கு தேவை என்பது உண்மை என்றாலும், அதை செய்ய ஆலைகள் தேவை இல்லை என்பதே நிஜம்! மாலைகளை எடுத்து சாலைகளை அலங்காரம் செய்ய வேண்டும் என்று மாலைவரை வேலை செய்தவர்கள் காலை வரை சாப்பிடாமல் இருப்பதுதான் உண்மையில் நடக்கிறது! இது காலத்தின் கோலம்! காலத்தில் தேடுங்கள், சாலை மூலையில் இருக்கும்!"

இந்து கும்மியை போட்டு முடித்த அடுத்த இரண்டு நிமிடங்களில் பதிவிட்டவரின் பதில் " யோவ், நானே ஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதி தள்ளுறேன், அதை சூப்பருன்னு சொல்லி பல பேரு வேற பாராட்டறாங்க, அதை படிச்ச பிறகுதான் எனக்கு நிம்மதியா தினசரி தூக்கம் வருது, அதுல நீவேற புகுந்த ஏம்ம்பா ஞாயம் பேசற, ஏதோ வந்தோமா, சூப்பர், கலகிட்டீங்க, வாழ்த்துகள் அப்படின்னு ஒரு நாலு வரி எழுதி போவோம்ன்னு இல்லாம, எதுக்கு உங்களுக்கு இதெல்லாம், வேலையப்பாருங்க, இல்லாட்டி நடக்கருதே வேற"

No  – (October 14, 2009 10:26 AM)  

இதை பார்த்து வருத்தப்பட்ட தும்பி அவர்கள், தன்னுடைய ப்ளாகிற்கு செல்கிறார். அவர் ப்ளாகின் பெயர், உலக அறிவாளி நானே!!

கடைசியாக தும்பி எழுதிய பதிவு - அறிவாளிகள் எப்படி பதி எழுதவேண்டும் என்பதைப்பற்றி - அதை திட்டு சுமார் ஐம்பது கும்மிகள்! அதை படித்துவிட்டு almost அழும் நிலைமைக்கு வந்துவிடுகிறார் தும்பி - "ச்சே இந்த உலகத்தில உண்மையை பேசினால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே, யாருக்குமே அறிவு ஞானம், போன்றவை இல்லையே, சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்களே ச்சே ச்சே......" என்று தனக்குதானே புலம்புகிறார்!!

இப்படி அழுதுகொண்டிருக்கும்போது online chatஇல் ஒருவர்
" பதிவு அருமை தும்பி, எல்லோரும் ஏசினாலும் உன்னை பாராட்ட நண்பன் நானிருக்கிறேன்"
நம்பிக்கை இல்லாமல், தும்பி - " யாருங்க அது?"
அனானி - " சாரி
தும்பி - " பரவில்லை, எனக்கு சாரி சொன்ன முதல் ஆள் நீங்கதான், சொல்லுங்க"
அனானி - " அதான சொன்னேன் - சாரி"
தும்பி - "அய்யா, பரவாயில்லை, உங்கள் மன்னிப்பு ஏற்கப்பட்டது, பேரச்சொல்லுங்க, எனென்றால், இவ்வளவு நேரம் onlineஇல் இருந்தால் தேவை இல்லா லைன் congestion ஏற்ப்படும், பின்னர், அவசியமான ஈமெயில் அனுப்புகின்ற சிலரின் நேரம் வீணாகி, மின்சாரம் செலவாகி, முக்கிய வேலைகள் கெட்டு, emergency case ஆக இருந்தால் உயிரை விட்டு, செத்த கேஸ் ஆக இருந்தால், சுடுகாடு கிடைக்காமல் அவஸ்த்தைப்பட்டு.........."
அனானி - "யோவ் ப்ளேடு, நான் உன் நன்பான் சாரி.....அதப்புரியாம ஏம்ப்பா இப்படி சாவடிக்கிற?
தும்பி - "சாரி, சாரி, பழக்க தோஷம்...அதான், சாரி....
சாரி - "சொல்லு"
தும்பி - "சாரி"
சாரி - அதான் சொல்லிட்டியே....
தும்பி - சாரி.....அது வந்து....
சாரி - டேய் நீ திருந்தவே மாட்டடா...ஆள வுடு..ஏதோ ஒரு நண்பன் என்று நந்தினி மேட்டர்ருல உதவலாமேன்னு onlineஇல வந்தேன்....வேணம்...நானும் உன்ன மாதிரி மெண்டல் ஆகிவிடுவேன்......
தும்பி - "சாரி சாரிமா......சாரி இல்லாம நானா?..எனக்கு இருக்கும் ஒரே நண்பனே நீதாமா... சாரி! நந்தினி சமாச்சாரத்துல கொஞ்சம் உதவி பண்ணுமா.... செய்தீங்கன்னா ஒன்னோட நட்ப பாராட்டி ஒரு நாலு பதி போடுறேன்! பேரு கூட சாரியின் காதல் தியரி அப்படின்னு வெக்குறேன், மேலும், இந்த அதிஷா என்று ஒருவர் என் போலவே எழுதி என் நிலைமைக்கு வர துடிக்கிறார், அவரும் இந்த மாதிரி புதுசா நிறைய கண்டுபிடிப்பார், அவர கிண்டல் பண்ணுற மாதிரி நானும் - சாரி ஒரு காப்பி அடிக்க முடியாத அன்பு வியாபாரி அப்படின்னு போடுறேன்" எப்படி ...சாரி...
சாரி - மயங்கி விழுகிறார்
தும்பி - " சாரி சாரி சாரி ............ எனக்கு இப்போ ஒரே worry, நீ பக்கத்துல இருந்தா எனக்கும் மனசுல வரும் புது புது story......... " இப்படி computer முன் தனுக்கு தானே உளறி கொண்டு இருக்கிறார்............"

End of Part one.....................

SanjaiGandhi  – (October 14, 2009 10:50 AM)  

No அண்ணா, தயவு செய்து ஆபாச வார்த்தைகள் மட்டும் எழுதிட வேண்டாம். அப்படி எல்லாம் செய்ய மாட்டிர்கள் எனத் தெரியும். ஆனாலும் ஒரு அன்பு வேண்டுகோள் தான். மற்றபடி, உங்கள் படைப்புகள் இங்கே இடம்பெறுவது என் பாக்கியம். எனக்கு மெயில் அனுப்பினால் தனிப் பதிவாகவே போடுவேன். :)

சென்ஷி  – (October 14, 2009 10:57 AM)  

மிஸ்டர் நோவின் கதை அருமை! சீக்கிரம் அடுத்தடுத்த பாகங்களை ஏற்றுமாறு விழைகிறேன்!

SanjaiGandhi  – (October 14, 2009 10:58 AM)  

//"நண்பரே நீங்கள் எழுதியதை படித்தேன், சாலைகள் நமக்கு தேவை என்பது உண்மை என்றாலும், அதை செய்ய ஆலைகள் தேவை இல்லை என்பதே நிஜம்! மாலைகளை எடுத்து சாலைகளை அலங்காரம் செய்ய வேண்டும் என்று மாலைவரை வேலை செய்தவர்கள் காலை வரை சாப்பிடாமல் இருப்பதுதான் உண்மையில் நடக்கிறது! இது காலத்தின் கோலம்! காலத்தில் தேடுங்கள், சாலை மூலையில் இருக்கும்!"//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்டிண்ணே.. எப்டி? :))

No  – (October 14, 2009 12:46 PM)  

அன்பான நபர் திரு சஞ்சய்காந்தி அவர்களே,

பயம் வேண்டாம். ஆபாசமாகவோ, Personal abuseஆகவோ நான் என்றும் எழுதுவதில்லை! ஒன்லி கிண்டல் and of course, quite some hard criticism, depending on the idiocy quotient of what is written! So dont worry.

நன்றி

No  – (October 14, 2009 1:35 PM)  

கோவியன் - பகுதி - 2
---------------------------------

இணையதள ஜாம்பவான் என்று கருதப்படும் ஒரு பெரும் பதிவர் நாவிற்கு அழகு சொல்லா பல்லா என்ற பதிவு ஒன்றை எழுதினார்! மடத்தனமான இந்த பதிவிற்கு சுமார் இரநூறு கும்மிகள் பாராட்டி வந்தன! அதில் ஒன்று மட்டும் கேள்வி கேட்டு, law point கேள்விகளுடன் வந்தது! எழுதியவர் அண்ணன் தும்பி - கேட்டார் அண்ணன் - " பதிவில் நிறைய பிழைகள், இருந்தும் நீங்கள் அதை ஒரு நல்ல பதிவென்று பலருக்கு போட்டு காட்டியது நல்லது இல்லை. மக்களின் மனதை கெடுத்து உண்மையை கொல்லுகிறீர்கள்! நாவிற்கு அழகு எதற்கு, நாவிற்கு வேண்டியது நீளம் மட்டுமே. அது இருந்தால் அதை வைத்து பல பற்களை உடைக்கலாம், பல சொல்லாடல்களை உருவாக்கலாம்! எனவே, உங்கள் பதிவு ஒரு ஏமாற்றுவேலை! வேண்டம் நிறுத்துங்கள்" - இப்படி எழுதினார் அண்ணன் தும்பி!

இதை படித்து கொதித்துப்போன பெரும் பதிவர், தன சகாக்கள் நால்வரிடம் சொல்லி தும்பி அண்ணனின் ப்ளாகில் புகுந்து கண்டபடி பின்னூட்டம் இடச்செய்தார்!

online இல் ஒருவர் பின் ஒருவராக வந்து சகட்டு மேனிக்கு தும்பி அண்ணனை தாக்கினார்கள்! கண்டபடி அர்ச்சனைகள் குவிந்தன! திக்குமுக்காடிப்போனார் தும்பி! சொல்லடி தாங்கமுடியாமல் மயங்கி விழுந்தார்!!

பிரபல பதிவரும் ஒழிந்தது சனியன் என்று சொல்லி தன் உளரும் வேலையை continue செய்தார்!

இரண்டு நாட்களுக்குபிறகு அவரின் ஆன்லைன் connection மின்னியது - யாரோ online இல் வந்து பாராட்டுகிறார்கள் போலும் என்று நினைத்த பிரபல பதிவர், வணக்கம் யாருங்க நீங்க, என்ன பாராட்டதான வந்தீங்க, வாங்க வாங்க என்று வரவேற்றார்!!

அனானி - "இவ்வளவு கேவலமா எழுதறயே நீயெல்லாம் பதிவு எழுதினா என்ன எழுதாட்டி என்ன?"
பி ப : "யோவ், யாருயா நீ ? அறிவாளி மாதிரி என்கிட்டே மோதர? உனக்கு Writing systems and phonetics consistency பற்றி தெரியுமா? இதெல்லாம் என்னன்னு புரியுமா?"
அனானி - "Writing systems have individual configurations that also have co-evolved with phonetic consistency. Basically semantics and pre gramatical inconsistency served as linear inputs in language development! இது தெரியாமல் என்கிட்டே கேள்வி கேட்குறியா?"
பி ப ஆடிப்போய் - யாருங்க நீங்க?
அனானி : கோவியன்!!!!!!!!
பி ப : உங்கள இதுக்கு முன்னாடி வலை உலகில பார்த்ததே இல்லையே!!! ஏதாவது பதிவு போடுரீங்கலான்னு சொல்லுங்க சார்....வந்து சூப்பர், கலக்கிட்டீங்க அப்படின்னு கும்மியடிச்சுட்டு போறேன்! நீங்களும் அதே மாதிரி எனக்கு வந்து டெய்லி........
கோவியன் : அடச்சீ .................இந்த நிலைமையிலும் கும்மி லஞ்சமா? அதுவும் எனக்கேவா? இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுதி மக்களையும் தமிழையும் கெடுக்ககூடாதுன்னுதானே இந்த கொவியனே அவதாரம் எடுத்துருக்கான்! அவனுக்கே கும்மியா????

Meanwhile பிரபலபதிவரின் ப்ளாக் பயங்கரமாக hack செய்யப்பட்டு அவரின் பதி ஒவ்வொன்றாக அவர் கண்முன்னே அழிக்கப்படுகிறது! இதை செய்வது கோவியந்தான் என்று புரிந்து கொண்ட பி ப கெஞ்சுகிறார்!

பி ப: கோவியன் அவர்களே சும்மா ஒரு ப்ளாக்தான எழுதினேன், அதுக்கு இவ்வளவு தண்டனையா! என்னோட பதிவெல்லாம் காலியாயிடுச்சே ஐயோ ஐயோ...இத எப்படி சொல்லி அழுவேன்....
கோவியன்: இப்படி சொல்லு இதை - புருடா புராணம் படிச்சிருக்கியா நீ ? அதுல இப்படிதான், இந்த மாதிரி கேவலமான பதிவுகளை எழுதறவங்க பதிவை target செய்து பீஸ் பீசாக உடைக்க வேண்டுமென்று இருக்கிறது. இதுக்கு பேரு கணினி டமீல்டமால்!

பிரபல பதிவர் மயங்கி விழுகிறார்!!!!!!!

-------------------------------- End of part 2.......................................

(அந்த பிரபல பதிவர் பாத்திரத்தில் நடித்தது ஆருயிர் அண்ணன் திரு Luckylook தான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல என்று தீர்க்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்)

No  – (October 14, 2009 5:41 PM)  

கோவியன் - பகுதி 3
-------------------------------

தும்பி அண்ணன் வலைதளத்தில் வளைய வந்து கொண்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு யார், அவரின் அறிவுப்படி, தப்பு தப்பாய் எழுதுகிறார்கள் என்பதை தேடி அலைந்து, law point பேச துடித்துகொண்டிருக்கிறார்! அந்த நேரத்தில் ப்ரொவ்சிங் சென்டரில் நேரமாகிவிட்டதால், அவரை கிளம்பசொல்லுகிறார் சென்டர் உரிமையாளர்! தும்பி அண்ணனும் கிளம்புகிறார்!

சென்டர் மூடும் நேரத்தில் திடீரென்று ஒரு சத்தம்........... ஒரு உருவம் குதித்துக்கொண்டு வருகிறார்...........யாரென்று பார்த்தால்....நம்ம அண்ணன் ஸ்டார் ஜன்..........

ஸ்டார் ஜன்: ஐயா, கொஞ்ச நேரம் டைம் பொறுத்து ப்ரொவ்சிங் செண்டேரை மூடுங்க ஐயா...ஒரே ஒரு பதிவு இன்னைக்கு எழுதணும்.......இன்னைக்கு கணக்கு பாக்கி........எழுதலைனா........எனக்கு நாளைக்கு உசிரு போயுடுங்க..........

ப்ரொவ்சிங் சென்டர் உரிமையாளர்: அடப்போங்க சார், அவனவன் ஈ மெயிலில் Resume அனுப்பிட்டு ராத்திரிவரை பதிலுக்காக காத்திட்டு இப்போதான் போறாங்க, நீங்க என்னடான்னா, பதிவு எழுதனும் கடை முடாதீங்க அப்படின்னு சொல்லுறீங்க...

ஸ்டார் ஜன்: சார் சார் அப்படியெல்லாம் சொல்லாதீங்க.......பதிவு போடணும்......ஒரு பத்து பதிவுகளுக்கு கும்மி அடிக்கணும்....அண்ணன் அதிஷா அவர்கள் என்னடி முனியம்மா பாடல் Sound of Music படத்துல வர Do Re Me....பாடல் போல இருக்குன்னு எழுதிருக்கார்...அந்த பதிவுக்கு போய்..ஆமாங்க ஒரே மாதிரிதான் இருக்கு அப்படின்னு பதில் போடணும், மேலும் எங்க அண்ணன் கோவி கண்ணன் அப்படின்னு ஒருத்தர் இருக்கார், அவர் உலகில் மூத்தகுடி Beer ஆ, Old Monk Rum ஆ அப்படின்னும் ஒரு விவாதத்த தொடக்கிஇருக்கார்! அங்க போய்...ரெண்டும் இல்ல சார் எங்க பக்கத்து தெரு மடுக்குசாமி தாத்தாதான் உண்மையான மூத்தக்குடி ஏன்னா அவருதான் தொண்ணூத்தி மூணு வயதிலும் அசராம நாளுக்கு பத்து ரவுண்டு அடிக்கிறாரு அப்படின்னு பதில் போடணும்! இவ்வளவு முக்கியமான வேலை சார், தயவு செய்து சிறிது நேரம் கொடுங்கள்..........

No  – (October 14, 2009 5:41 PM)  

இதைக்கேட்டதும் ப்ரொவ்சிங் சென்டர் உரிமையாளர் பக்கத்தில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஸ்டார் ஜான் அண்ணனை அடிக்க வருகிறார்!

ஸ்டார் ஜான் அண்ணனும் ஓடி ஒளிகிறார்!

நடக்கும் இந்த விடயங்களை தும்பி அண்ணன் பார்த்துகொண்டிருக்கிறார்......என்ன கொடுமை இந்த நாட்டில்.....பதிவு எழுத துடிக்கும் ஒருவருக்கு.....சூப்பர் என்று எதைப்பார்த்தாலும் கூறும் ஒருவருக்கு இந்த நிலைமையா என்று எண்ணி மனதில் அழுதுகொண்டே போகிறார்! போகும் பொழுது ப்ரொவ்சிங் செண்டரையும் அதன் உரிமையாளரையும் மனதில் நினைத்து கொண்டும் செல்கிறார்!

அடுத்தநாள்.........

அந்த ப்ரொவ்சிங் சென்டர் உரிமையாளர் காலையில் வெட்டியாக உட்ட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவரின் செல் ஒலிக்கிறது!

உரிமையாளர் : ஹலோ யாருங்க.....இங்க வெட்டியா பதிவு எழுதறவங்களை நாங்க விடறது இல்லீங்க.....
மறுமுனையில் : டேய்.......நான்தாண்டா கோவியன் பேசுறேன்.......கொஞ்சம் உன்னோட computerஐ ஆன் பண்ணு........ அப்பா தெரியும் நான் யாருன்னு

உரிமையாளர், ஆன் செய்து விட்டு உத்துபார்க்கிறார்...எல்லா screen லேயும் பூச்சி பூச்சியாக ஊறுவது போல ஒரு கிராபிக்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது......computer மற்றும் monitor ஐ அணைத்து, மறுபடியும் ஆன் செய்து பார்கிறார்...ஒன்றும் மாறவில்லை....வைரஸ் cleaner activate செய்கிறார்...அப்படியும் ஒன்றும் நிர்க்கவில்ல்லை..பூச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.....

பதறிப்போய்.....ஹலோ சார்....என்ன சார் பண்ணீங்க......என்னோட ஹார்ட் டிஸ்க் எல்லாம் காலியாவுது சார்....தயவுசெய்து நிறுத்துங்க சார்........நான் என்ன பாவம் பண்ணேன்...என்ன நடுக்குது சார்...........

கோவியன்: இத நீங்க ஒரு அப்பாவி உங்க கிட்ட உதவி கேட்டப்போ நினைத்து பார்த்திருக்கவேண்டும்.......என்ன சொன்னீங்க....வெட்டியா பதிவு எழுதுரவனுக்கெல்லாம் இங்க இடம் கிடையாதா......இப்ப பாருங்க உங்க இடம் என்னாக போகுதுன்னு.....இது என்ன என்று கேட்டீர்கள் இல்ல ...சொல்லுறேன் கேட்டுக்கோங்க.....இதான் லேட்டஸ்ட் Silk worm virus...

உரிமையாளர்: சார் ஒரு சின்ன தப்புக்கு இவ்வளவு தண்டனையா...

கோவியன்: சின்ன தப்புதான் நாளைக்கு பெரிசாகுது....ஒருத்தர் பாவம் கஷ்டப்பட்டு மூத்தகுடி பற்றி எழுதியிருக்காரு...அதை ஒருத்தர் புகழ்ந்து கும்மி அடிச்சு அப்புறம் ஒரு நாலு பேரு அத்தப்பத்தி அலசி அறிவை வளர்ப்பாங்க.....ஒரு சின்ன தப்பால அதை நீங்க தடுத்தா...அப்புறம் நம்ம நாட்டுல எப்படிடா அறிவு வளரும்....சின்ன தப்பு பெரிசாகி...இந்த மாதிரி அற்புதமான டாபிக் எல்லாம் மக்களுக்கு தெரியாமலே போய்விடும்.......அதுக்குதான் இந்த தண்டன...இதுக்கு புருட புராணத்துல கிருமி போஜனமுன்னு பேரு...சில்க் வோர்ம் வைரஸ் உங்க ஹர்ட் டிஸ்க் எல்லாவற்றியும் தின்றுவிடும்............வாழ்க வலைப்பதிவர்கள்....வளர்க இதைப்போன்ற நாட்டுக்கு தேவையான பதிவுகள்.......ஒழிக உன்னைப்போன்ற அறிவிலிகள்.......

மயங்கி விழுகிறார் ப்ரொவ்சிங் செண்டேரின் உரிமையாளர்!!!!!!!!

.........................................End of Part 3.............................

(Browsing centre உரிமையாளராக நடித்தது அன்பு அண்ணன் திரு மாதவராஜ் இல்லை...ஏனென்றால்..அவருக்கு வேறு ஒரு நல்ல ரோல் இருக்கிறது)

No  – (October 14, 2009 6:46 PM)  

கோவியன் - பகுதி 4
-------------------------------

சாரி (அதிஷா) தும்பியைத்தேடி வருகிறார்

அதிஷா : தும்பி, இந்த மாதிரி computer முன்னால உட்கார்ந்து ராப்பகலா தட்டிக்கிட்டிருந்தா நந்தினி என்ன ஒரு ஒரு மந்தி கூட நீ யாருன்னு பாக்காது! ஏன் நாமட்டும் என்ன பதிவு எழுதலையா.....ஒன்ன மாதிரியா நா யோசிக்கிறேன்...ஏதோ எனக்கு தெரியாத, புரியாத, சமாசாரமெல்லாம் பத்தி சுத்தி சுத்தி அடிக்கலையா, இதோ பாரு நேற்றுக்கூட ஜாலிலோ ஜிம்கானா என்ற பாடலுக்கும் ஜாரா சே ஜிந்தகி படத்துல வர பாடலுக்கும் ஜதியத்தவிர ராகம், தாளம், பல்லவி எல்லாம் ஒண்ணுதான்னு எழுதிட்டு வந்தேன்! அதைப்பார்த்து நம்ம ஸ்டார் ஜன அண்ணன் கூட அட ஆமாம் ஒரே மாதிரிதான் இருக்குன்னு பாராட்டி கும்மி வேற ஒன்னு போட்டாரு! இத எழுத எனக்கு அஞ்சு நிமிடம்தான் தேவைப்பட்டது, அண்ணன் ஸ்டார் ஜானுக்கு அவ்வளவுகூட ஆயிருக்காது...அவரு ஒரு எடத்துல சூப்பர், ஆமாம், கலக்கிட்டீங்க அப்படின்னு ready made ஆக எழுது வெச்சு கட் அண்ட் பேஸ்ட் பண்ணுறாரு, எந்த பதிவு என்றாலும் அதை ஓட்டுறாரு...சோ...நாங்கள் எல்லாம் சில நொடிகளில் செய்யிரத நீங்க ஒரு நாளைக்கு செய்தீர்கள் என்றால் யார் சார் உங்கள கண்டுப்பாங்க? ஒரு விடயம் சார், என் கடைசி பதிவிற்கு திரு ஸ்டார் அண்ணன் ஜால்ராவே அடிக்கல, போன் செய்து கேட்டதுக்கு தலையில கட்டி அப்படின்னு சொன்னாரு...பாவம்...............

தும்பி (கோவி): யாராவது கட்டயால அடிச்சிருப்பாங்க.........

அதிஷா ஆச்சிரியமாக: எப்படி இவ்வளவு correct ஆ சொன்னீங்க......

தும்பி: எல்லாம் ஒரு Guess தான்!

அதிஷா மகிழுந்து போய் : இவ்வளவு அறிவுள்ள நீங்க இப்படி இருக்கீங்களே....உங்க இந்த நிலமைய மாத்தனும்முன்னா நான் சொல்லுறத நீங்க கேட்கணும்! பதிவு எழுதறத மறந்து கொஞ்சம் நந்தினி பற்றி நினையுங்கள்.....அப்படியே கொஞ்சம் கனவு காணுங்கள்.........அமெரிக்க....கனடா.....அப்படி.......நந்தினியோட...டூயேட்......

தும்பி: இதெல்லாம் எனக்கு பழக்கமே இல்ல சாரி ........ Law point பேசித்தான் எனக்கு பழக்கம்........டூயட் பாடும் போது நீங்களும் கொஞ்சம் துணைக்கு வந்தா நல்லாஇருக்கும் .......

அதிஷா: தலையில் அடித்துக்கொண்டு.....சரி சரி நானும் வரேன்........ கனடாவில தொடங்கி அப்படியே இங்கிலாந்துல முடிச்சிக்கலாம்...அப்புறம் இந்த கனாக்கண்டேனடி மெட்டுல மட்டும் பாடல் வேண்டும், எனென்றால் அது நைஜீரியா நாட்டு பாடல் குழுவான ஓஸ்ஸிபிஸ்ஸா கோஷ்டி பாடியதிலிருந்து காப்பியடிக்கப்பட்டது...........

தும்பி: சரி ஆரம்பிக்கலாமா........

காட்சி கனடா போகிறது.....
கோவி அண்ணன் அப்பாவி தும்பியாக வேட்டி துண்டுடனும், பின்னால் அதிஷா மொட்ட்டைபோட்டுக்கொண்டு பட்டை நாமத்துடன் தோலக்குடன் தயாராகிறார்!
நந்தினிக்காக காத்திருக்கிறார்கள்!

திடீரென்று ஒருவர் கையில் ஜால்ராவுடன் வந்து குதிக்கிறார்! பார்த்தால் அண்ணன் ஸ்டார் ஜன்!

அதிஷா: ஸ்டார் அண்ணே, இது நாங்க காணுற கனவு சீன் அண்ணே, அதுல நீங்க எப்படி.....Impossible........

ஸ்டார் ஜன்: என்ன சார், நீங்க வேற, நான் வேறா ..தும்பி அண்ணன் வேற நான் வேறா ......நீங்க வாயை திறந்தாலே போதுமே, அது கனவில் என்றாலும் ஜால்ரா அடிக்க நான் வந்து விடுவேன் என்று உங்களுக்கு தெரியாதா...அதான் சார் ஆஜர் ஆகிவிட்டேன்......கவிதையை அவுத்துவிடுங்க.......அப்புறம் பாருங்க நம்ம ஜால்ராவை........

நந்தினியாக சதா வருகின்றார்.........

தும்பி அண்ணன்:

குமாரி........என் ஈ மெயில் இன்று இங்கு வந்தது குமாரி
எந்தன் வெப்பபு சைட்டு நின்று போனது குமாரி
என் ப்ளாகு மொத்தமும் முழுகிப்போனதே...........

அதிஷா : ஷன் ஜானே தோனே தேனீ தெனானோ
அட தும்பக்குதானே தும்பி வந்தானோ

ஸ்டார் ஜான்: ஜிங் ஜிங் ஜாங்.....ஜிங் ஜிங் ஜாங்.....

No  – (October 14, 2009 10:42 PM)  

இந்த காதலென்ன ஒரு பாரமா
எந்தன் ப்ளாகு போல ரொம்ப நாறுமா
பல சப்ஜெக்ட்டை எடுத்து அடித்து துவைத்து
ஒன்றும் புரியாமல் நிற்கின்றேன்

நினைப்பதை எல்லாம் கிடைத்ததை வைத்து கிருக்கித்தள்ள விழைகின்றேன்

அதிஷா:
ஒரு அர்த்தமும் இல்லாமல் சத்தமும் இல்லாமல் எழுதி தள்பவன் எவன்
அரை இன்ச்சு செய்தியை அரை மைல் ரீலாக சுத்துபாவன் இவன் இவன் இவன்...

கோவி:

குமாரி.........

என் நெஞ்சு வெந்து பொந்து போல ஆனது குமாரி
என் பதிவர் ஆசை பறந்து போனதே.......

இப்படியாக கனவில் பாடி அண்ணன் தும்பி நந்தினியிடம் தன் எண்ணங்களை நேரில் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்!

அதிஷா: கலகிட்டீங்க அண்ணே, இப்படித்தான் தெய்ரியமா இருக்கணும்.......பயப்படாம சொல்லணும் உங்கள் ஆசைகளை!

தும்பி: நீ வேண்டும் என்றால் பாரேன் என் ஸ்டைல் என்னவென்று புரியும்....

நந்தினி வருகிறார்.......தும்பி அண்ணன் அவர் அருகில் சென்று.......

தும்பி: நந்தினி, கொஞ்சம் உங்க ஈ மெயில் இன்பாக்ஸ் பக்கம் போங்க!

நந்தினி: என்னது ஈ மெயில்ஆ......என்கிட்டே ஏதோ பேசவேண்டும் என்றுதானே சொன்னீங்க? இப்போ எடுக்கு ஈமெயில் எல்லாம்?

தும்பி: அது வந்து...எனக்கு எப்போவுமே கம்ப்யூட்டர் மூலமாகத்தான் பேசிப்பழக்கம்...அதான் ...

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் ஒட்டு கேட்டுக்கொண்டும் இருக்கும் அதிஷா தலையில் அடித்து கொண்டு almost அழும் நிலைமைக்கு வந்து விடுகிறார்....

நந்தினி: கருமம் கருமம்....இவ்வளவுதானா இல்லாட்டி வேற ஏதாவது இருக்கா?

தும்பி (இதை மிகவும் சீரியஸ்ஆக எடுத்த்கொண்டு:): இருக்கு நந்தினி இருக்கு......உனக்கு நான் தந்த ஈ மெயில்இல பல விடயங்கள் சொல்லியிருக்கேன்..அதுக்கு முன்னாடி முக்கியமாக உங்க அப்பா அம்மாவுக்கும் ஒரு CC போட்டு விட்டேன்!!!!!!!

(இதை கேட்ட அதிஷா மயங்கி விழுகிறார்)

தும்பி: நந்தினி, முதலில் காதல் என்றால் என்ன அப்படின்னு விளக்கி இருக்கேன். அதாவது என் ஹார்மோன்கள் எப்படி முதலில் தட்டி விடப்படுகின்றன, பின்னர் அது எப்படி அது மூளையின் சில இடங்களை பதம் பார்க்கின்றன, அதுவும் Upper கார்டெக்ஸ் இல இது எப்படி செயல்பட்டு மற்ற நியூரான்களை திருப்பிவிடுகிறது என்பதல்லாம் சரியாக விளக்கியிருக்கிறேன். மேலும் wikipedia வின் லிங்கும் கொடுத்திருக்கேன்....படிச்சா புரியும்....கூடவே காதல் வயப்பட்டவர்களின் பதிவுகளில் நான் சென்று எழுதிய பின்னூட்டங்களையும் attach செய்திருக்கிறேன்...படிங்க உங்களுக்கு நல்லா புரியும்.....ஹ்ம்ம்...இன்னும் ஒண்ணு...நான் காதல் பற்றி எழுதிய பதிவுகளுக்கு என் இனிய நண்பர்களான ஸ்டார் ஜான், ஜோதி பாரதி, ஞானசேகரன் இன்னும் பலர் எழுதிய பாராட்டுகளையும் attach செய்திருக்கிறேன்....அதையும் படிச்சி..இன்னும் புரியலைன்னா சொல்லுங்க....காதல் புரியாதவர்களுக்கு புரியவைப்பது எப்படி என்று ஒரு பதிவு எழுதுறேன்.......படிச்சுட்டு நீங்களே வந்து I love you என்று கும்மி அடியுங்கள்...எப்படி.....(வாயில் பொங்கிவரும் புன்சிரிப்போடும் , ஒரு பெருமிதத்தோடும் அண்ணன் முடித்து நந்தினியை பார்க்கிறார்)

நந்தினி மயங்கி விழுகிறார்!!!!!!

-----End of Part 4..................

குடுகுடுப்பை  – (October 14, 2009 11:12 PM)  

சஞ்சய் அவர்களே, நோ விடம் அனுமதி பெற்று தனிப்பதிவாக இட்டால் நலம்



மெயிலில் பெற.

குசும்பன்  – (October 15, 2009 10:49 AM)  

//பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் விருந்துக்கு அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்.//

நான் ஆஜர்:)

அன்புடன் மலிக்கா  – (October 15, 2009 11:25 AM)  

என்னது பின்னூட்டம் இடாமல்போனால் விருந்துக்கு அழைப்பா?

எச்சரிச்சிட்டீங்க சும்மா போகலாமா?
அப்பாடி தப்பிச்சுட்டேன்பா.

No  – (October 15, 2009 12:58 PM)  

கோவியன்- பகுதி - 5
-------------------------------

ஸ்பெஷல் CID அலுவலகம்! DCP பிரபாகர் (அண்ணன் திரு மாதவராஜ்) கோபமாக அமர்ந்து இருக்கிறார்!

அவரைப்பார்க்க CID ஏட்டு சாரியாக அண்ணன் அதிஷா வருகிறார்!

அதிஷா: சார்....வணக்கம்...... ...கூபிட்டதா சொன்னாங்க, அதான் வந்தேன்........

இடை மரித்த மற்றொரு ஏட்டு: ஜாக்கிரத DCP சார் இன்னைக்கு ரொம்ப அப்செட்....யாரோ அவரு மேசையில அவரைப்பற்றி ரெண்டு வரி துண்டு பேப்பருல எழுதி வைத்து விட்டார்களாம்.....அதைப்பார்த்து கோபமாகி இருக்கிற பேப்பர் எல்லாத்தையும் கிழித்து போட்டு....அப்படியும் ஆத்திரம் தீராம பக்கத்து கடையில இருக்கிற பேப்பர்ஐ எல்லாம் எங்கள வாங்கிவரச்சொல்லி அதையெல்லாம் கிழி கிழி என்று கிழித்து இப்போதான் முடிச்சாரு!

அதிஷா: சரி இப்போ எல்லாம் ஓகேதான!

ஏட்டு: இருங்க சார், கோவம் இன்னும் ஆறவில்லை! எங்களுக்கு எல்லோருக்கும் வேலை ஒன்று வேற கொடுத்திருக்காரு! அவர விமர்சனம் பண்ணவன திட்டி ஒரு நாலு பக்கம் எழுதி, அதை அவரு பல xerox எடுத்து எங்கள இந்த சர்கிள் மொத்தமும் ஒட்ட சொல்லிருக்காரு......வாங்க ஒரு கை கொடுங்க.....கஷ்டமா இருந்துச்சுன்னா, stationஇல மட்டும் நீங்க ஒட்டுங்க...நாங்க வெளிய கவனித்துகொள்கிறோம்!!!!

அதிஷா நேர DCP இடம் போய்: சார், சொல்லுறேன்னு தப்பா நினைக்காதிங்க.. நானும்தான் கண்டபடி எழுதித்தள்ளுறேன், எனக்குந்தான் கண்டபடி ரிஸ்பான்சு வருது இதுகெல்லாம் கவலைபட்டேனா ..... நேத்துகூட தியாகராஜா பாகவதர் படமான ஹரிதாசுல வரும் வதனமே சந்திரபிம்பமே பாடல் Seventh Heaven என்ற படத்துல வர ஒரு பாடலில் இருந்து சுடப்பட்டது என்று எழுதினேன்! அப்புறம்தான் தெரிஞ்சது இது ஊமைப்பட காலத்துல வந்த ஒரு படமுன்னு.. அனா அதுக்குள்ளார நம்ம ஸ்டார் அண்ணன் போன்ற பலர் வந்து ... அமாம் ஒரே மாதிரிதான் இருக்கு அப்படின்னு பாராட்டிவிட்டு போய்ட்டாங்க ... சில வேலை இல்லாத காண்டு பிடிச்ச அனாநிகள்தான் கண்டபடி என்னை வசைபாடி உனக்கெல்லாம் சங்கீதமுன்னா என்ன தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு எழுதினாங்க.... நான் என்ன செய்தேன்.... மாற்று கருத்துக்கெல்லாம் கவலையே படலை... நமக்கு வேண்டியது ஹிட்ஸ் ....அவ்வளவுதான்..... எப்படி சார் ... நீங்களும் இதுக்கெல்லாம் கவலை பட கூடாது சார்!!!!

மாதவராஜ் : எல்லாம் சரிதான் தம்பி, நாந்தான் ஒரு புரட்சி DCP ஆச்சே, நான் கண்டபடி ஏதாவது எழுதுவேனா.... எல்லாம் ஞாயமதான எழுதுறேன்.... அதுவும் நம்ம station writer ஐ கேளுங்க , நம்ம FIR கூட ரொம்ப ஆராச்சி செய்துதான் போடுறோம் ... அதுலபோயி எப்படி தம்பி குற்றம் சொல்ல முடியும் .... நம்ம FIR File அ கொஞ்சம் பாருங்களேன், எவ்வளவு தெளிவா இருக்கு!!!

அதிஷா FIR புத்தகத்தை பார்க்கிறார்.... : சார்... என்ன சார் இது ...... அடிசபாபா நகரத்தில் இன்று நான்கு கொலைகள் விழுந்தது, கொன்றவர் யார், இறந்தவர் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் தவிக்கிறார்கள்... எங்களுக்கு இந்த கேசு கிடைத்தால் பட்டையை கிளப்போவோம் என்ற இருக்கு ..... அடிசபாபா எதியோபியா நாட்டின் தலை நகரமாச்சே .......(யோசிக்கிறார் அதிஷா பின்னர் குழப்பத்துடன் மாதவராஜின் முகத்தைப்பார்க்கிறார்)

மாதவராஜ்: இன்னும் அடுத்தபக்கத்தை பாருங்க ... மொம்பாசா நகரின் போலிசு கமிசனர் ஏன் அரசு பணியில் இருக்கும் ஒருவரிடம் கார் வாங்கினார், ஏன் அதை அவர் செய்திருக்ககூடாது என்பதையும் வில்லாவாரிய FIR எழுதியிருக்கிறேன்

குழம்பிப்போய் அதிஷா : சார் மொம்பாசாவுக்கும் .. அடிசபபாவுக்கும் நமக்கும் என்ன சார் சம்பதம்..... அங்க போலிசு கமிசனர் என்ன செய்தா நமக்கென்ன சார், அடிசபாபாவில எவன் செத்த நமக்கென்ன சார் ?????? ஒண்ணுமே புரியலையே......

No  – (October 15, 2009 12:58 PM)  

மாதவராஜ்: என்ன இப்படி சொல்லிட்டீங்க சாரி....... எவ்வளவு விடயம் உலகில நடக்குது அதுக்கெல்லாம் நான் FIR போடலேன்னா யாரு போடுவாங்க ... போன வாரம் கூட நம்ம செவ்வாப்பேட்டை முத்துபாண்டி சிங்கபூரில் இருந்து பினாங் போகும் பொழுது விமானத்துல குடுத்த சாப்பாடு தட்ட விட்டுக்கு எடுத்துட்டு
போயிட்டாராம்... அதபத்தி இன்னைக்கு ஒரு FIR போடனும்முன்னு நினைச்சேன், பாழாப்போன இந்த அனானி என்னோட மூடை நாசம் பண்ணிட்டான்!!!!

அதிஷா ஆடிப்போய் : சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க ........

மாதவராஜ் : சரி நீங்க ஆதரவு கொடுத்ததால, இந்த அனானி அவதூற மறந்து விடுகிறேன் .... உங்களுக்கு நன்றி .... இப்போ நான் கூப்பிட்டு அனுப்பிய விடயத்திற்கு வருவோம் .......

அதிஷா: சொல்லுங்க சார் ....... ஏதாவது புதுசா பாட்டு கேட்டீங்களா ... பிடிக்கலைன்னா சொல்லுங்க .... ஏதாவது படத்திலேர்ந்து சுட்டதுன்னு ஒரு பதிவு போடுறேன் .... ஆணை இடுங்க சார்......

மாதவராஜ்: பிரச்சனை அது இல்லை சாரி ..... ஒரு அனானி ஒருத்தன் எல்லோரையும் காலிபன்னுறான் .... இது வரைக்கும் ஒரு ஐம்பது PC, பத்து சர்வர், எட்டு ப்ரொவ்சிங் சென்டர் காலியாயிருக்கு...... யாருன்னே புரியலை ... வாங்க கண்டு பிடிப்போம் ......

அதிஷா: ஏதாவது clue இருக்கா சார் ?

மாதவராஜ்: இல்லையே ............................

அதிஷா: ஓகே ஓகே இல்லைனாலும் பரவாஇல்லை, பத்து வருஷம் முன்னாடி அமெரிக்காவில நடந்து hackingஇலிரிந்து இந்த hackingகும் காப்பியடிக்க பட்டதுன்னு பதிவெழுதி நானே ஒரு clue அ உண்டக்கிறேன்...... எப்படி....

மாதவராஜ்: அதெல்லாம் வேணாம் ..... ஒரு நிமிடம் ........... ஒரு clue இருக்கு ..... ஹாக்கிங் நடந்த இடத்துல புருட புராணத்துல வர சில சொல்கள் சொல்லப்பட்டதாக
சொன்னாங்க .... அது என்ன சார் புருட புராணம் .... என் FIR இல இது வரை வந்ததில்லையே ...... உங்களுக்கு தெரியுமா....

அதிஷா: சார், அதெல்லாம் நமக்கு தெரியாது ..... அனால் கொஞ்சம் நேரம் கொடுங்க .. புருட புராணம் , The count of Monte Cristo என்ற புத்தகத்தில் இருந்துதான் காபி அடிக்க பட்டது என்று பதி ஒன்று எழுதுறேன்.......

மாதவராஜ்: நான் சீரியஸா கேட்கிறேன் .... இந்த மாதிரி மறுபடியும் நீங்கள் உளறினால், உங்கள் மேல ஒரு FIR போடுவேன், சாரி ஒரு அயல் நாட்டு வ்யாபாரின்னு.......

அதிஷா: சார் சார் சார்..... அதெல்லாம் வேண்டாம் சார் ....... எனக்கு ஒரு தோணுது ... என் நண்பர் தும்பி அப்படின்னு ஒருத்தர் இருக்கார், அவரு இந்த மாதிரி தேவை இல்லாததப்பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்காரு, அவரக்கேட்டா இதப்பத்தி எல்லாம் வெவரமாக சொல்லுவாரு ... வரீங்களா

மாதவராஜ்: வாங்க உடனே போகலாம் ....... writer நான் இல்லாத நேரத்துலா உலகத்துல ஏதாவது நடந்துச்சுன்னா நோட் செய்து வச்சிகோங்க, வந்து FIR போடுறேன் ..... அதே சமயம், அனானியா யாராவது வந்து துண்டு சீட்டு கீட்டு ஏதாவது வச்சாங்கன்னா, கண்டபடி திட்டி ஒரு நூறு போஸ்டர் வைங்க, வந்து நானே ஒட்டுகிறேன்.........

அதிஷா: சார்.... கொஞ்சம் பொறுங்க .... என் நண்பர் ஒரு மாதிரி நிறைய லா பாயிண்டு எல்லாம் பேசுவாரு ...... கண்டபடி கேள்விகேப்பாறு ...... சோ நீங்க உங்க IP address, web site address, server name ... எல்லாம் செரியா இருக்கான்னு பாருங்க ... இல்லாட்டி IP address இல்லாத IG அப்படின்னு ஏதாவது பதிவு போடுவாரு .............

இருவரும் தும்பியை சந்திக்க செல்கிறார்கள் ..............

--------End of part 5 -------------------

விக்னேஷ்வரி  – (October 15, 2009 5:08 PM)  

ரொம்ப வருத்தமான விஷயம். நம் வருங்கால சந்ததியைப் பிச்சைக்காரர்கள் ஆக்குவதில் எல்லோரும் முனைப்போடு இருக்கிறார்கள்.

No  – (October 16, 2009 12:59 AM)  

கோவியன் - பகுதி 6
--------------------------------

அண்ணன் மாதவராஜும் அண்ணன் அதிஷாவும் தும்பியை தேடி வருகின்றனர்!

எங்குதேடியும் தும்பி காணவில்லை. உடனே அதிஷாவுக்கு புரிந்துவிட்டது, அதாவது தும்பி பதிவெழுத ஆரம்பித்துவிட்டார், சோ எந்த ப்ரொவ்சிங் செண்டருள்ள இருப்பாருன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கடினமென்று!

மாதவராஜ்: சாரி, என்ன இந்த ஆளு ரொம்ப பேஜாரா இருக்காரு, செல் போன்ல்ல கூப்பிட்டு சொல்லக்கூடாதா..... ச்சே, வேலை வெட்டியில்லாம என்ன இது எப்போ பார்த்தாலும் பதிவு எழுதறதோ.... என்ன மாதிரி FIR போட்டா கூட பரவாஇல்லை ..... அதை விட்டு பதிவு கும்மின்னு....

கோபமாக அதிஷாவிடம் - உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம் தருகிறேன் அதுக்குளார அவரை பிடிக்க முடியவில்லை என்றால், "சாரி சொன்ன தும்பி ஆரி போன காஞ்சி" அப்படின்னு FIR போடுவேன், அது மட்டும் இல்ல, பராக் ஒபாமாவே புருட புராணம் தெரியாத உங்களுக்கு நோபெல் பரிசு எதற்கு அப்படின்னு இன்னும் ஒரு FIR போடுவேன்......

அதிஷா : சார் உங்க முதல் FIR ஓகே, அனால் அடுத்த ஒன்றுக்கும் எனக்கும்தான் என்ன connection என்று மட்டும் சரியா புரியலை ......................

மாதவராஜ்: என்னைப்பார்த்தா connection பற்றி கேட்குறீங்க.... இது கூடவா உங்களுக்கு புரியலா? என்னோட FIR ஐ பராக் ஒபாமா படிப்பாருன்னு உங்களுக்கு பிடிபடலையா...... அத்த பார்த்து அவரும் புருட புராணமுன்னா என்னன்னு என்கிட்டே கேட்டு, நானும் உங்க பேரச்சொல்லி , கூடவே நீங்க ரெண்டும் பெரும் சரியில்லை அப்படின்னு சொல்லி , அதனால உங்களால இத கத்துக்க முடியாதுன்னும் சொல்லி, உங்க பேரு இந்த நாடு முழுக்க ரிப்பேரு ஆகி ........

அதிஷா மனதிற்குள் - ஐயையோ ஐயையோ நானே ஏதோ சிவனேன்னு அவன் இதக்காப்பி அடிச்சான், அதக்காப்பி அடிச்சான் அப்படின்னு கதை உட்டு காலத்த தள்ளுறேன்.... இவரு என்னடான்னா பராக் ஒபாமா அப்படி இப்படின்னு ஒரேடியா போறார்.... ஒரு வேளை நிஜமாகவே ஒபாமா இவருகூட பேசுவாரோ? தும்பி அண்ணனே பரவாயில்லை போல இருக்கே..... அவரு நந்தினிய மட்டும்தான் பிடிச்சி சுத்தராறு, இவரு எதைஎல்லாமோ சுத்தறாரே, காதுல தலையில...மூக்கில.... . ஐயோ தும்பி உன் பேரச்சொல்லி இந்த மாதிரி மாட்டிக்கிட்டேனே ....

இப்படி அவருக்குள்ளேயே புலம்பும் பொழுது திடீரென்று ஒரு ஐடியா அதிஷாவிர்க்கு வருகிறது!!!

அதிஷா: சார் கொஞ்சம் நேரம் கொடுங்க, ஒரு ப்ரொவ்சிங் சென்டருக்கு போயி, ஆன் லைன்இல தும்பிய பிடிக்கிறேன்......

மாதவராஜ்: என்னமோ செய்யுங்க..... அனா பராக் ஒபாமா மட்டும் நினைவில இருக்கட்டும்......

அதிஷா ப்ரொவ்சிங் சென்டருக்கு சென்று எப்படியோ ஒரு ஈமெயில் கொடுத்து தும்பி அண்ணன் எங்கே என்று கண்டு பிடித்துவிடுகிறார்! அவரையும் வீட்டுக்கு வரச்சொல்லி மாறுவேடத்திற்கு மாறிய மாதவராசுடன் செல்கிறார்!

அதிஷா: தும்பி, இவருதான் பதிவர் புண்ணியகோடி... ஆனால் பாவம் இவர் பதிவுகளை ஒருவர் கூட படிப்பதில்லையாம்.... அதான் வித்தியாசமாக ஏதாவது எழுதி நிறைய ஹிட்களை வாங்குவது எப்படின்னு தெரிஞ்சிக்க உன்கிட்ட வந்திருக்காரு ..... இப்போகூட புருட புராணம் என்ற ஒன்றைப்பற்றி யாருமே இதுவரை பதிவு போட்டதில்லையாம், அதை இவரு போடப்போறாராம், அதற்காக ஆராச்சி செய்ய உன்னோட உதவி தேவை.........

கோவி: அட அவ்வளவுதான, சார் கவனமாக கேளுங்க, இந்த புருட புராணம் என்பது கெட்டவர்களுக்கு நரகத்துல கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றியது ....... இதுல எல்லாம் கவர் ஆகியிருக்கு, கிருமி போஜனம், டமீல்டமால் இப்படி பலவகை...

மாதவராஜ்: நீங்க சொன்னத நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த மாதிரி வேற தண்டனைகள் பெயர சொல்லுங்களேன்

கோவி: டிரைவ்டமால், டிஸ்க்டணால், கேபிள்கபால் அப்புறம் முக்கியமாக மூளைதிவால் அப்படின்னு ஒன்றும் இருக்கு.....

மாதவராஜ்: அது என்னங்க அது மூளைதிவால் எங்கேயோ கேள்விப்பட்டாமாதிரி இருக்கே, இத சொன்ன உடனே, சில பேரு ஞாபகம் கூட வருதே, என்ன சாரி, உங்க ஞாபகம் கூட வருதே........

கோவி: அது என்ன என்றால், ஒரே ஒரு பாத்ரூம் இருக்கும் ஒரு வீட்டில் ஒருவரை பிடித்துக்கட்டி , நாலு கிலாஸ் வெளக்கெண்ணை குடிக்கவைத்து, பாத்ரூமை பூட்டி வைத்து சாவியை நம் கையில் வைத்துக்கொண்டு, மூணு மூணு பக்கத்துக்கு ஒரு பதிவு எழுதினாதான் பாத் ரூம் கதவை திறேப்பேன் என்று சொல்லி, இப்படியே கிளாஸ் கலாசாக கொடுத்து ஒரு முப்பது பக்கங்களை எழுதவைத்து, எழுதிய இந்த நாராசத்தை, நமக்கு பிடிக்காதவர்களை படிக்கசெய்து, அதற்க்கு ஒரு நாலு பக்கம் கும்மியும் அடிக்கசெய்து, அப்படி செய்தவுடன் அவனின் நிலைமைதான் மூளைதிவால்! இது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா தண்டனை, எழுதினவனுக்கும், அதை படிப்பவனுக்கும்...................

அது ஒரு கனாக் காலம்  – (October 16, 2009 10:14 AM)  

என்னால தாங்க முடியல.... வெடி சிரிப்பு தீபாவளி... நன்றி டாக்டர் நோ

Mrs.Menagasathia  – (October 16, 2009 4:17 PM)  

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Prosaic  – (October 16, 2009 9:41 PM)  

oorukkellaam karuthu sollum NO avargal ezhudhuvadhu ennavo magaa mokkai.. idhula thanipadhivaa podasolli jaalraa vera, kodumaida saami..

No  – (October 17, 2009 12:24 AM)  

பாக்ஸ் ஆபிஸ் ரெஸ்பான்ஸ் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.......இந்த படத்த கண்டிப்பாக முடிச்சுடுவோமுன்னு சொல்லிட்டேன்... போன படம்தான் கால்ஷீட்டு பிரச்சனைல பாதில நினுப்போச்சு!!! பிரச்சனை கதையில் இல்லை, பலர் இருக்கிற வரை..................கொட்டி கிடக்குது......மொக்கைய போட்டுடவேண்டியதுதான், அடுத்த பூஜையும் ரெடி...........

நோ Productions வழங்கும்

எழுத்தின் தலைவன்,
பதிவுத்திலகம்,
கும்மிக்கண்மணி,
அஞ்சாநெஞ்சேன்,
ஆருயிர் அண்ணன்
எங்கள்
கோவி கண்ணன்

IN

கோவிஜீ (The Gas)
-------------------------------
(பேரைக்கேட்டாலே இன்டெர்நெட் மொத்தமும் சும்மா பதருதில்ல!!!!)

சக நடிகர்கள்:

பாதி வேஷன் : அண்ணன் திரு யுவகிருஷ்ணா என்ற லக்கி லுக்
அறிவு : அண்ணன் திரு கார்கி
தமிழ் செல்வி - ஷ்ரியா (பதிவர் யாரும் பொருந்தாததால்)
Dr செழியன் : இன்னும் முடிவாகவில்லை
மணிவண்ணன்: இன்னும் முடிவாகவில்லை

பொங்கலுக்கு முன்னரே கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும், தியேட்டர்தான் இன்னும் முடிவாகவில்லை..............

பயங்கர தாக்குதல்கள், கவினயமுள்ள பாடல் வரிகள், ஒப்பற்ற நடிப்பு, அசத்தலான பன்ச் டையலாகு போன்ற எல்லா அம்சங்களும் கொண்ட முற்றிலும் புதுமையான, பொழுதுபோகாதவர்கள் நடித்த, எடுத்த, வாசிக்க போகும் வாரலாற்று காவியம்........

மிக விரைவில் வருகிறார்----- கோவிஜீ - THE GAS!!!

நன்றி

எம்.எம்.அப்துல்லா  – (October 19, 2009 12:50 AM)  

@ அண்ணன் நோ

அண்ணன் கோவியார் என் நண்பர். ஆனால் அதற்காக உங்கள்
விகடத்தை ரசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை :))
(இந்த உண்மையை அப்பட்டமாகச் சொல்வற்கு கோவியார் கோபித்தாலும் சரி ) :)

மனம் நோகாமல் செய்யும் hard கிரிட்டிசிசம் ஒரு பெரும்கலை. தயவுசெய்து தொடருங்கள்.

bala  – (October 19, 2009 9:09 AM)  

நோ அய்யா,


//கோவிஜீ (The Gas)
-------------------------------
(பேரைக்கேட்டாலே இன்டெர்நெட் மொத்தமும் சும்மா பதருதில்ல!!!!)..//

இது என்ன பெரிய பட்டம்.எங்க ஊர் வெளியே மிதக்கும் அய்யாவுக்கு,ம க இ க நக்சல்,மாசே துங் குஞ்சுகளெல்லாம் சேர்ந்து "வலையுலக ஓ என் ஜி ஸி பெரியார்" என்ற பட்டம் வழங்கினார்களே, மறந்து விட்டீர்களா?.வற்றாத ஜீவ gas அல்லவா எங்கள் ம க இ க பொலிட் பீரொ மெம்பர்.அவருக்கு முன்னால் கோவிஜி The Gas வெறும் "farting against thunder" என்னும் ஜுஜுபி தான்.

பாலா

Vidhoosh  – (October 19, 2009 3:38 PM)  

///பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் விருந்துக்கு அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்.//

வில்லாதி வில்லன்.

நான் NO-வின் பின்னூட்டத்தை படிக்கத்தான் வந்தேன் சஞ்சய். :))

-வித்யா.

No  – (October 19, 2009 4:16 PM)  

Sorry, டைப் செய்ததை எங்கே சேவ் செய்தேன் என்று தெரியவில்லை (பகுதி 7, 8 & 9) and I had to do a controlled de-formatting to accomodate non-coded web pulse on my computer which has hid my un-marked files some where!!! Apologise!!!!

எனினும் சற்றும் மனம் தளராமல் விக்ரமாதித்யன், பகுதிகளை மறுபடியும் எழுதுவான்!!!! Please bear with me for a few hours.

அன்பான நண்பர் திரு பாலா அவர்களே,

நீங்கள் சொல்லவருவது என்ன என்று சரியாக புரியவில்லை.....திட்டு என்றால் சரியாக திட்டவும்... புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்..... ம.கா.ஈ.கா (வினவு அண்ட் கம்பனி) சமாச்சாரம் என்றால்....... அவர்கள் என் பின்னூட்டங்களை பதிவு செய்வதில்லை..... அழித்துவிடுகிறார்கள்..... ஜனநாயகவாதிகள் பாருங்க ..... அதும் என் கடைசி ஷாட் நல்லாவே வந்தது ...... அதான் அவங்களுக்கு கோவம் போல ........

அவர்கள் நடித்த அருமையான படம் ஒன்றும் வைத்திருக்கிறேன் ..........

NO Productions வழங்கும் -

வினவாயணம்

அட்டகாச காமெடி சித்திரம்............

படம் தயார்..... என் விருப்பம் அதை வினவு திரை அரங்கத்தில் ரிலீஸ் செய்யவேண்டுமென்று, but அவங்கதான் அதை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் ...... வேற யாராவது பதிவர்களுக்கு விருப்பமிருந்தால் நான் rights கொடுக்க தயார் ............

ரெண்டு பகுதி வேறு
(1) வினவு தளத்தில் ஒரு நாள்
(2 ) புரட்சி செய்யலாம் வாங்க

பாடல்காட்சிகள் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.... வேணும்முன்னா சேர்க்கிறேன் ............... (பாதி எழுதி விட்டு நிறுத்திட்டேன்)

வேணுமுன்னா சொல்லுங்க ..........................

நன்றி

bala  – (October 19, 2009 9:04 PM)  

//திட்டு என்றால் சரியாக திட்டவும்... புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.....//

நோ அய்யா,

அய்யோ, தெய்வமே, உங்களை நான் ஏன் திட்டப் போகிறேன்?நான் யாரையும் திட்டுவதில்லை.எனக்கு திட்டு வாங்கித் தான் பழக்கம்.போகட்டும்,விஷயத்துக்கு வருகிறேன்.

உங்க படத்தின் டைட்டில் "கோவிஜி-The Gas" னு போட்டிருக்கீங்க.ஆனால் ஏற்கெனவே ம க இ க மல்டிப்லெக்ஸில் "மிதக்கும் ஓ என் ஜி ஸி பெரியார்" என்ற சூப்பர் படம் வெளியாகி வெற்றி நடை போர்ட்டுக் கொண்டிருக்கும் போது உங்க படம்,தச்வதாரம் முன் குசேலன் போல் தோல்வி அடையக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான் சொன்னேனே தவிர, வேறு எதுவுமில்லை.O N G C முன்னால் வெறும் Gas போணியாகாதல்லவா?

வேண்டுமென்றால் படத்தின் டைட்டிலை "கோவிஜி-The Gas" என்பதற்கு பதிலாக "கோவிஜி-The Fart" என்று மாற்றி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யாமல் மலேசிய டிபிசிடி 0,1,2,3 மல்டிப்லெக்ஸில் ரிலீஸ் செய்தால் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.100 நாட்கள் ஓடின பிறகு மலேசியா ஜெகதீசன் தியேட்டரில் ரீரிலீஸ் செய்து இன்னும் 100 நாட்கள் ஓட்ட முடியும்.

இன்னும் ஒரு சின்ன ரெக்கமெண்டேஷன்.
"பழைய விக்ரமாதித்தன் தொங்கும் உடலை தான் வீழ்த்துவாண்டா;எங்க கோவிஜி தொங்குறதையெல்லாம் வீழ்த்துவாண்டா;நவீன விக்ரமாதித்தன்டா எங்க ஃபார்ட்"
என்ற பாடல் காட்சியை நீக்கிவிட்டதா கேள்விப் பட்டேன்.வேண்டாமய்யா வேண்டம்.இந்த பாடலை டைட்டில் போடும் போதும்,கடைசியில் க்ரெடிட்ஸ் போடும் போதும் இரண்டு தடவை போட்டு அசத்துங்க.வெற்றி உமதே.

பாலா

No  – (October 20, 2009 9:56 AM)  

பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு -

இங்கு பாலா என்றொருவர் தீபாவளி கூட்டத்தில் தொலைந்து போய் கண்டெடுக்கப்பட்டார்!!!

அடயாளங்கள் - சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார்!! சுத்தமாக என்னவென்று புரியவில்லை! நடுவில் காட்டு ஆமணுக்கு என்று எதையோ சொல்லுகிறார்!!!! பின்னர் ONGC அப்படி இப்படியென்று ஏதோ சத்தம் வேறு!!!!

இவரைப்பற்றி தெரிந்தவர் யாராவது இடுந்தால் தயவுகூர்ந்து கூட்டிக்கொண்டு போகவும்!!! இல்லையென்றால் என் படத்திற்கு கோவி அண்ணனை தூக்கிவிட்டு இவரை கதாநாயகனாய் போட வேண்டிவரும் என்று எச்செரிக்கிறேன்!!!

No  – (October 20, 2009 11:55 AM)  

கோவியன் - பகுதி - 7
--------------------------------

கோவி அண்ணன் (தும்பியாக) "அரைத்தமாவை அரைப்பது சுகமா இல்லை ஆறிப்போன ஆப்பத்தை ஆயாக்க்கடையில் அடிப்பது சுகமா?" என்று ஒரு முக்கியமான பதிவை இரெண்டாவது நாளாக மும்முரமாக
எழுதிக்கொண்டிருந்தார்! இந்த பதிவையும் நந்தினிக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார்! இதற்குமுன் நந்தினிக்கு அவர் அனுப்பிய மெயிலில், தான் எழுதிய பதிவான "ஒட்டறை அடிக்க ஓராயிரம் முறைகளும், எட்டுகால் பூச்சியை ஒழிக்க ஒரே ஒரு வழியும்" என்ற ஒன்றின் சாராம்சங்களை கட் அண்ட் பேஸ்ட் செய்து அனுப்பியிருந்தார், கூடவே, "நந்தினி நீயும் நானும் இதே மாதிரி ஒட்டரையும் கொம்பையும் போல ஒன்றாகவே இருக்குனும்" என்று வேறு hi-light செய்து இருந்தார்!

அவரின் செல் போன் ஒலித்தது, மறுமுனையில் நந்தினி!!!!!

குஷியான கோவி, அஹா நதினி என் பதிவை படித்து இதுல யார் ஒட்டறை, யாரு கொம்பு என்று கேட்கப்போகிறாள் என்ற நினைப்பாக " உன் இஷ்ட்டம் நந்தினி, நீ ஒட்ட்ரைன்னால் நான் கொம்பு, நீ கொம்புன்னா நான்....... அப்பொறம் அந்த எட்டுக்கால் பூச்சிக்கு மட்டும் ஏன் எட்டுக்கால், ஒன்பது இருக்கலாமுன்னு மட்டும் நீ சொல்லக்கூடாது, எனென்றால் இது பரிணாமவளர்ச்சி, இதை நான் மாத்த முடியாது," என்று மிகுந்த எதிர்ப்பார்ப்போடு சொல்லுகிறார்!

நந்தினி: தும்பி ...... நிறுத்துங்க .............. அடுத்தவாட்டி நீங்க இதெல்லாம் எனக்கு அனுப்புநீங்கன்னா, அந்த எட்டுகால் பூச்சிய அடிப்பதர்க்குபதிலாக உங்கள.........

கோவி: வேண்டாம் நந்தினி, பிடிக்கலைன்னா விட்டுவிடு, அடுத்த பதிவுல அரைச்ச மாவின் சுவையைப்பத்தி விலாவாரியா சொல்லியிருக்கேன், நம்ம ரெண்டு பெரும் அரைக்கலாம்!!!!!

நந்தினி: நிறுத்துங்க....... என்னால முடியலா.... உங்கள பத்தி நினைத்தாலே எனக்கு பிடிக்கல..... என்ன இந்த மாதிரி தொந்தரவு செய்யாதிங்க!!

கோவி: எதப்பிடிக்கல நந்தினி, எனகென்ன பதிவில்லையா? பதிவுக்கு பத்து கும்மியில்லையா, வேலைவெட்டி இல்லாம எவ்வளவு விடயங்கள் ஆராய்ந்து எழுதறேன், அதுவும் மண்டைக்கு முடி பாரமுன்னு சொல்லி நம்ம கார்கி அண்ணன் எழுதின பதிவுக்கு நானே மொட்டை போட்டு, அந்த முடியை weight போட்டு, இது மூளையின் weight ஐ விட குறைந்தது என்று பதில் எல்லாம் போட்டேன், அப்படி இருந்தும் ஏன் நந்தினி என்னை பிடிக்கவில்லை........

நந்தினி : ச்சே எப்பொழுது பார்த்தாலும் பதிவு, அதுவும் ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு, அதுவும் நாட்டுக்கு ரொம்ப தேவையான பதிவு, அதுவும் "கூவத்துல காக்கா கக்கா போகலாம் ஆனால் மனுஷன் காத்து வாங்க போக முடியாது அப்படின்னு" - இது ரொம்ப தேவ.......... அதுவும் ரெண்டு வாரமா இத எழுதி, அதா வேற எனக்கு அனுப்பி........

கோவி: என்ன நந்தினி இப்படி சொல்லிட்ட, அவன் அவன் கூவமென்றால் என்னவென்று தெரியாமலே கண்டபடி எழுதறான், நான் நிஜமாகவே அங்க போயி முகர்ந்து பார்த்து உண்மைய எழுதேறேன்........ உண்மையை எழுதுவது தவறா? நான் நல்லவன்தானே .....

நந்தினி: வாயை மூடுங்க ........ எல்லா மனுஷங்களும்தான் அரிப்பு வந்தா சொரிஞ்சிக்குவாங்க, அதிலையும் அரிப்பு வந்தால் சொரிவது எப்படி, என்று எவனாவது ரெண்டு வாரம் எழுதுவானா???? அதே நம்ம அதிஷா அண்ணனை பாருங்க அறிப்பைப்பற்றி அவரு ஐந்து நிமிடத்தில எழுதினாரு, அறிப்பெடித்து சொறிஞ்சா சரக் சரக் அப்படின்னு வர சத்தத்ததான் A R ரஹ்மான் ரங்கீலா படத்துல டைட்டில் பாட்டுல காப்பி அடிச்சுசாருன்னு, சரக்க சர்ரக் பாயல் பாஜே அப்படின்னு...........

கோவி: நந்தினி நந்தினி ....... அப்படியெல்லாம் சொல்லாதே நந்தினி.... நான் ரொம்ப தீவிரமா ஆராச்சி செய்துதான் எழுதுவேன் நந்தினி .... இப்படியெல்லாம் கண்டபடி எழுதமாட்டேன் .... அது வந்து சரக் சரக் இல்ல, ஜனக் ஜனக் பாயல் பஜே ...... அதுவும் அது A R ரெஹ்மான் மெட்டு இல்லை .... அதை பத்தியும் நான் ஒரு மாசம் ஆராய்ச்சி செய்தேன், ஜனகனமன விற்கும், ஜனக் ஜனக்கிர்க்கும் சம்மந்தம் இல்லையென்று .... ...

நந்தினி : போதும் போதும் .... இதுவே கடைசி .... என்னை இனிமேல் நினைச்சு கூட பாக்காதிங்க ..... மறந்துடுங்க ........ உங்கள மாதிரி வெட்டி ஆராய்ச்சி திலகத்திற்கு மற்ற டகாச்சி பதிவர்கள் பரவாஇல்லை......

கோவி: வேண்டாம் நந்தினி.......................... என்னால தாங்க முடியாது ....... என்னோட பதிவும் என்னையும் பிடிக்கலைன்னு சொன்னா, நான் எழுதின காவியங்களை எல்லாம் என் கண்ணீரில் கரைத்து,வேறு எதையும் ஒரு மாதம் சாப்பிடாமல், அதை மட்டுமே குடித்து என் உயிரை விட்டு விடுவேன் ................... அப்படியே அதப்பத்தி ஒரு பதிவும் எழுதி ........

நந்தினி: நானும் அப்படியே தும்பிக்கு பைத்தியம் பிடித்தால் பதிவு எழுதும், பதிவுக்கே பைத்தியம் பிடித்தால் அது எதை எழுதும் அப்படின்னு அதுக்கு பின்னுட்டம் போடுறேன் ........என்று சொல்லி தொலைபேசியை கட் செய்கிறார் நந்தினி!!!!!

No  – (October 20, 2009 11:55 AM)  

இதைக்கேட்டு மனம் உடைந்து போன தும்பி பக்கத்தில் இருக்கும் மாட்டுத்தொழுவத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்ல்கிறார் தற்கொலை செய்துகொள்ள!!!

தலையை தொட்டிக்குள் விட்டு சாக நினைக்கிறார், அப்பொழுது தும்பியின் பக்கத்தில் யாரோ வருவது போல தெரிகிறது, தண்ணீரில் தெரிந்த அந்த உருவம்
சிவந்த கண்களுடன் நோக்குகிறது, தன்னுடைய பெரிய வாயினால் அன்பாக எதையோ கூறுவது போல உணர்கிறார் தும்பி .... மேலும் அவர் முதுகை வருடுவதுபோல உணர்கிறார்.....

இந்த அன்பை பார்த்து எனக்குன்னு யாரோ இருக்காங்கப்பா என்று நினைத்து தன தற்கொலை வைபவத்தை நிறுத்தி தலையை தொட்டிக்குள் இருந்து வெளியே எடுக்கிறார் கோவி!

பார்த்தால் ஒரு பெரிய எருமை மாடு ....... தன் நாக்கினால் கோவியின் முதுகை நக்கி ஏதாவது தேறுமா என்று பார்க்கின்றது, கூடவே மா மா என்று கத்துகின்றது ....... சில நொடிகள் பொறுத்தபின் கோவி அண்ணன்னிடம் எதுவும் தேறாது என்று தெரிந்தவுடன், சர் என்று அவர் மேல் ஒன் பாத்ரூம் அடித்து நகர்ந்துவிடுகிறது..........

இதைப்பார்த்து மேலும் மனம் உடைந்து போன கோவி - ச்சே ஒரு எருமை கூட என்னை மதிக்கலையே ....... நான்தானே போன மாசம் "எருமையின் நிறம் கருப்பு" அப்படின்னு எருமைகள் படும் துன்பத்தை ஆராச்சி செய்து பதிவு எழுதினேன், இப்போ என்னடான்னா அவைகளே என்னை மதிப்பதில்லையே ..... ஓ ...என் செய்வேன் ..... மரணமே நான் வருகிறேன் உன்னைத்தேடி என்று மீண்டும் முழ்க முயற்சி செய்கிறார்!

இந்த முறை தண்ணீருக்குள், அவர் கண்முன் மற்றொரு உருவம் தெரிகிறது..... அவரை கைப்பிடித்து காப்பாற்ற முயற்சிக்கிறது ...... கோவி கேட்டகிறார் ...... " யார் நீ"

பதில்: நாந்தான் "டெமோ: .............

.........End of part 7......................

No  – (October 21, 2009 12:37 PM)  

கோவியன் - பகுதி 8
--------------------------------

நந்தினி தன்னுடைய தோழிகளுடன் இருக்கிறார்.

தோழி: நந்தினி, உனக்கு தெரியுமா, புதுசா ஒரு பதிவர் வந்திருக்கார். போட்டு தாக்கறார். ஒரு நாளைக்கு அஞ்சு அல்லது ஆறு பதிவுக்கு குறையாம போடுறார். அவருக்கு தெரியாத விடயமே இல்லை போல இருக்கு! எல்லாவற்றை பற்றியும் எழுதுகிறார்! அவர் பிளாக் லே அவுட்டும் சூப்பர்! நேற்றைக்கு கூட LIC கட்டடத்தில்
குரங்குகளின் அட்டகாசம் என்று ஒரு பதிவு போட்டாரு! அமர்க்களம்! அதுக்கு நாங்கள் எல்லாம் கும்மி அடிச்சி முடிப்பதற்கு முன் " கிண்டி பார்க்கில் கங்காரு" அப்படின்னு ஒன்னு வந்தது, அத்த நாங்க படித்து முடிப்பதற்கு முன், "தண்டையார் பேட்டையில் தங்க சுரங்கம்" அப்படின்னு போட்டு அசத்திடாரு!!!!!

நந்தினி : யாருடீ அவரு ...... எனக்கு தெரிஞ்சதெல்லாம் வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் உள்ள ஒற்றுமைகள் அப்படின்னு ஒருத்தர் நாப்பது நாளா அராய்ச்சி செய்து நாலு பக்கத்துக்கு போட்ட பதிவுகள்தான் ..... அதுல வேற அவுரு அதை மொட்டை போட்டு ஆராய்ச்சி செய்தாரம், அதுவும் இது நடந்த அப்புறம் என் முன்னால வந்து வேற நின்னாரு ...... நான் மயங்கி வேற விழுந்துட்டேன்!

தோழி: நந்தினி, நீ யர சொல்லுறேன்னு புரியுது, அதைஎல்லாம் மறந்து நான் சொல்லுபவரை வந்து பாரு! உனக்கு இந்த change பிடிக்கும்!

நந்தினி: அவரு பேரு என்னடி?

தோழி: டெமோ!

நந்தினி: டெமோவா?

தோழி: அம்மாண்டி இந்த DEMO program கேள்விப்பட்டிருக்கியா? அதான் ஒலி, ஓளி, எல்லாத்தையும் 3D இல காட்டுற ப்ரோக்ராம், பாக்கவே நல்ல இருக்கும், கூட நம்மளும் கும்மி அடிச்சா வச்சிக்கோயேன், கலக்கால்தான்!!

நந்தினி: உடனே போகலாம் வாங்க!

நந்தினி மற்றும் தோழிகள் ஒரு ப்ரொவ்சிங் சென்டெரில் உட்க்கார்ந்து டேமோவின் பதிவுகளை பார்க்கத்தொடங்குகிறார்கள்!

கண்ணில் பட்ட முதல் பதிவு ஒரு கவிதை -

வாயில் வருவதை எழுதும் டெமோ
காதில் கேட்பதை துப்பும் டெமோ
பூக்களை காதில் சுற்றும் டெமோ
கண்டதை எல்லாம் கக்கும் டெமோ
டெமோ டெமோ ஓஓஒ

இந்த கவிதையை பார்த்து அசந்து போன நந்தினி - அஹா இவரன்றோ பதிவர், இப்படிதான எழுதணும் என்று பாராட்டி ஒரு ஐம்பது கும்மிகளை அடித்து பதில் வருகிறதா என்று காத்துக்கொண்டிருக்கிறார்!

பதில் வருகிறது: ஹாய் யார் நீ?

நந்தினி: உங்கள் ரசிகன், நீங்க?

டெமோ: டெமோ என்ற உந்தன் ரசிகன்!

நந்தினி: நான் யாரென்றே உங்களுக்கு தெரியாது, எனக்கெப்படி நீங்க ரசிகர்?

டெமோ: என்னக்கா தெரியாது? உங்கள் பதிவுதான நந்தினியின் நத்தைவேகம் என்ற அருமையான பிலாகு? அதுல நீங்க நானும் நத்தையும் அப்படின்னு ஒரு பதிவு எழுதி அதிலும் நத்தை நன்றி உள்ள பிராணி, என்னதான் எட்டி உதைத்தாலும் அசையாம என்னோட சாப்பாடு தட்டு கீழயே இருக்கும் என்று எழுதினீர்களே, அஹா, அட்டகாசம், அதைவிட நத்தையின் உலா அப்படின்னு ஒரு ஆறு பகுதிகள் எழுதினீர்களே, அது அதை விட டாப் க்ளாஸ்! அதிலையும், சோப்பு டப்பாவினில் சிக்கி சத்தமில்லாமல் சுத்தமான சூப்பர் நத்தைன்னு போட்டீங்களே, அதை படிச்சதும் அசந்து விட்டேன்!!!!!!! இப்போ சொல்லுங்க உங்களைப்பற்றி எனக்கு தெரியாதா?

இதை கேட்டதும் நந்தினி அடக்கமுடியாமல் அழுகிறார்.............. கண்ணீர் தர தரவென்று கொட்டுகிறது (ப்ரொவ்சிங் சென்டர் உரிமையாளர் மேலும் கீழும் பார்க்கிறார், எங்கையாவது குழை லீக் ஆகிவிட்டாதா என்று - ஆனால் கேட்க பயம், all கோவியன் effect)

டெமோ: என்ன நந்தினி..... இருக்கீங்களா?

நந்தினி: ஹ்ம்ம்........... சாரி கொஞ்சம் அழுதுவிட்டேன் ..... என் பதிவையும் படிச்சு ரொம்ப நல்லாஇருக்குன்னு சொல்லிட்டீங்களே.....

டெமோ: நான் சொல்லக்கூடாதா நந்தினி?

நந்தினி: ஐயோ, இது ஆனந்த கண்ணீர்! நான் எழுதிய நத்தை பதிவை எனக்கு தெரிஞ்ச ஒருவர், நத்தை நடக்குமா நடக்காது, அது ஊரும், நத்தை குளிக்குமா, குளிக்காது, ஏனென்றால் அதற்க்கு வலிக்கும் அப்படி இப்படின்னு லா பாய்ண்ட்டு போட்டு தாக்கிட்டாரு.... இத்தனைக்கும் அவரு என்ன விரும்பினாராம், அதுக்கே இந்த கதின்னா .. அவரை நான் மட்டும் விரும்பியிருந்தா ............ இத நினைத்து, அப்புறம் உங்க உள்ளத்தை நினைத்து நான் அழுதேன் ......

டெமோ: கவலை படாத நந்தினி .........உனக்கு நானிருக்கேன் ........................

நந்தினியும் டெமோவும் சந்தித்து கொள்கிறார்கள்!

பாடல்:

டெமோ:

பதிவை கும்மி பார்த்துதா
பார்த்த பின்னர் வேர்த்துதா
அது நீயா

நந்தினி:

கும்மி எந்தன் பேருதான்
கம்மி எனக்கு மூளைதான்
அது நாந்தான்

பாடல் முடிந்து நந்தினி டெமோவினால் முழுவதுமாக ஈர்க்கப்பட்டு, தும்பியை மறக்கிறார் , டெமோவுடன் சேர்ந்து தினமும் கும்மியடிக்கிறார்!!!

---End of Part 8 ----

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP