பருத்திக் காடு - விவசாயம்
ஹாய் மக்கள்ஸ், நெல் பத்தி எழுதினது ரொம்ப பேருக்கு பிடிச்சிருந்தது. அவ்ளோ பெரிய பதிவு.. அதுவும் விவசாயம் பத்தின பதிவு படிப்பாங்களோ இல்லையோ.. சும்மா எழுதி வைக்கலாம்னு எழுதினேன். ஆனால் அமோக வரவேற்பு. ரொம்ப சந்தோஷம். அதே சந்தோஷத்தோட இப்போ பருத்தி பத்தி எழுதறேன்.
முதலில் நன்றாக உழுது நிலத்தை தயார் பண்ணிடுவாங்க. அப்புறம் விதை மையங்களில் பருத்திக் கொட்டை (விதை) வாங்கிவந்து நடுவோம்.
வயலின் இரு எல்லைகளுக்கும் எட்டும் வகையில் நீளமான ஒரு கயிறில் இரண்டு அடி இடைவெளிவிட்டு சிறு சிறு துணிகளை இடையில் திணித்துவைத்துக் கொள்வோம். கயிறின் இரண்டு முனைகளையும் ஆளுக்கொருவராகப் பிடித்துக் கொண்டு வயலின் இரண்டு எல்லைகளிலும் இருவர் நின்றுக் கொள்வார்கள். பருத்தி நட வேண்டிய வயல்களின் பரப்பளவுக்கு ஏற்ற மாதிரி கயிறுகளின் எண்ணிக்கையும் நடுபவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். கயிற்றில் இரண்டடிக்கு ஒரு துணி வைத்திருபப்து போல் கயிறு பிடித்திருப்பவர்களின் கையிலும் இரண்டடி நீளத்தில் ஆளுக்கொரு குச்சி வைத்திருப்பார்கள். அப்போது தான் எல்லாப் பக்கமும் இரண்டு அடி சீரான இடைவெளி இருக்கும். அவர்கள் கயிற்றை மாற்றும் போது அந்த குச்சிகளால் அளந்து அடுத்த இடத்தில் வைப்பார்கள். நடுபவர்கள் துணிகள் இருக்கும் இடத்தில் விதையை நடுவார்கள். மேலே உள்ள படத்தை பெரிசு பண்ணிப் பாருங்க. குறைந்தது 5 பேராவது பருத்தி நடுவார்கள். எல்லோரும் ஆளுக்கொரு சிறு பாத்திரத்தில் பருத்தி விதை வைத்துக் கொண்டு நடுவார்கள்.
சில ரகங்கள் ஒரு விதையும் சிலவை இரண்டு விதைகளும் நட வேண்டி இருக்கும். அதைத் தாண்டி “போக்கு” விதையும் நட வேண்டி இருக்கும். அது பிறகு. நஞ்சை புஞ்சை இரண்டிலும் பராமரிப்பு வேறு வேறாக இருக்கும். நீர்ப்பாசன வசதி இருக்கும் வயல்களில் பருத்தி விதை நட்டதும் வழக்கமான முறையில் நீர் பாய்ச்சுவார்கள். மேட்டு நிலம் என சொல்லப் படும் நீர்ப் பாசன வசதி இல்லாத வயல்களில் பருத்தி விதை நட்டதும் உடனே கையால் தான் நீர் ஊற்ற வேண்டும். சிறு வாளியில் நீர் எடுத்துக் கொண்டு தம்ப்ளர்கள் அல்லது சிறு சொம்புகள் கொண்டு நீர் ஊற்றுவோம். பருத்தி செடி ஓரளவு வளரும் வரை இப்படி நீர் ஊற்ற வேண்டும், மழைக் காலமாக இருந்தால் இது தேவை இல்லை.
[முளைத்து சில நாட்களில்]ஓரளவு செடி வளர்ந்ததும் செடியில் அடிப்பகுதியில் மண்ணை அதிகமாக சேர்த்துவிட வேண்டும். அப்போ தான் செடிக்கு வலு சேர்க்கும். வேரும் நன்றாக மண்ணிற்குள் பரவும்.
குறிப்பாக பூ மற்றும் காய் இருக்கும் கலங்களில் அதிக புழுக்கள் வந்துவிடும். அவைகளை அழிக்க அடிக்கடி மருந்து தெளிக்க வேண்டும். இரண்டு முறைகளில் மருந்துத் தெளிப்போம். ஒன்று கை கால் பயன்படுத்தி தெளிக்கும் மெஷின். இன்னொன்று முதுகில் மாட்டிக் கொண்டு பயன்படுத்தப் படும் பெட்ரோல் மூலம் இயங்கும் தெளிபபான்.
பருத்தி வயல்களின் ஓரத்தில் அவரை, துவரை மற்றும் ஆமணக்கு போன்ற செடிகள் பயிரிட்டிருப்போம். பருத்தியோடு சேர்ந்து அவைகளும் வளர்ந்துவிடும். வீட்டிற்கு தேவையான அவரை , துவரை மற்றும் விளக்கெண்ணை இவைகளின் மூலம் கிடைத்துவிடும். கடையில் வாங்க வேண்டி இருக்காது.
பூக்கள் பிஞ்சியாக மாறும் போது அதில் நிறைய புழுக்கள் இருக்கும். அதை அழிப்பது கொஞ்சம் கஷ்டம். அதனால் அவைகளில் புழுக்கள் இருக்கும் பூக்களை மட்டும் பறித்துக் கொண்டு வந்து சாலையில் போட்டுவிடுவார்கள்.போகும் வரும் வாகனங்கள் எல்லாம் நசுக்கிவிட்டுப் போகும். :(
பிறகு காய்கள் பெரிதாகி வெடிக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் ஆட்களை வேலைக்கு அழைத்து பஞ்சுகளை எடுத்து பைகளில் அடைத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டிவைப்போம்.

பின்னர் தேவையான அளவு பருத்தி சேர்ந்ததும் அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல தயார் செய்யனும். இதில் நல்ல பஞ்சுகளுடன் விற்பனைக்கு உதவாத வகையிலான பஞ்சுகளும் இருக்கும். அதைத் தனியாகப் பிரித்தெடுக்கனும். இரண்டு கைகளிலும் கை நிறைய பஞ்சுகளை எடுத்து குலுக்கி உதறினால் விற்பனைக்கு உதவாத பஞ்சுகள் தனியாக அதே இடத்தில் கீழே விழும். அவைகள் கொஞ்சம் கூடுதல் எடைகளில் இருக்கும்.
பிறகு விற்பனைக்கு உகந்த பஞ்சுகளை கோணிப்பைகளில் அடைக்க வேண்டும். இது ஒரு கொடுமையான வேலை. சுமார் 10 கிலோ அளவுள்ள பஞ்சுகளை பையில் போட்டி கைவிரல்கள் கொண்டு நன்றாக குத்தி அடர்த்தியாக நிரப்ப வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் போட்டு காலை உள்ளே விட்டு பஞ்சுகளை நெருக்கமாக அடைக்கனும். பை உள்ளே எங்கும் சிறு இடைவெளிக் கூட இருக்கக் கூடாது. பிறகு பாதி பைக்கு மேல் பஞ்சு வந்ததும் 2, 3 உலக்கைகளைக் கொண்டு குத்துவோம். ஒரு பையில் பஞ்சு நிரப்ப குறைந்தது 4 பேராவது தேவை. அப்படி செய்தால் தான் ஒரு கோணிப்பையில் 50 கிலோ வரை பஞ்சுகளை அடைக்க முடியும். சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு( 100கிலோ) இவ்வளவு விலை என் ஏல முறையில் நிர்ணயிப்பார்கள்.
ஒரு சமயத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 2 குவிண்டாலில் இருந்து அதிக பட்சம் 10 , 15 குவிண்டால் வரை சந்தைக்கு எடுத்து செல்வார்கள். அவர்கள் பருத்தி பயிரிட்டிருக்கும் பரப்பளவைப் பொறுத்தது இது. சந்தைக் கூடும் நாளுக்கு முந்தைய நாளில் எல்லோரும் பேசிவைத்துக் கொள்வார்கள். யார் எவ்வளவு பஞ்சு சந்தைக்கு கொண்டுவருவார்கள் என்று. பையில் அடைபப்தற்கு முன்பே தோராயமாக சொல்லிவிட முடியும் எவ்வளவு எடைவரை தேறும் என்று. மொத்தமாக சேரும் பஞ்சைப் பொறுத்து வாடகைக்கு லாரி பிடித்து சந்தைக் கூடுவதற்கு முந்தயை நாள் இரவே கிளம்பிவிடுவார்கள். அடுத்தநாள் காலையில் ஏலம் ஆரம்பிக்கும். பல பகுதிகளில் இருந்தும் பருத்தி வியாபாரிகள் சந்தைக்கு வந்திருப்பார்கள். இந்த சந்தைகள் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும்.
ஏலம் ஆரம்பித்ததும் வரிசையாக வைத்திருக்கும் பஞ்சு மூட்டைகளின் இடையில் எங்காவது கத்தி வைத்து கிழித்து பஞ்சை எடுத்து வியாபாரிகள் பார்ப்பார்கள். ஏனெனில் பையின் மேல்ப் பகுதியில் தரமான பஞ்சும் உள்ளே தரமற்ற பஞ்சும் இருக்க வாய்ப்பு உண்டு. சிலர் தண்ணீர் தெளித்து பையில் பஞ்சை அடைப்பார்கள். எடை கூடுதலாக வர வேண்டுமென்று. இதை எல்லாம் சோதிக்கத் தான் இடையில் கிழித்துப் பார்ப்பது. பஞ்சின் தரத்தைப் பார்த்து வியாபாரிகள் ஆளுக்கொரு விலையில் கேட்பார்கள். இதில் யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்கப் படும். எல்லா பஞ்சு மூட்டைகளுக்கும் ஒரே மாதிரி விலை கிடைக்காது. அது அந்த மூட்டைகளில் இருக்கும் பஞ்சையும் விலை சொல்லும் வியாபாரியையும் பொருத்தது.
சில சந்தைகளில் அன்றே பண பட்டுவாடா நடக்கும். சில சந்தைகளில் ஒரு வாரம் கழித்து தான் பணம் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் மூலம் நடைபெறுவதால் பணம் பற்றிய பயம் இல்லை. அவர்கள் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்ட பின் தான் பஞ்சு மூட்டைகளை கொடுப்பார்கள்.
பிறகு இவைகள் பஞ்சாலைகளுக்கு சென்று நூலாக மாறி உடையாக அவதாரமெடுத்து நமக்கு கிடைக்கிறது.
நெல் பற்றிய பதிவு ரொம்ப பெரியதாக போய்விட்டதால் உங்கள் நலன் கருதி “மிக” சுருகமாக சொல்லி இருக்கிறேன். ;)). சொல்வதற்கு இன்னும் கூட இருக்கு. ஆனால் இதுவே போதுமானது. சந்தேகங்கள் பின்னூட்டத்தில் தீர்த்து வைக்கப் படும். :)

என்ன மீள் பதிவு மாதிரி இருக்கு.
nice post sanjai.
no doubts.
nice post sanjai.
no doubts.
//ஒடம்பு முழுக்க விஷம் பரவி இருக்கு/
ஓஹோ.. அதான் நீலமா இருக்கீங்களா.. நான் சட்டைக் கலர்னு நினைச்சிட்டேன்..
பருத்திச் செடிய முதல் முதல்ல பார்க்கறேன்.. அருமையான கட்டுரை...
பிறகு...?
(பிறகு.. பிறகு.. பிறகு... பிறகு...ன்னு நூறு வாட்டி வருதே... அத கொஞ்சம் கவனிங்க..:P)
//பூச்சிக் கொள்ளி மருந்துகள் பயன்படுத்த வேண்டும். அதிக வீரியமிக்க மருந்துகளை தெளித்துவிட்டு வரும் போது வீட்டிற்கு வருவதற்குள்ளேயே வழியில் வாந்தி எடுத்து சுருண்டு விழுந்திருக்கிறேன்.//
போன பதிவிலேயே கேட்டிருந்தேன், ஏன் நீங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை?
பூச்சிமருந்துகளால், தெளிக்கும் உங்களுக்கே இப்படி பாதிப்பு என்றால், செடி, காய்களை, அதை உண்ணுபவர்களை...
செயற்கை உரங்களிலிருந்து இயற்கை உரங்களுக்கு மாறுவது அதிகச் சிரமமா?
விவசாயம்தான் முழுநேரத்தொழிலா உங்களுக்கு? (புதுசா வந்த பதிவர் நான்)
இதற்கும் மரபணு விதைகள் வந்திருச்சாமே!
ஹுசைனம்மா மன்னிக்கவும். இன்னும் அந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருக்கிறேன். விரைவில் சொல்கிறேன். முடிந்தால் தனிப் பதிவு போடுகிறேன். இயற்கை விவசாயத்திற்கான சாத்தியங்கள் இனி இல்லை. அதனால் தான் பெரும்பாலான விவசாயிகள் மரபணுவில் மாற்றம் செய்யப் பட்ட விதைகளை ஆதரிக்கிறோம். குறிப்பாக பருத்தியில் மரபணு மாற்றப் பட்ட விதைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இயற்கை உரங்கள் என்பதே ஆடு, மாடு மற்றும் கோழி எருக்கள் மற்றும் சில வகை இலை தழைகள் தான். பல காரணங்களால் அவைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் பூச்சிக் கொள்ளிகள் தான் வழி. பருத்திக்கு இந்த மருந்து தெளிப்பது நிச்சயம் ஆடைகளின் மூல தோல் வியாதிகள் வர வாய்ப்புண்டு. நெல்லில் கதிர் வந்த பிறகும் மருந்து தெளிக்கும் அவலம் எல்லாம் இருக்கு. சந்தேகமே இல்லாமல் அது விஷ நெல் தான். நாம் விஷத்தை தான் சாப்பிடுகிறோம். மற்றவை தனிப் பதிவாக. நேரம் இருப்பின்.
எங்கள் குடும்பத் தொழில் விவசாயம் தான். சுமார் 10 ஆண்டுகளாக என் வேலை மாதம் ஒரு முறை சுற்றுலா போல் சென்று வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே. பள்ளி, கல்லூரிப் படிப்புக் காலத்தில் அனைத்து விவசாய வேலைகளும் செய்தாக வேண்டும். இப்போ நான் செய்வதில்லை. 250 கிமீ தூரத்தில் இருக்கிறேன். :)
தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன், இங்கே!
http://sandanamullai.blogspot.com/2009/11/blog-post.html
சஞ்சய்,
விவரமான பதிலுக்கு நன்றி. எனக்கு விவசாயத்தில் ஆர்வம் உண்டு. (ஆர்வம் மட்டுமே, நேரடி அனுபவம் இல்லை). அதனால்தான் மீண்டும் கேள்விகள். நேரம் கிடைக்கும்போது பதில்/ பதிவு எழுதுங்கள்.
இயற்கை விவசாயம் சாத்தியமே இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், அன்னா ஹசாரே (நன்றி: பசுமை விகடன்) போன்றவர்கள் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்களே? தமிழகத்திலும் அதைக் கடைபிடிக்கும் பல விவசாயிகள் இருப்பதாகத்தானே படிக்கிறேன்?
மரபணுவில் மாற்றம் செய்யப் பட்ட விதைகளை ஆதரிக்கிறீர்கள் என்பதும் ஆச்சரியமளிக்கிறது. விளைவுகள் தெரிந்துமா? அல்லது மறைக்கப்பட்ட மறுபக்கம் உண்டா?
மன்னிக்கவும், விவசாயத்தை ஏட்டில் மட்டுமே படித்த நான், தொழில்முறையாக அறிந்த ஒருவரை இப்பத்தான் முதல்முறையாகச் சந்திக்கிறேன். அதனால்தான் இத்தனைக் கேள்விகள். (ஆர்வக் கோளாறு?) நேரம் கிடைக்கும்போது தனிப்பதிவு போடுங்கள். நன்றி!!
(இன்னொரு சந்தேகம்: வீட்டில சஞ்சய் காந்தி மட்டும்தானா, ராஜீவ் காந்தியும் உண்டா?)
உங்க ஊர்ப்பக்கம் அளவு முறை வேற மாதிரி இருக்கு போல?
திருப்பூர்ச் சந்தைக்கு நாங்கெல்லாம், ஒரு மனுவுக்கு பத்து கிலோன்னு பதிமூனு மனுவைப் போட்டு ஒரு பொதியாக்கிக் கொண்டு போவோமுங்க!
நல்லப்பதிவு, ஆனால் பருத்தி விவசாயத்தினை வேடிக்கை பார்த்து அல்லது கேட்டதை வைத்து பதிவிட்டது போல உள்ளது!
எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் ஏரியாவுக்கு ஏரியா சாகுபடி நுட்பங்கள் சமயங்களில் மாறும், எனவே எல்லா இடங்களுக்கும் பொருந்துமா என்பது தெரியாது.
விதைக்கும் முன்னர் விதை நேர்த்தி செய்வார்கள்,
உள்ளூரில் கிடைக்கும் விதைகளில் பருத்தி இழைகள் அதிகம் விதைகளில் இருக்கும் அதை நீக்க கந்தக அமிலத்தில் கலந்து விதைகளை பிறட்டி எடுப்பார்கள்
பின்னர் கிராமங்களில் மாட்டு சாணி கலவையில் கிளறுவார்கள்.இது நாட்டு வைத்தியம்.
விவரமானவர்கள்,நுண்ணுயிர் கலவை,பூஞ்சன கொல்லி,போன்றவை கலந்து கிளறுவார்கள்.
ஒரே முறையில் பருத்தியில் அறுவடை இருக்காது தவணை முறையில் 6-7 தடவை நடக்கும்.
இயற்கை விவசாயம் என்படு முற்றிலும் வரவில்லை, ஆனால் வரவே வராது என்றேல்லாம் சொல்ல முடியாதே.
தற்போது இந்திய முறை நவீன விவசாயம் தான் இது முற்றிலும் மரபணு சார்ந்த பருத்தி விவசாயம் அல்ல.வருங்காலத்தில் நிலைக்க போவது இந்திய பாராம்பரிய இயற்கை விவசாயமே.
நிறைய உய்ரியல் பூச்சிக்கொல்லிகள் எல்லாம் உள்ளது.எனவே இயற்கை விவசாயம் செய்வது சாத்தியமே.உயிரியல் பூச்சிக்கொல்லிகள் அடித்த்தால் உங்களுக்கு மயக்கமும் வராது.
ஹுசைனம்மா, நிச்சயம் எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். மரபணு மாற்றப்பட்ட விதைக்கும் இப்போதைய பயிர் வளர்ப்பு முறைக்கும் பக்க விளைவுகளில் பெரிய வித்தியாசம் இல்லை. போட்டியாளர்களின் பொய்ப் பிரச்சாரமும் இதில் உண்டு. இயற்கை விவசாய முறையை ஆதரிப்பவர்கள் 5 பேருக்கு சமைத்து விட்டு சாத்தியம் இருப்பதாக சொல்றாங்க. நான் சொல்வது 5 ஆயிரம் பேருக்கு சமைக்க முடியாது என்று.
//(இன்னொரு சந்தேகம்: வீட்டில சஞ்சய் காந்தி மட்டும்தானா, ராஜீவ் காந்தியும் உண்டா?) //
என் தம்பி பெயர் ராஜிவ்காந்தி. பெங்களூரில் இருக்கிறான். :)
மிக அருமையான பதிவு.நல்ல விளக்கம்+படங்கள் மூலம் தெளிவா சொல்லிருக்கிங்க.நன்றி ப்ரதர்!!மேலும் இந்த மாதிரி விவசாய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்...
அட வவ்வால் ரிட்டன்ஸா? :)
உங்க தொழிலே எல்லாத்தையும் குறை சொல்றது தானே. தவறில்லை. அதற்காக உளறக் கூடாது.
//நல்லப்பதிவு, ஆனால் பருத்தி விவசாயத்தினை வேடிக்கை பார்த்து அல்லது கேட்டதை வைத்து பதிவிட்டது போல உள்ளது!/
நான் அனுபவப் பூர்வமான விவசாயி. டச் விட்டுப் போனதால சில விவரங்கள் விடு பட்டிருக்கலாம். வேடிக்கை மட்டுமே பார்த்தோ கேட்டோ நான் எழுதவில்லை.
//எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் ஏரியாவுக்கு ஏரியா சாகுபடி நுட்பங்கள் சமயங்களில் மாறும், எனவே எல்லா இடங்களுக்கும் பொருந்துமா என்பது தெரியாது.//
ஏரியாவுக்கு ஏரியா மாறும் என்பது குழந்தைக்கும் தெரியும். இதையும் சொல்லிவிட்டு எங்க ஏரியா முறை பற்றி எழுதியதை, கேட்டு எழுதியதாக உளறுவது ஏனோ?
//விதைக்கும் முன்னர் விதை நேர்த்தி செய்வார்கள்,
உள்ளூரில் கிடைக்கும் விதைகளில் பருத்தி இழைகள் அதிகம் விதைகளில் இருக்கும் அதை நீக்க கந்தக அமிலத்தில் கலந்து விதைகளை பிறட்டி எடுப்பார்கள்
பின்னர் கிராமங்களில் மாட்டு சாணி கலவையில் கிளறுவார்கள்.இது நாட்டு வைத்தியம்.
விவரமானவர்கள்,நுண்ணுயிர் கலவை,பூஞ்சன கொல்லி,போன்றவை கலந்து கிளறுவார்கள்.//
காலத்திற்கேற்ப விவசாய முறைகள் மாறும். நீங்கள் சொல்வது 1970களின் விவசாயம். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். நான் எழுதி இருப்பது 90களுக்கு மேல் நான் ஈடுபட்ட விவசாயம்.
//ஒரே முறையில் பருத்தியில் அறுவடை இருக்காது தவணை முறையில் 6-7 தடவை நடக்கும்.//
ஒரே முறையில் தான் இருக்கும் என்று நான் சொல்லவே இல்லையே. பருத்தி காய் முதலில் வெடிக்க ஆரம்பித்த காலம் முதல் முற்றாக அழியும் வரை அறுவடை இருக்கும். இவை எல்லாம் எழுதினால் இன்னும் 100 வரிகள் எழுதலாம்.
***சொல்வதற்கு இன்னும் கூட இருக்கு. ஆனால் இதுவே போதுமானது. சந்தேகங்கள் பின்னூட்டத்தில் தீர்த்து வைக்கப் படும். :)**** - இதை என் பதிவின் கடைசியில் சொல்லி இருக்கிறேன்.
//இயற்கை விவசாயம் என்படு முற்றிலும் வரவில்லை, ஆனால் வரவே வராது என்றேல்லாம் சொல்ல முடியாதே.//
எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். எங்கள் பகுதியில் இயற்கை விவசாய முறை முற்றிலும் இல்லை.
//தற்போது இந்திய முறை நவீன விவசாயம் தான் இது முற்றிலும் மரபணு சார்ந்த பருத்தி விவசாயம் அல்ல.வருங்காலத்தில் நிலைக்க போவது இந்திய பாராம்பரிய இயற்கை விவசாயமே.//
பாரம்பரிய விவசாயம் நிலைப்பது சிரமம். விவசாயிகள் தொலை நோக்குத் திட்டத்துடன் பயிர் செய்வதில்லை. இன்றைய பிரச்சனை தான் பிரதானம். அதை போக்க மரபணு மாற்றப் பட்ட விதைகளை ஆதரிக்கிறோம். பின்னாளில் இதுவே நிலைக்கும். தவறாக இருப்பினும் கூட.
//நிறைய உய்ரியல் பூச்சிக்கொல்லிகள் எல்லாம் உள்ளது.எனவே இயற்கை விவசாயம் செய்வது சாத்தியமே.உயிரியல் பூச்சிக்கொல்லிகள் அடித்த்தால் உங்களுக்கு மயக்கமும் வராது.
//
அந்த உயிரியல் பூச்சிக் கொள்ளிகளை பட்டியலிடுங்கள். அவை எந்த அளவில் கிடைக்கிறது என சொல்லுங்கள். விவசாயத்தின் தேவையை அவைகளால் பூர்த்தி செய்ய முடியுமா என சொல்லுங்கள். அவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டு செலவுகள் பற்றி சொல்லுங்கள்.
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html#comments
அடுத்த தடவை கிராமத்து பக்கம் போனா வயல்ல இறங்கிற வேண்டிதான்...
//மரபணு மாற்றப் பட்ட விதைகளை ஆதரிக்கிறோம். பின்னாளில் இதுவே நிலைக்கும். தவறாக இருப்பினும் கூட.//
நல்ல செய்தி, முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள், நிலங்கள் நாசமாகி போகிவிடும் என்ற செய்திகளை மட்டுமே அதிகம் கேள்வி பட்டு இருக்கேன்.
பதிலுக்கு மீண்டும் நன்றி சஞ்சய். நான் அறியாத மாறுபட்ட கருத்துக்களும், தகவல்களும் இருப்பதால், உங்களின் விளக்கமான பதிவை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
/என் தம்பி பெயர் ராஜிவ்காந்தி//
அப்ப, சோனியா, மேனகா என்று பெயரிருந்தால் முன்னுரிமை, இல்லையா? (joke only)
நல்ல விளக்கமான,அருமையான பதிவு :-) அப்படியே.... எங்க நிலத்தில பருத்திகொட்ட நெட்ட மாதிரேயே இருந்துச்சி.நானும் உங்க ஏரியான்றதனாலயோ என்னமோ ஒரே பீலிங் :-)
சஞ்சய்,
குறை சொல்லும் நோக்கம் மட்டும் எனில் நல்லப்பதிவு என்று சொல்லி இருக்க தெவை இல்லையே? நன்றாக வந்துள்ளப்பதிவு இன்னும் முழுமையாக இருந்தால் நன்றாகவே வந்திருக்கும் என்ற எண்ணத்தில் சொன்னது ,நீங்கள் விவசாய அனுபவம் உள்ளவர் என்பதைக்கேட்டு மகிழ்ச்சியே!
உழுவது,நீர்ப்பாய்ச்சுவது, விதை நடுவது, அறுவடை செய்வது என்று எந்த விவசாயத்தையும் ஒரு ஃபார்மெட்டில் தாளித்து விடலாம், அப்படி இருந்தால் என்னப்பயன்?
பி.டீ பருத்தி என்பது இந்தியாவில் மிக குறைவாகவே பயன்ப்படுத்தப்படுகிறது.
மேலும் நவீன ரசாயன உரம்,பூச்சிக்கொல்லிப்போட்டாலும் இன்னமும் எல்லாரும் தொழு உரம் இட்டுத்தான் ஆரம்பிக்கிறார்கள். அப்படியே ரசயான உரம் இடுவதைக்குறைத்துக்கொண்டாலே போதும் இயற்கை விவசாயம் ஆகி விடும்,நம்மவர் ஒன்றை செய்ய ஆரம்பித்து விட்டால் அவ்வளவு லேசில் விட மாட்டார்கள், அது பலன் தராவிட்டாலும் தொடர்வார்கள் அப்படி இன்னமும் இருப்பது தான் இந்த இரசாயன விவசாயம்.
இப்போது விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் குறித்து ஒரு ஆர்வம் வந்துள்ளது இது முன்னெப்பொதையும் விட அதிகம், எனவே இயற்கை விவசாயம் வர இப்போது தான் நல்ல வாய்ப்புள்ளதாக பொதுவாக கருகிறார்கள்.
வெளிநாட்டில் எல்லாம் சர்வதேச சந்தைக்கு ரசயான விவசாயப்பொருள்கள்,அவர்களுக்கு என்றால் இயற்கை விவசாயப்பொருட்கள் என்று மாறி விட்டார்கள், நாம் தான் இன்னமும் மாறாமல் இருக்கிறோம். மாறி விடுவோம் விரைவில்.
புதுவையில் ஆரோவில் சென்றால் பாருங்கள் கோழி முதல் எல்லாம் இஅயற்கை உற்பத்தி தான் செய்வது எல்லாம் வெள்ளையர்கள்!
முன்னர் எல்லாம் பூச்சி ஒழிப்பு என்றார்கள்,பின்னர் பூச்சிக்கட்டுப்பாடு -அதன் பின்னர் இப்போது பூச்சி மேலாண்மை என்று இறங்கி வந்து விட்டார்கள் வேளாண் அறிஞர்கள்.(pest eradication-pest controle-pest management)
அனைத்து வகையான மருந்துகளும் பயன்படுத்திய வயல், எதுவும் செய்யாமல் விட்ட வயல் என்று ஒப்பிட்டு பார்த்ததில் உற்பத்தி வேறு பாட்டிற்கும் முதலிட்டுகும் ஒப்பிட்டதில் சும்மா விதைத்து சரியாக கலை பிடுங்கி, நீர்ப்பாய்ச்சினாலே போதும் என்று வேளாண் பல்கலைகளில் முடிவுக்கு வந்து விட்டார்கள்.(n controled and controled plot research என்பார்கள்)
மிக அதிகம் பூச்சி தாக்குதல் இருந்தால் மட்டுமே குறைவாக பூச்சி மருந்து அடிக்க சொல்கிறார்கள்,அதுவும் இயற்கையான மருந்தென்றால் நல்லது. ஏன் எனில் அதிக வீரிய ரசயான பூச்சிக்கொல்லி அடிக்கும் போது நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எ.கா -மண் புழு, சிலந்தி, தவளை, மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனி, இன்ன பிற பூச்சிகளும் பலியாகும்.
ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பூச்சி மருந்து அடித்து கடனாளியாகி ,பின்னர் அதே மருந்தை குடித்து மாண்ட விவசாயிகள் அதிகம்.பூச்சிகள் அந்த மருந்துக்கு எதிர்ப்பு தன்மையை வளர்த்துக்கொள்வதால் இந்த அவலம்.
முன்னரே பின்னுட்டமிடலாம் எனப்பார்த்தேன் உங்கள் பதிவு எது என்று மறந்து விட்டது, தற்போது தான் மறுமொழி இட்ட பதிவில் பார்த்தேன்.
நாடோடி, மீள் பதிவே தான். :)
மங்களூராரே நன்றி..
ஜக்தீஷாரே நன்றி..
லகலகப்ரியா , கொழுப்பு + இப்போதான் பருத்தி செடிப் பாக்கறிங்களா? ஈழத்து அனுபவத்துல கிராமத்துப் பொண்ணு மாதிரி எழுதறிங்களே..+ ஹிஹி கண்டுக்காதிங்க.. :)
ஹுசைனம்மா நன்றி
வால்பையன் , இதில் தான் அதிகம் புழங்குகிறது. பூச்சிக் கொல்லி மருந்தின் தேவை மற்ற எல்லாப் பயிர்களையும் விட பருத்திக்குத்தான் அதிகம் தேவை.
பப்புஅம்மா, நன்றி.. பதிவு போட்டாச்சி..
பழமைப் பேசி, இந்த தகவல் எனக்குப் புதுசு.. நன்றிங்கணா.. :)
மேனகா சிஸ்டர்.. முயற்சிக்கிறேன். நன்றி.
ப்ரியமானவள் நன்றி. படிச்சி கமெண்ட் போட்டுட்டேன். கடைசி வரிகள் மட்டும் சகிச்சிக்க முடியலை. அதை எழுதி இருக்கக் கூடாது.
சாமி, முயற்சிக்கிறேன். மேலும், இந்த முறையால் தான் நிலம் பாழாகனும்னு அவசியம் இல்லை. இப்போவே அப்டி தான் இருக்கு. உரம்(ரசாயனம் அல்லது இயற்கை) இடவில்லை என்றால் எந்த்ப் பயிரும் இப்போது விளைவதில்லை. ஆகவே இதற்கு மரபணு மாற்றிய விதைதான் வரனும்னு அவசியம் இல்லை.
ப்ரபு, நன்றி தம்பி. அப்பாகிட்ட விசாரிச்சிப் பாரு. சொந்தக் கார பயலாத்தான் இருப்ப. ராமியம்பட்டியில பாதிப் பேர் எனக்கு சொந்தக்காரங்க தான்.. :)
வவ்வால்,
//உழுவது,நீர்ப்பாய்ச்சுவது, விதை நடுவது, அறுவடை செய்வது என்று எந்த விவசாயத்தையும் ஒரு ஃபார்மெட்டில் தாளித்து விடலாம், அப்படி இருந்தால் என்னப்பயன்?//
இந்தப் பதிவின் நோக்கம், பருத்தி எப்படி விளைகிறது என்பதை சொல்வது மட்டுமே. எது சிறந்த விவசாய முறை என்பது பற்றியல்ல.
இயற்கை விவசாயத்திற்கு நான் எதிரி அல்ல. இப்போது எரு எங்கே கிடைக்கிறது? இலை தழைகள் தேவையான அளவு எங்கே இருக்கிறது? மாடு, ஆடு, கோழி என இயற்கை விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த உயிரினங்கள் எல்லாம் பெரிய அளவில் அழிக்கப் பட்டுவிட்டது. இப்போது இயற்கை உரங்கள் தயாரிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. இதன் தயாரிப்பு முறைக்கு மனித வளம் அதிகம் தேவை. இன்னும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் தான் இயற்கை விவசாயம் இனி சாத்தியல் இல்லை என்கிறேன்.
உங்கள் விளக்கமான கருத்துக்கு மிக்க நன்றி. பழைய படி எழுதலாமே. மிகச் சிறந்த பதிவராச்சே நீங்கள்.
அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்களை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்
http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html
>>