பல்லிளிக்கும் பகுத்தறிவு

தமிழக அரசின் விளம்பரம்.

குடுகுடுப்பை  – (October 23, 2009 8:54 AM)  

கூட்டனி மாற்றமா?

காங்கிரஸ் காந்தியா? இல்லை தருமபுரி காந்தியா இது?பாத்து சூதானமா இருங்க அப்புறம் சொந்தக்கருத்து, கட்சிக்கருத்துனு அறிக்கை விடனும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி  – (October 23, 2009 10:08 AM)  

ஆசனம் கிடைத்தவுடன் ஆசன முகவாயைப் பற்றி மட்டும் சிந்திக்கும் பகுத்தறிவு பல்லிளிக்காமல் வேறு என்ன செய்யும்?

இதில் வியப்படைய ஒன்றும் இல்லை. இருப்பதாகவும் கருதமுடியவில்லை.

இன்னும் இவர்களை பகுத்தறிவு வாதிகள் என்று நம்புகிறவர்களை என்னவென்று சொல்வது?

தண்டோரா ......  – (October 23, 2009 10:15 AM)  

தலைவர் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கோவில் இருக்கு மாப்ள.இவர் வெளியில் கிளம்பும்போது யாராவது அங்கிருந்து வருவார்கள்.அவருக்கு வணக்கம் சொல்வது போல் சாமியை கும்பிடுவார்.போலி பகுத்தறிவாதி.(சரி அமைச்சரவையில் இடம் கொடுக்கலைன்னு கோபமா?)நான் கிழிக்கணும்னு நினைச்சேன்.முந்திக்கிட்ட(இருந்தாலும் விட மாட்டோம்ல)

mayil  – (October 23, 2009 11:06 AM)  

ஹலோ, தமிழ் தெரியாதா? அது காலன் இல்ல, காலம்.. (ஹிஹிஹி எப்புடி சமாளிக்கறோம் ....)

கும்க்கி  – (October 23, 2009 7:38 PM)  

”இது கட்சியின் கருத்தல்ல...”

”மாண்புமிகு வருங்கால அமைச்சர் அவர்களின் சொந்த கருத்து”

இங்கனம் :காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்.

கும்க்கி  – (October 23, 2009 7:39 PM)  

காலனுக்கும் “
காலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா..?
இல்லை மஞ்சள் துண்டுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேற்றுமை புரிபடவில்லையா?

லவ்டேல் மேடி  – (October 23, 2009 8:27 PM)  

கலைஞர் டூ சஞ்சய் :


தம்பி...

கூட்டணிக்குள் குடுமிச் சண்டையா....!!

நட்பின் இலக்கணத்தில் பிழையா...!!

அப்பீட்டாகும் சமயத்தில் ஆப்-பெதற்கு ...!!

ஆஃப்-பாயுளுக்கே கலக்கியா.....!!!


தம்பி .... சர்ச்சை வேண்டாம்... சமாதானம் தேடுவோம்....!! நாளை உனக்கு ஆதவன் படம் டிக்கட் ஒன்று அனுப்பி வைக்கிறேன்.....!! கூலாக இரு.....!!

வால்பையன்  – (October 23, 2009 10:07 PM)  

ஊர் சிரிச்சி ரொம்ப வருசம் ஆச்சு!

♠ யெஸ்.பாலபாரதி ♠  – (October 23, 2009 10:41 PM)  

யூ ஆர் டூஊஊஊஊஊஊஊ லேட் நண்பா!

நல்லவேளை கேடயம் வைத்திருக்கும் கையில் மஞ்சள் சால்வையைப் போடாமல் விட்டார்களே! :)))

(அனேகமாக ஓவியர் டோஸ் வாங்கி இருப்பார்?!)

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 23, 2009 10:44 PM)  

ஏங்க அப்படியே.. இந்த படத்தையும் பார்த்து எவ்வளவு கஷ்டப்படுராருன்னு சொல்லுங்களேன்!!!! அந்தம்மா இரும்பு சட்டி உங்க தலைவர் புது பிளாஸ்டிக் சட்டி.. அவங்க கால்லசசெருப்பு இல்ல உங்க த்லைவர் கால்ல .... பாருங்க
http://2.bp.blogspot.com/_4oBKlv5UVEA/SOdfrlgWfUI/AAAAAAAACBE/NWN6AX12MFg/s400/Rahul+Gandhi.jpg

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 23, 2009 10:46 PM)  

குற்றம் பார்க்கில் அரசியல் இல்லேங்க ... எல்லா கட்சியிலேயும் இப்படி நிறைய முரண்பாடு இருக்கு.. :))))))

பீர் | Peer  – (October 24, 2009 12:03 AM)  

முதல்தடவ பல்லிளிச்சப்பவே தட்டி கைல கொடுத்திருந்தா.. இதுக்கெல்லாம் அவசியமிருந்திருக்காது.

இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடல, எல்லாம் உங்க 'கை'லதான் இருக்கு.

SanjaiGandhi  – (October 24, 2009 10:21 AM)  

குடுகுடுப்பை. ரெண்டுமே இல்ல.. நன் எப்போவும் சஞ்சய்காந்தி தான்.. இது சஞ்சய்காந்தி கருத்து தான்.. கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளும் அளவு அதிகாரம் மிக்க பதவியில் எல்லாம் நான் இல்லீங்க்ணா.. :)
அப்டியே ஒரு சின்ன தகவல்.. காங்கிரஸ் காந்தி என்பவர் தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பெண் உறுப்பினர். தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவரின் உதவியாளர். அகவே நீங்க சொல்லி இருக்கும் இரண்டு பேரும் அவருக்கு தான் பொருத்தமாக இருக்கும். :)

SanjaiGandhi  – (October 24, 2009 10:25 AM)  

ஜோதிசார் நன்றி.. அவர்களை உடன்பிறப்புகள் என்றே சொல்லலாம்.. வேறு என்ன சொல்ல? :)

தண்டோரா, நன்றி மாம்ஸ்.. கிழிச்சதும் லின்குங்க..

மயில், நீங்க தான் தலிவருக்கு அப்பப்போ இந்த மாதிரி மறுப்பு அறிக்க எழுதி தறிங்களா? :)

கும்கியாரே, நீங்க ரொம்ப நல்லவருங்க.. ஆள வுடுங்க.. ;)

லவ்டேல் மேடி, கல்யாணத்துல ஒரு ஆள் சாப்பாடு மிச்சம் பிடிக்கிறதுக்கு ஆளையே கொல்லப் பாக்கறிங்களே சாமி.. :(

வால், நன்றி.. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சிரிப்போமே.. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே.. :)

SanjaiGandhi  – (October 24, 2009 10:36 AM)  

பாலபாரதி, நீங்க சரியா கவனிக்கல போல.. வலது ஓரத்தில் கையின் ஆரம்பத்தில் பாருங்கள். மஞ்சள் துண்டு தெரியும். மேலும் பின்புறமும் கேடயமும் கூட மஞ்சளில் தான் இருக்கிறது. :)

பீர், ஏன் வம்புல மாட்டி விடறிங்க? டி.ஆர் பாலுவை அமைச்சரவைல சேர்க்காததும் ராசாவிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அதிகாரத்தைப் புடுங்கி சில கேபினட் அமைச்சர்கள் அடங்கிய குழுவிடம் கொடுத்ததும் சமீபத்தில் ராசா அலுவலகத்தின் சிபிஐ ரெய்ட் நடத்தியதும் எதோ உள்குத்துனு பேசிக்கிறாங்க. நீங்க வேற புதுசா எதும் எதிர்பார்ப்பிங்க போல .:)

SanjaiGandhi  – (October 24, 2009 10:38 AM)  

குறை ராஜ்குமார், உங்க மொக்கை லாஜிக் தாங்கலை.. ஒரு ஏழையின் மகனின் கஷ்டத்தை அறிந்துக் கொள்ள அந்த மகனின் தாயின் கணவராக மாற வேண்டும் என்பது போல் இருக்கு உங்க கொடுமையான லாஜிக். ஏன் ப்ளாஸ்டிக் சட்டி, கால் செருப்போட நிறுத்திட்டிங்க? புடவை, ரவிக்கை, பாவாடை , வளையல் எல்லாம் ஏன் எங்க தலைவர் அணிந்துக் கொள்ளவில்லை என்றும் கேட்டிருக்கலாம்.

குடுகுடுப்பை  – (October 24, 2009 10:54 AM)  

தருமபுரி காங்கிரஸ்ல இரண்டு கோஷ்டி பெண் காந்தி ஆண் காந்தி.ஏதோ நம்மாள முடிஞ்சது.

ஆமா காந்திக்கும் , நம்மூரு காந்திமதிக்கும் எதாவது பெயர்த்தொடர்பு இருக்குங்களா சஞ்சய்காந்தி அவர்களே

SanjaiGandhi  – (October 24, 2009 11:03 AM)  

குடுகுடுப்பை, தருமபுரி இளைஞர் காங்கிரசில் இன்னும் சில காந்திகளும் இருக்கிறார்கள். என் தம்பிகள் உட்பட.. :)

சஞ்சய்காந்தி ஆகிய எனக்கு மேனகாகாந்தி எப்படி தாயைப் போன்றவரோ அதே மாதிரி காந்திமதிக்கும் காந்தி தந்தையைப் போன்றவராக இருக்கக் கூடம். :)

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 24, 2009 2:32 PM)  

//குறை ராஜ்குமார், உங்க மொக்கை லாஜிக் தாங்கலை.//

ஹா ஹா ஹா.. அது லாஜிக் இல்லேங்க.. நீங்க ஒரு படத்த போட்டு கருத்த சொல்ரீங்க. நானும் அவ்ளொ தான்.. புடவை,ரவிக்கை எல்லாம் உங்க சமாளிப்பு.. நான் சொல்ல வந்த கருத்து வேர நீங்க சொல்ரது வேர,.. ஒருத்தர் கஷ்டப்பட்டு செய்ர வேலையில உங்க தலைவரும் எப்படி பங்கெடுத்துக்கிரார் ? அது தான் கேள்வி... என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்பது போல உங்க தலைவரும் வேலை இல்லே இல்லே கஷ்டப்பட்டு வேலை செய்ராராம்!!!

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 24, 2009 2:38 PM)  

நீங்க எப்படி பல்லிளிக்கும் பகுத்தறிவுன்னு தலைப்ப நியாயப்படுத்தறீங்கலோ அதே மாதிறி பல்லிளிக்கும் பாட்டளி தோழமைன்னு எடுத்துக்கலாமில்லையா?

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 24, 2009 2:40 PM)  

//காலனுக்கும் “
காலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா..?
இல்லை மஞ்சள் துண்டுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேற்றுமை புரிபடவில்லையா?//

மஞ்சள் துண்டு மட்டுமில்லேங்க.. இன்னும் நிறைய இருக்கு. அவருக்கு நியூமராலஜி ராசி எண் 5.அதனால முடுஞ்ச அளவு எல்லா விஷயத்திலேயும் 5 வரும்படி பாத்துக்குவாங்க..

SanjaiGandhi  – (October 24, 2009 2:51 PM)  

//பாட்டளி தோழமைன்னு எடுத்துக்கலாமில்லையா? //

பகுத்தறிவுவாதி என்பது வெளிப்படையா அறிவிச்சிக்கிட்ட விஷயம். ராகுல் ஒன்னும் கஷ்டத்துல பங்கெடுத்துக்கிறேன்னு சொல்லலை. அது கையாலாகாதவர்கள் தான் சொல்வார்கள். கஷ்டத்தை உணர்ந்து அதற்கான தீர்வுகளுக்கு பங்களிப்பேன் என்று தான் சொல்றார்.

உங்களிடம் அரசியல் பேசும் போதெல்லாம் எனக்கு தலைவலி அதிகமாய்டுது ராஜ்குமார். உங்க அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாததே இதுக்குக் காரணம். ராகுல் செய்தது அப்பட்டமான பித்தலாட்டம் என்பதை தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து தப்பித்துக் கொள்கிறேன். ஆள விடுங்க.

SanjaiGandhi  – (October 24, 2009 2:58 PM)  

//ஹா ஹா ஹா.. அது லாஜிக் இல்லேங்க.. நீங்க ஒரு படத்த போட்டு கருத்த சொல்ரீங்க. நானும் அவ்ளொ தான்.. புடவை,ரவிக்கை எல்லாம் உங்க சமாளிப்பு.. நான் சொல்ல வந்த கருத்து வேர நீங்க சொல்ரது வேர,.. ஒருத்தர் கஷ்டப்பட்டு செய்ர வேலையில உங்க தலைவரும் எப்படி பங்கெடுத்துக்கிரார் ? அது தான் கேள்வி... என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்பது போல உங்க தலைவரும் வேலை இல்லே இல்லே கஷ்டப்பட்டு வேலை செய்ராராம்!!//

நான் ஒரு புண்ணாக்கும் சொல்லலை.. பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டே எமன் என்பதை மட்டும் எப்படி நம்பலாம் என்பது தான் இங்க கேள்வி. புருஷன் கச்சேரி என்பதெல்லம் வழக்கமான உங்கள் அதிமேதாவி அரசியல் அறிவின் அடையாளத்தை தான் காட்டுது. ஒரு தலைவர் சாமானியனின் இடத்திற்கே வந்தால் தான் அவர்கள் கஷ்டம் புரியும் என்று ஒரு பக்கம் கத்திக் கொண்டே, அப்படி யாராவது வந்து அவர்கள் கஷ்டத்தை நேரடியாக உணர்ந்தால் அய்யோ விளம்பரம் , புருஷன் கச்சேரிக்குப் போறான் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறோம். மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்.

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 24, 2009 4:51 PM)  

//யாராவது வந்து அவர்கள் கஷ்டத்தை நேரடியாக உணர்ந்தால் அய்யோ விளம்பரம் , புருஷன் கச்சேரிக்குப் போறான் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறோம்//

இப்படிதான் ஒருதடவ கலாவதின்னு ஒரு அம்மா வீட்டுக்கு போய் கஷ்ட்டப்பட்டு வந்து பாராளுமன்றதில் எல்லாம் பேசினாரு.. இப்போ அந்தம்மா எவ்வளவு வசதியா இருக்காங்கன்னு உங்க தலைவர்தான் சொல்லணும்..


ரெண்டவது இந்த கலைஞர் காப்பீட்டுதிட்டம் விளம்பரம், அணுகுமுறை வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா அதனால பல ஏழைகள்(அவங்க திமுகவாகவே இருந்தாலும்) பயனடையராங்க.. ஆனா உங்க தலைவரோட ஏழ்மை உணர் திட்டத்தால எத்தன பேர் பயனடைஞசு இருக்காங்கன்னு சொல்ல முடியுமாங்க?

முக்கியமான ஒரு விசயம்... கருணாநிதி பேசரதெல்லாம் மத்தவங்களுக்கு மட்டும் தான்னு ஊருக்கே தெரியும்.. அப்படி இருந்தும் நீங்க படம் போட்டு விளக்கம் சொல்றீங்க அதே சமயம் உங்க தலைவர் படத்த பத்தி சொன்னா கோவம் வருது :)))))))

ராஜவம்சம்  – (October 24, 2009 7:13 PM)  

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா

SanjaiGandhi  – (October 24, 2009 7:27 PM)  

//இப்போ அந்தம்மா எவ்வளவு வசதியா இருக்காங்கன்னு உங்க தலைவர்தான் சொல்லணும்..//

இந்த சப்பை கேள்விக்கெல்லாம் எங்க தலைவர் பதில் சொல்லனுமா? நானே சொல்றேன். அந்த கலாவதி மஹாரஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வசதியா இருக்காங்க.. கடைசி நேரத்துல விலகிட்டாங்க. கொஞ்சம் செய்தியும் படிங்க.

கருணாநிதியின் திட்டத்தை யாரும் குறை சொல்லலை. அந்த விளம்பரத்தை மட்டும் தான். ஒரு முதல்வருடன் ஒரு எம்பியை ஒப்பிடும் உங்கள் மேதாவித்தனம் மீண்டும் மீண்டும் என்னை சோர்வடைய வைக்கிறது. முதல்வரால் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும். ஒரு எம்பியால் அவ்வாறு செய்ய முடியாது. மேலும் 100 நாள் கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்த அவரும் காரணம். சில கயவாளிகளால் அது சில இடங்களில் கேவலமாக செயல் படுத்தப் படுகிறது.

என்ன சொன்னாலும் நீங்கள் திருப்தி அடைய போவதில்லை. இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை.

SanjaiGandhi  – (October 24, 2009 7:28 PM)  

நன்றி ராஜவம்சம்.. நீங்க சொல்றது சரி தான். ;)

குறை ஒன்றும் இல்லை !!!  – (October 24, 2009 7:51 PM)  

//அந்த கலாவதி மஹாரஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வசதியா இருக்காங்க.. கடைசி நேரத்துல விலகிட்டாங்க. கொஞ்சம் செய்தியும் படிங்க.//

செய்திய முழுசா படிங்க .. அவங்க ஏன் அந்த முடிவு எடுத்தாங்கன்னு... அவர் ஒரு நாள் எழையா இருந்தும் எந்த பிரியோஜனமும் இல்லாம தான்..


அப்புரம் அந்த ஒப்புமைக்கு நீங்க குடுத்த விளக்கத்திலேயே உங்க மேதாவித்தனமும் நல்லா தெரிய்துங்க.. அவர் வெரும் எம்பியா மட்டும் இருந்தா நான் ஏன் கேட்கபோறேன்..? ஊருக்கே தெரியும் அவருடைய பவர் என்னன்னு..:)))))) உங்கள நினைச்சா சிரிப்பா இருக்கு..விட்டா அவரை தொண்டர் மட்டும் தான்னு சொல்வீங்க போல!!!

அப்புரம் வெரும் எம்பி எப்படி அந்த 100 நாள் திட்டத்திலே பங்கேத்தாருன்னு நீங்க தான் விளக்கணும்..

//இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை//

எதிர் பாத்தேன்.. நன்றி..

மதிபாலா  – (October 28, 2009 10:50 PM)  

பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் விருந்துக்கு அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்./

இந்த பின்னூட்டத்தை பின்னூட்ட்மாக எண்ணிக்கொள்ளாமல் விருந்து எங்கே என்று விலாவரியாகச் சொல்லும்படி பணி அம்புடன் கேட்டுக் கொல்கிறேன்.

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP