அதிரை ஃபரூக்கிற்கு ஆப்பு வைக்கலாம் வாங்க

அதிரை ஃபரூக் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு வயித்தைக் கலக்கும் போல. பய புள்ளைக இந்த மதவெறியனை பத்தி சொல்லி லிட்டர் லிட்டரா கண்ணீர் வடிக்கிறாங்க.. கொஞ்ச நாளா எனக்கும் வந்தது.கண்ணீர் இல்ல.. மெயில் தான்.. இதுல இருந்து தப்பிக்கிறது மட்டுமில்லாம அவர் இனி யாருக்கும் மெயிலே அனுப்பாம செய்யலாம். மேட்டர் சிம்பிள் மச்சிஸ்.. யாருக்கெல்லாம் இந்த மதவெறி மெயில் வருதோ அவங்க எல்லாம் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..

  •  ஜிமெயிலில் தேடும் பெட்டிக்கு அடுத்து Create Filter என்பதை அமுக்கி அதனுள் சென்றுவிடுங்கள்.
  • அந்தப் பக்கத்தில் From என்ற இடத்தில் athiraifarook@gmail.com என்ற முகவரியைக் கொடுத்துடுங்க.
  • மற்ற அனைத்தையும் காலியாக விட்டு next Step என்ற பட்டனை அமுக்குங்க.
  • Choose Action என்ற பகுதியில் Forward it to என்பதை தேர்வு செய்துவிட்டு athiraifarook@gmail.com என்ற முகவரியை அதற்கான பெட்டியில் அளித்துவிடுங்கள்.
  • அடுத்த வரியில் இருக்கும் delete it என்பதையும் தேர்வு செய்து பின்னர் கடைசி வரியில் இருக்கும் Also apply filter to X conversations below என்பதையும் தேர்வு செய்துவிடுங்கள். 
  • இப்போது Create Filter என்ற பட்டனை அமுக்குங்க.வேலை முடிந்தது.

இனி அவர் அனுப்பும் மெயில் உங்களுக்கு தெரியாமலே அவருக்கே சென்றுவிடும். நமக்கு வரதும் தெரியாது.. போறதும் தெரியாது. வரும் முன் காப்போம் திட்டப் படி இந்த மெயில் இன்னும் வராதவர்களும் இதை செய்துவிடலாம். எப்போதாவது அவர் அனுப்பினால் அது அவருக்கே சென்றுவிடும். இனி அவர் எத்தனை பேருக்கு அனுப்புகிறாரோ அத்தனை மெயில்கள் அவருக்கே சென்று குவியும். அண்ணன் ஆனந்தமடையட்டும்.. வாழ்க வளமுடன்.



இன்னும் ஒரு டெர்ரர் ஐடியா இருக்கு. அதை சொன்னால் நம் பாசக்கார பயலுக எனக்கே அதை செஞ்சிடுவாங்க. அதனால யாராச்சும் ரொம்ப அதிகமா பாதிக்கப் பட்டிருந்தா தனி மெயில் அனுப்புங்க. அதை சொல்றேன்.. :)

Read more...

My Name is Bloody Blogger

Blog என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல் பலர் இம்சை செய்கிறார்கள்.இதை எழுதாதே அதை எழுதாதே என உயிரை வாங்குகிறார்கள்.. எதாவது ஒரு சுட்டியை போட்டு, இங்கே எனக்கு முதுகு சொரிந்து விட்டுருக்கிறார்கள்.. சென்று நீங்களும் சொரியுங்கள் என ஒரு வரியில் பதிவு போடும் படைப்பாளிகளை இவர்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வன்முறையாளார்களால் புதிதாக Blog ஆரம்பிப்பவர்கள் தங்கள் விருப்பப்படி எழுதவே தயங்குகிறார்கள். இவர்களுக்காகவே இந்த பதிவு..

சரி.. Blog என்றால் என்ன?
மற்றவர்களுடன் பொது வெளியில் பகிர்ந்துக் கொள்ளலாம் என நாம் நினைக்கும் எதையும் பிறர் மனம் புண்படாமல் சட்டத்திற்குட்பட்டு இணையத்தில் நமக்கான இடத்தில் எழுதி வைக்கும் இணைய சேவை தான் Blog.

Blog-ன் வகைகள்..
 ஏராளமான பிரிவுகளில் தற்போது ப்ளாக் இயங்கினாலும் பொதுவாக இரண்டு வகைகளில் சொல்லிவிடலாம்.. 1. நிறுவனங்களின் வலைப்பூ. 2. தனிநபர் வலைப்பூ

1.நிறுவனங்களின் வலைப்பூக்கள்.
தங்கள் நிறுவங்கள் தொடர்பான தகவல்களை பிறருக்கு தெரியபடுத்த தங்கள் இணையதளத்தில் Blog வசதியை உபயோகிப்பார்கள். உதாரணம் : நிறுவனத்தின் செயல்பாடு, உயர் அதிகாரிகளின் கருத்துகள், நிகழ்ச்சிகள், புதிய திட்டங்கள், தங்கள் தயாரிப்புகள் பற்றிய கருத்துகள் & விளக்கங்கள், அறிவிப்புகள்.. etc.,

2. தனிநபர் வலைப்பூக்கள்
பிறருடன் பகிர்ந்துக் கொள்ளத்தக்க செய்திகள், நிகழ்வுகள், சுவாரஸ்யமான அனுபவங்கள், பொதுவான நாட்குறிப்புகள், தங்களுக்குப் பிடித்தவர்கள்/ பிடிக்காதவர்கள் பற்றிய கட்டுரைகள் போன்றவற்றிற்காக பயன்படுத்த தான் Blog சேவை.

பின்னர் இது இசையைப் பகிர, புகைப்படங்கள் பகிர, மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரிக்க, சந்தேகங்கள் உதவிகள் கேட்டு பின்னூட்டம் வழியாக தீர்வுகள் பெற, சமையல் குறிப்புகள் எழுத என விரிவடைந்தது.. இன்னும் கூட ஆங்கிலம் போன்ற மொழிகளின் இந்த வகைப் பயன்பாடு தான் பிரதானம்.

பின்னர் இதன் பலத்தை அறிந்த ஒரு கூட்டம் திடீரென தமிழ் வலைப் பதிவுலகுக்குள் பிரவேசிக்கிறது. இவர்களுக்குப் பெயர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இன்ன பிற கள்.. பொதுவாக சொன்னால் “படைப்பாளிகள்”. பத்திரிக்கைகளுக்கு அனுப்பி தேறாமல் திரும்பி வந்த படைப்புகள் மற்றும் கை நமச்சல் தாங்காமல் தாங்கள் எழுதிக் குவிக்கும் படைப்புகள் போன்றவற்றை எந்தத் தடையும் இல்லாமல் பிரசுரிக்க ஒரு இடம் இருக்கே என இந்த கூட்டம் Blog சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தப் படைப்பளிகளின் புத்தகங்கள், அவர்களைப் பற்றிய செய்திகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் Blog முகவரிகளை தெரிந்துக் கொண்டு குபீர் குபீரெனு இன்னொருக் கூட்டம் தமிழ் பதிவுலகை முற்றுகையிடுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பெயர்  தீவிர இலக்கிய வாசகர்கள்.

இந்த குபீர் வாசகர்களுக்கு Blog அறிமுகமாவதே மேற்க்கண்ட திடீர் எழுத்தாள ஆக்கிரமிப்பளார்கள் மூலம் தான். பின்னர் திரட்டிகளின் வழியே பிறர் Blog பக்கம் ஒதுங்கும் இந்த குபீர் வாசகர்களின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. இவர்களைப் பொறுத்தவரை Blog என்பது படைப்பாளிகளின் உலகம். ஏனெனில் இவர்களுக்கு Blog அறிமுகமாவது படைப்பாளிகள் மூலம் தான். எனவே, பொழுதுபோக்காகவும் தங்கள் விருப்பப்படியும் எழுதிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் எல்லாம் இந்த படப்புலக சூழலின் எதிரிகள்.. நச்சுக் கிருமிகள் என நினைக்கிறார்கள்.. இவர்கள் ஆத்தும் சொற்பொழிவு தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது.

இவர்களின் பொதுவான அறிகுறிகள் சில,

  • இப்படி மொக்கையை எழுதினால் வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.
  • இதனால் தான் எழுத்தாளர்கள் பதிவுலகை குப்பை என்கிறார்கள்
  • நம் எழுத்து இந்த சமூகத்துக்குப் சமூத்திரத்துக்கும் பயன்படனும். இப்படி கிடைக்கும் வாய்ப்பை வீணடிக்கக் கூடாது
  • இப்படி எழுதினால் உங்களுக்கு எந்த அங்கீ காரமும் கிருஷ்ணா ஸ்வீட்டும் கிடைக்காது..
  • இதனால் பதிவுலகின் ஆரோக்கியம் கெட்டு அப்பலோ ஆஸ்பிட்டலில் படுத்துக் கொள்ளும்..
  • இப்படித் தொடர்ந்து மொக்கையாக எழுதுவதைவிட நிறுத்திக் கொள்ளலாமே..............
     என்றெல்லாம் சொற்பொழுவு ஆத்துவார்கள்.

எனக்கு சற்று ஓய்வுத் தேவை( இதை அறிவிக்காமல் கூட ஓய்வெடுக்கலாம்.. யாரும் நோட்டிஸ் அனுப்பி விடமாட்டார்கள் என்பது வேறு). எழுத்தில் வறட்சி தெரிகிறது... கேரள ஆயுர்வேத மருத்துவமனைகளில் மெருகேற்றிக் கொண்டு வருகிறேன்.. என்றெல்லாம் அறிக்கை விடுபவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். அவர்கள் Blog வசதியைப் பயனடுத்துவதே படைபாளியாகனும் என்ற அவர்களின் தனிப்பட்ட நோக்கத்தில் தான். அதனால் அவர்களை இந்த குபீர் வன்முறையாளர்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.. ப்ளாகர்கள் அனைவரும் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்ற தவறான சிந்தனையைக் கொண்டிருக்காதீர்கள்.  ஏனெனில், இந்தப் படைப்பாளிகள் என்பவர்கள் வலைப்பதிவுலகை திடீரென ஆக்கிரமித்தவர்கள். இவர்களுக்காக யாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவர்களை நீங்கள் கண்டுக்கொள்ள வேண்டாம் ..நீங்கள் எழுதுவது பொதுவெளி என்பதால் உங்கள் எழுத்துக்கு வரும் எதிர்வினையை சமாளிக்க முடியும் என்றால் பிறர் மனம் புண்படாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் ..  காலையில் செய்தித்தாளின் இரண்டாம் பக்கத்தை படிக்கவில்லை என்றோ பாத்ரூமில் தண்ணீர்வரவில்லை.. நாளைக்குள் சரிசெய்ய வேண்டும் என்றோ.. மதிய உணவில் காரம் அதிகம் என்றோ கூட உங்கள் வலைப்பூவில் எழுதுங்கள்....உங்கள் ப்ளாகில் என்ன எழுத வேண்டும் என தீமானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.. உங்களைத் தவிர.. எழுத்துப் பிழையைத் திருத்தும் நோக்கமின்றி பெரிய குறையாக சொன்னால் ஒரே பதில் தான்.. நான் வட்டார வழக்கில் எழுதுகிறேனே மம்மி என்று சொல்லிவிடுங்கள்.. இப்போ அதான் ட்ரெண்ட்.. :)

இப்படி எல்லாம் எழுதக் கூடாது அல்லது இப்படித்தான் எழுத வேண்டும் என யாராவது உங்களை வற்புறுத்தினால் கொஞ்சமும் தயவு தாட்சன்யம் பார்க்காதீர்கள்.. My Name Is Bloody Blogger, Not so called படைப்பாளி என்று சொல்லி மூக்கிலேயே குத்துங்கள்.. :))

Read more...

விரைவில் பிரபலப் பதிவராவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்

குறிப்பு: இது படைப்பாளிகளுக்கான அறிவுரை அல்ல. புதிய பதிவர்கள் பிறர் கவனம் பெறுவதற்கான உதவிக் குறிப்புகள் மட்டுமே. பிரபலப் பதிவர்கள் தங்களுக்கு பின்னூட்டமிடுவதில்லை என்று சிலர் வருந்தியதாக நண்பர் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கான உதவிக் குறிப்பு தான் இது. எப்படி எழுத வேண்டும் என்று அறிவுரை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை( தெரிஞ்சா தானே).

ஆரம்பத்தில் சில உப்புமா பதிவுகளைப் போட்டு தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழிஷ் போன்ற பிரபல திரட்டிகளில் உங்கள் பதிவுகள் வரச் செய்யுங்கள். வரும் சில பின்னூட்டங்களுக்கும் உடனேயும் கலகலப்பாகவும் பதில் சொல்லுங்கள்.

எடுத்த எடுப்பிலேயே மிகச் சிறந்த பதிவுகளை எழுதி வீணடிக்க வேண்டாம். அது பிறரை போய்ச் சேராது. தாமதமாக படிக்க நேரும் போது யாரும் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட மாட்டார்கள்.

பிரபல பதிவராக நீங்கள் நினைப்பவர்களுக்குத் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். அவர்கள் உங்களுக்கு பின்னூட்டமிடவில்லை என்று நிறுத்த வேண்டாம். உங்கள் தொடர்ச்சியான வருகை அவர்கள் கவனத்தை ஈர்க்கும். அவர்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உங்களையும் கவனிப்பார்கள். மறக்காமல் உங்களைப் போன்ற புதியவர்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்.

தினம் ஒரு பதிவு எழுத வேண்டாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு போதும். அடிக்கடி எழுதுவது படிப்பவர்களை அலுக்கச் செய்துவிடும். உங்களை புறக்கணிக்க வைக்கும்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் பதிவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை வளைகுடா பதிவர்கள் ஓய்வில் இருப்பார்கள். சனி, ஞாயிறில் ஐடி வல்லுனர்கள் ஓய்வில் இருப்பார்கள். பதிவர்கள் பெரும்பாலும் அலுவலங்கங்களில் தான் இயங்குகிறார்கள். அதனால் அவர்கள் ஓய்வில் இருக்கும் போது பதிவுகள் போட்டுவிட்டு பின்னூட்டம் வரவில்லை, ஹிட்ஸ் வரவில்லை என புலம்ப வேண்டாம்.

பதிவுகளை இரவில் அல்லது மாலையில் வெளியிட வேண்டாம். இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் வெளியிடவும். இது அனைத்து  தேச தமிழர்களுக்கும் பதிவுகள் வாசிக்க சரியான நேரம்.

பிறரின் பதிவுகளைப் படித்துவிட்டு தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போட்ட விவரத்தை மறக்காமல் பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். அப்போது தான் உங்களுக்கும் அவர்கள் ஓட்டுப் போடுவார்கள். அதிக ஓட்டுகள் வாங்கினால் தமிழ்மணம் பரிந்துரை மற்றும் தமிழிஷ் பிரபலப் பதிவுகள் பட்டியலில் உங்கள் பதிவு வந்துவிடும். தானாகவே அதிகமானோரின் கவனம் பெறுவீர்கள்.

விருதுகளை உருவாக்கி நண்பர்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மறவாமல் பிரபலப் பதிவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். விருது பெறுபவர்கள் தங்கள் தளத்தில் உங்களுக்கு நன்றி சொல்லி சுட்டி கொடுத்துவிடுவார்கள். அதை பார்த்து பலர் உங்கள் பதிவை படிப்பார்கள். தேவையானால் உங்கள் பாலோயராக மாறி தொடர்ந்து வாசிக்கவும் செய்வார்கள்.
 
இது போன்ற விருது கொடுக்கும் போது சில ப்ராபளப் பதிவர்கள் நக்கல் அடிக்கவும் செய்வார்கள். அதை எல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம். அவர்கள் செய்வதை எல்லாம் உங்களிடம் அனுமதி பெற்றா செய்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் கண்டுகொளள வேண்டும்.

ஆரம்ப காலத்திலேயே யாருக்கும் பிரச்சனைக்குரிய பின்னூட்டங்கள் போட வேண்டாம். உங்கள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும். இப்போது பதிவுலகில் குழு மனப்பான்மை அதிகரித்துவிட்டது. நீங்க பிரச்சனைக்குரிய பின்னூட்டம் போடுபவர் மிகப் பிரபலமான பதிவராக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல பிள்ளை பெயரெடுக்க சிலர்(அனைவரும் அல்ல..) உங்களை எதிர்ப்பார்கள் அல்லது ஒதுக்குவார்கள்.

இதை எல்லாம் பின்பற்றினால் மூன்று மாதங்களில் நீங்களும் பிரபலம் ஆகிவிட முடியும். பின் ஜாலியாக மொக்கை போட்டு நட்பு வளர்த்தோ( என்னை மாதிரி) அல்லது சிறந்த படைப்புகளை படைத்தோ பதிவுலகில் உங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள்.

மூன்று பிரபலத் திரட்டிகளில் தொடர்ந்து உங்கள் பதிவுகள் வருவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் கருவிப் பட்டை நிறுவிவிட்டால், யார் வேண்டுமானாலும் சுலபமாய் உங்கள் பதிவை இணைத்துவிட முடியும். தமிழ்வெளி(tamilveli.com)யில் உங்கள் வலைப்பூவை இணைத்துவிட்டால் போதும். புதுப் பதிவுகளை தானாகவே எடுத்துக் கொள்ளும். ஈழம் தொடர்பான இடுகை எழுதுபவர்கள் தமிழ்வெளி மூலம் அதிக வாசகர்களைப் பெற முடியும்.
 
[இந்த மாதம் வெள்ளிநிலா இதழுக்காக எழுதிய பதிவு]

Read more...

33% இட ஒதுக்கீடும் மகளிர் தினமும்

 ந்தியாவை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர், இந்தியக் குடியரசுத்தலைவர் , இந்தியப் பாராளுமன்ற மக்களவை தலைவர், பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர், இந்திய வெளியுறவு செயலர், தனி பட்ஜெட் போடும் அளவு பெரும் துறையான இந்திய ரயில்வேயின் அமைச்சர் ஆகிய முக்கியப் பதவிகள் பெரும்பானவற்றில் பெண்களே இருக்கும் இந்தியா தான் மகளிர் தினத்தைக் கொண்டாட மிகத் தகுதியான நாடு.

இந்த சிறப்புகளோடு இல்லாமல் இன்று (08.03.2010) , காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியின் தீவிர முயற்சியால் இந்தியப் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப் படுகிறது. காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவை பல எதிர்கட்சிகளும் ஆதரிப்பது ஆரோக்கியமான அரசியல். அனைத்து உறுப்பினர்களும் சபையில் இருக்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவே பிறப்பித்திருக்கிறது.

முலாயம் சிங், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோரைத்தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பதால் சுலபமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிவிடும். 15 மாநில சட்டசபைகள் ஆதரித்தாலே இந்த மசோதா நடைமுறைக்கு வந்துவிடும் . உத்திரபிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஆதரிப்பதால் இதிலும் பிரச்சனைகள் இல்லை.

ஆகவே இந்த ஆண்டு இந்திய பெண்களுக்கு மிகச் சிறந்த மகளிர் தினமாக விளங்குகிறது. அனைத்துப் பெண்களுக்கு பெண்கள் தின நல்வாழ்த்துகள்..

Read more...

மாடுகளும் பதிவர்களும் கொஞ்சம் கிராமமும்

குசும்பன் ப்ளாக் படிச்சா இப்டி தான் தலைல அடிச்சிக்கனும்..
வடகரைவேலன் ப்ளாக் பக்கம் போய்டாத.. சொம்பு வச்சி பால் கறந்துடுவார்..
 ம்ம்.. நல்லா ப்ராக்டிஸ் பண்ணு.. அப்போ தான் செல்வேந்திரன் எழுதறப் புத்தகம் படிச்சிட்டு சுவத்துல முட்டிக்க வசதியா இருக்கும்..
எனக்கு இன்னும் கார்க்கி ப்ளாக் படிக்கிற வயசு ஆகலைனு சொன்னா கேளுங்க ப்ளீஸ்..
 
யாரு பெத்த புள்ளாயோ.. பாவம்.. உண்மைத் தமிழன் ப்ளாக் பக்கம் போற மாதிரி தெரியுதே.. எப்டி காப்பாத்தறது?
ஹலோ விதூஷ்.. இது பிடி பருத்தி இலை சாப்டு முளைச்ச கொம்பு இல்லை.. நம்புங்க..கலகலப்ரியா பதிவு படிச்சி முளைச்சது..
ஆதிமூலக் கிருஷ்ணன் புத்தகம் எழுதறார்னு சொன்னதுக்கே கல்லு தேடறது ஞாயமில்லை..

ஒரே செடியில பல நிறங்களில் பூ பூக்கும்..


காட்டு மரவள்ளிக் கிழங்கு மரம் இலைகள் உதிர்ந்த நிலையில்
பிடி பருத்தி.. சந்தைக்குப் போகத் தயாராய்

 
முத்தின அவரைக்காய்.. விதைக்காக..


ஒரு கருமாலைப் பொழுது..

நான் பாதி தின்று தந்ததாலே கோடி ரூபாய்.. :-)

நம்புங்க.. சோளக்காட்டு பொம்மை இல்லை.. நான் தான்..
தேன் சிட்டுக் குருவிக் கூடு

ஒழுக்கம் பிள்ளையார்.. ஆடு, மாடு போன்றவை குட்டிப் போடாம இருந்தால் இங்கு ஒரு பொம்மை செய்து வைத்தால் கரு உண்டாகுமாம்..

முள்ளங்கிக் கிழங்கு

வெங்காயம்..

தூங்குமூஞ்சி மரம்.. மாலை ஆனதும் தூங்கிவிடுகிறது.. பகல் நேரங்களில் இலைகள் விரிந்துக் கொள்கிறது..

வீட்டில் இது புதுவரவு
ஹிஹி.. ஒரு வெலம்பரம் தான்..
கரும்பு
கொட்டைப் பஞ்சு.. சந்தைக்கு அனுப்ப பேக் செய்வதில் இருந்து பிரித்து எடுத்தது..

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP