சச்சின் சேனா தேசியம்


வர வர நாட்ல கொசுத்தொல்லைகள் அதிகமாய்ட்டே வருது. திராவிடக் கொசுக்கள் தங்கள் வியாபாரம் நல்லா கல்லா கட்ட ஆரம்பிச்சதும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாம அனைத்திந்திய மற்றும் நாங்களும் தேசியவாதிகள் தான் என்று திருந்திட்டாங்க. ஆனா சிலர் இன்னும் அதையே பிடிச்சி தொங்கிட்டு இருக்காங்க. சச்சின், தான் ஒரு இந்தியன் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு பால் தாக்கரே , ”தம்பி, விளையாட்டை மட்டும் கவனித்தால் போதும். அரசியல் பேசாதே. மும்பையை அடைய எத்தனை உயிர்கள் பலியானது தெரியுமா? அப்போ நீ பொறக்கவே இல்லை” என்றெல்லாம் சவுண்டு குடுத்திருக்கிறார். நாங்க எல்லாம் தீக்குளிச்ச தொண்டன் மேல சந்தியம் செஞ்சி அது மறக்கறதுக்குள்ள பழய எடத்துக்கே போய் அண்ணன் ஒரு கோயில் என மணி அடிப்பவர்கள். இவர் இன்னும் பழைய பல்லவி பாடிட்டிருக்கிறார்.
யார் எதை மட்டும் செய்ய வேண்டும் என்றேல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தார்களோ?. சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அரசியல் ஆசை இருக்கக் கூடாது என சொல்லி இருக்கிறார் தாக்கரே. ஒருவர் அரசியலுக்கு வரலாமா கூடாதா என்றேல்லாம் இவர் கட்டளை இடுவது செம காமெடி. இதையே தமிழ்நாட்ல சொல்லி இருந்தா அவ்வளவு தான். ரணகளம் ஆகி இருக்கும்.
நாங்கல்லாம் ஒரே ஒரு சீன்ல ”சார் போஸ்ட்”னு சொன்ன அடுத்த வினாடி அடுத்த தேர்தல் தேதியை சொல்லி முதல்வர் நாற்காலியை ரிசர்வ் பண்றவங்க. அப்படி இருக்கும் போது பெரிய விளையாட்டு வீரர் அரசியலுக்கு வரக் கூடாதா?.
சச்சின், தான் ஒரு மராத்தியராக புகழ் பெறவில்லை. இந்தியராகத்தான் பல சாதனைகள் புரிந்திருக்கிறார். இந்திய அணிக்காக விளையாடித்தான் பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். இந்திய விளையாட்டுத் துறையின் மிகவும் நேசிக்கத் தக்க வீரர் அவர். ஆகவே தான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் சச்சினோடு சேர்ந்து அனைத்து இந்தியர்களுமே பெருமை அடைகிறோம். இதைக் கூடவா கண்டிக்கனும்?.
ஏற்கனவே தன் அண்ணன் மகன் நவநிர்மான் சேனாவை ஆரம்பித்து மராட்டிய அரசியல் களத்தின் பால்தாக்கரேவின் பியூஸ்களை எல்லாம் புடுங்கிக் கொண்டிருக்கிறார். ”மராத்தி மட்டும்” என்ற போலியான கோஷத்தை வைத்துக் கொண்டு தோல்வி மேல் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் தாக்கரே. இந்நிலையில் டெண்டுல்கரை கண்டிப்பது மேலும் சிக்கலைத் தரும். மேற்கு வங்கத்தில் கங்குலியும் மஹாராஷ்ட்ராவில் டெண்டுல்கரும் அரசியல் தலைவர்களுக்கு இணையான/மீறிய செல்வாக்குக் கொண்டவர்கள். அவர்களை சீண்டிப் பார்ப்பது தனக்குத் தானே குழி வெட்டுவது போலத்தான்.
இனம், மொழி என்ற குறுகிய வட்டத்துக்குள் ’மட்டுமே’ சிந்திப்பதை நிறுத்தும் வரையில் அமைதியான வாழ்க்கை சாத்தியமே இல்லை.
டிஸ்கி1: பால்தாக்கரே டெண்டுல்கரை விமர்சிக்கவில்லை, வயதில் மூத்தவர் என்ற முறையில் டெண்டுல்கருக்கு அறிவுரை மட்டுமே சொன்னதாக சிவசேனா விளக்கமளித்திருக்கிறது.
டிஸ்கி2: எங்கும் மராத்தி எதிலும் மராத்தி என்று கூவும் ராஜ்தாக்கரே கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனராம். ராமதாஸ், கருணாநிதி எல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது.
டிஸ்கி3 : மலையாளம் எழுத/படிக்க/பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கேரள அரசுத் துறையில் பணிபுரிய வாய்ப்பளிக்கப் படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தம் தெரிவித்துள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனும் தேசியக் கட்சியை சார்ந்தவர். தேசிய ஆட்சி மன்றக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். செவப்பு சாயம் வெளுத்துப் போச்சி.. டும்..டும்..டும்..டும்..
டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. சமீக காலங்களாக ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.
//இனம், மொழி என்ற குறுகிய வட்டத்துக்குள் ’மட்டுமே’ சிந்திப்பதை நிறுத்தும் வரையில் அமைதியான வாழ்க்கை சாத்தியமே இல்லை.
//
அந்த குறுகிய வட்டத்திற்கு செல்ல சூழலை ஏற்படுத்தும் கயவர்கள் பற்றியும் செல்லாமே. நாம தேசியம் பேசி இராணுவத்தை விட்டு எந்த மாநில பகுதி மக்களையும் பாலியல் பலாத்காரம் செய்யச் சொல்லுவோம். ஹிந்தி மொழி வெறியர்களுக்கு சொறிந்துவிடுவோம்
//
அந்த குறுகிய வட்டத்திற்கு செல்ல சூழலை ஏற்படுத்தும் கயவர்கள் பற்றியும் செல்லாமே. நாம தேசியம் பேசி இராணுவத்தை விட்டு எந்த மாநில பகுதி மக்களையும் பாலியல் பலாத்காரம் செய்யச் சொல்லுவோம். ஹிந்தி மொழி வெறியர்களுக்கு சொறிந்துவிடுவோம்//
சரி தான். வாச்சாத்தி மலையிலும், சத்தியமங்கலம், தாளவாடிப் பகுதிகளிலும் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் இந்திய ராணுவம் தானா?. ஹிந்தி மொழி வெறியர்களுக்கு சொரிந்து விட்டதால் தான் இதெல்லாம் நடந்ததா?. தமிழக காவல் நிலையங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்களும் ஹிந்தி வெறியர்களை சொறிந்துவிட்டதால் தான் நடந்ததா?. இந்த கயவர்களைடம் இருந்து காத்துக் கொள்ள எந்த மொழி பேசுவீங்க கோவியாரே? ஹிந்தியோ தமிழோ.. அது மட்டும் தான் இருக்கனும்/வேண்டும் என சொல்லும் போலிகள் எல்லாமே கயவர்கள் தான்.
கோவியாரே நீங்கள் சொல்லும் படத்தில் இந்திய ராணுவத்துக்கு பதில் தமிழக போலிஸ் என்றும் மாற்றலாம். அந்த அளவு வரலாறு இருக்கு. புல்லுறுவிகள் இல்லாத இடம் எது? ஒருவர் செயலுக்காக 100 பேரை குறை சொல்வது ஏமாற்று வேலை.
//சரி தான். வாச்சாத்தி மலையிலும், சத்தியமங்கலம், தாளவாடிப் பகுதிகளிலும் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் இந்திய ராணுவம் தானா?. ஹிந்தி மொழி வெறியர்களுக்கு சொரிந்து விட்டதால் தான் இதெல்லாம் நடந்ததா?. தமிழக காவல் நிலையங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்களும் ஹிந்தி வெறியர்களை சொறிந்துவிட்டதால் தான் நடந்ததா?.//
நான் அது சரின்னு சொல்ல வரவில்லல, போலி தேசியவாதம், போலி நாட்டுப்பற்று பற்றித்தான் குறிப்பிட்டேன். இன்னும் நாட்டு இரகசியங்களை விற்றர்களையும் சொல்லலாம். தீவிரவாதம், தேச பிரிவினையை நசுக்கிறேன் என்று அப்பாவிகள் கொல்லப்படுவதைத்தான் குறிப்பிட்டேன். அவனவன் மாநில உரிமை ஏன் மறுக்கப்படுது ?
//நான் அது சரின்னு சொல்ல வரவில்லல, போலி தேசியவாதம், போலி நாட்டுப்பற்று பற்றித்தான் குறிப்பிட்டேன். இன்னும் நாட்டு இரகசியங்களை விற்றர்களையும் சொல்லலாம். தீவிரவாதம், தேச பிரிவினையை நசுக்கிறேன் என்று அப்பாவிகள் கொல்லப்படுவதைத்தான் குறிப்பிட்டேன். அவனவன் மாநில உரிமை ஏன் மறுக்கப்படுது ?//
சேம் ஹியர் பாஸ்.. நானும் போலி மொழி இன கயவர்களை தான் விமர்சித்திருக்கிறேன். மொழி மொழி என்று கூவிக் கொண்டே தன் பிள்ளைகளை வேற்று மொழியில் படிக்க வைப்பது போன்றவற்றை தான் குறை சொல்கிறேன். மாநிலத்திற்கு என்ன உரிமை மறுக்கப்படுகிறது?. உச்ச நீதி மன்றத் தீர்ப்பையே துச்சமெனக் கருதும் அளவுக்கு மாநிலத்திர்கு உரிமை உள்ளதே. இன்னும் என்ன வேண்டும்?. இன்னும் வேண்டுமென்றால் உங்கள் வாக்குரிமையை உபயோகிக்கலாமே. யார் போலி தேசியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை வெற்றி பெற செய்யலாமே. அடிப்படை உரிமைகள் தவிர்த்து, அரசியல் அதிகாரம் என்று வரும் போது பெரும்பான்மை மக்களின் கருத்து தான் செயல்படுத்தப் படும். ஆகவே உங்கள் கருத்துகளை பெரும்பான்மை மக்கள் ஏற்க செய்யுங்கள். மாநிலத்திற்கு தேவையான சுதந்திரம் அளிக்கப் பட்டிருக்கின்றன என்பதே பெரும்பான்மையானோரின் கருத்து.
அன்பான நண்பர் திரு சஞ்சய் காந்தி,
வினவாயணம் - Part 1 தயார்! ஆட்காச புரட்சி காமெடி இது. பொறி பறக்கும் வசனங்களுடன், அசத்தலான லாஜிக்குடனும் செதுக்கப்பட்ட திரைக்கதை!
உங்கள் தளத்தில் ரிலீஸ் செய்யாலாமா????
(திரு கோவி அண்ணனை வைத்து படம் பண்ணுவதை பட்ஜெட் காரணமாக கொஞ்சம் காலம் நிறுத்திவிட்டேன். நல்ல பைநான்சியர் இருந்தால் சொல்லுங்க)
நன்றி
டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. வருடத்துக்கு ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.//
can you please explain this???? do not tell just like this, with out playing no one can be in team for 20 years.
he dont need to prove you for the above question but still your poin is unnecessory. i hope doctor bruno will answer you better.
தனிப்பட்ட தாக்குதல் இல்லாத எதுவும் வரவேற்கப் படுகிறது நோ அண்ணே. உங்களுக்குத் தான் ரசிகர் பட்டாளம் பெரிசாச்சே. நீங்க விளையாடுங்க. :)
தன்ஸ், நீங்கள் முழுப் பதிவையும் படிக்கலையா?
//இந்திய அணிக்காக விளையாடித்தான் பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். இந்திய விளையாட்டுத் துறையின் மிகவும் நேசிக்கத் தக்க வீரர் அவர். ஆகவே தான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் சச்சினோடு சேர்ந்து அனைத்து இந்தியர்களுமே பெருமை அடைகிறோம்.//
சச்சினின் 20 ஆண்டுகால விளையாட்டையும் குறை சொல்லவில்லை. நீங்கள் உணர்ச்சிவசப் பட காரணம் இருக்கு. சமீப காலமாக என்று இல்லாமல் பொதுவாக சொல்வது போல் எழுதிவிட்டேன். மாற்றிவிடுகிறேன். மீண்டும் சொல்கிறேன். இப்போது சச்சின் விடைபெறுவது தான் நியாயம். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்.
//டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. வருடத்துக்கு ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். //
ஐயா
கடந்த இரு வருடங்களாக அணியில் அதிக வெற்றியை பெற்று தந்தது சச்சின் தான்.
2008, 2009 ஆகிய வருடங்களில் கூட அணியின் சிறந்த மட்டையாளர் சச்சின் தான்
//வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.//
திறமைசாலிகள் வர அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளர் தான் வழி விட வேண்டுமே தவிர அணியின் மிகச்சிறந்த மட்டையாளர் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருந்தால் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாலாம்
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்
அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கல் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில், நீங்கள் தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே நம்புகிறேன்
Ball is in your court, I expect the Stats or Sorry for Wrong Comment from you :) :)
கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணி மூன்று இறுதி ஆட்டங்களில் வென்று கோப்பையை வென்றுள்ளது
மூன்று ஆட்டங்களிலும் வென்று தந்தது சச்சின் தான்
//சமீப காலமாக என்று இல்லாமல் பொதுவாக சொல்வது போல் எழுதிவிட்டேன். மாற்றிவிடுகிறேன். மீண்டும் சொல்கிறேன்.//
// இப்போது சச்சின் விடைபெறுவது தான் நியாயம். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்.//
Why are you asking for the BEST Batsman in the team to go. If a fresher needs the chance, it is the sixth best batsman who has to go.
கடந்த இரண்டு வருடங்களில் கூட சச்சின் இல்லாமல் இந்திய அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை
அணியின் சிறந்த மட்டையாளர் ஏன் வெளியேற வேண்டும்
புதியவர்களுக்கு இடம் வேண்டுமென்றால் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரை வெளியேற்றிவிட்டு அந்த புதியவரை அணிக்கு கொண்டு வரவேண்டுமே தவிர அணியின் சிறந்த ஆட்டக்காரரை வெளியேற்றி விட்டு அல்ல
புருனோ ஐயா, இந்தாங்க நீங்க கேட்ட புள்ளிவிவரம்.
சச்சினின் சமீப ஒருநாள் போட்டி சாதனைகள்
Vs Australia
2008 : 10 , 44, 5, 2, 117,
2009 : 14, 4, 32, 40, 175, 10
Vs Bangladesh
2007 : 7
Vs Pakistan
2009 : 8
Vs. S.Lanka
2008 : 35, 32, 0, 63, 5, 6, 7, 27, 138
in India
2008 : 11, 50,
2009 : 14, 4, 32, 40, 175, 10
in S.Lanka
2009: 5, 6, 7, 46, 27, 138
இதில் என் கருத்துக்கான காரணம் இருக்கு. அவர் சுமாராக ஆடியதை விட மோசமாக ஆடியது தான் அதிகமாக இருக்கிறது. இந்தப் பதிவில் சச்சினைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதால் அவர் வெளியேற்றம் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறேன். அவர் மட்டுமே வெளியேற வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. வெளியேற வேண்டியவர்கள் பட்டியலில் அவரும் இருக்கிறார்.
சூப்பர்!
//புருனோ ஐயா, இந்தாங்க நீங்க கேட்ட புள்ளிவிவரம்.
சச்சினின் சமீப ஒருநாள் போட்டி சாதனைகள்
//
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் அவர் 90+ ஓட்டங்களை எடுத்தது உங்கள் புள்ளிவிபரத்தில் வரவில்லை
இதிலிருந்தே உங்கள் புள்ளி விபரத்தின் நம்பகத்தன்மை தெளிவாகிறது
--
//. இதையே தமிழ்நாட்ல சொல்லி இருந்தா அவ்வளவு தான். ரணகளம் ஆகி இருக்கும்.//
அவ்வ்வ்வ்!! :-))
ngeh...! naanillai... joot..! =))
சஞ்சய் ஐயா
//இதில் என் கருத்துக்கான காரணம் இருக்கு. //
மன்னிக்கவும்
இதுவரை நீங்கள் உங்கள் காரணத்தை நிருபிக்க வில்லை. விவாதத்திற்கு சம்மந்த மில்லாத புள்ளி விபரங்களை தந்துள்ளீர்கள். அதை கூட சரியாக முழுமையாக தந்துள்ளீர்களா என்று உங்கள் மனசாட்சியின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் :) :)
// அவர் சுமாராக ஆடியதை விட மோசமாக ஆடியது தான் அதிகமாக இருக்கிறது//
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இறுதி ஆட்டத்தில் எடுத்த 90+ ஓட்டங்கள் பற்றி கூறாத இந்த புள்ளி விபரங்களை வைத்து நீங்கள் நிருபிப்பது சிரிப்பாக இருக்கிறது
எந்த ஒரு ஆட்டக்காரரும் தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100 ஓட்டங்களை பெற முடியாது என்பது கிரிக்கெட்டின் அடிப்படை அறிந்த எவரும் அறிவார்கள் என்றே நினைக்கிறேன்
எனது பதிலை ம்றுபடி படிக்க வேண்டுகிறேன்
//இந்தப் பதிவில் சச்சினைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதால் அவர் வெளியேற்றம் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறேன். //
இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த 5 மட்டையாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என்ற என் கருத்தில் உங்களுக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கிறதா
தற்சமயம் இந்தியாவில் இருக்கும் 5 சிறந்த மட்டையாளர்களில் சச்சினுக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்பது தான் நான் கேட்ட் கேள்வி
ஆம் என்றால் அவர் அணியில் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அவர் அணியில் இருக்க தகுதியில்லை
இது சச்சின் என்றில்லை. எந்த வீரருக்கு இதே அளவு கோல் தான்
நான் ஏற்கனவே (November 17, 2009 4:50 PM)கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்
அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கல் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில், விவாதத்திற்கு சம்மந்தமில்லாத அரை குறை புள்ளி விவரங்களை அளித்து (இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள் என்ற ரீதியில்) காமெடி பண்னாமல் உங்களது தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே இன்னமும் நம்புகிறேன்
எனது கேள்வி இது தான்
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்
நீங்கள் கூறியது
அவர் மட்டுமே வெளியேற வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. வெளியேற வேண்டியவர்கள் பட்டியலில் அவரும் இருக்கிறார்.
அப்படி என்றால் அவரை விட சிறந்த (உங்கள் வாதப்படி சமீப காலத்திலேயே) ஐந்து இந்திய மட்டையாளர்களை காட்டுங்கள்
அவர் வெளியேற வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறோம்
அப்படி இல்லாமல் நன்றாக விளையாடும் ஒருவரை (அவரை விட நன்றாக் விளையாடும் ஆட்டக்காரர்கள் இல்லாத நேரத்தில்) வெளியேற வேண்டும் என்று நீங்கள் கூறுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள ஆவல்
இந்த முறையாவது கேட்ட கேள்விக்கு பதிலளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்
//புருனோ ஐயா, இந்தாங்க நீங்க கேட்ட புள்ளிவிவரம்.//
சஞ்சய் ஐயா, பொய் சொல்லாதீர்கள். ஊரை ஏமாற்றாதீர்கள் :) :) :) நான் கேட்ட புள்ளி விபரம் வேறு
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதும் அப்படி எனது கருத்து தவறென்று தெரியவந்தால் அதை மாற்றிக்கொள்ளும்நாகரிகம் எனக்கு உண்டு என்பதும் தான் நான் கூறியது
அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கள் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் (இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள் என்ற ரீதியில் விவாதத்திற்கு சம்மந்தமில்லாத அரை குறை புள்ளி விவரங்களை அளித்து காமெடி பண்னாமல்) உங்களது தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே இன்னமும் நம்புகிறேன்
எனது நம்பிக்கையை பொய்யாக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன் :) :) :) :)
வினவாயணம்
--------------
இந்த கற்பனைக்காவியம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கிறது!
பகுதி ஒன்று - வினவு தளத்தில் ஒரு நாள்! - Completed and ready for release
பகுதி ரெண்டு - புரட்சி செய்யலாம் வாங்க! - Shooting in progress, climax pending
பகுதி மூன்று - அய்யய்யோ புரட்சி போச்சே! - Story dicsussion in progress
டிஸ்கி 1 : திரு வினவு மற்றும் அவர்தம் புரட்சி நண்பர்களுக்கு இந்த கற்பனை சித்திரத்தை காணிக்கையாக்குகிறேன்!
டிஸ்கி 2 : இவர்களில் பலர் ரஷ்ய மற்றும் சீன பெயர்களை வைத்துக்கொள்வார்கள்! ஆதலால் பெயரைப்பார்த்து குழம்பவேண்டாம்!
டிஸ்கி 3 : பட்ஜெட் அதிகம் இல்லாததால், இவர்களுக்கு பிடித்த ரஷ்ய மற்றும் சீன பகுதிகளில் படத்தை எடுக்க முடியவில்லை. எல்லாம் லோக்கல்!
டிஸ்கி 4 : இவர்களின் தளங்களின் ஏதோ ஒரு ரஷ்ய அல்லது சீன மனிதர்களின் படத்தைப்போட்டு அவர்கள் மட்டும் கொடி பிடிப்பதாக காட்டுவதால் சீன அல்லது ரஷ்ய நடிகார் யாராவது துணை பாத்திரத்திற்கு போடலாமா என்று யோசித்தேன்! பட்ஜெட் இல்லையென்பதால் only Indian, புரட்சி நண்பர்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட!
டிஸ்கி 5 : படம் முடிந்த பிறகு அல்லது ஆரம்பமாகும்முன் ஜன கன மன பாடக்கூடாது!
Союз нерушимый республик свободны
Сплотила навеки Великая русь
Да здравствует созданный волей народов
Единый, могучий Советский Союз!
Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!
Сквозь грозы сияло нам солнце свободы,
И Ленин великий нам путь озарил:
Нас вырастил Сталин - на верность народу,
на труд и на подвиги нас вдохновил!
Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!
Мы армию нашу растили в сраженьях.
Захватчиков подлых с дороги сметем!
Мы в битвах решаем судьбу поколений,
Мы к славе отчизну свое поведем!
В победе бессмертных идеи коммунизма
Мы видим грядущее нашей страны,
И красному знамени славной Отчизны
Мы будем всегда беззаветно верны!
Славься, Отечество наше свободное,
Дружбы народов надежный оплот!
Знамя советское, знамя народное
пуст от победы к победе ведет!
என்ற பாட்டுதான் பாடவேண்டும் - இந்த சோவியத் ரஷ்ய பாடலை புரியவில்லை என்றால் பரவாஇல்லை! இவர்களுக்கும் புரியாது ஆனால் பாடுவார்கள்!!!
அது வேண்டாமென்றால் கீழே இருக்கும் சீன பாடலை பாடலாம்!
起來!不願做奴隸的人們!
把我們的血肉,築成我們新的長城!
中華民族到了最危險的時候,
每個人被迫著發出最後的吼聲。
起來!起來!起來!
我們萬眾一心,
冒著敵人的炮火,前進!
冒著敵人的炮火,前進!
前進!前進!進!
இதற்கும் அர்த்தம் புரியவில்லை என்றால் கவலை வேண்டாம்! இதை மாவோ மற்றும் மற்ற புரட்சியாளர்கள் பாடியது! ஆகவே நம்ம ஊரு புரட்சியாளர்களும் அர்த்தம் புரியாமல் வாயை அசைப்பார்கள்! நீங்களும் அசைத்து விடுங்கள், இல்லையேல் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, அடிவருடி என்று அன்பாக செல்லப்பெயர் கொடுப்பார்கள்!
Diski over Movie Starts now......
முதலாம் வகுப்பில் இரண்டு கட்டுரைகள் இருந்ததாம்
ஒன்று தென்னை மரம் பற்றி
மற்றொன்று பசு மாடு பற்றி
கஞ்சய் சாந்தி தென்னை மரம் பற்றி மட்டும் படித்து விட்டு தேர்விற்கு சென்றாராம்
தேர்வில் பசு மாடு பற்றி கேட்டு விட்டார்களாம்
நம் ஆள் தான் கில்லாடி ஆச்சே
தென்னை மரம் பற்றி 10 வரிகள் எழுதிவிட்டு கடைசியில் “இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள்” என்று எழுதினாராம்
அவ்வ்வ்வ்வ் !!!
//மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. //
அவரை விட சிறப்பாக ஐந்து வீரர்கள் விளையாடும் போது
இது சச்சின் மட்டுமல்ல, அனைத்து அணியிலும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும் !!!
துரை, தேசிய அரசியல் பேசுது!
//சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருந்தால் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாலாம்//
இங்கு சும்மானாச்சு ஒரு வியூகம்......ஒரு கற்பனை .
சச்சின் ஒரு நாள் போட்டியில் முதல் சதம் அடிக்க எவ்வளவு வருடங்கள் ஆச்சு ? அந்த மாதிரி யாராவது ஒருவன் உருவாகிட்டு இருக்கலாம்.. இல்லைனா அந்த மாதிரி ஒரு பிளேயர் வருவதை சச்சின் இடம் காலி பண்ணாமல் தடுத்திட்டு இருக்கலாம்.
சஞ்சய்
//இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனும் தேசியக் கட்சியை சார்ந்தவர். தேசிய ஆட்சி மன்றக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்//
அப்படினா politburo வா ? ..அதில் இருந்து அவரை விளக்கி விட்டார்கள் என்று படித்ததாக நியாபகம்.
//சச்சின் ஒரு நாள் போட்டியில் முதல் சதம் அடிக்க எவ்வளவு வருடங்கள் ஆச்சு ?//
அணியில் சேர்ந்து ஐந்து வருடம்
// அந்த மாதிரி யாராவது ஒருவன் உருவாகிட்டு இருக்கலாம்..//
அதாவது ஏற்கனவே அணியில் இருக்கும் ஒருவரை நீங்கள் கூறுகிறீர்கள்
ஐந்து வருடம் இந்திய அணியில் இருந்து ஒரு நாள் போட்டியில் சதம் அடிக்காமல் இருக்கும் ஹர்பஜன் சிங் ??
// இல்லைனா அந்த மாதிரி ஒரு பிளேயர் வருவதை சச்சின் இடம் காலி பண்ணாமல் தடுத்திட்டு இருக்கலாம்.//
சார்
நான் தெளிவாக கூறிவிட்டேனே
திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் அணியில் இடம் பெறவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது
ஆனால் அவர்கள் யார் இடத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் தான் நான் உங்களுடன் கருத்து வேறுபடுகிறேன்
நான் கூறுவது என்னவென்றால் திறமையான இளம் மட்டையாளர் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரின் இடத்தில் இடம் பெற வேண்டும்
சச்சினை விட இந்திய அணியில் ஐந்து பேர் சிறப்பாக விளையாடும் நாள் வரும் போது சச்சின் கண்டிப்பாக வெளியேற வேண்டும் - இடம் விட வேண்டும்
ஆனால் இன்று வரை அந்த நிலை வரவில்லை என்பது தான் ஸ்கோர்கார்டுகள் காட்டும் நிலவரம்
டாக்டர் நோ அவர்களே,
ரஷ்ய சீன பாடல் பிரமாதம்.வீறு கொண்டு எழுந்த வினவு,மிதக்கும் வெளி,அசுரன்,தியாகு கோரஸாக பாடும் இந்த பாட்டு மக்களை பரவசப் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அது சரி,ப்டத்தில் ஹீரோயின் யார்?
ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் எடுக்கப் படவில்லையென்றால்,பாரிஸ் யோனியம்மாவை போடலாம் என்று பரிந்துரை செய்கின்றேன்.புது முகமா இருந்தாலும் உணர்ச்சிகரமா செய்வாங்க.
//இங்கு சும்மானாச்சு ஒரு வியூகம்......ஒரு கற்பனை .//
ஒரு வீரர் உள்ளே வர வேண்டுமென்றால் ஒருவர் வெளியில் செல்ல வேண்டும்
யார் வெளியில் செல்ல வேண்டும் - ஆறாவது சிறந்த மட்டையாளர்
For a batsman to get in the team, the sixth best batsman should give way என்பது தான் எனது கருத்து
இதில் உங்களுக்கு மாற்று கருத்து உள்ளதா
// இல்லைனா அந்த மாதிரி ஒரு பிளேயர் வருவதை சச்சின் இடம் காலி பண்ணாமல் தடுத்திட்டு இருக்கலாம்.//
அப்படி ஒரு வீரர் வருவதை தடுப்பது அணியின் சிறந்த மட்டையாளரா, அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரா என்று கூறுங்கள்
டாக்டர் ப்ருனோ ..ஒன்னு சொல்லுங்க, உலக கோப்பை, சச்சின் மட்டும் விளையாடி ஜெயிக்க முடியுமா ? ....உலக கோப்பை எல்லா மாட்ச்சும் அவரால முழு fitness உடன் விளையாட முடியும்னு நினைக்குறீங்களா ? அப்போதைய அவர் வயதையும் நீங்கள் இங்கு யோசிக்கவும். அடிக்கடி பில்டிங்கில் இருந்து அவர் வெளியே போய் சப் வருவதையும் கவனித்து இருப்பீர்கள்.... பில்டிங்கில் பெரும்பாலும் அதிகம் ஓடாத static ஸ்லிப் இடத்தில் இருபதையும் கவனித்து இருப்பீர்கள்.
சச்சின் போய் நாலு - அஞ்சு தொடர்கள் இப்ப தோற்றாலும், உலக கோப்பை செல்லும் பொது அவர் இடத்தில் வருபவர் தயாராக இருக்கலாம். கிரிக்கெட் டீம் கேம் தானே.
குறிப்பு - உங்களை மாதிரி தொகுத்து பதிலோ, stat பதிலோ சொல்லுவது எனக்கு கடினம்.மன்னிக்கவும்.
டிஸ்கி4 சரியில்லை.
இந்திய அணியில் மொத்தம் பதினோருபேர் விளையாடுகிறார்கள் அல்லவா? அதில் 2009ம் ஆண்டு அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு 3வது இடம்(756 ஓட்டங்கள்).
முதலிடத்திலிருக்கும் தோனி 26 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார். சச்சின் ஆடியது 17 மட்டுமே.
2008ல் 7வது இடம் (460)
முதல் இடத்திலிருக்கும் கம்பீர் 27 ஆட்டங்கள், சச்சின் ஆடியது 12தான்.
2007 - 1(1425)
முதலிடத்திலிருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. (உலக அளவில் இரண்டாவது இடம்)
2006 - 4(628)
6 வது இடத்திலிருக்கும் ரெய்னா 24 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார். சச்சின் 16தான்.
அடுத்து சராசரிக்கு வரலாம்...
2009 - 2
2008 - 5
2007 - 1
2006 - 2
(இவையனைத்தும் ஓர் நாள் ஆட்டங்களின் கணக்குகள்).
இப்படியே போகுது... கொஞ்சம் பாத்து பண்ணுங்க.
//டாக்டர் ப்ருனோ ..ஒன்னு சொல்லுங்க, உலக கோப்பை, சச்சின் மட்டும் விளையாடி ஜெயிக்க முடியுமா ?//
முடியாது
//.உலக கோப்பை எல்லா மாட்ச்சும் அவரால முழு fitness உடன் விளையாட முடியும்னு நினைக்குறீங்களா ?//
முடியாது
//அப்போதைய அவர் வயதையும் நீங்கள் இங்கு யோசிக்கவும். அடிக்கடி பில்டிங்கில் இருந்து அவர் வெளியே போய் சப் வருவதையும் கவனித்து இருப்பீர்கள்....//
இல்லை !! நான் கவனித்ததில் அப்படி எல்லாம் இல்லை
// பில்டிங்கில் பெரும்பாலும் அதிகம் ஓடாத static ஸ்லிப் இடத்தில் இருபதையும் கவனித்து இருப்பீர்கள்.//
என்ன கொடுமை. கில்கிறிஸ்ட் கூட static கீப்பர் இடத்தில் பல வருடம் இருந்தாரே
நீங்கள் ஒரு எளிய உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்
--
அணியில் 6 மட்டையாளர்கள் + 1 கீப்பர் + 4 பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்
--
புதிதாக ஒரு மட்டையாளர் வர வேண்டுமென்றால் அவர் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளர் இடத்திற்கு தான் வர வேண்டுமெ
--
அதே நேரம் அணியில் ஒரு சுழல் பந்து வீச்சாளர் இடம் தான் (பொதுவாக ஒரு நாள் போட்டியில்) இருக்கிறது
எனவே ஒருவர் வெளியேறினால் தான் அடுத்தவர் வர முடியும்
--
அணியில் ஒரு காப்பாளர் (கீப்பர்) இடம் தான்
எனவே ஒரு இளம் வீரர் வர அந்த கீப்பர் வெளியேற வேண்டும்
ஆனால்
மட்டையாளர்/ வேகப்பந்து வீச்சாளர் இடங்கள் அப்படி அல்ல
//சச்சின் போய் நாலு - அஞ்சு தொடர்கள் இப்ப தோற்றாலும், உலக கோப்பை செல்லும் பொது அவர் இடத்தில் வருபவர் தயாராக இருக்கலாம்.//
அவர் இடத்திற்கு வருபவர் இப்பொழுது அணியில் விளையாடி கொண்டிருக்கிறாரா. அப்படி என்றால் சச்சின் ஏன் அணியின் சிறந்த மட்டையராக இருக்கும் போது வெளியேற வேண்டும். அவர் இடத்திற்கு வருபவர் தான் ஏற்கனவே அணியில் உள்ளாரே
அவர் இடத்திற்கு வருபவர் இப்பொழுது அணிக்கு வெளியில் இருக்கிறாரா. அப்படி என்றால் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரை அனுப்பி அந்த இடத்திற்கு நீங்கள் கூறுபவரை தேர்ந்தெடுப்பதில் என்ன தடை. இதற்கும் அணியின் சிறந்த ஆட்டக்காரர் வெளியேறுவதற்கும் என்ன தடை
--
நான் தெளிவான காரணங்களின் அடிப்படையில் விவாதிக்கிறேன்
சச்சின் என்றல்ல. எந்த வீரருக்கும் நான் கூறுவது பொருந்தும்
// தோனி 26 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார். சச்சின் ஆடியது 17 மட்டுமே.//
அதாவது மற்றொரு இளம் வீரருக்கு 9 ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
//அதில் 2009ம் ஆண்டு அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு 3வது இடம்(756 ஓட்டங்கள்).//
MS Dhoni (India) 26 22 7 1019 124 67.93
Yuvraj Singh (India) 22 20 1 760 131 40.00
SR Tendulkar (India) 17 16 1 756 175 50.40
சராசரி 50க்கு மேல் என்பதை கவனியுங்கள் !!!
//டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. சமீக காலங்களாக ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.//
இதை நான் கண்ணா பிண்ணாவென்று வழிமொழிகிறேன். திறமைசாலிகளுக்கு பழம் பெருச்சாளிகள் வழிவிட்டால் தான் வாய்ப்புக் கிடைக்கும்
அதி பிரதாபன்
நன்றி :) :) :)
ப்ருனோ ..கொஞ்சம் கண்டுக்காம விட்டீங்கனா அப்படியே வந்த வழியா போயிடுவேன்.....வழக்கம் போல உங்களிடம் அடி வாங்கினது தான் மிச்சம்...
இல்லைனா கொஞ்சம் டைம் குடுங்க எதனாச்சு சப்போர்ட் வருதான்னு பார்க்கறேன்.
//இதை நான் கண்ணா பிண்ணாவென்று வழிமொழிகிறேன். திறமைசாலிகளுக்கு பழம் பெருச்சாளிகள் வழிவிட்டால் தான் வாய்ப்புக் கிடைக்கும்//
திறமைசாலிகளுக்கு வழி விட வேண்டியவர்கள் திறமை குறைவானவர்கள் தானே தவிர திறமைசாலிகள் அல்லவே :) :)
--
திறமைகுறைவான / அல்லது அடுத்தவன் (தம்பி அல்லது உதவியாளர்) திறமையில் குளிர்காய்ந்த பழம் பெருச்சாளிகளால் சாதிக்கவெல்லாம் முடியாது. சாதித்ததாக சுயதம்பட்டம் அடித்து கொள்ளவும், தனக்கு தானே பட்டங்கள் அளித்துக்கொள்ளவும், எண்டா எனக்கு போன் பண்ணல என்று மேடையில் ஒப்பாரி வைக்கவும் தான் முடியும் என்பது நீங்கள் அறியாததா :) :) :)
//இல்லைனா கொஞ்சம் டைம் குடுங்க எதனாச்சு சப்போர்ட் வருதான்னு பார்க்கறேன்.//
அதி பிரதாபன் (நியாயத்தை) சப்போர்ட் செய்திருக்கிறாரே பார்க்கவில்லையா :) :)
//கிரிக்கெட்டுக்கும் வயது வரம்பு வைக்கனும்//
இது உங்கள் கருத்து
உங்கள் கருத்து மட்டுமே
ஆனால் தற்போதைய விதி அல்ல என்று தெளிவு படுத்துகிறேன் :) :)
புரூனோ சார்,
அவுட்டே ஆகதவங்கக் கூட ஒருநாள் போட்டியில் 50 ஓவர் வரைதான் விளையாட முடியும். கிரிக்கெட்டுக்கும் வயது வரம்பு வைக்கனும். கிரிக்கெட் பணக்கார விளையாட்டு ஒருவரே பெரும் பணக்காரர் ஆக திறமை இருந்தால் ஆகட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாய்ப்புகள் பலருக்கும் கொடுக்கப்படனும்.
இளையராஜாவை வைத்து கொடிகட்டியவர்தான் கொஞ்சம் மாற்றம் இருக்கட்டுமே என்று இசைப்புயலை அறிமுகப்படுத்தினார், அப்ப இளையராஜா ஒண்ணும் டவுன் ஆகியும் இருக்கவில்லை, பட்டையை கிளப்பிலே ?
அவரவர்களுக்கு உரிய இடம் என்பதற்கு இது ஒன்றும் அரசபதவியோ, வாரிசு அரசியலோ இல்லையே. நல்லா விளையாடுவதாகவே இருக்கட்டும், அவரால் இந்தியா வெற்றிபெற்றாலும் தோற்றாலும் இந்தியா வல்லரசு நிலையை இன்னும் 2020க்கும் முன்னால் அடைந்திடுமா என்ன ?
நல்ல ஆட்டக்காரர் என்றே இருக்கட்டும் ஆனால் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல சச்சின்கள் உருவாக்கலாமே.
பெரிய மனசு வேண்டும் சார், அவரிடம் மிஸ்ஸிங். விளையாட்டைவிட ஒரு தனிமனிதன் சுயநலமாக எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். உங்க இளையராஜா ரஹ்மான் நிலைபாட்டுடன் சச்சின் தொடரனுமா வேண்டாமா என்பதையும் ஒப்பிட்டு பாருங்க. உங்கள் இளையராஜா கருத்து எனக்கு ஓகே. உங்கள் சச்சின் அபிமான வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
// வாய்ப்புகள் பலருக்கும் கொடுக்கப்படனும்.//
இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் யார் இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தான் நான் உங்களுடன் கருத்து வேறுபடுகிறேன்
//நல்ல ஆட்டக்காரர் என்றே இருக்கட்டும் ஆனால் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல சச்சின்கள் உருவாக்கலாமே.//
அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
//பெரிய மனசு வேண்டும் சார், அவரிடம் மிஸ்ஸிங். //
இதை நான் ஏற்றுக்கொண்டாலும், மறுத்தாலும், இதனால் இந்தியாவின் ஐந்து சிறந்த மட்டையர்கள் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கருத்து மாறப்போவதில்லை
// உங்க இளையராஜா ரஹ்மான் நிலைபாட்டுடன் சச்சின் தொடரனுமா வேண்டாமா என்பதையும் ஒப்பிட்டு பாருங்க.//
!!! அதற்கும் இதற்கும் என்ன சார் சம்மந்தம் :) :) :)
இதனால் இந்தியாவின் ஐந்து சிறந்த மட்டையர்கள் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கருத்து மாறப்போவதில்லை
அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
/அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
November 17, 2009 7:43 PM
//
அது சச்சின் நகர்ந்தால் தெரியும், சச்சின் கோபுரமா கோபுரம் தாங்கியதாக நினைத்த பொம்மையான்னு. சச்சின் இல்லை என்றால் இந்திய கிரிக்கெட்டே அம்புட்டு தான் என்கிற பிம்பம் உருவாகி இருக்கிறது, அது வெறும் பிம்பம் தான் என்பது அவர் விலகினால் தானே தெரியும்
//அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
November 17, 2009 7:46 PM
//
அவர் நினைத்திருந்தால் 5 ஆண்டுக்கு முன்பே விலகி அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் தகுதியான பத்து ஆட்டக்காரர்களை உருவாக்கி இருக்க முடியும்
//அது சச்சின் நகர்ந்தால் தெரியும்,//
முற்றிலும் தவறான வாதம்.
அது அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளர் நகர்ந்தாலே தெரியும் என்பது தான் என் கருத்து.
இப்பொழுது கூட சச்சின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வில்லை என்பதை மறந்து விட்டீர்களா
//சச்சின் இல்லை என்றால் இந்திய கிரிக்கெட்டே அம்புட்டு தான் என்கிற பிம்பம் உருவாகி இருக்கிறது, //
இது பிம்பம் தான்
ஆனால் இன்றைய தேதியின் அணியின் ஐந்து சிறந்த ஆட்டக்காரர்களின் பட்டியலில் அவர் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை
//அது வெறும் பிம்பம் தான் என்பது அவர் விலகினால் தானே தெரியும்
//
அவர் சீக்கிரம் அவுட் ஆகும் தெரியவில்லையா கோவியாரே
//அவர் நினைத்திருந்தால் 5 ஆண்டுக்கு முன்பே விலகி அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் தகுதியான பத்து ஆட்டக்காரர்களை உருவாக்கி இருக்க முடியும்
//
என்ன கொடுமை சார் இது
ஒருவர் இடத்தில் எப்படி 10 பேர் வருவார்கள்
:) :)
பு.த.செ.வி
--
நீங்கள் கூறும் அந்த் பத்து பேரும் ஏற்கனவே அணியில் இருக்கிறார்களா
அப்படி யென்றால்அப்படி என்றால் சச்சின் ஏன் அணியின் சிறந்த மட்டையராக இருக்கும் போது வெளியேற வேண்டும். அவர் இடத்திற்கு வருபவர் தான் ஏற்கனவே அணியில் உள்ளாரே
அவர் இடத்திற்கு வருபவர் இப்பொழுது அணிக்கு வெளியில் இருக்கிறாரா. அப்படி என்றால் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரை அனுப்பி அந்த இடத்திற்கு நீங்கள் கூறுபவரை தேர்ந்தெடுப்பதில் என்ன தடை. இதற்கும் அணியின் சிறந்த ஆட்டக்காரர் வெளியேறுவதற்கும் என்ன தடை
//அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
November 17, 2009 7:46 PM
//
திரு கலாம் கூட சிறப்பாகவே 5 ஆண்டுகள் செயல்பட்டதாக சொல்கிறார்கள், கலாமைவிட சிறப்பாக அனைவரின் அன்பைப் பெற்றவர்கள் எவரும் இல்லை, இருந்தாலும் ஜனாதிபதி என்னும் ஒரு உயரிய பதவியை வகிக்க அவரைவிட்டால் ஆளே இல்லை என்பது கூட மற்ற இந்திய குடிமகன்களை கேவலப்படுத்தும் செயல், அதே முதல் குடிமகன் தகுதி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையே கிடைக்கும் வாய்ப்பும் கூட, அதில் கலாமே தொடரவேண்டும் என்று பலர் சொன்னதில் எனக்கு உடன்பாடு ஏற்பட இல்லை.
இந்திய கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே பெரிய செயற்கரிய செயலாக இருக்கும் போது ஒருவர் விளையாடுகிறேன் விளையாடுகிறேன் என்று விளையாண்டுக் கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பது எப்போது என்பதே என்கேள்வி. ஏற்கனவே கபில்தேவ் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்றே குரல் எழுப்பினார்கள். இதுல அவங்க வீட்டுகார அம்மா சச்சின் அவர் மகனோடு இந்திய கிரிக்கெட்டில் விளையாடனும் என்று ஆசைப்படுதாம்......அவ்வ்வ்வ்
//என்ன கொடுமை சார் இது
ஒருவர் இடத்தில் எப்படி 10 பேர் வருவார்கள்
:) :)
பு.த.செ.வி
//
10 பேருக்கு பயிற்சி கொடுத்து அதில் சிறப்பாக ஒருவரையோ இருவரையோ அணியில் கொண்டு வந்து சேர்க்க முடியாதா ? விளையாட்டு நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர் தானே பயிற்சி ஆட்டக்காரராக வருகிறார்
//திரு கலாம் கூட சிறப்பாகவே 5 ஆண்டுகள் செயல்பட்டதாக சொல்கிறார்கள், கலாமைவிட சிறப்பாக அனைவரின் அன்பைப் பெற்றவர்கள் எவரும் இல்லை, இருந்தாலும் ஜனாதிபதி என்னும் ஒரு உயரிய பதவியை வகிக்க அவரைவிட்டால் ஆளே இல்லை என்பது கூட மற்ற இந்திய குடிமகன்களை கேவலப்படுத்தும் செயல், அதே முதல் குடிமகன் தகுதி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையே கிடைக்கும் வாய்ப்பும் கூட, அதில் கலாமே தொடரவேண்டும் என்று பலர் சொன்னதில் எனக்கு உடன்பாடு ஏற்பட இல்லை. //
ஜனாதிபதி பதவி என்பது கால வரம்பு உள்ளது.
விளையாட்டிற்கு அது பொருந்தி வராது என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை..... அவ்வ்வ்வ்வ்வ்
டாக்டர் போதும்.. சஞ்சயால பதில் சொல்ல முடியலேண்னா அப்புரம் உங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாது அதனால உங்களுக்கு பதில் சொல்ல முடியாதுன்னு எஸ்கேப்பாயிடுவாரு....
//விளையாட்டிற்கு அது பொருந்தி வராது என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
//
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர்கள் அனைவருமே பீல்ட் அவுட் ஆகி ஓய்வு பெறவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா மட்டையாளர்கள் மற்றும் வீச்சாளர்கள்
//இந்திய கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே பெரிய செயற்கரிய செயலாக இருக்கும் போது ஒருவர் விளையாடுகிறேன் விளையாடுகிறேன் என்று விளையாண்டுக் கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பது எப்போது என்பதே என்கேள்வி.//
அந்த புதிய நபர் அணியின் ஆறாவது சிறந்த மட்டையாளரை விட நன்றாக விளையாடும் போது
அல்லது
அந்த ஆறாவது சிறந்த மட்டையாளர் இந்த புதியவரை விட மோசமாக விளையாடும் போது
எத்தனை தடவை இந்த பதிலை கூறிவிட்டேன் :) :) :)
//ஏற்கனவே கபில்தேவ் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்றே குரல் எழுப்பினார்கள்.//
அது அவரது கருத்து.
// இதுல அவங்க வீட்டுகார அம்மா சச்சின் அவர் மகனோடு இந்திய கிரிக்கெட்டில் விளையாடனும் என்று ஆசைப்படுதாம்......அவ்வ்வ்வ்//
அது அவரது ஆசை
ஆனால்
அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
புரிகிறதா கோவி சார்
//அவரை விட சிறப்பாக ஐந்து பேர் விளையாடும் நாள் அல்லது அவரால் இந்தியாவின் தலை சிறந்த ஐந்து மட்டையர்கள் அளவு விளையாட முடியாத நாள் அவர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து
புரிகிறதா கோவி சார்//
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர்கள் அனைவருமே பீல்ட் அவுட் ஆகி ஓய்வு பெறவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா மட்டையாளர்கள் மற்றும் வீச்சாளர்கள்
//கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றவர்கள் அனைவருமே பீல்ட் அவுட் ஆகி ஓய்வு பெறவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா மட்டையாளர்கள் மற்றும் வீச்சாளர்கள்//
அந்த வீரரை விட திறமையான வீரர் வந்த பிறகே ஓய்வு பெற்றார்கள்
உதாரணம் -
ஹீலே, கில்கிறிஸ்ட்
பிற உதாரணங்கள் வேண்டுமென்றால் ஸ்கோர் கார்டை எடுத்து பாருங்கள்
ஒரே விதிவிலக்கு மார்க் வாவ் தான் . காரணம் தெரியும் தானே
//அந்த வீரரை விட திறமையான வீரர் வந்த பிறகே ஓய்வு பெற்றார்கள்
உதாரணம் -
ஹீலே, கில்கிறிஸ்ட்
பிற உதாரணங்கள் வேண்டுமென்றால் ஸ்கோர் கார்டை எடுத்து பாருங்கள்
ஒரே விதிவிலக்கு மார்க் வாவ் தான் . காரணம் தெரியும் தானே
November 17, 2009 8:03 PM
//
ஷேர்ன் கூட நன்றாகவே ஆடிக் கொண்டிருந்தார், இன்னும் முன்னனி வீரர்களைப் பாருங்கள், யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை கட்டைப் போடவில்லை
// நாங்க எல்லாம் தீக்குளிச்ச தொண்டன் மேல சந்தியம் செஞ்சி அது மறக்கறதுக்குள்ள பழய எடத்துக்கே போய் அண்ணன் ஒரு கோயில் என மணி அடிப்பவர்கள். இவர் இன்னும் பழைய
பல்லவி பாடிட்டிருக்கிறார்//
ஆமாம் காங்கிரஸ் இந்த விசயத்தில் படு உசார்.. கலைஞர் அவர்கள் காலங்காலமாக காங்கிரசை பாராட்ட மட்டுமே செய்தார். காங்கிரஸை அல்லது வேறு எந்த காங்கிரஸ் தலைவரையும் அவர் இதுவரை ஒரு சொல் ஒரே சொல் கூட திட்டியதில்லை...
//கோவி.கண்ணன் said...
நல்ல ஆட்டக்காரர் என்றே இருக்கட்டும் ஆனால் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல சச்சின்கள் உருவாக்கலாமே.//
அய்யா...ஊரில் வேலை இல்லாதவர்கள் ஆயிரம் பேர். நீங்கள் இத்தனை நாள் வேலை பார்த்து சம்பாதித்து விட்டீர்கள். கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல கோவி. கண்ணன்கள் உருவாக்கலாமே.
//மணிவண்ணன் said...
//கோவி.கண்ணன் said...
நல்ல ஆட்டக்காரர் என்றே இருக்கட்டும் ஆனால் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல சச்சின்கள் உருவாக்கலாமே.//
அய்யா...ஊரில் வேலை இல்லாதவர்கள் ஆயிரம் பேர். நீங்கள் இத்தனை நாள் வேலை பார்த்து சம்பாதித்து விட்டீர்கள். கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல கோவி. கண்ணன்கள் உருவாக்கலாமே.
//
LOL
பகுதி 1 : வினவு தேசத்தில் ஒரு நாள்
----------------------------------------------------------
திரு வினவு, திரு சூப்பர் லினக்ஸ், திரு பவெல் எல்லோரும் ஒரு கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள்.
வாசலில் திடீரென்று ஒரே சத்தம்!
வினவு: தோழர் சூப்பர் கொஞ்சம் என்னன்னு போய்ப்பாருங்களேன்
சூப்பர்: அட போங்க சார், எனக்கு வேலை இருக்கு, இப்போதான் அஞ்சு ஈ அடிச்சிருக்கேன். கொறஞ்சது நூறாவது இன்னும் அடிக்கணும். ஆள விடுங்க நான் பிஸி!!!
வினவு: தம்பி பாவெல் நீங்களாவது.....
பாவெல்: சார் இன்னைக்கு கோட்டாவில வசவு எனக்கு பாக்கி இருக்கு, ஜன்னல் வழிய போற வரவங்க நாலு பேர இது வரைக்கும் திட்டிட்டேன், கொறஞ்சது, வேளைக்கு பத்து பேராவது எங்கிட்ட வாங்கணும். முடிஞ்சதும் உங்களுக்கு உதவறேன்!
வினவு, தலையில் அடித்துக்கொண்டு....சரி சரி நானே பாக்குறேன்.......
வெளியே வரும் திரு வினவு, உடலெல்லாம் ரத்தக்கறை படிந்த இருவர் தங்கள் கட்டடத்தில் நுழைவதை பார்க்கிறார். அவர்களைப்பார்த்து நாலு பேர் மயங்கி விழுந்ததால் இவ்வளவு சத்தம் என்பதையும் புரிந்துகொள்கிறார்!
வினவு: ஹலோ யாரப்பா நீங்க, அதுவும் இந்த கோலத்தில??
வந்தவர்: அண்ணே, தெரியில்லையா, நாந்தாண்ணே , மரண அடி, பக்கத்தில நம்ம புரச்சி அண்ணன்தான்!
வினவு: எலேய் என்ன கோலங்க இது?
ம அ : வேற ஒன்னுமில்லீங்க, புரட்சி புரட்சின்னு பேசியே போரு அடிச்சிப்போச்சு, கொஞ்சம் நடைமுறைல காட்டலாமுன்னுதான், அக்டோபர் புரட்சி இப்போதான் செய்தாமாதிரி ஒரு கெட்டப்போட வந்தோம். வெறும் தக்காளி sauce தான் அண்ணே. பயந்துட்டீங்களா! சும்மா சொல்லக்கூடாதுன்னே, நாங்களே கண்ணாடில பார்த்து கொஞ்சம் பயந்துட்டோம். இருந்தாலும் புரட்சியாளர்கள் இல்லையா, அதான் பயம் வந்தாலும் அத்த மறச்சி தில்லா வந்துட்டோம்! எப்படி?
வினவு: நல்லது தோழரே, நானும் ரொம்ப நாளா இத்தப்பத்தி நெனெச்சேன், நம்பளும் தான் புரச்சி புரச்சின்னு டெய்லி கத்துறோம், அனா ஒரு பயலும் நம்மள கண்டுக்கல, சொல்லப்போனா நம்ம பக்கத்து கட்டடத்துல இருக்குற ஆளுங்களுக்குக்கூட நம்ம பத்தி தெரியில, நேத்துக்கூட ஒரு சினப்பையன் வினவு வினவுன்னு கூவிக்கினு வந்தப்போ அஹா சின்னப்பசங்க கூட நம்மள பத்தி கேக்கறாங்களே அப்படின்னு சந்தோஷப்பட்டேன், கடைசில பார்த்தா வினவுன்னா ஏதோ பத்தாம் கிளாஸ் மாதிரி வினை தாள் வெளியிடோரோமுன்னு நெனச்சி வந்தேனுங்க என்று சொன்னப்போ, ரொம்ப டென்சனா ஆயிட்டேன், ச்சே நம்ம நெலம இப்படிப்போச்சென்னு! நல்ல வேளை, நீங்க இந்த கோலத்துல வந்தீங்க, நேர நம்ம கம்பெனி மொட்ட மாடியில போயீ நீங்க ரெண்டு பெரும் புரட்சி புரட்சின்னு கொஞ்ச நேரம் சவுண்ட் உடுங்க, அத்த பாத்தாவது சிலரு நம்ம வேயட்டு என்னன்னு புரிஞ்சிக்கட்டும்!
ம அ : சரிங்க ஐயா, ஆரம்பிக்கறோம். ஒண்ணு சொல்லுங்க, கிண்டல் பண்ண அந்த பொடியன சும்மாவா விட்டீங்க?
வின்: அட நம்ம அப்படியெல்லாம் சும்மா உட்டுருவோமா. நம்ம தோழர் கலகத்த கொண்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேநில்ல? என்னமா திட்டினாருப்ப நம்ம கலகம் அய்யா. சும்மா சொல்லக்கூடாது அவரு இருக்கிற வரை, கடையில வாங்கின trouser டைட்டு ஆயிடிச்சுன்னா கூட வந்து அவுத்து வுட்டு போவாரு! அவ்வளவு பிரியம் மத்தவன் trouser அவுக்கருதுல!
அண்ணன் திரு மரண அடியும் திரு புரச்சியும் மொட்டைமாடிக்கு போய் தங்கள் வேலையை துவங்குகிறார்கள்!
திடீரென்று இன்னொரு சத்தம். டேய் டேய் , நாயே பேயே, *(*^*^&%$^%....(*&^^%%&%$$#$#, அடிவருடி, கடி வருடின்னு. என்னன்னு பார்த்தா நம்ம கலகம் அய்யா entry!
கலகம் : வணக்கம் அண்ணே. விஷியம் தெரியுமா? நமக்காகவே ஒரு comission போடுறாங்களாம். அந்த comission இல பங்குபெற நமக்குதான் முழு தகுதியும் இருக்குண்ணே. இன்னைக்கு பேப்பருல கூட வந்திருக்கு!
வினவு: அண்ணே நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, அது மக்கள் நல வாழ்வு திட்ட comission. திட்டுற comission இல்லை!
கலகம்:சரி அத்த உடுங்க அண்ணே. வேற நல்ல விஷயம் ஒண்ணு இருக்கு. எல்லோரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தாங்க இல்ல, அதுல நம்ம மட்டும் ஏண்ணே கலந்துக்கக்கூடாது? என்னக்கு முழு தகுதியும் அதுக்கு இருக்குண்ணே. உங்களுக்கே தெரியுமே, தினமும் எப்படி எல்லோரையும் பாகுபாடில்லாம அர்ச்சனை பண்ணுவேன். தெரிஞ்சவங்க இருந்தா சொல்லி சேர்த்து உடுங்க. புண்ணியமா போகும்!
வினவு : தோழரே, அது உங்களைப்போன்ற புரட்சியாளருக்கு கிடையாதுங்க. இது வேற அர்ச்சனை. உங்க வார்த்தை ரேஞ்சே தனி. உட்டுறுங்க!
வேலை இல்லேன்னா ஒண்ணு பண்ணுங்க, உலகமையமாக்குதல் ஒரேயடியாக ஆனதால் அவனவன் வாய்த்திட்டு என்றால் என்னென்னே மறந்துட்டான்! எல்லாம் ஆங்கிலத்திலேயே, அதுவும் ஈ மெயில் போட்டு மட்டுமே திட்டுறான்! நீங்க ஒரு திட்டும் tutorial class ஆரம்பிங்க. நம்மள மாதிரி பல புரட்சி கொழுந்துகள் கண்டபடி வசவுவது எப்படின்னு வந்து கத்துப்பானுங்க!
கலகம்:உத்தரவுங்க. பேரு என்ன போடலாமுங்க?
வினவு: வசவு Tutorials
போங்கப்பா மறுபடியும் மறுபடியும் இதே புள்ளிவிவரம்..!
கொஞ்ச நாள் போனா 60 வயசுக்கு மேலே வாழக்கூடாது சாவடிச்சிடனும் என்று சொல்லுவாங்க போலிருக்கே.
ஃஃஃஃஃ
சஞ்செய்,
தாக்கரேயயை சச்சினின் குரல்வளையயை நெறிப்பதாக பதிவு போட்டுக்கொண்டே, ஓரத்தில் சச்சினின் மட்டையயை பிடுங்குவது என்ன நியாயம்
தாக்கரேக்கு சொல்ல உரிமையில்லை, ஆனால், நீங்க சச்சின் விளையாடக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமையிருக்கு என்று நினைக்கின்றீர்களா..?
திடீரென்று வேறு ஒரு சத்தம். அதுவும் அழுகைசத்தம்!
வினவு ஓடிச்சென்று பார்கிறார்!
தோழர் திரு புசிக்ஸ் வருகிறார், அழுதுகொண்டே!
வினவு: புரிட்சியாளரே, ஏன் இந்த கோலம்! என்ன ஆகிவிட்டது?
புசிக்ஸ் : அண்ணே, ஹூம் ஹூம்ம் , எல்லாம் என் பெயரால் வந்த வினைங்க! driving license வாங்க போனேனுங்க, அங்க அவுக என் பெயர கேட்டதுக்கு எதார்த்தமா புசிக்ஸ்சு அப்படின்னா என்னன்னு விளக்கம் கொடுத்தேன். இந்த மாதிரி பெயரெல்லாம் டைப் பண்ண முடியாது, வேணுமுன்னா ஏதாவது வாயில வர பெயர வெச்சிகிட்டு வரச்சொல்லிப்புட்டானுக! நம்ம தான் புரட்ச்சி திலகமாச்சே, வினவு தளமுன்னு நினச்சு கண்டபடி திட்டிட்டேன், அவங்களும் பதிலுக்கு வாயில பேசாம முதுக பதம் பாத்துட்டானுக! அதான் இப்படி, சட்ட கிழுஞ்சி, வாயு ஒடஞ்சு,,,,,ஹூம் ஹூம்.......................
வினவு : தோழரே, இவ்வளவு நடந்தும் நீங்க சும்மாவா இருந்தீங்க???
புசிக்ஸ்ஸ்: அட நீங்க ஒண்ணு, எவ்வளவுதரம் புரட்சி புரட்சி அப்படின்னு நான் கத்துனேன். அப்படியும் அவங்க சும்மா உடல! போன் போட்டு மேலும் ஒரு பத்து பேர வரச்சொல்லி நம்மள ரவுண்டு கட்டிடாங்க தோழரே!
வினவு : இருந்தாலும் நீங்க பெரிய புரட்சியாளர் தோழரே, இவ்வளவு அடி வாங்கியும் பொறுத்துக்கொண்டு வந்தீங்களே.......
புசிக்ஸ்ஸ்: அதைத்தான் அவனுங்களும் சொன்னாங்க தோழரே, இவ்வளவு போட்டும் தாங்குரானே, இவன் ரொம்ப நல்லவன்னு...........................
வினவு: சரி சரி தோழரே, அத்த உடுங்க, இன்னைக்கு டார்கெட் ஒரு ரெண்டு பேரு இருக்காங்க, வாங்க நீங்க மட்டும்தான் திட்டல.....இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் காட்டி வசைபாடிடுங்க....ராத்திரியில வலியெல்லாம் மறந்து நல்லா தூக்கம் வரும்...
இப்படி சொல்லிவிட்டு தோழர் கலகத்தை அழைத்து, "கலகம் அவர்களே, நம்ம புசிக்ஸ்ஸ் தோழர் ரொம்ப சோகமா இருக்காராம், கூட்டிட்டு போயி எவனாவது மாட்டினா கண்டபடி திட்டுங்க, அண்ணனும் அதை பார்த்து, மனம் கொஞ்சம் இளகி, அவரும் கொஞ்சம் திட்டி, நார்மலாக ஆகிவிடுவாறு, போங்க அண்ணே "
கலகம்: வினவு சார், இன்னைக்கு யாரும் மட்டலியே, ரோடுல போறவங்க ஒரு பத்து பெற பாவெல் அவர்கள் திட்டிட்டாரு, அதைக்கேட்டு நம்ம ஜன்னலாண்ட ஒருத்தனும் வர மாட்டேன் என்கிறான், அப்படியே வந்த ஒரு ரெண்டு ஆடு, மூணு நாயையும் எட்டு கொழியயிம் அண்ணன் திட்டியதால் மிருகங்கள் கூட பயந்துகினு கிட்ட வரலை.
பாக்கி, நம்ம சலவைக்கார அண்ணன் சிங்காரத்தோட நாலு கழுதைதான்! அத்த வேணா வரச்சொல்லி நாலு வாங்கு வாங்கவா? என்னதான் திட்டினாலும் தேமேன்னு கேட்டுக்கூங்க. என்ன ரொம்ப கிட்ட போயி திட்டக்கூடாது. வெத்து
பேப்பருன்னு நெனச்சு நம்மள நக்கும், அவ்வளவுதான். மேலும் நம்ம கூட பழகி பழகி நம்மள எட்டி உதைக்கிறது கூட இல்லை!
வினவு: அதெல்லாம் வேண்டாம் கலகம், வேற ஐடியா ஏதாவது சொல்லுங்க, பாவம் புசிக்ஸ்சு ரொம்ப வேதனையுல இருக்காரு!
கலகம்: அப்போ இப்படி செய்வோம்! போனை எடுத்து ஏதாவது ஒரு நம்பரை தட்டி, கண்டபடி திட்டுவோம். ஏதாவது திரும்பி பேசினால், அமெரிக்க அடிவருடி, பாசிஸ்டு, ஏகாதிபத்திய அரக்கன் அப்படி இப்படின்னு போட்டு தாக்குவோம்! நமக்கும் இணைக்கு கோட்டாவிற்கு திட்டினாமாதிரி இருக்கும், அண்ணனுக்கும் கொஞ்சம் தெளிவி ஏற்ப்படும்!
வினவு: கலகம் அண்ணே, கொஞ்சம் ரிஸ்க் இருக்குமே! திட்டு வாங்கினவன் நம்பர கண்டுபிடுச்சி போலிசு அது இதுன்னு போனான்னா, அப்புறம் யாரு ஓடுறது! ஏதோ வந்தோமா, ஏமாந்தவன், நம்ம பத்தியே தெரியாதவன், இப்படி யாரையாவது நாலு திட்டு திட்டி பொழுத கட்டினோமா, அதை உட்டுபுட்டு, எதுக்கு இந்த வேண்டாத வேலை! சரி ஒன்னு சொல்லுறேன், வண்டலூர் ஜூ ஆண்ட போயி, ஏதாவது...............
அதெல்லாம் எதுக்கு சார், ஒரு ஈசியான வழி இருக்கும் பொழுது ஏன் சார் கஷட்டப்படனும் சார், நான் சொல்லுறேன் சார் நல்ல வழி சார் என்று
கூறியபடி ஒருவர் வருகிறார்!
என்னடா இது, வினவு தளத்துல, இவ்வளவு சார் போட்டு அதுவும் நாகரீகமே இல்லாத, அதாவது வினவு நாகரீகமே கொஞ்சம் கூட தெரியாத, கண்டபடி திட்டாத இப்படி ஒரு குரல் என்று வினவு அவர்கள் பார்க்கிறார்!பார்த்தால் நண்பர் திரு அரை டிக்கெட்டு!
அட நாகரீக வேட நண்பரா, யாரோன்னு நினைத்தேன்! என்ன சார் குரல் ஒரு மாதிரி இருக்கு? அதான் ஒரு செகண்டு யாருன்னு புரியலை? என்ன இப்படி?
அரைடிக்கெட்: வேற ஒன்னும் இல்லை, இப்போதான் நம்ம எப்பவும் செய்யுறா மாதிரி டபில் ஆக்ட்டு போட்டுட்டு வந்தேன், அதான் சார், ஒரு பேருல வந்து கண்டபடி திட்டி, அப்புறம் அரை டிக்கெட்டு பேருல வந்து நாகரீகமா நல்லவன் போல பேசி...... அப்படியே வந்ததால, அதே ஸ்டைலுல பேச வேண்டியதா போச்சு. பிடிக்கலைன்னா சொல்லுங்க, கண்டபடி யாரையாவது திட்டுறேன்! அனால் ஒண்ணு சார், நான் திட்டினாலும் மரியாதையோடுதான்
திட்டுவேன், அதாவது, ஏகாதிபதிய நாலு கால் பிராணியே, பாசிஸ்டு கூர்ம அவதாரமே.....அப்படின்னு!
வினவு: ஓகே அதை விடுங்க சார். நீங்க செய்யிறதுதான் எல்லோருக்கும் தெரியுமே! நாங்க எல்லோரும் கண்டபடி திட்டுவோம், நீங்க வந்து திட்டுவீங்க! இப்போ விடயம் என்னவென்றால் நம்ம புசிக்ஸ்சு அண்ணன் ............
அரை டிக்கெட்டு: கேட்டேன் கேட்டேன்.... எதுக்கு சார் அவ்வளவு தூரம் போகணும், அதுக்கு ஈசியாக ஒரு வழி வெச்சுருக்கேன்!
வினவு: சொல்லுங்க சொல்லுங்க .
அரை டிக்கெட்டு : நம்ம கட்டடம் பக்கத்துல சங்குபாணி பூந்தி கடை தெரியும் இல்ல ?
வினவு: ஆமாம், நாம எழுதுற புரட்ச்சி எழுத்தெல்லாம், மாசக்கடைசில பொட்டலம் கட்ட மொத்தமா நல்ல ரேட்டுல வாங்குவாரே, அவரு கடைதானே? அவருக்கென்ன?
அரை டிக்கெட்டு: கேளுங்க. சங்குபானியோட தாத்தா சங்குராஜன் ஊரிலேர்ந்து வந்திருக்கிறாராம்! அவரு ரொம்ப நல்ல மனுஷனாம்! என்ன சொன்னாலும் கேட்ப்பாராம்! என்ன அவருக்கு ஒரு பாகெட்டு புகையிலை, ஒரு பாக்கெட்டு காஜா பீடி வாங்கி கொடுத்தாப்போதும்! அவர என்ன வேனும்முனாலும் சொல்லலாம்! ஒண்ணியும் பதில் சொல்ல மாட்டாரு, எல்லாத்தையும் வாங்கிக்குவாரு!
வினவு: ஏங்க?
அரை டிக்கெட்டு: அவருக்கு காது டமாரமுங்க!!!! சுத்த செவிடு! நம்ம எல்லோரும் இவரு கிட்ட ப்ராக்டிஸ் செய்யலாம், நம்ம திட்டும் கலையை! முதலில் அனன் புசிக்ஸ்சு ஆரம்பிக்கட்டும்! எப்படி ஐடியா?
வினவு: என்னதான் இருந்தாலும், என்ன செவிடா இருந்தாலும், நாம்ம ரேஞ்சே தனிதான? நம்ம கலகம் அண்ணன் இந்த மாதிரி சான்சு கிடைச்சா கண்டபடி திட்டுவாரே? என்னதான் செவிடா இருந்தாலும் நம்ம திட்டு காதுலு விழுதுடுச்சின்னா, அதும் சங்குபானிக்கு தெரிஞ்சு போச்சுன்னா அப்புறம் நம்ம பேப்பருக்கு யாரு நல்ல ரேட்டு தருவாங்க, அப்புறம் யாரு நமக்கு ஓசியில பூந்தி தருவாங்க?
அரை டிக்கெட்டு: கவலையை விடுங்க! அவரை செவிடாகியதே சங்குபானிதான்! எப்படின்னா, இவரு தொல்லை தாங்காம இவரோட காதுல நாலு குருவி வெடியை வெச்சு காலி பண்ணிட்டாராம்!!
வினவு: ஏங்க?
அரை டிக்கெட்டு: அங்கதானே விஷயம்! சங்குராஜன் தாத்தாவும் நம்ம மாதிரி புரட்ச்சி வீர்கள் நடத்தும் கூடங்களுக்கு போயி பேச்சுக்களை ரசிப்பாராம்! மேலும் அதை விட்டில் உள்ளவங்களுக்கு பேசிக்காட்டுவாராம்! அதைக்கேட்ட கடுப்பான சங்குப்பாணி, இந்த மாதிரி வயசான காலத்துல, சும்மா வேலை வெட்டி இல்லாம, அதுவும் என்னோட காசுல வண்டியை ஓட்டுற இந்தாளுக்கு நல்ல பாடமா இருக்குமேன்னு, காதுல வெடியை வெச்சாராம்!
வினவு: அப்பாடி! இந்த மாதிரி ஒருத்தரைத்தான் நாங்க தேடிக்கிட்டு இருந்தோம்! ரொம்ப நன்றி அரை டிக்கெட்டு!
"அண்ணன் கலகம், புசிக்ஸ்ஸ் , பாவெல் எல்லோரும் வாங்க! அரை டிக்கெட்டு சொல்லியது போல சங்குராஜன் தாத்தாவை கூட்டியாந்து வசை படலத்தை தொடங்குங்கள் " என்று ஆணை இடுகிறார்!
சிறிது நேரம் பொறுத்து ஒரு பெரும் சப்தம் கேட்கிறது!
வினவு: என்ன இது, இந்த எழுவு பண்டிகை தீபாவளி கூட முடிஞ்சு போச்சு, எந்த மடையன் இப்போ வெடிக்கிறான்? தீபவளியையே திட்டினோம் நாங்க, எவன் அவன் எங்க ஏரியா பக்கத்துல பாட்டாசு விடுறான்? அக்டோபர் புரட்ச்சி, மாவோ பிறந்தநாள், ஸ்டாலின் பிறந்தநாள் போன்ற நல்ல விடயங்களுக்கு மட்டும்தான் பட்டாசு வெடிக்கணும். இது கூட தெரியாம? ச்சே......
அரை டிக்கெட்டு: சார், இது குருவி வெடி மாதிரி இருக்கே! அதுவும் ஏதோ பொந்துக்குள்ள வெச்சு வெடிச்சாமாதிரி இருக்கே........
சொல்லி முடித்தவுடன் குறியோ முறையோ என்று சத்தத்துடன் கலகம், பாவெல் மற்றும் புசிக்ஸ்ஸ் ஓடிவருகிறார்கள்! புசிக்ஸ்ஸ் வாயில் ரத்தம்!!!!!
வினவு: இருங்க இருங்க.... புசிக்ஸ்சு அண்ணே ...... அதான் இந்த தக்காளி சாசு டெக்னிக்கை அண்ணன் மரண அடி செய்துட்டாரே, மறுபடியும் எதற்கு????
கலகம்: அண்ணே இது தக்காளி இல்லை, உண்மையான ரத்தம்.... நாங்க ரத்தத்த இப்போதான் பாக்குறோம், பயந்தே போயிட்டோம்...........
வினவு: என்னகே ஆச்சு?
கலகம்: நீங்க சொன்னமாதிரி சங்குராஜன் தாத்தா கிட்ட போயி, ஒரு கட்டு பீடியையும், கொஞ்சம் புகை இலையும் கொடுத்து கண்டபடி திட்டத்தொடகினோம்! அப்போ.........
பவெல்: இருங்க நான் சொல்லுறேன்....... இதை பார்த்த புசிக்ஸ்ஸ் அண்ணனும் சோகம் போயி மூடு வந்து கண்டபடி திட்டத்தொடங்கினார்! சங்கு தாத்தாவும் பீடி வலிச்சி, புகைஎலையும் மென்னுகினு எங்க திடுக்கேல்லாம் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ புரிந்தாமாதிரி நடந்துகிட்டார்! இதைப்பார்த்து இன்னும் குஷியாகிப்போன கலகம் அண்ணன், மேலும் திட்ட, அது ஓவராகிப்போய், சங்குராஜன் என்ற பெயரை சுருக்கி டேய் சங்கு, நாய் சங்கு பேய் சங்கு அப்படின்னு போட்டுத்தாக்க, வந்த சத்தத்துல, சங்குபாணி வந்துட்டாரு!!!!!!!!
வந்த சங்குபாணி, அவரைதான் திட்டுறாங்கன்னு நினைச்சு, ரெண்டு குருவி வெடியை எடுத்து பக்கத்துல நின்ற புசிக்ஸ்சு அண்ணன் வாயில் சொருகி பத்த வெச்சுட்டாரு!!!!!!!! அதன் இப்படி!!! அனால் ஒண்ணுங்க, ஒரு சாதாரண குருவி வெடியை என்னமா வெக்குறார் நம்ம சங்குபாணி! நச்சுன்னு வெச்சாருங்க! முன்னாடி ஏதாவது வெடி வெக்குற பழக்கம் இருக்குமோ?
இதைகேட்டு ஓவென அழுகிறார் அண்ணன் புசிக்ஸ்ஸ், வாயில் ரத்தத்தோடு!
அண்ணன் வினவும் ஓடிவந்து அவரை சமாதானப்படுத்துகிறார் மேலும்: புசிக்ஸ்சு, கவலைப்படாதீங்க, அழாதீங்க.......
புசிக்ஸ்சு நிருத்தாமால்....ஓவென்று ஓலமிட்டு அழுகிறார்!
ஓட்டிவந்த அண்ணன் கலகம்: அழாதே புசிக்ஸ்சு ....... என் புரட்ச்சி நண்பனில்ல, ஸ்டாலின் தம்பிஇல்ல, மாவோவின் குஞ்சில்ல .... எங்க அழுகையை நிறுத்தி, நல்லா வாயைத்திறந்து சமத்தா நாலு திட்டு திட்டு பார்க்கலாம்...... இதுக்கு போயி...........
புசிக்ஸ்சு, உடைந்த வாயுடன்: நிழுதுங்க....நிழுதுங்க ......எழ்னக்ழு வாழ்சூ போழ்னத்பழ்த்ழி கவ்ழளை இள்ழை, ஆண்ழ்ழ எழ்ண் அழுமைய்ழ்ன தழ்மிழ்ஹ பெழய்ரழன புழஜிக்க்ச்ழை சொல்ழஹா முட்திய்ழஹளை என்ழட்ர்ஹா கவழளைதான்ஜான்........( இதன் தமிழாக்கம் - "" நிறுத்துங்க நிறுத்துங்க, எனக்கு வாய் போனதைப்பற்றி கவலை இல்லை, என் அருமையான தமிழ் பெயரான புசிக்ஸ்சை சொல்ல முடியாது என்ற கவலைதான்"")
இதைக்கேட்ட வினவு மற்றும் நண்பர்கள் - ஆஹா இப்படி அல்லவோ புரட்ச்சியாளர்கள் இருக்கவேண்டும்....... ரஷ்ய பெயர்கள் எவ்வளவு புனிதமானது, ரஷியர்கள் எவ்வளவு புனிதமானவர்கள், அதைவிட சீன மாக்கள் எவ்வளவு புனிதம்..... அதுவும் ஒரு வெள்ளைகார அல்லது சீனாக்காரரின் படத்த போட்டு அவங்க பெயர நமக்கும் வெச்சுகிட்டு ஒரு உண்மையான புரட்ச்சியாளர்களா வலம் வந்துகிட்டு இருக்கோம்..... நம்மள போயி ..... இப்படி ............
கவலை வேண்டாம் ..... கவலை வேண்டாம் ..................... என்ற சத்தத்தோடு வருகிறார் ஒருவர் ..... பார்த்தால் நண்பர் செங்கொடி............
செங்கொடி: மாவோ வாழ்க ....... 1962 வில் நூற்றுக்கணக்கான இந்திய போர் வீரர்களை கொன்று இந்தியப்பகுதிகளை கைப்பற்றிய மாவீரர்கள், தேசபக்த்தர்கள் வாழ்க வாழ்க!!!! வாழ்க சீனா, ஒழிக இந்தியா!!!! அப்பா, என்னோட introduction ஓவர், விடயத்திற்கு வருவோம் தோழர்களே!
வினவு: சொல்லுங்க! ஆனால், ஆட்களை திட்டுவது மட்டும் வேண்டாம்! இப்போதான் ஒரு வாய்................ சரி அதை விடுங்க.... விடயத்திற்கு வாங்க!
செங்கொடி: அதைதான் நானும் சொல்லப்போறேன்...... ஆட்களை திட்டுவது கொஞ்சம் நிறுத்திட்டு, வேறு ஒன்றை திட்ட ஆரம்பித்துவிட்டேன்!
கலகம்: அப்படியா அப்படியா ....சொல்லுங்க சொல்லுங்க .... அப்புறம் என்னையும் சேத்துக்கோங்க..... ப்ளீஸ் ப்ளீஸ்..... எதையாவது திட்டனும்போல இருக்கு!!!!
// November 17, 2009 6:12 PM
புருனோ Bruno said...
சஞ்சய் ஐயா
//இதில் என் கருத்துக்கான காரணம் இருக்கு. //
மன்னிக்கவும்
இதுவரை நீங்கள் உங்கள் காரணத்தை நிருபிக்க வில்லை. விவாதத்திற்கு சம்மந்த மில்லாத புள்ளி விபரங்களை தந்துள்ளீர்கள். அதை கூட சரியாக முழுமையாக தந்துள்ளீர்களா என்று உங்கள் மனசாட்சியின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் :) :)//
ஓவரா காமெடி பண்றிங்க டாக்டர். சச்சின் சுமாராக விளையாடியதை மோசமாக விளையாடியது தான் அதிகம்னு புள்ளிவிவரம் குடுத்திருக்கிறேன். இது தேவை இல்லாதது என்றால் தேவையான புள்ளிவிவரம் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்கு அவரின் அதிக பட்ச மோசமான ஆட்டங்களேக் காரணம் என சொல்லி இருக்கிறேன். இது தேவை இல்லாத விவரம் என்றால் என்ன சொல்வது?
// அவர் சுமாராக ஆடியதை விட மோசமாக ஆடியது தான் அதிகமாக இருக்கிறது//
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இறுதி ஆட்டத்தில் எடுத்த 90+ ஓட்டங்கள் பற்றி கூறாத இந்த புள்ளி விபரங்களை வைத்து நீங்கள் நிருபிப்பது சிரிப்பாக இருக்கிறது
//
என்னக் கொடுமை டாக்டர் இது? அவர் அடித்த 100களைக் கூட இங்கே சொல்லி இருக்கும் எனக்கு 90ஐ சொல்வதில் என்ன ஆகி விடப் போகுது? நான் விரல் நுணியில் விவரங்களை வைத்திருக்கவில்லை. இணையத்தில் இருந்து டைப் பண்ணும் போது விடுபட்டிருக்கிறது. உங்களுக்காக இன்னொரு முறை செக் பண்ணிட்டேன். வேறு எதுவும் விடுபட வில்லை. ஒரு போட்டியின் ரன்களை சொல்லாமல் விட்டதுக்கு இவ்ளோ சீன் போடக் கூடாது. மற்ற மட்டமான ரன்களை பார்த்தும் பேசுங்க.
//எந்த ஒரு ஆட்டக்காரரும் தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100 ஓட்டங்களை பெற முடியாது என்பது கிரிக்கெட்டின் அடிப்படை அறிந்த எவரும் அறிவார்கள் என்றே நினைக்கிறேன்//
நிச்சயமாக. இது எல்லாருக்கும் பொருந்தும் அல்லவா? இதற்கு முன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர்களுக்கு கடைபிடிக்கப் பட்ட அளவுகோலை இவருக்கும் கடைபிடிக்கலாம்.
//எனது பதிலை ம்றுபடி படிக்க வேண்டுகிறேன்
//இந்தப் பதிவில் சச்சினைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதால் அவர் வெளியேற்றம் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறேன். //
இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த 5 மட்டையாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என்ற என் கருத்தில் உங்களுக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கிறதா//
உங்கள் கருத்துப் படி கபில்தேவும் கவாஸ்கரும் இன்னும் அணியில் இருக்க வேண்டும். சேர்க்க சொல்வோமா?
//தற்சமயம் இந்தியாவில் இருக்கும் 5 சிறந்த மட்டையாளர்களில் சச்சினுக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்பது தான் நான் கேட்ட் கேள்வி
ஆம் என்றால் அவர் அணியில் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அவர் அணியில் இருக்க தகுதியில்லை
இது சச்சின் என்றில்லை. எந்த வீரருக்கு இதே அளவு கோல் தான்//
சிறந்த வீரர் தான். ஆனால் அளிக்கும் வாய்ப்புகளில் எத்தனையில் ஜொலிக்கிறார் என்பது தான் மேட்டர்.
நான் ஏற்கனவே (November 17, 2009 4:50 PM)கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்//
இது உங்களுக்கே ஓவரா இல்லையா? நான் சொன்னதையும் மீண்டும் சொல்கிறேன். இந்தப் பதிவு சச்சினைப் பற்றியதும் என்பதால் அவர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். எல்லாரையும் விட சச்சின் மோசமான வீரர் என்று சொல்லி இருந்தால் தான் இந்த கேள்விக்கு நான் புள்ளிவிவரம் தரனும். அப்படி சொல்லாததால அதுக்கு அவசியம் இல்லை.
//அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கல் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில், விவாதத்திற்கு சம்மந்தமில்லாத அரை குறை புள்ளி விவரங்களை அளித்து (இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள் என்ற ரீதியில்) காமெடி பண்னாமல் உங்களது தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே இன்னமும் நம்புகிறேன்//
விவாதத்திர்கு இந்த புள்ளிவிவரங்கள் ஏன் தொடர்பில்லை என தெரிந்துகொள்ளலாமா மருத்துவரே. நான் சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்கான காரணமாக இருக்கும் புள்ளிவிவரங்களைத்தான் சொல்லி இருக்கிறேன். உங்கள் புனிதப் பசுவை குறை சொல்வது பிடிக்கவில்லை என்றால் நேரடியாகவே சொல்லலாம். அதைவிட்டு அறைகுறை புள்ளிவிவரம் என்பதெல்லாம் உங்கள் உளவியல் உத்தி. வேறு யாரிடமாவது முயற்சிக்கலாமே.. :))
//// தோனி 26 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார். சச்சின் ஆடியது 17 மட்டுமே.//
அதாவது மற்றொரு இளம் வீரருக்கு 9 ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது//
ஹிஹி.. இப்படிக் கூட அளந்துவிடலாமோ? :)) சச்சின் கவுரவமாக விலகி 9 போட்டிகளில் வேறு வீரருக்கு வாய்ப்புக் கொடுத்தாரா? ஒரு ஆண்டில் 9 போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாத அளவு உடல் தகுதி இல்லாமல் இருந்திருக்கிறார் என்றுத் தெரிகிறது. இது போதாதா வெளியேற.. :))
புருனோ ஐயா, என்னால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல இயலாது. லட்டை லட்டாக குடுங்க. ஏன் பூந்தியாக் குடுக்கறிங்க. ஒரே கேள்வியை 100 விதமா கேட்டு அதுக்கெல்லால் பதில் எதிர்பார்க்கிறது வன்முறை. அப்புறம் 99 கேள்விக்கு பதில் சொல்லிட்டு 1 கேள்விக்கு பதில் சொல்ல முடியாத என் அறைகுறை பதிலுக்கு இன்னும் 500 பின்னூட்டம் போடுவீங்க. :)
குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார், உங்களுக்கும் புருனோவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர் விவாதம் செய்வார். உளறமாட்டார்.
டிபிசிடி ஐயா டிஸ்கியை மறுக்கா படிக்கவும். :)
11 பேர் மட்டுமே விளையாட முடிந்த விளையாட்டில் ஒருவர் தன் உடல் தகுதியை இழந்தும் கூட பிறருக்கு வழிவிடாமல் இருக்கிறாரே. வழிவிட்டால் நல்லது.. மனசு வைக்கனும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.
//அப்படினா politburo வா ? ..அதில் இருந்து அவரை விளக்கி விட்டார்கள் என்று படித்ததாக நியாபகம்.
//
மீண்டும் சேர்த்துவிட்டார்கள் என நினைக்கிறேன் சாமி. சமீபத்தில் கூட கலந்துக் கொண்டாரே. வழக்கமாக இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன் பெரும்தலைகளை சந்திப்பாராம். இந்த முறை சந்திக்கவில்லை என்று படித்தேன்.
நானும் சச்சினை வெளியேற்ற சொல்லி பதிவு போடறேன். நீங்க நேரு குடும்பத்தைத் காங்கிரஸ் பதிவிலேந்து வெளியேற சொல்லி பதிவு போடுங்க. பொழுது போகும்
நோ, அங்க போயி லிங்க் கொடுங்க :)-
//
நோ, அங்க போயி லிங்க் கொடுங்க :)- //
மணி அண்ணே.. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா ? அவ்வ்வ்வ்வ்வ் :((
//ஷேர்ன் கூட நன்றாகவே ஆடிக் கொண்டிருந்தார்,//
ஆஸ்திரேலியா அணியின் எத்தனை சுழல் பந்து வீச்சாளர்கள். எத்தனை மட்டையாளர்கள்
மட்டையாளர்களுக்கும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருந்தேன்
இருந்தாலும் நீங்கள் ஸ்கோர் கார்டுகளை எடுத்து பாருங்கள் . உங்களுக்கே உண்மை தெரியும்
// இன்னும் முன்னனி வீரர்களைப் பாருங்கள், யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை கட்டைப் போடவில்லை
//
அவர்களை விட சிறப்பாக விளையாடும் வீரர்கள் வந்தவுடன் ஓய்வு பெற்றார்கள். இங்கு அந்த நிலை இன்னமும் வரவில்லை என்பது தான் என் கருத்து
//. இது தேவை இல்லாதது என்றால் தேவையான புள்ளிவிவரம் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். //
தேவையான புள்ளிவிபரம் எது வென்று பல முறை கூறிவிட்டேனே
இன்னுமா அது தெரியவில்லை
சரி மீண்டும் ஒரு முறை
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதும் அப்படி எனது கருத்து தவறென்று தெரியவந்தால் அதை மாற்றிக்கொள்ளும்நாகரிகம் எனக்கு உண்டு என்பதும் தான் நான் கூறியது
அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கள் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் (இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள் என்ற ரீதியில் விவாதத்திற்கு சம்மந்தமில்லாத அரை குறை புள்ளி விவரங்களை அளித்து காமெடி பண்னாமல்) உங்களது தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே இன்னமும் நம்புகிறேன்
எனது நம்பிக்கையை பொய்யாக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன் :) :) :) :)
***
ஷேர்ன் கூட நன்றாகவே ஆடிக் கொண்டிருந்தார், இன்னும் முன்னனி வீரர்களைப் பாருங்கள், யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை கட்டைப் போடவில்லை
***
கண்ணன், உலகத்துல எல்லாருக்கும் ஒரே பார்முலா கிடையாது. இப்ப வந்தா கூட ஷேன் வார்னே நல்லா தான் விளையாடுவாரு. அவர் போனவுடன ஆஸ்திரேலியா இந்தியாவோட, இங்கிலாந்து கூட, சவுத் ஆப்ரிக்காவோட தோத்தாங்க. ஒருவேளை அவர் விளையாடி இருக்கலாம். எதுக்காக ரிட்டையர் ஆனாரு ?
//. சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்கு அவரின் அதிக பட்ச மோசமான ஆட்டங்களேக் காரணம் என சொல்லி இருக்கிறேன். இது தேவை இல்லாத விவரம் என்றால் என்ன சொல்வது?//
தேவையான விபரம் என்னவென்றால், 2009ல் அணியின் சிறந்த ஐந்து மட்டையாளர்களின் வரிசையில் சச்சினுக்கு இடம் உண்டா இல்லையா என்பதை
அனைத்து போட்டிகளிலும் சச்சின் 100 அடித்தால் கூட அவரை தவிர ஐந்து பேர் 200 அடிக்கக்கூடியவர்கள் என்றால் சச்சினுக்கு இடம் கிடையாது
இருப்பதில் சிறந்த ஆறு மட்டையாளர்கள் அணியில் இருக்க வேண்டும்
// நான் விரல் நுணியில் விவரங்களை வைத்திருக்கவில்லை. //
நீங்கள் விபரங்கள் இல்லாமல் வாதம் செய்கிறீர்கள் என்று தான் நானும் கூறுகிறேன் :) :)
//நிச்சயமாக. இது எல்லாருக்கும் பொருந்தும் அல்லவா? இதற்கு முன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டவர்களுக்கு கடைபிடிக்கப் பட்ட அளவுகோலை இவருக்கும் கடைபிடிக்கலாம்.//
நீங்கள் அப்படி வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியல் தாருங்கள்.
அவர்கள் பெற்ற ஓட்டங்களுடன் சச்சினின் ஓட்டங்களை ஒப்பிட்டு பார்ப்போம்
நீங்கள் கூறியபடி, சச்சினை விட நன்றாக விளையாடிய ஒருவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் (காம்ப்ளியை தவிர்த்து) என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்
//உங்கள் கருத்துப் படி கபில்தேவும் கவாஸ்கரும் இன்னும் அணியில் இருக்க வேண்டும். சேர்க்க சொல்வோமா?//
இன்றைய தேதியில் அவர்கள் சிறந்த மட்டையாளர்கள் என்றால் அணியில் இருக்க வேண்டும்
இல்லை என்றால் கிடையாது
//ஆனால் அளிக்கும் வாய்ப்புகளில் எத்தனையில் ஜொலிக்கிறார் என்பது தான் மேட்டர்.//
எத்தனை முறை ஜொலிக்கிறார் என்பது மேட்டர். அதை விட முக்கிய மேட்டர், அணியில் அதிகம் முறை ஜொலிக்கும் ஐந்து மட்டையர்களின் பட்டியலில் அவர் இடம் பெறுகிறாரா என்பது
//இந்தப் பதிவு சச்சினைப் பற்றியதும் என்பதால் அவர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். //
இந்த பதிவு சச்சினை பற்றியது
ஆனால் அவர் அணியில் இருந்து விலக வேண்டும் என்று நீங்கள் கூறியதற்கு காரணம் என்ன
அணியின் சிறந்த மட்டையாளரை விலக வேண்டும் என்று கூறக்காரணம் என்ன
//விவாதத்திர்கு இந்த புள்ளிவிவரங்கள் ஏன் தொடர்பில்லை என தெரிந்துகொள்ளலாமா மருத்துவரே//
ஏன் என்றால் விவாதத்திற்கு தேவையான புள்ளிவிபரம் என்னவென்றால் அணியில் இருப்பவர்களில் சிறந்த ஐந்து பேர் யார் என்பது
நீங்கள் அதை தர வில்லை
சச்சின் ஒருவரின் ஓட்டங்களை மட்டும் வைத்து அவர் அணியில் இடம் பெறலாமா இல்லையா என்று விவாதிப்பது பலனற்றது
ஒரு விளையாட்டு வீரரின் ஒட்டங்களை மட்டும் வைத்து கொண்டு பிற வீரர்களின் ஓட்டங்களுடன் ஒப்பிடாமல் அவர் அணியில் இடம் பெறலாமா இல்லையா என்று விவாதிப்பது புத்திசாலித்தனமா
உதாரணமாக இன்று அணில் கும்ப்ளே இந்திய அணியில் இடம் பெற முடியாது. ஆனால் ஹாலந்து அணியில் இடம் பெறலாம் அல்லவா. (உதாரணம் மட்டும் தான்)
ஒரு அணியில் ஒருவர் இடம் பெறவேண்டுமா இல்லையா என்பதை அவரது தனிப்பட்ட ஓட்டங்களை மட்டும் வைத்து கூற முடியாது. அணியில் இருக்கும் பிற வீரர்களின் ஓட்டங்களையும் சேர்த்து ஒப்பிட்டு பார்த்தே கூற வேண்டும் என்பது கிரிக்கெட்டின் அடிப்படை விஷயம் என்றே நினைக்கிறேன்
இன்னுமா புரியவில்லை
ப்ருனோ, சச்சினை விட பதினைந்து சிறப்பான மட்டையாளர்கள் இந்தியாவில் இருந்தாலும் அவர் எதற்கு ரிட்டையர் ஆகவேண்டும் ? தேர்வாளர்கள் வேண்டுமானால் அவரை நீக்கலாம். அவ்வளவு தான்.
அடுத்தது சச்சினுக்கு வயது 36. ரயினாவிற்க்கு வயது 23 என்றால் அவர் சச்சின் அளவிற்கு விளையாடாவிட்டாலும் அவரை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் ? வேண்டுமென்றால் சச்சின் அவரது 23 வது வயதில் எப்படி விளையாடினார் என்று கம்பேர் செய்தது ராயினா 24, 25, 26 வது வயதில் எப்படி விளையாடுவார் என்று நிர்ணயிக்கலாம் :)-
சச்சின் தான் 20/20 விளையாடுவதில்லை. எனக்கு தெரிந்து கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டியிலும் பல போட்டிகளில் ஓய்வு எடுத்து பலருக்கு வாய்ப்பு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஒருவரை கட்டாய ஓய்வு எடுக்க சொல்லி எப்படி வற்புறுத்தலாம் ? கலைஞரை கூறினாலாவது நான் ஆதரவு கொடுப்பேன் :)- அதை விட்டுவிட்டு !
//நான் சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்கான காரணமாக இருக்கும் புள்ளிவிவரங்களைத்தான் சொல்லி இருக்கிறேன்.//
இல்லை
இல்லை
இல்லை
நீங்கள் சச்சின் ஒருவரை பற்றிய புள்ளி விபரத்தை மட்டுமே தந்தீர்கள். அதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்று முடிவு கட்டுவது தவறானது
அவர் அணியில் இடம் பெறத்தகுதி இல்லை என்று நீங்கள் கூறினால் தகுதி உள்ளவர்கள் யார் என்றும் அவர்களின் புள்ளிவிபரங்கள் இவரது புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டால் இவரது தகுதி குறைவானது என்றும் நிருபிக்க வேண்டும்
இதைத்தானே நான் முதலிருந்தே கூறிவருகிறேன்
உதாரணமாக ஒரு மாணவன் 200க்கு 198 மதிப்பெண் எடுத்திருக்கிறான். அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து அவனுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும், கிடைக்காது என்று கூற முடியுமா
ஒரு வேளை அனைத்து மாணவர்களும் அவனை விட குறைந்த மதிப்பெண் என்றால் இடம் கிடைக்கும்
அல்லது 2000 பேர் 199க்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தால் இடம் கிடைக்காது
--
எனவே ஒப்பிட்டு பார்ப்பது தான் முக்கியம்
--
ஒரு மாணவனின் மதிப்பெண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, பிறரின் மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் கல்லூரியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதோ என்று ஆராய்வது சரியா சஞ்சய் சார் ??
மற்றுமொரு தகவல் - இந்திய ஒருநாள் அணியிலிருந்து லக்ஸ்மன் இதுவரை ரிட்டையர் ஆகவில்லை. அவர் கடைசியாக இந்திய ஒருநாள் அணியில் ஆடியது ஆறு வருடங்களுக்கு முன்பு :)-
// உங்கள் புனிதப் பசுவை குறை சொல்வது பிடிக்கவில்லை என்றால் நேரடியாகவே சொல்லலாம். //
ஆதாரமில்லாமல் குறை சொல்கிறீர்கள். தவறான புள்ளி விபரங்களை தருகிறீர்கள் என்று நேரடியாகத்தானே கூறியுள்ளேன்
இதில் என்ன சந்தேகம்
--
ஆதாரத்துடன் குறை கூறுங்கள். ஆதாரம் தந்தால் .... அதாவது சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதும் அப்படி எனது கருத்து தவறென்று தெரியவந்தால் அதை மாற்றிக்கொள்ளும்நாகரிகம் எனக்கு உண்டு என்பதும் தான் நான் கூறியது
//அதைவிட்டு அறைகுறை புள்ளிவிவரம் என்பதெல்லாம் உங்கள் உளவியல் உத்தி. //
ஐயா. நீங்கள் தந்தது அறைகுறை புள்ளிவிபரம். நீங்கள் தந்தது சச்சின் ஒருவரின் புள்ளிவிபரம் மட்டுமே.
இந்த விவாதத்திற்கு தேவை குறைந்தது 6 பேரின் புள்ளிவிபரம்
எனவே நீங்கள் தந்த புள்ளிவிப்ரம் அரைகுறை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது
இது உளவியல் எல்லாம் கிடையாது. Hard and fast FACT
//ஒரு ஆண்டில் 9 போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாத அளவு உடல் தகுதி இல்லாமல் இருந்திருக்கிறார் என்றுத் தெரிகிறது. இது போதாதா வெளியேற.. :))//
பிற 17 போட்டிகளில் கலந்து கொண்டு சதமடிக்கும் அளவு உடல் தகுதி இருக்கிறது. இது போதும் அவர் தொடர்ந்து விளையாட
//புருனோ ஐயா, என்னால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல இயலாது. //
உங்கள் பக்கம் நியாயம் இல்லை என்பதால் உங்களால் முடியாது என்று எனக்கும் தெரியும்.
ப்ருனோ, உங்களின் லாஜிக் படி இந்திய அணியில் சிறந்த 6 மட்டையாளர்கலாக
1) சச்சின் வயது - 36
2) சவுரவ் - வயது - 37
3) ராகுல் - வயது - 36
4) லக்ஸ்மன் - 35
5) சுஜித் சோமசுந்தர் - வயது 39
6) விக்ரம் ரதூர் - வயது 38
இப்படி இருந்தால் தேர்வாணையம் என்ன செய்யவேண்டும் ?
//. லட்டை லட்டாக குடுங்க. ஏன் பூந்தியாக் குடுக்கறிங்க. ஒரே கேள்வியை 100 விதமா கேட்டு அதுக்கெல்லால் பதில் எதிர்பார்க்கிறது வன்முறை. அப்புறம் 99 கேள்விக்கு பதில் சொல்லிட்டு 1 கேள்விக்கு பதில் சொல்ல முடியாத என் அறைகுறை பதிலுக்கு இன்னும் 500 பின்னூட்டம் போடுவீங்க. :)//
நான் கேட்பது ஒரே ஒரு கேள்விதான்.
November 17, 2009 11:55 PM கேட்டிருக்கிறேன். பாருங்கள் அது மட்டும் தான் கேள்வி
பதில் கூறுங்கள் பார்ப்போம்
//11 பேர் மட்டுமே விளையாட முடிந்த விளையாட்டில் ஒருவர் தன் உடல் தகுதியை இழந்தும் கூட பிறருக்கு வழிவிடாமல் இருக்கிறாரே//
அவர் உடல் தகுதியை இழந்து விட்டார் என்று நீங்கள் கூறுவது தவறான தகவல்.
ஒன்று நீங்கள் கூறியதற்கு ஆதாரம் தாருங்கள். அல்லது உங்களால் நிருபிக்க முடியாவிட்டால் தவறான் தகவல் கூறியதற்கு மன்னிப்பு கேட்கும் அளவு நீங்கள் நாகரிகம் உள்ளவர் என்றே நினைக்கிறேன்
//ப்ருனோ, சச்சினை விட பதினைந்து சிறப்பான மட்டையாளர்கள் இந்தியாவில் இருந்தாலும் அவர் எதற்கு ரிட்டையர் ஆகவேண்டும் ? தேர்வாளர்கள் வேண்டுமானால் அவரை நீக்கலாம். அவ்வளவு தான். //
:)
//அடுத்தது சச்சினுக்கு வயது 36. ரயினாவிற்க்கு வயது 23 என்றால் அவர் சச்சின் அளவிற்கு விளையாடாவிட்டாலும் அவரை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் ? வேண்டுமென்றால் சச்சின் அவரது 23 வது வயதில் எப்படி விளையாடினார் என்று கம்பேர் செய்தது ராயினா 24, 25, 26 வது வயதில் எப்படி விளையாடுவார் என்று நிர்ணயிக்கலாம் :)-//
:) :)
//சச்சின் தான் 20/20 விளையாடுவதில்லை. எனக்கு தெரிந்து கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டியிலும் பல போட்டிகளில் ஓய்வு எடுத்து பலருக்கு வாய்ப்பு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஒருவரை கட்டாய ஓய்வு எடுக்க சொல்லி எப்படி வற்புறுத்தலாம் ? //
அதைத்தான் கேட்டேன். இது வ்ரை பதிலில்லை
me the 100
//ப்ருனோ, உங்களின் லாஜிக் படி இந்திய அணியில் சிறந்த 6 மட்டையாளர்கலாக
1) சச்சின் வயது - 36
2) சவுரவ் - வயது - 37
3) ராகுல் - வயது - 36
4) லக்ஸ்மன் - 35
5) சுஜித் சோமசுந்தர் - வயது 39
6) விக்ரம் ரதூர் - வயது 38
இப்படி இருந்தால் தேர்வாணையம் என்ன செய்யவேண்டும் ?//
ஆறாவது சிறந்த மட்டையாளர் விக்ரம் ரதூருக்கு பதில் புது முகத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும். அதன் படி அந்த புதுமுகம் அணியில் இடம் பெறத்தகுதி பெற்றார் என்றால் அவர் சுஜித் சோமசுந்தரை விட சிறப்பாக விளையாடினால் அடுத்து சுஜித் சோமசுந்தர் vs புது முகம் 2
இல்லை அவர் சுஜித் சோமசுந்தரை விட சிறப்பாக விளையாடவில்லை என்றால் புதுமுகம் 1 vs புது முகம் 2
:) :)
ப்ருனோ, நீங்கள் ஆஸ்திரேலியா அணியின் தேர்வாணைய குழுவில் சேர்ந்ததால் நன்றாக இருக்கும் :)- மற்ற அணிகளும் உலககோப்பையை வெல்லலாம்.
:)- :)-
//ப்ருனோ, நீங்கள் ஆஸ்திரேலியா அணியின் தேர்வாணைய குழுவில் சேர்ந்ததால் நன்றாக இருக்கும் :)- மற்ற அணிகளும் உலககோப்பையை வெல்லலாம்.
:)- :)-//
மணிகண்டன்
நீங்கள் தவறான வாதம் செய்கிறீர்கள்
ஒருவர் அணியில் இடம் பெறவேண்டுமா இல்லையா என்பதை அவரது performance தான் முடிவு செய்ய வேண்டும்
அதை ஆஸ்திரிலேயே தேர்வாளர்கள் தெளிவாக கடைபிடிக்கிறார்கள்
நானும் அதைத்தான் கூறினேன்.
அப்படி இருக்கும் போது உங்களது
மறுமொழி தவறான அர்த்தத்தையே தருகிறது
சச்சின் நீக்கப்பட வேண்டும் என்று வாதம் புரியும் சஞ்சய், கோவிகண்ணான் ஆகியோர் கூறும் காரணம் என்ன - வயது
இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத காரணம்
கிரிக்கெட் விளையாட வயது ஒரு தகுதி குறைவு அல்ல.
அப்படி யென்றால் டோணிக்கு பதில் பார்தீவ் பட்டேல் தான் இந்திய அணியின் காப்பாளராக இருக்க வேண்டும் !!
--
1996ல் உலக இலங்கை அணி எப்படி இருந்தது என்று நினைத்து பாருங்கள்
உங்களை போன்றவர்கள் 199ப்ல் இலங்கை தேர்வாளராக இருந்திருந்தால் அந்த அணி கோப்பையை வென்றிருக்க முடியாது :) :) :) :)
தப்பான வாதம்ன்னு எனக்கும் தெரியும். பாலன்ஸ் பிட்வீன் ஏஜ் அண்ட் பெர்பார்மான்ஸ் பலரும் ஒரே சமயத்துல வயது ஆகும்போது தேவைப்படும். அந்த சமயத்துல இந்திய அணி செய்வது போல / சச்சின் செய்வது போல சில போட்டிகளில் ரெஸ்ட் எடுத்து கொள்ளலாம்.
***
1996ல் உலக இலங்கை அணி எப்படி இருந்தது என்று நினைத்து பாருங்கள்
உங்களை போன்றவர்கள் 199ப்ல் இலங்கை தேர்வாளராக இருந்திருந்தால் அந்த அணி கோப்பையை வென்றிருக்க முடியாது :
***
நிச்சயமா. இந்தியா ஜெயிச்சி இருக்கும் :)- Sad that we missed the opportunity !
//மணிவண்ணன் said...
//கோவி.கண்ணன் said...
நல்ல ஆட்டக்காரர் என்றே இருக்கட்டும் ஆனால் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல சச்சின்கள் உருவாக்கலாமே.//
அய்யா...ஊரில் வேலை இல்லாதவர்கள் ஆயிரம் பேர். நீங்கள் இத்தனை நாள் வேலை பார்த்து சம்பாதித்து விட்டீர்கள். கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு பலருக்கு பயிற்சி கொடுத்து பல கோவி. கண்ணன்கள் உருவாக்கலாமே.
//
வேலை செய்வது என் பிழைப்பு,
கிரிக்கெட் சச்சின் பிழைப்பு என்று சொல்லிவிட்டால் நான் ஏன் கேட்கப் போகிறேன். அவரைவிட்டா ஆளே இல்லைங்கிற மாதிரி பில்டப் பீலாக்களுக்குத்தான் நான் கேள்வி எழுப்பினேன். அவர் விளையாட்டுவீரர் அல்ல பிழைப்பு வாதி என்று சொல்லுங்க. நானும் சேர்ந்து சச்சின் வால்க சொல்கிறேன்
//கோவி.கண்ணன் said..
வேலை செய்வது என் பிழைப்பு,
கிரிக்கெட் சச்சின் பிழைப்பு என்று சொல்லிவிட்டால் நான் ஏன் கேட்கப் போகிறேன். அவரைவிட்டா ஆளே இல்லைங்கிற மாதிரி பில்டப் பீலாக்களுக்குத்தான் நான் கேள்வி எழுப்பினேன். அவர் விளையாட்டுவீரர் அல்ல பிழைப்பு வாதி என்று சொல்லுங்க. நானும் சேர்ந்து சச்சின் வால்க சொல்கிறேன்//
சச்சின் ஒரு தொழில்முறை ஆட்டக்காரர் என்று சொல்லும் போதே கிரிக்கெட் தான் அவர் பிழைப்பு என்று ஆகி விடுகிறதே!?
இன்றைக்கு இந்தியாவில் அந்த தொழிலை சிறப்பாக செய்யத் தெரிந்தவர்களில் ஒருவர் சச்சின் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்து. இதை விட சிறப்பானவர்கள் வரும் போது சச்சின் வழி விட்டால் போதும் என்பது எங்கள் வாதம்.
நீங்கள் சச்சினைப் பற்றி சொல்வது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?
//கோவி.கண்ணன் said..
வேலை செய்வது என் பிழைப்பு,
கிரிக்கெட் சச்சின் பிழைப்பு என்று சொல்லிவிட்டால் நான் ஏன் கேட்கப் போகிறேன். அவரைவிட்டா ஆளே இல்லைங்கிற மாதிரி பில்டப் பீலாக்களுக்குத்தான் நான் கேள்வி எழுப்பினேன். அவர் விளையாட்டுவீரர் அல்ல பிழைப்பு வாதி என்று சொல்லுங்க. நானும் சேர்ந்து சச்சின் வால்க சொல்கிறேன்//
சரி..விளையாட்டும் பிழைப்பும் ஒன்றல்ல என்ற உங்கள் வாதம் சரி என்றே வைத்துக் கொள்வோம்.
வேலை செய்வது உங்கள் பிழைப்பு சரி. பதிவெழுதுவது?
நீங்கள் இத்தனை நாள் பதிவெழுதி மூத்த பதிவர் என்ற பெயர் வாங்கி விட்டீர்கள். ஆனால் இன்னுமும் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கிறீர்களே? கொஞ்சம் வழி விட்டால் புதிய பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில் நிறைய தெரியும் அல்லவா?
உங்களுக்கு ஒரு நியாயம். சச்சினுக்கு ஒரு நியாயமா?
கோவி.கண்ணன்,
ரோஜர் பெடரர் என்று ஒருவர் நீண்ட காலமாக டென்னிஸில் நம்பர் 1 ஆக இருக்கிறார். அவர் விளையாடுவதால் வேறு யாரும் நம்பர் 1 ஆக முடியவில்லை, அதனால் அவர் ஓய்வு பெற வேண்டும்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் இத்தனை உலகக் கோப்பை வாங்கி விட்டார்களே...அந்த ஒட்டு மொத்த அணியும் ஓய்வு பெற வேண்டும். அவர்கள் இருப்பதால் தான் பிற அணிகளால் கோப்பை வெல்ல முடியவில்லை!
எப்படிப்பட்ட லாஜிக் அய்யா?
//ஒரு ஆண்டில் 9 போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாத அளவு உடல் தகுதி இல்லாமல் இருந்திருக்கிறார் என்றுத் தெரிகிறது. இது போதாதா வெளியேற.. :))//
பிற 17 போட்டிகளில் கலந்து கொண்டு சதமடிக்கும் அளவு உடல் தகுதி இருக்கிறது. இது போதும் அவர் தொடர்ந்து விளையாட//
அப்படியா ? இந்திய அணி guest house மாதிரி அவருக்கு, அவர் வரணும்னு நினைச்சா எவனா இருந்தாலும் வலி விட்டுட்டே இருக்கனும்...ஏன்னா அவர் அணியில் சிறந்த ஐந்து ...............இந்த கிரிக்கெட் டீம் கேம் அப்படின்னு சொல்லுவாங்களே....
தொடர்ந்து ஒரு தொடர் முழுக்க விளையாட முடியாதுன்னு நீங்களே ஒத்து கொண்டீர்கள்..அப்புறம் எதுக்கு இவருக்காக ப்ளையிங் டீம் மாத்திகிட்டு இருக்கனும்....அவரை விட விளையாட்டில் தகுதி கம்மியான விளையாட்டு வீரரா இருந்தாலும், அவர் டீம் combination மற்றும் குறிப்பா ஒரு நாள் போட்டியில் முக்கியமான opening combination டிச்டுர்ப் பண்ண மாட்டார். ஏன்னா கிரிக்கெட் டீம் கேம்.....அவர் விளையாடுனா 175 out ஆவார், இந்தியா தோற்கும். இதுக்கு பதிலா நாலு பொடி பசங்க 50 அடிச்சு இந்திய ஜெயிதாலோ, தோற்றாலோ தான் டீம்க்கு உபயோகம்......அரச்ச மாவு மாதிரி இருக்கா..பரவ இல்லை, நம்ம பங்குக்கு இது
ப்ருனோ ...ஒரே ஒரு பெரிய கல்லா எடுத்து வீசுங்க, நீங்க ஒரே சமயத்தில் பத்து சின்ன கல்லா எடுத்து வீசுறீங்க.....அதுல ரெண்டு முனு கல் அடிக்க தான் செய்யும்....சமாளிக்க கஷ்டமா இருக்கு. : )
//சரி..விளையாட்டும் பிழைப்பும் ஒன்றல்ல என்ற உங்கள் வாதம் சரி என்றே வைத்துக் கொள்வோம்.
வேலை செய்வது உங்கள் பிழைப்பு சரி. பதிவெழுதுவது?
நீங்கள் இத்தனை நாள் பதிவெழுதி மூத்த பதிவர் என்ற பெயர் வாங்கி விட்டீர்கள். ஆனால் இன்னுமும் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கிறீர்களே? கொஞ்சம் வழி விட்டால் புதிய பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில் நிறைய தெரியும் அல்லவா?
உங்களுக்கு ஒரு நியாயம். சச்சினுக்கு ஒரு நியாயமா?//
இதுல வழி விடுவது என்பது என்ன ? கிரிக்கெட் போல ஆறாவது ஆட்டக்காராக தள்ளப்பட்டால் என்னும் விதிமுறைகள் படி காத்திருக்கனும் என்பது யாருக்குமான தடை இல்லையே !
நான் மூத்த பதிவர் என்கிற பெயரெல்லாம் வாங்க வில்லை, யாருக்கும் குறுக்காக நந்தியாகவும் இல்லை.
உங்கள் வாதம் பொருளற்றதாகவும், நடிகரின் ரசிகன் என்கிற ரீதியில் ஒரு நடிகனின் செயல்களை தாங்கிப் பிடிப்பது போல் இருக்கிறது. கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை அல்லது தளரும் போது ஓய்வு பெற்று, இவன் ஏன் இன்னும் விளையாடுகிறான் என்கிற முனுமுனுப்பு பலமாகவே கேட்கும் வரை விளையாடலாம் என்று நினைக்கிறீர்கள் போலும். பொருளற்ற விவாதம் நான் செய்யவரவில்லை. பொது மனிதரைப் பற்றிப் பேசும் போது தனிமனித விமர்சனம், எனது வேலைகள் பற்றிய விவாதம் செய்வது என்னைப் பொறுத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதது, அதற்கு பதிலாக நீங்கள் ஆபாசமாகக் கூடத் திட்டிவிட்டு செல்லலாம். இப்படித்தான் ஒருவரிடம் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்கிற விவாதம் செய்யும் போது அறிவு ஜீவி போல் நீங்கள் ஏன் பெண்கள் அந்த தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதாக கேள்வி எழுப்பினார், அடுத்ததாக உங்கள் வீட்டுப் பெண்கள் அவ்வாறு செய்தால் அனுமதிப்பீர்களா ? என்று அவர் கேட்கும் முன் குட் பை சொன்னேன். விவாதம் செய்யும் போது பொதுவாகவே பேசுங்கள் என்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் தேவையற்றதும், வருத்தமளிப்பதும் ஆகும்.
////. இது தேவை இல்லாதது என்றால் தேவையான புள்ளிவிவரம் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். //
தேவையான புள்ளிவிபரம் எது வென்று பல முறை கூறிவிட்டேனே
இன்னுமா அது தெரியவில்லை
சரி மீண்டும் ஒரு முறை
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதும் அப்படி எனது கருத்து தவறென்று தெரியவந்தால் அதை மாற்றிக்கொள்ளும்நாகரிகம் எனக்கு உண்டு என்பதும் தான் நான் கூறியது
அல்லது ஸ்கோர் கார்டுகளை பார்க்கும் போது உங்கள் கருத்து தவறென்று உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் (இத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டை கட்டுவார்கள் என்ற ரீதியில் விவாதத்திற்கு சம்மந்தமில்லாத அரை குறை புள்ளி விவரங்களை அளித்து காமெடி பண்னாமல்) உங்களது தவறான கருத்தை திருத்திக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இருக்கு என்றே இன்னமும் நம்புகிறேன்
எனது நம்பிக்கையை பொய்யாக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன் :) :) :) :) //
டாக்டர், தயவு செய்து டிஸ்கியை இன்னொருக்கா படிங்க.. என்னால முடியலை.. :( சச்சினை மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் பிஸ்னசுக்கே நான் வரலையே. வயதாகிவிட்டது. உடல் தகுதி இல்லாமல் தவிர்த்த 9 ஆட்டங்களை நீங்களே குறிப்பிட்டிருக்கிங்க. அவரின் கடந்த 2 ஆண்டு விளையாட்டுகளின் ஒற்றை இலக்கம் மற்றும் 20க்கும் குறைவான ரன்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதனால் தான் அவர் பிறருக்கு வழிவிட வேண்டும் என்கிறேன். சச்சின் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்று நான் எங்குமே குறிப்பிடவில்லையே. பதிவுக்கு தொடர்பே இல்லாத 4 வரிகளை டைப் செய்துக் கொண்டு ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பேஸ்ட் பண்ணிகிட்டு இதுக்கு நாகரிகமா பதில் சொல்லு, நம்பிக்கையை பொயயாக்காதே என்றால் என்ன அர்த்தம்?.
நீங்கள் சிறந்த 5 வீரர் என்பதை என்ன அளவீட்டில் சொல்கிறீர்கள்? சராசரியை வைத்தா? அதுவே பெரிய மோசடி தானே. 10 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் சுமாரான ரன்களையாவது எடுப்பது தான் சிறந்த விளையாட்டு.( உடனே ஹர்பஜனை கைகாட்டாதிங்க- அவர் பவுலர் தான் ) பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அடித்துவிட்டு 2 ஆட்டங்களில் 100க்கு மேல் அடித்தால் அதற்கு பேர் சிறப்பான விளையாட்டா?
நல்லவேளை.. ஆண்டுக்கு ஒரே ஆட்டத்தில் மட்டும் விளையாடி 150 ரன் எடுத்திருக்கவில்லை. இல்லையெனில் இதோ பாருங்க சச்சின் சராசரி 150 என்று சொல்லி இருப்பிங்க.:))
/சரி மீண்டும் ஒரு முறை
சச்சினை விட திறமையாக விளையாடும் ஐந்து மட்டையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஸ்கோர் கார்டு மூலம் ஆதாரம் தந்தீர்கள் என்றால் என் கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்//
நானும் மீண்டும் ஒருமுறை சொல்றேன். உங்கள் கேள்விக்கும் சச்சின் வெளியேற வேண்டும் என நான் சொல்லும் காரணங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் இதற்கு பதில் சொல்வதும் அவசியமில்லை என்றே கருதுகிறேன். ஏன்னா, யாருடனும் ஒப்பிட்டு நான் சச்சின் வெளியேற வேண்டும் என சொல்லவில்லை. அவரின் உடல் தகுதி மற்றும் ஒற்றை இலக்க மோசமான ஆட்டங்களால் மட்டுமே சொல்கிறேன். இது பிறருக்கும் பொருந்தும்.
//// இன்னும் முன்னனி வீரர்களைப் பாருங்கள், யாரும் கழுத்தைப் பிடித்து தள்ளும் வரை கட்டைப் போடவில்லை
//
அவர்களை விட சிறப்பாக விளையாடும் வீரர்கள் வந்தவுடன் ஓய்வு பெற்றார்கள். இங்கு அந்த நிலை இன்னமும் வரவில்லை என்பது தான் என் கருத்து //
அவர்களைவிட சிறப்பான வீரரை எப்படி கண்டுபிடிப்பிங்க? தமிழகத்தின் சடகோபன் ரமேஷ் போன்றவர்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட வாய்ப்புகளை ஓரளவு நன்றாகவே பயன்படுத்தினார்கள். ச்ச்சினுக்கு மட்டும் தான் இவ்வளவு ஒற்றை இலக்க மோசமான ஆட்டங்களுக்குப் பின்பும் வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. வாய்ப்புகள் வழங்க முடியாத வகையில் அணியில் அடைத்துக் கொண்டிருபப்வர்களை ( எப்போதாவது சுமாராக விளையாடுபவர்கள்) கழுத்தை பிடித்து தள்ளினால் தான் பிர திறமையாளர்களை அடையாளம் காண முடியும். அல்லது தாங்களாகவே வெளியேற வேண்டும்.
கோவியார் சொன்னது போல் தன் பிள்ளையுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற தன் மனைவியின் ஆசயை நிறைவேற்றாமல் வேளியேறுவதில்லை என நினைக்கிறாரோ என்னவோ? :)
//
//நான் சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்கான காரணமாக இருக்கும் புள்ளிவிவரங்களைத்தான் சொல்லி இருக்கிறேன்.//
இல்லை
இல்லை
இல்லை
நீங்கள் சச்சின் ஒருவரை பற்றிய புள்ளி விபரத்தை மட்டுமே தந்தீர்கள். அதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்று முடிவு கட்டுவது தவறானது
அவர் அணியில் இடம் பெறத்தகுதி இல்லை என்று நீங்கள் கூறினால் தகுதி உள்ளவர்கள் யார் என்றும் அவர்களின் புள்ளிவிபரங்கள் இவரது புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டால் இவரது தகுதி குறைவானது என்றும் நிருபிக்க வேண்டும்
இதைத்தானே நான் முதலிருந்தே கூறிவருகிறேன்
உதாரணமாக ஒரு மாணவன் 200க்கு 198 மதிப்பெண் எடுத்திருக்கிறான். அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து அவனுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும், கிடைக்காது என்று கூற முடியுமா
ஒரு வேளை அனைத்து மாணவர்களும் அவனை விட குறைந்த மதிப்பெண் என்றால் இடம் கிடைக்கும்
அல்லது 2000 பேர் 199க்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தால் இடம் கிடைக்காது
--
எனவே ஒப்பிட்டு பார்ப்பது தான் முக்கியம்
--
ஒரு மாணவனின் மதிப்பெண்ணை மட்டும் வைத்துக்கொண்டு, பிறரின் மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் கல்லூரியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதோ என்று ஆராய்வது சரியா சஞ்சய் சார் ??
//
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா டாக்டர்? புதியதாக அணியில் சேர்ப்பவர்கள் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு யாரை சேர்க்கலாம் என்று சொல்லும் போது தான் உங்கள் உதாரணம் சரியாகும்.
ஒரு மாணவன் தேர்வெழுத வேண்டுமென்றால் குரிபிட்ட அளவு வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியுமல்லவா? சச்சின் பல போட்டிகளில் ஓய்வு பெற்றது பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் இல்லை. உடல் தகுதி இல்லாததால் தான். ஆகவே உங்கள் கல்லூரி உதாரணப் படியும் அவர் வெளியேற வேண்டியவர்தானே.
தயவு செய்து பின்னூட்டங்களை பிச்சிப் போட வேண்டாம் டாக்டர். எனக்கு அவ்வளவு நேரம் இல்லை.
நல்ல பதிவு சஞ்சய். உங்க எழுத்து நிறைய வித்தியாசப்பட்டு மெருகேறியுள்ளது.
////அதைவிட்டு அறைகுறை புள்ளிவிவரம் என்பதெல்லாம் உங்கள் உளவியல் உத்தி. //
ஐயா. நீங்கள் தந்தது அறைகுறை புள்ளிவிபரம். நீங்கள் தந்தது சச்சின் ஒருவரின் புள்ளிவிபரம் மட்டுமே.
இந்த விவாதத்திற்கு தேவை குறைந்தது 6 பேரின் புள்ளிவிபரம்//
நான் சச்சின் ஒருவரைப் பற்றி மட்டுமே சொல்லி இருப்பதால் அவர் புள்ளிவிவரம் மட்டுமே போதுமானது. யாருடனும் ஒப்பிட்டு அவரை பேசி இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்கும் 6 பேரின் புள்ளிவிவரங்களைத் தருவேன். அதனால் உங்கள் வாதத்திற்கு நான் விவரம் தர முடியாது. எதோ சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தொடர்பில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கு என் விவரங்கள் அறைகுறையாகத் தெரிவதில் ஆச்சர்யம் இல்லை.
புருனோ மீண்டும் உங்களுக்காக ஒரு முறை டிஸ்கி:
டிஸ்கி4: மிஸ்டர் சச்சின், எப்போ இடத்தை காலி பண்ணப் போறிங்க?. சமீக காலங்களாக ஒன்றிரண்டு மேட்ச்களில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டு மற்ற சமயங்களில் இடத்தை அடைத்துக் கொல் கிறீர்கள். வழிவிட்டால் இன்னும் பல திறமைசாலிகள் கிடைப்பார்களே. மனசு வைங்க சார்.//
இதை நல்லா படிங்க. இதுக்கு நான் எதுக்கு 6 பேர் பற்றிய பிள்ளிவிவரம் தரனும்? சச்சின் பற்றி மட்டும் தந்தால் போதுமானது. இங்கு ஏன் சச்சின் பெயர் மட்டும் குறிப்பிட்டிருக்கிறென் என்றால் ( ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆ.. கண்ண கட்டுதே ) இந்தப் பதிவு அவருக்காக எழுதப்பட்டது என்பதால் தான். இதற்கு, மற்ற அனைவரும் அணியில் இருக்க வேண்டும் என நீங்கள் எடுத்துக் கொள்வதற்கெல்லாம் நான் புள்ளிவிவரம் கோலவிவரம் குடுத்துக் கொண்டிருக்க முடியாது.
//மணிகண்டன்
நீங்கள் தவறான வாதம் செய்கிறீர்கள்//
ஐயா புருனோ, ஆரம்பம் முதல் நீங்கள் இதைத்தான் செய்கிறீர்கள் என ஏன் உங்களுக்குப் புரியவில்லை? :)) சச்சின் பற்றி மட்டும் குறிப்பிட்டிருபப்தற்கு , மற்றவர்களின் புள்ளிவிவரம் குடுக்கனும்னு சொல்லி டார்ச்சர் பண்றிங்களே இது தான் சரியான வாதமா? :)
சச்சின் (மட்டுமே அல்ல) வெளியேற வேண்டும் என நினைபப்தற்கு நான் நினைக்கும் காரணங்களை சொல்லிவிட்டேன். பிறருடன் ஒப்பிடுங்கள் என்றால் அதற்கு நான் வரவில்லை. சச்சின் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு உங்களிடம் காரணம் இருப்பது போல் வெளியேற வேண்டும் என நினைபப்தர்கு என்னிடமும் காரணம் இருக்கிறது. இதற்கு மன்னிப்புக் கேள், நாகரிகமாக நடந்துக் கொள் என்பதெல்லாம் பேத்தல். :))
//எங்கும் மராத்தி எதிலும் மராத்தி என்று கூவும் ராஜ்தாக்கரே கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனராம். ராமதாஸ், கருணாநிதி எல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு கொம்பேனி பொறுப்பேற்காது.// - By default reminded of so many people...
Poetry in Stones Part TWO at My Travelogue
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire
Doctor, manikandan
we cannot satisfy everyone, the better way is sachins way,
" pottruvor pottratum, thootruvoor thootrattum en pani kadan seithu kidappathe"
let him play and prove till he retire.
//வேலை செய்வது என் பிழைப்பு,
கிரிக்கெட் சச்சின் பிழைப்பு என்று சொல்லிவிட்டால் நான் ஏன் கேட்கப் போகிறேன்.//
கிரிக்கெட் தான் சச்சினின் பிழைப்பு :)
அவர் அணியில் இடம் பெறும் அளவு திறனுடன் விளையாடும் வரை அவர் விளையாடலாம்
// அவரைவிட்டா ஆளே இல்லைங்கிற மாதிரி பில்டப் பீலாக்களுக்குத்தான் நான் கேள்வி எழுப்பினேன்.//
அவரை விட்டாலும் கூட 100 கோடி பேர் இருக்கிறார்கள்
ஆனால் தற்சமயம் இந்தியாவில் சிறப்பாக விளையாடும் ஐந்து மட்டையர்களில் அவர் இருக்கிறாரா என்று பார்த்தால், இருக்கிறார். எனவே அவர் தற்சமயம் ஓய்வு பெற வேண்டும் என்பது தவறான வாதம்
// அவர் விளையாட்டுவீரர் அல்ல பிழைப்பு வாதி என்று சொல்லுங்க.//
அவர் விளையாட்டு வீரர் தான்
பிழைப்பு வாதி என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்று விளங்க வில்லை
// நானும் சேர்ந்து சச்சின் வால்க சொல்கிறேன்//
வாழ்க
//இன்றைக்கு இந்தியாவில் அந்த தொழிலை சிறப்பாக செய்யத் தெரிந்தவர்களில் ஒருவர் சச்சின் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்து.//
// இதை விட சிறப்பானவர்கள் வரும் போது சச்சின் வழி விட்டால் போதும் என்பது எங்கள் வாதம். //
வழிமொழிகிறேன் :) :)
//அப்படியா ? இந்திய அணி guest house மாதிரி அவருக்கு, அவர் வரணும்னு நினைச்சா எவனா இருந்தாலும் வலி விட்டுட்டே இருக்கனும்...ஏன்னா அவர் அணியில் சிறந்த ஐந்து ...............இந்த கிரிக்கெட் டீம் கேம் அப்படின்னு சொல்லுவாங்களே.... //
அவர் சிறந்த ஐந்து மட்டையர்களில் ஒருவர் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
சிறந்த ஐந்து மட்டையர்கள் விளையாட வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
புதியவருக்கு இடம் அளிக்க ஆறாவது வீரரின் இடம் இருக்கிறதே !!
//அப்படியா ? இந்திய அணி guest house மாதிரி அவருக்கு, அவர் வரணும்னு நினைச்சா எவனா இருந்தாலும் வலி விட்டுட்டே இருக்கனும்...ஏன்னா அவர் அணியில் சிறந்த ஐந்து ...............இந்த கிரிக்கெட் டீம் கேம் அப்படின்னு சொல்லுவாங்களே.... //
அவர் சிறந்த ஐந்து மட்டையர்களில் ஒருவர் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
சிறந்த ஐந்து மட்டையர்கள் விளையாட வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
புதியவருக்கு இடம் அளிக்க ஆறாவது வீரரின் இடம் இருக்கிறதே !!
//ப்ருனோ ...ஒரே ஒரு பெரிய கல்லா எடுத்து வீசுங்க, நீங்க ஒரே சமயத்தில் பத்து சின்ன கல்லா எடுத்து வீசுறீங்க.....அதுல ரெண்டு முனு கல் அடிக்க தான் செய்யும்....சமாளிக்க கஷ்டமா இருக்கு. : )
//
சின்ன கல்லுக்கு பழகிக்கொள்ளுங்கள். பிறகு பெரிய கல்லை வீசுகிறேன் :) :)
//சச்சினை மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் பிஸ்னசுக்கே நான் வரலையே. //
சச்சினை தற்சமயம் அணியில் விளையாடும் மற்றவர்களுடன் ஒப்பிடாமல் மொட்டையாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மட்டும் கூறுவது முட்டாள்தனம் மற்றும் அல்ல முற்றிலும் தவறான ஏற்றுக்கொள்ள முடியாத வாதமும் ஆகும்
நான் ஏற்கனவே கூறிய அண்ணா பல்கலை கழக தேர்வு உதாரணத்தை படியுங்கள்
// வயதாகிவிட்டது.//
கிரிக்கெட்டிற்கு ஓய்வு பெறும் வயது கிடையாது என்பதை அறிவீர்கள் என்றே நினைக்கிறேன்
ஏன் இப்படி தொடர்ந்து பொய்யான முட்டாள் தனமான வாதங்களை செய்கிறீர்கள்
// உடல் தகுதி இல்லாமல் தவிர்த்த 9 ஆட்டங்களை நீங்களே குறிப்பிட்டிருக்கிங்க.//
இளம் வீரர்களுக்கு தவிர்த்த ஆட்டங்கள் என்று தெளிவாக கூறினேன்.November 17, 2009 7:30 PM மறுபடியும் படியுங்கள்
நான் கூறாத ஒன்றை கூறியதாக கூறுவது தரம் தாழ்ந்த செயல். உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்க வில்லை.
நேரடியாக விவாதிக்க நேர்மையில்லாமல் இப்படி எதிரே விவாதிப்பவர் கூறாததை எல்லாம் அவர் கூறியதாக கூறும் அருவருக்கத்தக்க நிலை ஏன் :( :( :(
// அவரின் கடந்த 2 ஆண்டு விளையாட்டுகளின் ஒற்றை இலக்கம் மற்றும் 20க்கும் குறைவான ரன்கள் அதிக அளவில் இருக்கின்றன. //
அதை மட்டும் வைத்து கூறுவது அறிவற்ற முட்டாள் தனம். ஒப்பிட்டு பார்த்தே கூற வேண்டும் என்று எத்தனை முறை உங்களுக்கு விளக்குவது :) :) நான் கூறிய தேர்வு உதாரணத்தை பாருங்கள்
//இதனால் தான் அவர் பிறருக்கு வழிவிட வேண்டும் என்கிறேன்//
நீங்கள் எடுத்த நடைமுறை தவறு என்று நான் தெளிவாக நிருபித்து விட்டேனே.
//சச்சின் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்று நான் எங்குமே குறிப்பிடவில்லையே. பதிவுக்கு தொடர்பே இல்லாத 4 வரிகளை டைப் செய்துக் கொண்டு ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பேஸ்ட் பண்ணிகிட்டு இதுக்கு நாகரிகமா பதில் சொல்லு, நம்பிக்கையை பொயயாக்காதே என்றால் என்ன அர்த்தம்?.//
நீங்கள் நேர்மையாக வாதம் செய்ய வில்லை என்று அர்த்தம்
நான் நான் கூறாத ஒன்றை கூறியதாக கூறி உங்கள் தவறுகளை மறைக்க முயல்கிறீர்கள் என்று அர்த்தம்
உங்களிடம் தவறுகளே ஏற்றுக்கொள்ளும் நாகரிகம் இல்லை என்று அர்த்தம்
//நீங்கள் சிறந்த 5 வீரர் என்பதை என்ன அளவீட்டில் சொல்கிறீர்கள்? //
ஐந்து கணக்கீடுகள்
மொத்த ஓட்டங்கள்
சராசரி
100
50
இறுதிப்போட்டிகளில் விளையாடிய விதம்
நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் என்று இதுவரை கூறவில்லை
//சராசரியை வைத்தா? அதுவே பெரிய மோசடி தானே. 10 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் சுமாரான ரன்களையாவது எடுப்பது தான் சிறந்த விளையாட்டு//
அது உங்கள் கருத்து
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நடைமுறை கிடையாது
இந்த கருத்தின் படி, அதாவது நீங்கள் சுட்டிக்காட்டும், இதுவரை பொதுவாக கடைபிடிக்கப்படாத criteria படியே என்றாலும், அதை நிருபிக்க நீங்கள் average எடுக்காவிட்டாலும் கூட variance கணக்கிட்டு காட்ட வேண்டும். இந்திய அணியின் மட்டையர்களின் variance ஒப்பிடப்பட வேண்டும்
அப்படி காட்டினால் தான் அது சரி
அதை செய்து காட்டுங்கள். அதை விடுத்து ஒப்பீடு செய்யாமல் ஒருவர் எடுத்த ஓட்டங்களை மட்டும் காட்டி அவர் அணியில் இடம் பெற வேண்டும் அல்லது அணியில் இருக்க கூடாது என்று கூறுவது முட்டாள்தனம்
//பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அடித்துவிட்டு 2 ஆட்டங்களில் 100க்கு மேல் அடித்தால் அதற்கு பேர் சிறப்பான விளையாட்டா?//
பெரும்பாலான என்றால் என்ன
விளக்கவும்
// உங்கள் கேள்விக்கும் சச்சின் வெளியேற வேண்டும் என நான் சொல்லும் காரணங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் இதற்கு பதில் சொல்வதும் அவசியமில்லை //
சச்சின் வெளியேற வேண்டும் என்பதற்காக நீங்கள் கூறும் காரணம் - அதாவது ஒப்பீடு செய்யாமல் - ஒருவரின் ஓட்டங்களை மட்டும் வைத்து கூறுவது முட்டாள்தனம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது
ஒப்பிட்டு பார்த்தில் சச்சின் ஓய்வு பெற வேண்டாம் என்பது தெளிவாகிறது
நீங்கள் கூறியது தவறு என்பதும் தெளிவாகிறது
அதை ஏற்றுக்கொள்ளும் நாகரிகம் உங்களுக்கு இல்லை என்பதும் தெளிவாகிறது
//அப்படியா ? இந்திய அணி guest house மாதிரி அவருக்கு, அவர் வரணும்னு நினைச்சா எவனா இருந்தாலும் வலி விட்டுட்டே இருக்கனும்...ஏன்னா அவர் அணியில் சிறந்த ஐந்து ...............இந்த கிரிக்கெட் டீம் கேம் அப்படின்னு சொல்லுவாங்களே.... //
அவர் சிறந்த ஐந்து மட்டையர்களில் ஒருவர் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
சிறந்த ஐந்து மட்டையர்கள் விளையாட வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா
புதியவருக்கு இடம் அளிக்க ஆறாவது வீரரின் இடம் இருக்கிறதே !!
//தமிழகத்தின் சடகோபன் ரமேஷ் போன்றவர்களுக்கு எவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. //
சொல்லுங்கள்
//வழங்கப்பட்ட வாய்ப்புகளை ஓரளவு நன்றாகவே பயன்படுத்தினார்கள்//
எத்தனை ஒட்டங்கள் பெற்றார் என்று சொல்லுங்கள்
அதே அளவு ஆட்டங்களில் சச்சின் பெற்றது எத்தனை என்று சொல்லுங்கள்
இருவரையும் ஒப்பிடுங்கள்
நீங்கள் கூறுவது சரியென்று தெரியவந்தால் நான் கூறியது தவறு என்று உடனடியாக ஏற்றுக்கொள்ள் தயார்.
நீங்கள் கூறியது தவறென்றால்......
//ச்ச்சினுக்கு மட்டும் தான் இவ்வளவு ஒற்றை இலக்க மோசமான ஆட்டங்களுக்குப் பின்பும் வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. //
ஐயா சாமி
நீங்கள் கூறும் வீரரின் ஓட்டங்கள் காட்டுங்கள்
இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்போம்
நீங்கள் கூறுவது சரியென்றால் நான் எனது தவறுக்கும் மன்னிப்பு கேட்க தயார் என்று கூறிவிட்டேனே
நீங்கள் இதுவரை பிற வீரர்களின் புள்ளி விபரங்களை காட்டவே இல்லையே
//வாய்ப்புகள் வழங்க முடியாத வகையில் அணியில் அடைத்துக் கொண்டிருபப்வர்களை ( எப்போதாவது சுமாராக விளையாடுபவர்கள்) கழுத்தை பிடித்து தள்ளினால் தான் பிர திறமையாளர்களை அடையாளம் காண முடியும். //
இது சரி
ஆனால் சச்சின் இந்த பட்டியலில் இல்லை என்று நிருபித்து விட்டோம்
நீங்கள் உங்கள் தரப்பு ஒப்பீடுகளை அளித்து, அது சரியென்றால் தவறுகளை திருத்த தயார் என்றும் கூறியாகிவிட்டது.
We expect either Stats (if you have truth on your site) or Sorry (if you are cultured) from you என்று ஏற்கனவே கூறியாகிட்டதே :) :) :)
//ஒரு மாணவன் தேர்வெழுத வேண்டுமென்றால் குரிபிட்ட அளவு வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியுமல்லவா?//
ஆம்
உண்டு
அது போல் ஒருவர் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால் சாரசரி ஓட்டங்கள் எதற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
கூறுங்கள்
சச்சினுக்கு அந்த சராசரி இருக்கிறதா என்று பார்ப்போம்
---
அல்லது நீங்கள் கண்டுபிடித்த புதிய கணக்கீட்டான variance எதற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
ஒப்பிட்டு பார்ப்போம்
நாங்கள் தயார்
//சச்சின் பல போட்டிகளில் ஓய்வு பெற்றது பிறருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் இல்லை. உடல் தகுதி இல்லாததால் தான். //
இதற்கு ஆதாரம் தாருங்கள்
ஏன் நீங்கள் ஆதாரத்துடன் வாதம் செய்வது என்று அடிப்படை நாகரிகத்தை கடைபிடிப்பதில்லை :( :( :(
//ஆகவே உங்கள் கல்லூரி உதாரணப் படியும் அவர் வெளியேற வேண்டியவர்தானே.//
இல்லை
எனது கல்லூரி உதாரணப்படி அவர் அணியில் இருக்க வேண்டியவரே
//தயவு செய்து பின்னூட்டங்களை பிச்சிப் போட வேண்டாம் டாக்டர். எனக்கு அவ்வளவு நேரம் இல்லை.
//
ஒருவர் மீது அபாண்டமாக பழி போடுவதற்கு நேரம் இருக்கிறது அல்லவா
ஒன்று உங்கள் குற்றச்சாற்றை நிருபியுங்கள்
அல்லது நீங்கள் எழுதியதற்கு ஆதாரம் தர முடியவில்லை என்றால் மன்னிப்பு கேளுங்கள்
அவ்வளவுதான்
//நான் சச்சின் ஒருவரைப் பற்றி மட்டுமே சொல்லி இருப்பதால் அவர் புள்ளிவிவரம் மட்டுமே போதுமானது.//
போதாது.
அணியில் இருக்கும் பிறருடன் ஒப்பிடுவது அவசியம்
// யாருடனும் ஒப்பிட்டு அவரை பேசி இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்கும் 6 பேரின் புள்ளிவிவரங்களைத் தருவேன்.//
ஒருவர் அணியில் இருக்க தகுதியில்லை என்று நீங்கள் கூறினால், அணியில் இருப்பவர்கள் இவரை விட தகுதியானவர்காக இருந்தாம் மட்டுமே அது சாத்தியம்
எனவே ஒப்பீடு அவசியம்
//யாருடனும் ஒப்பிட்டு அவரை பேசி இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்கும் 6 பேரின் புள்ளிவிவரங்களைத் தருவேன்.//
எனக்கு சச்சினை பிடிக்காது என்று நீங்கள் கூறியிருந்தால் அதற்கு புள்ளிவிபரம் தேவையில்லை
ஆனால் அணியில் இடம் பிடிக்க வேண்டும், வேண்டாம் என்று கூறும் போது ஒப்பிட்டு புள்ளி விபரம் மிக அவசியம்
//அதனால் உங்கள் வாதத்திற்கு நான் விவரம் தர முடியாது. //
உங்கள் பக்கம் நேர்மை யில்லாததால் தர முடியாது என்பதும், அப்படி பட்ட புள்ளிவிபரத்தின் மூலம் நீங்கள் முதலில் கூறியது தவறு என்று நிருபணம் ஆகிவிடும் என்பதும் எனக்கு தெரியும்
:) :) :)
//இதை நல்லா படிங்க. இதுக்கு நான் எதுக்கு 6 பேர் பற்றிய பிள்ளிவிவரம் தரனும்? //
ஏனென்றால் நீங்கள் அணியில் இடம்பிடிப்பதை பற்றி கூறுகிறீர்கள். எனவே ஒப்பீடு அவசியம்
//சச்சின் பற்றி மட்டும் குறிப்பிட்டிருபப்தற்கு , மற்றவர்களின் புள்ளிவிவரம் குடுக்கனும்னு சொல்லி டார்ச்சர் பண்றிங்களே இது தான் சரியான வாதமா? :)//
சச்சின் பற்றி மட்டும் நீங்கள் குறிப்பிட்டிருந்தால் மற்றவர்களின் புள்ளிவிபரம் தேவையில்லை
ஆனால் இந்திய அணி பற்றியும் அல்லவா சேர்த்து குறிப்பிட்டீர்கள்
அதனால் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமே
// சச்சின் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு உங்களிடம் காரணம் இருப்பது போல் வெளியேற வேண்டும் என நினைபப்தர்கு என்னிடமும் காரணம் இருக்கிறது//
எனது காரணத்தை நான் விளக்கி நிருபித்து விட்டேன்
உங்களது காரணத்தை நீங்கள் இன்னமும் நிருபிக்க வில்லை
அவ்வளவு தான் வித்தியாசம்
//Doctor, manikandan
we cannot satisfy everyone, the better way is sachins way,
" pottruvor pottratum, thootruvoor thootrattum en pani kadan seithu kidappathe"
let him play and prove till he retire.
//
இது சஞ்சய் காந்திக்காக மட்டுமல்ல
இவரது ஆதாரமில்லாத அபாண்டங்களை கேட்டு மற்றவர்கள் தவறாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக :) :)
இனம் மொழி என்பது குறுகிய வட்டம் என்றால் நாடு என்பதும் குறுகிய வட்டம்தானே ?
உலகின் எல்லாநாடுகளிலும் வாழுவது மனிதர்கள் தானே?
மொழியையும் இனத்தையும் கை விட்டு இந்தியன் என்று சிந்திக்க சொல்கிறீர்கள் .
ஏன் நாடு என்பதையும் கைவிட்டு மனிதர்கள் என்று சிந்திப்போமே?
ஏன்தான் நாம் காஷ்மீர் என்று அடித்துக்கொண்டு பாகிஸ்தான் காரனுடன் சண்டை பிடிக்கிறோம்? இந்தியன் என்ற குறுகிய நோக்கில் சிந்திப்பதை விட்டு எல்லோரையும் மனிதப்பிறவிகள் என்ற பரந்த நோக்கில் சிந்தித்தால் இந்திய நாட்டில் போர் என்பதே இல்லாமால் அமைதி வந்துவிடுமே .
அது சரி மலையாளிகள் தங்கள் மண்ணில் மலையாளம் படித்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்பதை சாடி உள்ளீர்கள் .
இந்தி பேசாத மாநிலங்களிலேயே இந்திக்காரர்களுக்கு சம்பந்தமில்லாத பூர்வீக பூமிகளில் இந்தி தெரிந்தால்தான் மத்திய அரசு வேலை கிடைக்கும் என்பது இதை விட மோசமான கொள்கை அல்லவா !
பெரும் மதிப்பிற்குறிய அன்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு,
முதலில் என்னைப் பற்றி சில வார்த்தைகள் - நான் கிரிக்கெட் விளையாட்டின் ரசிகன், அவ்வளவே. நாட்டுப்பற்று, தனி நபர் துதி போன்றவற்றை என் இரசனையோடு குழப்பிக் கொள்வதில்லை. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி சிறப்பானது, இன்றைய தேதிக்கு சச்சினை விட பாண்டிங் சிறந்த பேட்ஸ்மேன் போன்ற கருத்துக்களில் எனக்கு முரன்பாடே கிடையாது.
எனது வாதம் மிகவும் எளிமையானது. இன்று இந்தியாவில் உள்ள வீரர்களில் இந்திய அணியில் இடம் பெற அனைத்து தகுதியும் சச்சினுக்கு உள்ளது என்பதே. அவரை விட சிறந்த ஆட்டக்காரர் வந்தால் அவராக விலகி நல்லுதாரணம் படைக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பி.சி.சி.ஐ அவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் தவறில்லை என்பதே என் கருத்து.
பி.ச