August 27, 2010

மரங்களை வெட்டுங்கள் (பா ம க கவனத்திற்கு)


முன் குறிப்பு: இ-மெயிலில் வந்த இடுகை.

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை
நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக
தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '
என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்
நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில்
முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின்
வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட
ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம
மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி
தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை
எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று
பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை
கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து
கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர்
முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி
செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் ,
நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதி
ர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும்
போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ,
ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ
முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும்
கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை
மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை
வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை
கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை
கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே
என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை
அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை
செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

15 comments:

Robin said...

//மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....// உண்மைதான்.
அந்த மரங்களின் புகைப்படத்தைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கபீஷ் said...

ராபின், தேடி போடறேங்க, கருவேல மரம் எல்லாருக்கும் தெரியும்னு நினச்சுட்டேன், சோம்பேறித்தனம் ரெண்டாவது காரணம் :)

SanjaiGandhi™ said...

Too late.. its impossible now deepa..

கபீஷ் said...

I like ur positive thought process, Sanjay boondhi :)

முகிலன் said...

தெளிவா அந்த அரசியல்வாதியோட பேரை விடுறதில அப்பிடியே ராகுலுக்கு மொழிபெயர்ப்பாளரா இருந்த தங்கபாலு கண்ணுக்குத் தெரியிறாரு..

எங்க ஊருப்பக்கம் அந்த மரத்துக்குப் பேரே காமராஜ் ட்ரீ தான் பாஸ்..

கிரீன்இந்தியா said...

ஒட்டு மொத்தமாக கருவேல மரத்தை குற்றம் சாட கூடாது.
ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி.நாலும்,ரெண்டும் சொல்லுக்கு உறுதி என்பது பழமொழி.

அந்த பட்டியலில் கருவேலம் சேர தகுதி உண்டு.கரணம் கருவேலம் பட்டையின் மருத்துவ குணம் அபாரமானது.

பல்லில் இருக்கும் புழு.பூச்சியை கொல்லும்.பல் ஆடுவதை நிறுத்தும்.இப்படி பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

நிறைய இடங்களில் இந்த பல்பொடி கிடைக்காது.பக்குவம் தெரிந்த ஒரு சில சித்தவைத்தியர்கள் தான் தயார் செய்கிறார்கள்.

நல்ல விஷயம் தெரிந்த சித்த மருத்துவர்களை கேட்டு பாருங்கள்.சொல்வார்கள்.

ஆடுகளுக்கு கருவேலம் என்றால் திருநெல்வேலி அல்வா போல தான்.

கருவேலம் ஒரு திருநெல்வேலி அல்வா ஆடுகளுக்கு-எனது பதிவு படிங்க அப்பு.

Spottamil Entertainment said...

நல்ல பதிவு ஆதாரங்களுடன் எழுதினால் நண்று

Sindhai said...

கிரீன் இந்திய அவர்களுக்கு,

கருவேல மரத்திலேயே இரண்டு வகை இருக்கு நாட்டு கருவேலம் சீமை கருவேலம் அப்டின்னு, இங்க இருக்கற இந்த பதிவு சீமை கருவேலத்தை பத்தி. இந்த சீமை கருவேலம் தான் நம்ம நாட்டுல திட்டமிட்டு பரப்பப்பட்டது. நாட்டு கருவேலம் உடலுக்கும் நல்லது மண்ணுக்கும் நல்லது. ஆனா சீமை கருவேலம் தான் விஷம்

நசரேயன் said...

//இ-மெயிலில் வந்த இடுகை.//

நீங்க என்னைக்கு தான் சொந்த இடுகை போட்டு இருக்கீங்க ?

இதையெல்லாம் இனிமேல தனியா சொல்ல வேண்டாம்

கபீஷ் said...

படம் எடுத்தேன் சேக்க முடியல ராபின் ஸாரி :-((

அது சரி said...

கருவேல மரத்தை கொண்டு வந்தது காமராஜர் தான்.. ஆனால், மிக மோசமான பஞ்ச காலத்தில் வறுமையை கொஞ்சமாவது நீக்கும் நல்ல நோக்கத்தில் தான் தென்மாவட்டங்களில் மட்டும் கருவேலம் வளர்க்கப்பட்டது.

இன்றைக்கும் வறட்சியான இடங்களில் இது முக்கியமான பணப்பயிரே. குறிப்பாக எந்த ஒரு ஆற்றுப்பாசனமும் இன்றி மழையை மட்டும் நம்பி இருக்கும் தென்மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பயன் தருவது கருவேலம் மட்டுமே.

ஆனால், கவனிக்க வேண்டியது, இந்த மரம் வறட்சியான பிரதேசங்களில் மட்டுமெ வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது. காரணம், அங்கு வேறு எந்த பயிர் செய்தாலும் நஷ்டம் மட்டுமே ஏற்படும். நீங்கள் சொல்லும் அரசு, வேம்பு மரமெல்லாம் பயன் தர நீண்ட நாளாகும். வறண்ட பிரதேசத்து மக்களுக்கு பயன் தரும்படி அந்த பயிர்கள் இல்லை.

அது சரி said...

நல்ல கட்டுரை. ஆனால், கருவேலம் வளர்ப்பவர்கள் சூழ்நிலை குறித்தும் சொல்ல தோன்றியது.

Mohamed Faaique said...

அந்த மரங்களின் புகைப்படத்தைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

குடுகுடுப்பை said...

கருவக்காய மாடு திங்கும். கருவ மரம் சாராய எரியலுக்குப் பயன்படும். பலகை அறுக்கப்பயன்படாத மரத்தை பாமக அறுக்குமா?

*இயற்கை ராஜி* said...

//கரிமிலவாயுவை
மிக அதிக அளவில் உற்பத்தி செய்து //

photosynthesis nadakara ella green plant um carbon di oxide ah absorb thane pannum?

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget