April 29, 2010

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Deepa

குடுகுடுப்பை வேண்டுகோளுக்கு இணங்கி தருமபுரி பத்தி ஒரு பதிவெழுதி இருந்தேன். அதைப் படிச்சிட்டு ஒரு மெயில் வந்துச்சி. டேய் ராசா நானும் உன் ஏரியா தாண்டா என்று. யாருடா இது என்று ஒரு நோட்டம் விட்டப்போ தான் தெரிஞ்சது.. தம்பிசெட்டிபட்டியில நான் மாடு மேச்சிட்டு இருந்தப்போ கொஞ்ச தூரம் தாண்டி வேப்பம்பட்டியில எருமை மேச்சிட்டு இருந்த நம்ம தீபாக்கா என்று.. (என்னைவிட ஏழு மாசம் பின்னாடி பொறந்தாலும் இவ எனக்கு அக்காவாம்.. கொடுமைடா ) இந்த மேட்டர் தெரிஞ்சதுல இருந்து என் பாசமலர் , பவளவள்ளி என் மூத்த அக்கா தீபா என் மேல பாச மழை பொழிய ஆரம்பிச்சிட்டா.. அப்பேற்பட்ட அக்காவின் அன்பைப் பாராட்டி மனுஷங்க எல்லாம் பொறந்த இந்த மண்ணுல இவளும்* பொறந்தத நெனைச்சி சந்தோஷத்துல ஒரு ஆப்பி பர்த்டே போஸ்ட் போட்டுட்டன்.. எல்லாரும் லைன்ல நின்னு என் தங்கச்சி அக்காவுக்கு வாழ்த்து சொல்லிட்டுப் போங்க..  :)

என் பாசமலர் கபீஷ் @ தீபாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. இன்று போல் என்றும் மாமாவை ஏமாற்றி சந்தோஷமாக வாழனும் தீப்ஸ் :)

* கபீஷ் என்பது குரங்கைக் குறிக்கும் :)

April 27, 2010

பந்த் - கம்யூனிஸ்ட்கள் கொண்டாட்டம் :-)


கம்யூனிஸ்டுகள் இன்னைக்கு பந்து பண்றாங்களாமாம்.. கோவை ஜெயில் ரோடி சிக்னல் கிட்ட ஒரு கம்யூனிஸ்ட் காரோட்டி பந்து பண்ணிட்டு இருந்தார்..   அதிமுக கொடி கட்டின கார் கூட பந்து கொண்டாடிச்சி.. ஆனா அதை படம் பிடிக்க முடியலை.. நானும் அப்போ வண்டி ஓட்டிட்டு கொண்டாடிட்டு இருந்தேன்.. :)

April 12, 2010

IYC- ஒரு மாற்றத்தின் ஆரம்பம் -2

முந்தைய பகுதி - [Part1]

ஏன் இளைஞர்களை நோக்கி?

இன்றைய வேகமான நவீன யுகத்தில் பழைய சித்தாந்தங்களையே கடைபிடித்துக் கொண்டிருந்தால் இந்தியா பின்தங்கிவிடும். சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதுமையான திட்டங்களை இப்போதுள்ள மூத்தத் தலைவர்களிடம் சொல்லி செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டை, செயலுக்கு உதவாத அறிவுரைகள், கால தாமதம் என அவர்களால் முடிந்த வரை தடைபோடுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர்களுக்குப் புரியவைத்து புதுமைகளை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதை விட , மாற்றங்களை உடனே ஏற்கும் பக்குவமுள்ள இளைஞர்களை அரசியலுக்கு அழைந்து வந்து அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்தால், அரசியல் பெருமளவு நேர்மையாகவும் , சுறுசுறுப்பானதாகவும், சீர்திருத்தவாதிகளின் கூடாரமாகவும் மாறும். உலகில் எந்த தேசத்துக்குமே கிடைக்காத சொத்தான , மக்கள் தொகையில் 70% இளைஞர்களைக் கொண்ட ஒரு தேசத்தில் இளைஞர்களில் ஆதிக்கத்தால் மாற்றம் என்பது சாத்தியமே. எனவே , ராகுல்காந்தி இளைஞர்களை நோக்கித் தன் பயணத்தை ஆரம்பித்தார்.

ராகுல்காந்தியின், இந்தியாவை அறிந்துக்கொள்ளும் (Discover India) சுற்றுப் பயணத்தின் அங்கமாக பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல். அப்போது ஒரு மாணவர் குழு ராகுலிடம் ஒரு கேள்வி கேட்டது.

“ ஏன் இதுவரை ஒரு முஸ்லிம் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை?”

இந்தியாவில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் அதனால் தான் ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதம் நோக்கி செல்கிறார்கள் எனவும் பரவலாக பேசப்படும் ஒரு தேசத்தில் இந்தக் கேள்வியும் இதற்கான பதிலும் மிக முக்கியமானதே. கேள்வி வந்துவிட்டது.. பதில்?

ராகுல் பதில் சொல்லவில்லை. அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்களுக்குத் தெரிந்த 5 இளம் முஸ்லிம் தலைவர்கள் பெயரை சொல்லுங்கள்”
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவர் காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான சல்மான் குர்ஷித் பெயரை சொல்கிறார்.

அவர் பார்க்க இளமையாக இருந்தாலும் அவருக்கு வயது அதிகம்” என சிரிக்கிறார் ராகுல்காந்தி. இன்னொரு மாணவர் காஷ்மிர் முதல்வர் ஓமர் அப்துல்லாவை சொல்கிறார்.

“அவர் இளைஞர்தான். ஆனால் அவரும் என்னைப் போலவே அரசியல் குடும்பத்து வாரிசுதானே. வேறு யாரும் இருக்கிறார்களா?” என்கிறார் ராகுல்.

வேறு யாரும் அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ராகுல் சொன்னார். “அதனால் தான் உங்களைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என அழைக்கிறேன்.” தற்போதைய பிரதமர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதையும் அவர்களுக்கு நினைவுபடுத்தி சென்றார்.

சஞ்சய்காந்தி காலத்தில் மிக வலிமையான இயக்கமாக இளைஞர் காங்கிரஸ் செயல்பட்டது. இன்று காங்கிரசில் இருக்கும் பல மூத்தத் தலைவர்களும் சஞ்சய்காந்தி காலத்தில் இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றியவர்கள். அதில் பலரும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் தங்கள் செயல்பாட்டால் முன்னுக்கு வந்தவர்கள். அவருக்குப் பின் ராஜிவ்காந்தியின் பொறுப்பில் ஓரளவு நன்றாக செயல்பட்டது. ராஜிவுக்குப் பின் இளைஞர் காங்கிரஸின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அந்தந்த மாநிலத் தலைமை தங்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பலரும் அந்தந்தப் பகுதியில் செல்வாக்குள்ள தலைவரின் வாரிசாக இருப்பார்கள். சாதாரன தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிக அரிதாகவே இருந்தது. அதிலும் தலித், சிறுபான்மை இனம் மற்றும் பெண்கள் சார்பில் மிக அரிதானவர்களே நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவர்களின் செயல்பாடு என்று பார்த்தால் பத்தில் இருவர் தான் செயல்திறம் மிக்கவர்களாக இருந்தார்கள்.

இந்திய இளைஞர் காங்கிரசின் பொது செயலாளர் மற்றும் தேர்தல் குழு தலைவர் பதவி வரை உயர்ந்து MPஆன மாணிக்கத் தாகூர், கட்சியில் செயலாளராக உள்ள மத்திய பிரதேஷில் வசிக்கும் தமிழச்சி மீனாட்சிMP மற்றும் கரூரை சேர்ந்த தேசிய செயலாளர் ஜோதிமணி போன்ற சிலர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இருந்தும் சிலர் மட்டுமே சிறப்பாக செயல்படுவதென்பது பெருமைப் படும் விஷயமில்லை. இது தொடர்ந்தால் இப்போதைய முன்னணித் தலைவர்களுக்குப் பின் காங்கிரசை வழி நடந்த சரியான தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். அனைத்து பிரிவினருக்கும் அரசியல் அங்கீகாரம் கிடைக்காமலும் போகும். அலிகார் பல்கலைக் கழக மாணவர்களைப் போல் தொடர்ந்துக் கேள்விகள் வந்துக் கொண்டே இருக்கும். இதை எல்லாம் மாற்றி அனைத்துப் பிரிவையும் சேர்ந்த திறமையுள்ள இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும். எதிர்காலத் தலைவர்களாக அவர்களை உறுவாக்க வேண்டும்.

இந்த சூழலில் தான் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசின் பொறுப்பாளராவும் நியமிக்கப் பட்டார். இளைஞர் காங்கிரசின் மொத்த அமைப்பையும் ஆராய்ந்தார். அதில் வாரிசுகள் மற்றும் இளமையைக் கடந்தவர்களின் ஆதிக்கத்தையும் தலித், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதையும் கண்டு அதிருப்தி அடைகிறார். மக்கள் பிரச்சனைக்கான போராட்டம், பேரணி என பெரிதாக எதுவும் செய்யாத ஒரு அமைப்பு எதற்கு?. அனைத்துப் பிரிவினரும் பங்கு கொள்ளாத ஒரு அமைப்பால் இவ்வளவு பெரிய தேசத்தில் என்ன பெரிய பயன்?. இதை எல்லாம் மாற்ற வேண்டும். ஏராளமான இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு ஒரே வழி இளைஞர் காங்கிரசை பலப்படுத்துவது தான். இதில் ஏராளமான இளைஞர்களை புதிதாக சேர்க்க வேண்டும். அவர்கள் நிச்சயம் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கானத் தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

தங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என தைரியமாக வெளிப்படையாக அறிவித்த ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி மட்டுமே. காங்கிரஸ், பிஜேபி போன்ற எந்தக் கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று சொல்லி ஒரு பெரும் தேசிய அளவிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். (ராகுலில் வெளிப்படையான செயல்பாட்டில் பீதி அடைந்த அப்போதைய பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், ராகுலை ”சின்ன பையன். அவரைப் பார்த்து தாங்கள் கவலைப் படவில்லை” என்றார். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதைப் பற்றி ராகுலிடம் கேட்ட போது “ அவர் ஒரு மூத்தத் தலைவர். அனுபவசாலி. அவருடன் ஒப்பிட்டால் நான் சின்னப் பையன் தானே..” என்றார் வழக்கம் போல் சிரித்துக் கொண்டே.)

எனவே உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் மிக மிக ெளிப்படையானதாகவும் ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். முன்பைப் போல் சிபாரிசில் உறுப்பினராவதோ சிபாரிசில் பதவியயைப் பெறுவதோ கூடாது. விருப்பமுள்ள யார் வேண்டும்னாலும் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் படிவத்திற்காக கட்சி அலுவலகங்களில் அலையவும் வேண்டாம். இணையத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்பினாலே போதுமானதாக இருக்க வேண்டும். இதை எல்லாம் ஒரு தனியார் அமைப்பின் வசம் ஒப்படைக்க வேண்டும். கட்சியின் குறுக்கீடு இருக்கக் கூடாது. எனவே தான் முன்னாள் தேர்தல் ஆணையர்களால் நடத்தப் படும் FAME அமைப்பினரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க விரும்பினார் ராகுல்காந்தி.

மாற்றம் தொடரும்..


April 9, 2010

IYC- ஒரு மாற்றத்தின் ஆரம்பம் -1


மாலை 6.05 மணி. கண்கள் முழுதும் நம்பிக்கையுடனும் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகளுடனும் ஒரு தகுதியான தலைவர் கிடைத்த சந்தோஷத்துடனும் அந்த உயரதிகாரியின் வீட்டில் நுழைகிறார்கள் சில இளைஞர்கள். இன்முகத்துடன் கூடிய வரவேற்பிலும் உபசரிப்பிலும் திக்குமுக்காடிப் போகிறார்கள்.

அடுத்து என்ன? . வந்த வேலையை கவனிக்க வேண்டியது தான் என்றெண்ணி பேச முற்படுகையில் ,

“ சரி, நீங்கள் புறப்படலாம்” என்ற வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடுகிறார்கள் அந்த இளைஞர்கள். காரணம் புரியாமல் தவித்தவர்களிடம் அந்த உயரதிகாரியே தொடர்கிறார். “ நான் சரியாக 6 மணிக்கு வர சொன்னேன். உங்களுக்கு வேண்டுமானால் 5 நிமிடம் என்பது சாதாரனமாக இருக்கலாம். எனக்கு மிக முக்கியமானது. என்னால் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது”.

எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. தங்கள் தலைவரிடம் என்ன சொல்வதென புரியாமல் வெளியேறுகிறார்கள். அலுவலகம் வந்து நடந்தவற்றை சொல்கிறார்கள். உடனே அந்த உயரதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு செல்கிறது.

“ மாலை வணக்கம் சார். நான் ராகுல்காந்தி பேசுகிறேன். எங்கள் இளைஞர்கள் செய்த தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும்”.

அவ்வளவு தான் முடிந்தது. இனி வேறு வழிகளை பார்க்க வேண்டும். ஒரு பெரும் ஜனநாயகப் புரட்சியின் ஆரம்பம் இவ்வளவு மோசமாக உடனே முடிவுக்கு வரும் என ராகுல்காந்தி எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் இதை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. எப்படியும் நடத்தியே முடிக்க வேண்டும். தன் அணியுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு.
“வணக்கம் மிஸ்டர் ராகுல்காந்தி. நான் KJ.ராவ் . உங்களுடன் பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். சந்திக்கலாம்”. எதோ ஒன்று அந்த உயரிதிகாரியின் மனதை மாற்றி இருந்தது. தன் அணியினரின் தாமதத்ததிற்கு மன்னிப்புக் கேட்ட ராகுல்காந்தியின் பண்பாடும் ஒரு ஜனநாயக புரட்சியை நடத்திக் காட்டுவதென்ற ஆர்வமும் தவிர வேறு எதுவும் இருக்காது.

2008ஆம் ஆண்டின் ஒரு சுப தினத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல்காந்தியும் முன்னாள் தேர்தல் ஆணையரும் FAME(Foundation for Advanced Management of Elections) அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவருமான திரு கேஜே ராவ் அவர்களும் சந்திக்கிறார்கள். ராகுல்காந்தி தன் லட்சியத்தை முழுமையாக விவரிக்கிறார். அதன் முக்கிய அம்சங்கள்.

  •  இந்தியாவின் மனித வளத்தில் 70 சதவீதமாக உள்ள 35 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களில் ஏராளமானோரை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும்.
  •  புதுமையாகவும் நேர்மையாகவும் சிந்தித்து வேகமாக செயல்படும் அவர்களின் உழைப்பில் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமானதாக இருக்க வேண்டும்.
  • அரசியலை நம்பிக்கையானதாக மாற்ற வேண்டும். அதற்கான, அமைப்பை வெளிப்படையானதாகவும் ஜனநாயகப் பூர்வமானதுமாக மாற்ற வேண்டும்.
  • சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அரசியலில் அங்கீகரம் கிடைக்க வேண்டும்.
  • சாதி, மதம், பொருளாதாரம் போன்றவற்றை எல்லாம் கடந்து யாருக்கும் அரசியலில் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கையும் தேர்தலும் நடைபெற வேண்டும். இதில் உங்கள் உதவி வேண்டும்.ராகுல் மனதில் இருந்ததை இறக்கிவைத்துவிட்டார்.

சிறிது நேர யோசனைக்குப் பின் ராவ் ஒரே வரியில் தன் பதிலை சொல்லிவிட்டார்.
“சரி. செய்துவிடலாம். ஒரே நிபந்தனை. இதற்கான அனைத்து அம்சங்களையும் FAME தான் தீமானிக்கும். FAME எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும்”.

சிறிதும் யோசிக்கவில்லை ராகுல் “ காங்கிரஸ் கட்சி எந்த சூழ்நிலையிலும் இதில் தலையிடாது. உங்கள் தேவைகள் பூர்த்தி செய்வது மட்டுமே எங்கள் வேலையாக இருக்கும். வேறு தலையீடுகள் இருக்காது

அவ்வளவு தான்.. சர சரவென வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன.
* IYC - Indian Youth Congress
* FAME  Foundation for Advanced Management of Elections 
மாற்றம் தொடரும்...

April 7, 2010

M.S உதய மூர்த்தி



முன்குறிப்பு: என்னுடைய பழைய பதிவில் போட்ட இடுகை. மீள்பதிவு செய்கிறேன், மாற்றம் இல்லாமல்.
எனக்கு நிறைய தலைவர்களைப் பிடிக்கும், ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு காரணத்துக்காக. அதுல ஒவ்வொருத்தர பத்தியும், அப்பப்போ எழுதலாம்னு நினைக்கிறேன்.நான் இத எழுதறதுக்காக எந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் படிக்கல. அவங்களப் பத்தி எனக்குத் தோணறத முன்னாடி படிச்ச ஞாபகத்த வச்சு எழுதப் போறேன்முதல்ல இன்னிக்கு டாக்டர் எம் எஸ் உதய மூர்த்தி( நிறுவனர், தலைவர், மக்கள் சக்தி இயக்கம்) பத்தி எனக்கு தோணறத எழுதறேன்.


அனேகம் பேருக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கும், இருந்தாலும் எழுதறேன்.தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.(மயிலாடுதுறையின்னு நினைக்கறேன்) அடிப்படையில் கெமிக்கல் இஞ்சினீயர்படிச்சது, எம்எஸ், பிஹெச்டி(விஸ்கான்சின் பல்கலைக்கழகம், அமெரிக்கா)பல வருடங்கள் அமெரிக்காவில் கெமிக்கல் துறையில் வேலை பாத்துட்டு அப்புறமா அங்கேயே, அதே துறையில் தொழிலும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தினார். அமெரிக்காவில் தொழில்,பொருளாதார டைரக்டரியான ஹு இஸ் ஹு -ல் 1987-ல் இடம் பெற்றார்இது பெரிய விஷயம்னு நினைக்கறேன்.அப்புறமா இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆயிட்டார். நதிநீர் இணைப்புக்காக, அதுல நிபுணத்துவம் இருக்கற அறிஞர்களோட சேர்ந்து நல்ல திட்டம் எல்லாம் போட்டு நிறைய முயற்சி பண்ணினார். அது ஏன் நடக்கலன்னு நமக்குத்தான் தெரியுமேஇவர் நிறைய நடைமுறையில் கடைபிடிக்க முடியற சுய முன்னேற்ற புத்தகங்கள் எழுதியிருக்கார். அதுல எண்ணங்கள் ன்ற புத்தகம் நிறைய பேருக்கு பரிச்சயமாயிருக்கும்னு நினைக்கறேன். அந்த புத்தகம் சில பல்கலைகழகங்கள்ல பாடபுத்தகமா இருக்கு. நம்மோட எண்ணங்கள் தான் நம்மோட வாழ்வை நிர்ணயிக்குதுன்னு அதாவது நாம எதை நினைக்கறோமா அதுவா ஆகுறோம்னு நம்புறவர், அவரது புத்தகத்தை படித்த சென்ற தலைமுறை இளைஞர்களை நம்ப வைத்தவர்.


அவர் எழுதனதுல எனக்குப் பிடிச்ச ஒரு புத்தகத்தில (பேரு ஞாபகமில்ல), நாம ஏன் ஜப்பான் மாதிரி பொருளாதாரத்துல வளரல்லுன்னு நம்ம மக்களோட Attitude, ஐயும், ஜப்பானியர்களோட Attitude ஐயும் ஒப்பிட்டு ரொம்ப அருமையா எழுதியிருப்பார்நம்மால் முடியும் தம்பி! நம்பு, இன்னொரு புத்தகம் இவர மாதிரியா வச்சுதான் பாலசந்தர் உன்னால் முடியும் தம்பி படம் எடுத்தார்.நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும் இவர் ஒரு சிறந்த இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழ்நிலையியல்வாதின்னு இவர் மக்கள் சக்தி இயக்கம்-னு ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்

நம்ம நாட்டோட முன்னேற்றம் கிராமப்புறத்திலருந்து தொடங்கணும்னு கிராம வேள்வி(Village Rejuvenation) அப்படின்ற பேருல ஒருங்கிணைந்த கிராம பொருளாதார திட்டத்தை உருவாக்கி, செயல் படுத்திக்கொண்டிருக்கிறார்.2003-ல தமிழ்நாடு முழுவதும் 200 கிளைகள், 3000 உறுப்பினர்கள் இருந்தாங்க.சில/ பல வருஷங்களுக்கு முன்னாடி இந்த இயக்கத்தைச் சேந்தவங்க தேர்தல்ல போட்டியிட்டாங்க. அந்த கட்சியில இருக்கற/இருந்தவங்க சமூகத்துல நல்ல நிலைமையிலுள்ள, பொறுப்பான மக்கள். நல்ல நிலைமைன்னு நான் சொல்றது பொருளாதாரத்தை அடிப்படையா வச்சு இல்லநாம பொதுவா நல்லவங்க அரசியலுக்கு வரதில்ல அதான் நாடு இப்படி இருக்குன்னு சொல்லுவோம்.ஆனா இந்த இயக்கம் தேர்தல்ல வெற்றி பெறவில்லை( எனக்குத் தெரிந்த வரை) .

இந்த இயக்கத்தோட அலுவலக முகவரி
ப. எண் 17-A, சௌத் அவென்யூ,காமராஜ் நகர்,திருவான்மியூர்சென்னை600 041 ,தொலைபேசி: 24421810
மக்கள் சக்தி இயக்கத்தோட ஸ்லோகன்
Together We Can!
Mission : Bring out the needed change in the society by changing the way people think ('As a man thinketh so is he')
Message to individuals :1- Self Development: Enrich your Mental Power, values in life, creativity, leadership qualities.
2- Economic Self Reliance: Enrich your economic and material status
3- Social Service: Get involved in society's growth, progress and emancipation


எனக்கு ஏன் அவர பிடிக்கும்னா, வெளிநாட்டுல தொழில் தொடங்க அவருக்கு இருந்த ம்ன திடம். இது ஒரு காரணமான்னு நினைச்சா, கேளுங்க, பதில் சொல்றேன். அவரு எந்த தொழில் தொடங்கணும்னு நினைச்சாரோ அதிலேயே தொழில் கத்துக்க தேவையான வருஷங்கள் வேலை பாத்துட்டு, அப்புறம் தொழில் தொடங்கி அதுல வெற்றிகரமான தொழில் அதிபரானது. அப்புறமா அமெரிக்காவில sophisticated வாழ்க்கை வாழ்ந்துட்டு, நம்ம நாட்டுக்கு வந்து தன்னால முடிஞ்சத மத்தவங்களோட சேந்து செய்யணும்னு நினைச்ச, எந்த விளம்பரமும் இல்லாம செய்துட்டு இருக்கற அந்த நல்ல மனசு. அப்புறம் நம்ம நாட்டோட அரசியல் தெரிஞ்சும், தேர்தல்ல மக்கள் சக்தி இயக்கம் போட்டியிட்ட துணிச்சல். அப்புறம், உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச தலைவர மறக்காம சொல்லுங்க
பி.கு: உங்களுக்குத் தெரியாதது எதுவும் எழுதியிருக்க மாட்டேன். தமிழ் புத்தகம் படித்து பழக்கமில்லாத இந்தக்கால சின்ன பசங்களுக்கு ஒரு வேளை இது ஓர் அறிமுகமாக இருக்கலாம்.

April 6, 2010

நண்பர்களுக்கு....

( http://umakathir.blogspot.com/2010/04/blog-post.html)
காப்பி பேஸ்ட் செய்த பதிவு இது:


நண்பர்களுக்கு,

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.




எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.


கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk


முகவரி :

P.Madhavan
s/o Pichamuthu
Vedhakara theru
Kachirapalayam post
Kallakurichi tk
Villuppuram dt


தொலைபேசி: 9791460680 கதிர்



அன்புடன்
கதிர்

----------------------------------------------------------------------------------

பின் குறிப்பு: இந்த மாதிரியும், வேற எந்த மாதிரியும் விபத்து நடக்காமல் இருக்க விபத்து தடுப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை அடிக்கடி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், நடத்தினால் நல்லாருக்கும். பணமும், மனசும், சந்தர்ப்ப சூழ்நிலையும் நல்லா இருக்கறவங்க அவங்களால முடிஞ்ச தொகையை அனுப்பலாம். நானும் என்னால முடிஞ்ச சிறிய தொகையை அனுப்பியிருக்கேன்

இட்லி வடை:http://idlyvadai.blogspot.com/2010/04/blog-post_05.html

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget