ரப்பர் பஞ்சத்தை எற்படுத்திய ச்சீமான்

மாணவர்கள் உபயோகிக்கும் ரப்பருக்கு தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அதனால் தேர்வுகளைத் தள்ளிப் போட தேர்வுத்துறை உத்தேசித்துள்ளதாகவும்  செய்திகள் கசிந்தவண்ண்ம் உள்ளது. கசிவை அடைக்கா அரசாங்கம் போர்க்கால நடவடிக்கையில் செயல்படுவதால் ப்ளம்பர்கள் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறதாம். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரிகள் குஷியில் இருக்கிறார்களாம்.அரசாங்க சாராயத்துக்கு இணையாக தேங்காய் எண்ணெய் விற்பனை ஆவதாக ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றன. ரப்பர் பஞ்சத்தை உறுதிபடுத்த எமது புலனாய்வு சொரி சிறங்கு படையை க்ரேன் உதவியுடன் களத்தில் இறக்கினோம்.

எமது புலயாய்வுப் படை, இலங்கைத் தேர்வுத்துறையை.. சாரி புகடன் படிக்கும் நினைவில் சொல்லிவிட்டேன்.. தமிழகத் தேர்வுத்துறையில் முக்கிய அதிகாரிகளை அணுகினோம். ஜாதகம் தர விரும்பாத ஒரு மூத்த அதிகாரி,” உண்மைதான். தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத வகையில் மாணவர்கள் பயன்படுத்தும் ரப்பருக்கு பஞ்சம் வந்துவிட்டது.நாங்களும் எல்லா இடங்களிலும் விசாரித்துவிட்டோம். ஸ்டாக் இல்லை என்பதே பதில். கேரளாவுக்கு சென்று ரப்பர் தோட்ட விவசாயிகளை நேரடியாக அணுகினோம். தமிழகத்தில் இருந்து வந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கி சென்று விட்டார்களாம். அவர்கள் குழந்தைகளுக்குக் கூட இல்லையாம். பெரும் மர்மமாக இருக்கிறது. விஷயம் காவல் துறையின் விசாரணையில் இருக்கிறது” என்றார்.

தமிழக காவல்துறை உயர் அதிகார்களிடம் இது பற்றி விசாரித்தோம்.ரேஷன் பதுக்கலுக்கே பாதுகாப்புக் குடுக்க முடியாமல் .. இல்ல..இல்ல.. ரேஷன் பதுக்கலையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது நம் ஆட்ச்சிக்கு.. சாரி.. தமிழக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என எதிர்க்கட்சிகள் செய்த சதியாகத் தான் இருக்கும். இதை கண்டுபிடிக்க ஏசி வாஞ்சிநாதன் தலைமையில் தனிப் படை அமைத்துள்ளோம். விரைவில் கழகத்தின் மீதான.. சாரி சாரி.. காவல் துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்போம் ” என முடித்துக் கொண்டார் அந்த கழக அதிகாரி.

இந்த இதழ் அச்சேறுவதற்கு சில நொடிகள் முன்னர், வாஞ்சிநாதனின் விசாரணை அறிக்கை நம் ரகசிய சோர்ஸ்கள் மூலம் கிடைத்தது. அதை ரப்பரை பதுக்கியவர் பற்றியும் அதற்கான காரணமும் இருந்தது. விரைவாக கண்டுபிடித்து நம்மை ஆச்சர்யப் படுத்திய ஏசி வாஞ்சிநாதனுடன் தொலைபேசியில் பேசினோம். “ எந்தத் தடையமும் இல்லாமல் தவித்த எங்களுக்கு, முக்க்ஹீர்ரன் என்ற குஜால் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்த செய்தி விசாரணைக்கு பேருதவியாக இருந்தது. அவர் வீட்டில் கைப்பற்றப் பட்ட ரப்பர்களை எல்லாம் எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். மாணவர்கள் அதை பயன்படுத்தலாம். தேர்வுகள் பாதிக்காது” என்றார்.

அந்த செய்தி : காங்கிரசை அழிப்பதற்கு, எந்தவொரு செயலில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக இயக்குனர் சீமான் கூறினார்.

Read more...

Mini Meals v 3.01.10

லங்கைத் தேர்தல் முடிவுகள் செம குழப்பம். புலிகளையும் பொது மக்களையும் கொன்று குவித்த இருவருக்கும் போட்டிப் போட்டு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். புலிகள், ஆயுத பலத்தில் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள் என சொல்லப்பட்டது நிஜம் தானோ?. தமிழகத்தின் புலனாய்வுப் பத்திரிக்கைப் புலிகள் அறிவித்த “ புலிகள் ஆசி பெற்ற அரசியல் கட்சிகள்” போட்டிப் போட்டுக் கொண்டு இரண்டு கொலைகாரர்களையும் ஆதரித்தார்கள். அப்போதே இந்தியத் தமிழர்கள் காமெடியர்களணார்கள். இதில் சிவாஜிலிங்கம் தான் பாவம்.. மிகப்பெரிய காமெடியர் ஆனார். இவருக்கு கிடைத்த வாக்குகள் 9962. கடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் இவர் , பிஜேபிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். சொந்த நாட்டிலேயே 9662 வாக்குகள் தான். கூரை எறிக் கோழிப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்..

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம், தொழில்நுட்ப ரீதியிலும் வியாபார ரீதியிலும் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்ததாக கருதப் பட்ட இதே கெமரூனின் டைட்டானிக்கின் 1.843 பில்லியன் டாலர் சாதனையை  கடந்து அவதார் படம் 1.859 பில்லியன் டாலர் வசூலின் மூலம்  புதிய வியாபார சாதனைப் படைத்திருக்கிறது. அவதாரின் தயாரிப்பு செலவு 237 மில்லியன் டாலர்( 300மில்லியன் டாலருக்கு குறைவாக இருக்காது என்பது ஹாலிவுட் வட்டாரங்களின் கணிப்பாம்). பண்டோரா கிரகம் அதன் மொழி உட்பட பலவும் கேமரூனின் கற்பனையே. உண்மையான உழைப்புக்கும் அதை முழுமையாக்குவதற்கான காத்திருத்தலுக்கும் கிடைத்த பலன் இது. கமலஹாசனின் தவத்தின் மீது மரியாதை அதிகரிக்கிறது. நிச்சயம் ஒருநாள் அவர் இந்திய கேமரூனாவார்.

மிழ்மணம், வாக்களிப்பில் புதிய முறையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. பதிவுகளுக்கு வாக்களிப்பவர்களின் பெயர் தெரிவது போல் செய்திருக்கிறார்கள். அதை வைத்து நம் வலைமகாஜனம் விளையாட ஆரம்பித்துவிட்டது. பிரபலமான பதிவர்களின் பெயரில் கணக்கு ஆரம்பித்து அவர்களின் நண்பர்களுக்கு எதிர் ஓட்டுப் போடுகிறார்கள். சமீபத்தில் ஒரு பதிவருக்கு அனைத்தும் மைனஸ் ஓட்டுகளாக இருந்தது. அதில் ஒரு பெயர் sankara4. கேபிள்சங்கரின் மெயில் ஐடியில் கணக்கை ஆரம்பித்து யாரோ விளையாடுகிறார்கள். அவரின் தமிழ்மனம் ஐடி cablesankar. இந்த வசதியை உடனே நீக்க வேண்டும். வாக்களிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப் படும் என்பது ஆரம்பத்தில் விதியாக இருந்த ஞாபகம். இப்போது அது என்னவாயிற்று எனத் தெரியவில்லை. இதனால் எற்படும் குழப்பங்களை சொல்லி இதை நீக்க வேண்டும் என தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினேன். வேலைப்பளுவோ என்னவோ இதுவரை பதில் இல்லை. ஐந்தெழுத்து பெண் பதிவர் பெயரிலும் மைனஸ் ஓட்டுகள் குத்தி தள்ளுகிறார் ஒருவர். ஒரே பெயரில் கணக்கை ஆரம்பிக்க தமிழ்மணம் அனுமதிக்கிறது. ( ie : sanjai, Sanjai ) வாக்களிப்பவர்களின் ஐபி முகவரி தமிழ்மணம் சர்வரில் பதிவாகும் எனபதும் அதை வைத்து கறுப்பு ஆடுகள் இனம்காணப் படுவார்கள் என்பதும் சிலருக்கு தெரியவில்லை போல.

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பனுக்கு காரில் இருக்கும் ஆடியோ ப்ளேயரில் கேட்பதற்கு சிடியில் பாடல்களை பதிவு செய்ய முயற்சிக்கும் போது Music என்ற பிரிவில் Audio CD என்ற வசதியை கொண்டு பதிவு செய்ய பார்த்தேன். அதில் நேர அளவில் தான் பதிவாகிறது. சில பாடல்கள் மட்டுமே பதிய முடிகிறது. அதற்கு பதில் Music என்பதிலேயே Jukebox Audie CD  என்ற பிரிவை பயன்படுத்தி பதிவு செய்தால் ஃபைல் அளவைக் கொண்டு பதிவாகிறது. நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பதியலாம். இது எல்லா வகை ஆடியோ ப்ளேயர்களிலும் செயல்படுகிறது. நான் Neroவை பயன்படுத்துகிறேன். இது சப்பை மேட்டராக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற பாமரர் யாருக்காவது பயன்படும் என்பதால் பகிர்ந்துக் கொள்கிறேன்.

வெட்டான்குடி பறவைகள் சரணாலையம்


  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரே பறவைகள் சரணாலையம். மதுரையிலிருந்து 51கிமீ தொலைவில், மேலூர் - திருப்பத்தூர் சாலையில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 30கிமீ. காரைக்குடி அல்லது மதுரை வரை ரயிலிலும் பின்னர் சாலை வழியாக செல்ல வேண்டும். காரைக்குடி , மதுரை மற்றும் திருப்பத்தூரில் தங்கும் வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு
Wildlife Warden
Gulf of Mannar Biosphere Reserve
Mandapam, Ramanathapuram.
Phone:04567-230079

Read more...

நானும் ரவுடிதான்.. ஜெமோ சந்திப்பில் கடைசிவரை


கடந்த வார இறுதியின் ஒரு பொன்மாலைப் பொழுதில் சன்மார்க்க சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் சந்திப்பில் கலந்து கொள்ள செல்வேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று விழாவை சிறப்பித்து வந்தேன்.

ஜெமோ இலக்கியக் கூட்டம் என்பதால் சாருவின் ரசிகர்கள் உ.க.வுடன் வருவார்களோ என உதறலுடனே தான் தாமதமாகவே சென்றேன். ஒருவர் பேசி அமற இன்னொருவர் பேச அடுத்தவர் அமர்ந்தே இருந்தார். அவரைக் கண்டதும் வெளியே செல்ல முயற்சித்தவனை மறித்த ஒருவர் ஏனென வினவினார். மன்னிக்கவும் , ஜெமோ சந்திப்பிற்கு போகனும் வாகை சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு தவறுதலாய் வந்தேனென்றேன். இவர்தான் ஜெமோவென்றாரவர். அட! நடிகர் வாகை சந்திரசேகரர் தான் கழகக்கறை விடுத்து மாற்றுடையில் வந்தாரோ என் நினைத்தேன். ஜெமோ மீசை மழித்து சந்திரசேகர் சாயலில் தான் இருந்தார். அமர்ந்த சற்று நேரத்தில் இருவர் என்னை நோக்கி கொலைபார்வையுடன் வந்தார்கள். அய்யா, நான் வெளியேறிய போது அவர் தான் உள்ளே இழுத்துவிட்டார் அடிக்காதிர்கள் என்று முடிபப்தற்குள் செருப்பை வெளியே விட சொன்னார்கள். வெருப்போடு வந்தாலும் செருப்போடு வராதிர்கள் என்கிறார்களோ..( சரி சரி விடுங்க.. இதுக்குப் போய் அழுதுட்டு ). ஜெமோவிற்கு போட்டியாய் சூர்யா கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியையும் தினமலர் சாம்சங்கின் மாபெரும் பொருட்காட்சியையும் தவிர்த்து இலக்கியக் கூட்டத்திற்கு இத்தனைப் பேர் வந்திருந்தது ஆச்சர்யம். சாரு கவனிக்க.

பேசியவர் அமர அடுத்தவர் எழுந்தார் பின் அமர்ந்தார் நடுநாயகமாய். அவரை நாஞ்சில்நாடன் என அழைத்தாரிவர். அமர்ந்தவர் அருகில் இருந்தவர்கள் பார்வையாளர்களாக புதிய மைக் அமைப்பில் இவர் பொன்னம்பல அடிகளாராய் மாறினார். அவரை இந்துமதவாதி என்பதாக குறைபட்டார். ஆரம்ப உரையாற்றினாரோ என்னவோ இப்போது கேள்விகளை கேளுங்கள் என்றார். ஆரம்ப கேள்வியை ஞானி ஐயா பதிலைவிட பெரிதாக கேட்டார் அல்லது சொன்னார். மிகவயதாகினும் நினைவாற்றலில் அசத்தினார். பின் தொடரும் நிழல் , கொற்றவை, விஷ்ணுபுரம் என அனைத்தையும் பிரிக்காமலே மேய்ந்தார். ஜெமோவின் அரசியல் பார்வை கேட்டார். எழுத்தாளனுக்கு ஒரு அரசியல் பார்வை இல்லை என்றார் ஜெமோ. எலலா கதாபாத்திரத்திற்கும் தனி பார்வை இருக்க வேண்டுமென்றார். ஆர்எஸ்எஸ்காரன் இல்லை என்றார்.

தமிழில் யோசித்து மளையாளத்தில் எழுதி சாதிக்கும் ஆர்வமில்லையென்றார். தமிழே போதுமாம். அங்கே வருமானம் மிக அதிகமாம்.மளையாளத்தில் ஒரே பிரபல எழுத்தாளரின் வறுமை நினைவுக்கு வந்தது. ஜெமோ.. எனி உள்குத்து?. எதிர்மறை விமர்சனம் பற்றி சூடான கேள்வியை வா.மணிகண்டன் வீச , ஜெமோவை நெருங்கும் முன் ஞானி ஐயா மறித்தார். இது போன்றவைக்கு பதில் சொல்லி நேரம் வீணடிக்க வேண்டாம் என்றார். வடபறிவேலன்கள் தொல்லை தாங்கலை. வீணானது ஒரு வடை. ஆனால் ஜெமோ விடலயே. தன் வாசகர்கள் தரமானவர்கள், சோப்புத் தேவையில்லை, அன்பால் சேர்ந்த கூட்டம் , அடியாட்கள் இல்லை... ஸ்ஸ்ஸபாஆஆஆஆ

விஷ்ணுபுரம் 10 பக்கத்தை தாண்ட முடியலை என்றார்கள் பலரும். ஈழ ஆயுத போராட்டம் பற்றிய கேள்விக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இறந்தேவிட்டன புரட்சிகள், இப்போது முட்டாள்தனம் என்றார். இலங்கையில் ஒரு குடும்பத்தை சுட்ட போராளி நண்பர் இன்று அதில் இரு குழந்தைகளின் நான்கு கண்களை நினைத்து தினம் அழுகிறாராம். யாரின் அதிகாரத்திற்கோ மேற்கின் சூழ்ச்சிக்கோ விழுந்ததாகவும் இப்போது தவறை உணர்ந்ததாகவும் சொன்னாராம். வென்ற புரட்சிகளுக்கு தற்போதைய உதாரணம் கேட்டார் கேட்டவரிடம். மவுனம். சம்மதமா?. மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர், சீனாவின் வால்தனம் பற்றி வெல்லுமா இந்தியா சிதறுமா எனக் கேட்டார். கொடுமை. ஜெமோ எப்போ வெளியுறவு அமைச்சரானார்?. சிரிக்காமல் ஜெமோவும் பதிலளித்தார். ஒரு அழுகுரல் கேட்டிருக்குமோ அவருக்கு?

நக்சலைட்டுகள் மக்களுக்காக போராடுவதில்லையாம். அவர்களை அடிமை படுத்திக் கொல்கிறார்களாம். கதைகளில் சரக்கடிபப்தைப் பற்றி விவரமாக எழுதுவதைப் படித்து ஏராளமனோர் பாட்டிலோடு வந்தார்களாம். பழக்கம் இல்லை என பத்திரிக்கை செய்தி கொடுத்து நிறுத்தினாராம்.தெரிந்ததை மட்டும் எழுதுவதால் சுந்தரராமசாமி சிறந்த எழுத்தாளர் என்றும் தெரியாததையும் எழுதுவதான் தான் மிகச்சிறந்த எழுத்தாளர் என்றும் அவரிடம் விளையாடினாராம். சுஜாதா எழுதியது டெக்னாலஜி ஃபிக்‌ஷன் தான் சைன்ஸ் ஃபிக்ஷன் இல்லை என்றார். வேறுபாடு உள்ளதாம். கா.சி சிவக்குமாரின் எழுத்தை சிலாகித்தவரிடம் சிவந்துவிட்டார். அவர் தரத்தில் தினம் ஐம்பதாயிரம் பக்கம் வருகிறதாம். அவர் தரம் போதுமென்றால் என் கூட்டத்திற்கு ஏன் வர வேண்டுமென்றார் அரசியல்வாதி ஜெமோ. முதல் வரிசையில் தொட்டுவிடும் தொலைவில் உட்கார்ந்திருந்தவன் தன் சிறுகதை கூட படிச்சதில்லை என்பது தெரியாது போலும்.

செம்மொழியாய் தமிழிருக்க தாங்களே(எழுத்தாளர்கள்) காரணமென்றார். திருப்பூர் கம்யூனிஸ்ட் ஒருவர் புரியாத மொழியில் எழுதாமல் பாமர பாஷையில் எழுத சொன்னார். பத்தாம் வகுப்புடன் நில்லாமல் பனிரெண்டாம், கல்லூரிகள் எதற்கென்றார் ஜெமோ. மொழியாக்கம் செய்ய அனுமதி வேண்டுமா என்ற சென்ஷி கும்பகோணத்திற்கு, அனுமதிக்கும் உரிமையாவது படைத்தவனுக்கு இருக்கட்டுமே என்றார். எல்லாரும் அரசியல், சினிமாவை எழுதுவதால் தான் விலகி இருப்பதாக சொன்னார். அதையே அனைவரும் எழுதினால் பிற யார் எழுதுவார் எனக் கேட்டார். கதையில் தகவல் தரும் ஜெமோவின் முயற்சியை ஆதாரத்தோடு செல்வேந்திரன் புகழ்ந்தார்.

கடந்த பத்தாண்டுகளில் தான் ரசிக்கும் ஒரு கவிதையும் இல்லை என்றார் இளாங்கோ கிருஷ்ணனுக்கு. சாரு நிவேதிதா பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. சாரு மட்டும் ஏன்?..ஆரம்பத்தில் சொம்பைத் தூக்கிய ஞானி இறுதியில் சோனியாகாந்தி, மன்மோகன், கருணாநிதி, ராஜபக்‌ஷே, அவன் இவன் அயோக்கியன் என கர்ஜித்தார். கம்யூனிஸ்டாச்சே. வா. மணிகண்டன் சிரித்திருப்பார் மனதிற்குள். நானும்..இன்னும் எதெதோ மறந்துவிட்டேன்..

நினைவுபடுத்துகிறேன் : இலக்கிய?! சந்திப்பு பற்றிய பதிவிது.

Read more...

குடி மக்களாட்சி


சமீபத்தில் ஒகேனக்கல் செல்லும் வழியில் ஒரு அரசாங்க சாராயக் கடை முன்பு கண்ட காட்சி அதிர்ச்சியாக இருந்தது. ரயில்நிலைய பயணிகள் வரிசை மாதிரி அவ்வளவு பெரிய குடிமக்கள் வரிசை. அடுத்த நாள் ஊரில் இருக்கும் அரசாங்க சாராயக் கடை திறக்கும் முன் வாசலை அடைத்துக் கொண்டு மிகப்பெரிய கூட்டம். அது குடியிருப்புப் பகுதி. ஒதுக்குப் புறங்களில் வைத்துத் தொலையலாமே. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க இப்படி வரிசையில் காத்திருப்பார்களா இவர்கள்?.அது பெண்கள், பிள்ளைகள் வேலை. காலையில் காய் கறி வாங்க கடைக்கு அனுப்பினால் போக மாட்டார்கள். ஆனால் சாராயக் கடைக்கு வந்து காத்திருக்கிறார்கள்.

எல்லாப் புகழும் கழகங்களுக்கே. கழக அரசாங்கம் வெளியிட்ட வருடத்தின் முதல் சாதனை அறிக்கையே சாராயம் விற்று சம்பாதிச்சதைப் பற்றி தான். குடிப்பழக்கத்தால் விபத்துகளின் எண்ணிக்கையும் உயிர் பலியும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குற்றங்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது. குடிபோதையில் வாய்த்தகராறுகள் கொலையிம் முடிந்தவை ஏராளம். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து சேவை செய்கிறது அரசாங்கம்.

அவ்வப்போது விலைகளையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அரிசி பருப்பு, வெளியிலிருந்து வாங்கி விற்கும் பெட்ரோல், எரிவாயு போன்றவை விலை உயர்ந்தால் கதகளியே ஆடுகிறோம். சாராய விலையை உயர்த்திக் கொண்டே இருப்பதற்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா? என்ன விலை குடுத்தும் குடிப்போம் என நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு அரசாங்கமே மக்களை சாராயத்திற்கு அடிமை ஆக்கி வைத்திருக்கிறது. மக்களிடம் சாராயம் விற்று பிடுங்கும் காசிலிருந்து பொருகள் வாங்கி அவர்களுக்கே இலவசமாய்த் தருகிறார்கள். ஏமாளிகள் இதற்குத்தான் வாக்களிக்கிறார்கள்.

எவ்வளவு விலை உயர்த்தினாலும் எதிர்ப்பில்லாமல் வாங்கிக் குடிக்கும் சாராய அடிமைகளைக் கேட்டால், உழைப்பதால் வரும் உடல் உழைப்பையும் மன உளைச்சலையும் போக்கத் தான் குடிப்பதாக சொல்கிறார்கள். குடிக்காதவர்களுக்கெல்லாம் மன உளைச்சலே இல்லை பாருங்க. பொங்கல் அன்று விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாணவர், காலையில் 2 மணி நேரம் மூட்டைத் தூக்கிவிட்டு சம்பாதித்து தினம் கல்லூரிக்கு சென்றதாக சொன்னார். அவருக்கு உடல் வலிக்காதா? தினம் குடித்துவிட்டா படிக்க சென்றார்?.

அடுத்த தேர்தலில் சாராயத்திற்கும் மானியம் அளித்து ரேஷன் கடைகளில் வழங்கப் படும் என எந்தக் கழகமாவது அறிவித்தால் குடிமக்களின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம். அது குடி மக்களுக்கான குடியாட்சி என பெருமையாக பீற்றிக் கொள்ளலாம். இந்தப் பொழப்புக்கு...


சாராயம் விற்றவர்கள் கல்வித் தந்தைகளாகி அரசியல் அதிகாரத்திற்கு வந்தால் அவர்கள் மூளையில் வேறு என்ன திட்டம் வர முடியும்?.நாம் இனியும் அரசியலை பழித்து ஒதுங்கியே இருப்போம். இந்த நாடும் நாட்டு மக்களும்.....

Read more...

பொங்கலோ பொங்கல் - எங்கூட்டு பொங்கல்



















அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

Read more...

புத்தாண்டு டைரி - Friendship Special

2010ஆம் ஆண்டு நண்பர்கள் சந்திப்புடனேயே நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 31.12.2009 அன்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. வடகரைவேலன், செல்வேந்திரன், ராம்கோபால்( பதிவர் மயில்விஜியின் கணவர்), பரிசல்காரன் மற்றும் வெயிலான் ஆகியோருடன் வாலையாறில் பாடகி உஷா உதூப்பின் கச்சேரியில் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்து பின் நடந்த நிகழ்வுகளில் விலாவையும் சிறப்பித்து வந்தோம்.

எனக்கு செண்டிமெண்ட்ஸ் எதுவும் இல்லை. ஆனாலும் சில சமயங்களில் சில சம்பவங்கள் அப்படி நினைக்க வைத்துவிடும். வருடத்தின் முதல் SMS ” நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்.. எல்லாரும் நல்லா இருப்போம்” என்று ஜோவிடம் காப்பி அடித்து வந்திருந்தது, புதிய எண். அனுப்பியவர் யார் எனத் தெரிந்ததும் செண்டிமெண்ட் வலுக்கட்டாயமாக எட்டிப் பார்த்தது. அதற்கு முன்வரை அவரிடம் பேசியதும் இல்லை.

ஒன்றாம் தேதி மதியம், வீட்டிற்கு ரமணி வந்தான். பள்ளிக்கூட நண்பன். பக்கத்து ஊர்க்காரனும் கூட. சந்திப்புகள் அரிது. மாலை ஸ்வாமி ஓம்காரின் தினம் தினம் திருமந்திரம் புத்தக வெளியீட்டிற்கு சென்றேன்.ரமணி, அருள்மொழி, அன்புராஜ், தங்கவேல் ஆகிய பள்ளிக்கால நண்பர்கள் எனக்காக காத்திருந்ததால் நிகழ்சி முடியும் முன்பே வந்துவிட்டேன். அன்று இரவு ஐவரும் கதற கதற கலாய்ச்சிகொண்டோம். பின் ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டோம்.


இரண்டாம் தேதி நான், ரமணி, அன்புராஜ் மற்றும் ரமணியின் நண்பர் சந்ரு ஆகியோர் ஆழியாறு மற்றும் குரங்கு அறுவி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினோம். அன்றைய நாள் டார்கெட் ரமணி தான். மாலைவரை அவனை கலாய்த்தும் போர் அடிக்கவில்லை. நல்லா இருடா மச்சான்.

மூன்றாம் தேதி மாலை நான், ரமணி, அன்புராஜ் ஆகியோர் அருள்மொழி வீட்டிற்கு சென்று அவனையும் அவன் மனைவியையும்( என் பள்ளி ஜூனியர் :) ) அழைத்துக் கொண்டு தங்கவேல் வீட்டிற்கு சென்றோம். இருவரும் பல ஆண்டுகளாக கோவையில் தான் இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் வீட்டிற்கு போனதில்லை. நானாவது பரவால்ல. 2 கிமீ தூரத்துல இருக்கேன். அருளும் தங்கவேலும் அடுத்தடுத்த தெருவில் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவர் வீட்டிற்கு சென்றதில்லை. இதுவே கிராமமாக இருந்தால்....

தங்கவேல் வீட்டில் இரவு உணவு சாப்பிடத் திட்டம் இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பினியாக இருப்பதால் தொந்தரவு வேண்டாம் என வெளியில் சாப்பிடலாமே  என்று கோவை உணவுத்திருவிழா சென்றோம். அம்மாடி.. என்னா ஒரு கூட்டம். மைதானத்தின் புழுதியும் மக்கள் கூட்டமும் அங்கு சாப்பிடும் எண்ணத்தை மண்மூட செய்துவிட்டது. பிறகு 9 மணிக்கு ராயப்பாஸில் நுழைந்து போனாப் போகட்டும் என 11 மணிக்கு கிளம்பினோம். அந்த 3 நாட்கள் மறக்க இயலாதவை. பள்ளி படிப்பிற்கு பின் 5 பேரும் ஒன்றாக சந்திப்பது இதுவே முதல்முறை. இன்னும் தொடரும் அந்தப் பள்ளியின் நண்பர்கள் சிலருக்கு தொலைபேசி கெட்ட வார்த்தையில் வாங்கிக் கட்டிகொண்டதும் நல்லா தான் இருந்துச்சி. :). என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்சியாக இருந்தது PDR பள்ளியில் படித்த கடைசி 2 ஆண்டுகள் தான். கல்லூரி வாழ்க்கை கூட அவ்வாறு இல்லை.

ஈரோட்டு இலக்கிய சிங்கம் கார்த்தி, உறவினர்களுடன் வீட்டிற்கு வந்தார். சிவ விலாசில் நல்லதொரு காலை உணவு.

அடுத்த சில நாட்களில் ஈரோடு கதிர், ஆரூரான் விஸ்வநாதன், பழமைபேசி, செல்வேந்திரன் , வடகரைவேலன் அண்ணாச்சியுடன் அஞ்சப்பரில் மதிய உணவுடன் இனிமையான சந்திப்பு.

வார இறுதி நாட்களின் முன் ஒரு மாலை வேளை மயில்விஜியும் அவர் கணவர் ராம்கோபாலும் தோசை, வெங்காய சாம்பார் மற்றும் கம்பங்கூழ் சகிதம் வீட்டிற்கு வந்து சிறப்பித்தனர்.

நேற்று (10.1.2010) எழுத்தாளர் ஆதி@தாமிரா கோவைக்கு விஜயம் செய்தார். மதியம் அவரை அழைத்துக் கொண்டு வேலன் அண்ணாச்சி வீட்டில் சுவையான மதிய விருந்து, பின்னர் செல்வேந்திரன் வீட்டிற்கு சென்று 9 மணி வரை இலக்கிய சூழல் பற்றி உரையாடினார்கள். நவீன இலக்கியத்தில் இசக்கி முத்துவின் பங்களிப்பு பற்றி அதிகம் பேசினார்கள்.எனக்கு வழைக்காய் பஜ்ஜியும், உருளைகிழங்கு சிப்ஸ், இளநீர் மற்றும் ஜெல் மிட்டாய்.

17ஆம் தேதி பெரியக்கா ஜி3யின் வருகைக்காக வெய்ட்டிங்.

( யாரையாச்சும் விட்டுட்டேனா? எழுதி எழுதி தீர்த்தப் பின்னும் எதோ ஒன்று குறையுதே.. வழக்கம் போல் எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும் . )

இந்தப் பதிவை எழுத முதல்முறையாக ப்ளாகரின் புதிய கம்போஸ் முறை பயன்படுத்தினேன். அட!.. ரொம்ப சவுகர்யமா இருக்கே.

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP